சமூக அறிவியலில் 100/100 பெற்று வரலாறு படைக்க விருப்பும் மாணவர்களுக்காக !!!
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் வரலாறு,புவியியல், குடிமையியல் மற்றும் பொருளியல் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் குறிப்பிட்ட வினாக்கள் என்ற முறையில் வினாக்கள் அமைகின்றன மேலும் புதிய வினாக்களும் கேட்கப்படுகின்றன.
- பொதுத்தேர்விற்கு தயாராகும் போது ஒவ்வொரு பாடமாக மிகவும் கவனமாக குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். அதாவது முக்கியமான வருடம், பெயர், நிகழ்வு போன்றவை.உதாரணமாக வரலாறு பகுதியல் முதல் உலகப்போர்,இரண்டாம் உலகப்போர் மற்றும் புவியியலில் பாடங்களில் உள்ளவற்றயையும் நன்கு நினைவில் கொள்ள வேண்டும்.
- ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிபெண் வினாக்களை பொறுத்தவரை வரலாறு மற்றும் புவியியல் பகுதியில் இருந்து அதிகப்படியாக கேட்க வாய்ப்பு உள்ளது(Creative Question உட்பட) எனவே முதலில் அப்பகுதியை படித்த பிறகு மற்ற இரண்டு பகுதியை படிக்க வேண்டும்.1mark Question Download Here
- குறிப்பிட்ட நடைமுறையில் அதாவது வேறுபடுத்தி எழுதுதல் (Difference),தலைப்பு வினாக்கள் (Headings/Title Questions) போன்ற வினாக்களை தேர்வு செய்தால் அதற்கான சரியான விடையினை புத்தகத்தில் உள்ளவாறு எழுத வேண்டும்.எனவே இது போன்ற வினாக்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.Important Question Click Here
- 5 Marks Questions அதிகமாக குடிமையியல் மற்றும் பொருளியல் பகுதியில் எழுதுவது சிறப்பு ஏனெனில் இப்பகுதியில் குறைந்த வினாக்களே உள்ளன.மற்ற பகுதிகளில் முக்கிய வினாக்களை படித்து எழுதி பார்க்க வேண்டும். For 5 marks
- Map கேள்விகளுக்கு எளிமையாக விடையளிக்க அதாவது ஆசிய வரைபடங்களுக்கு வரலாறு பகுதியும், இந்திய வரைபடங்களுக்கு புவியியல் பகுதியும் படித்து Practice செய்ய வேண்டும்.
- காலக்கோடு கேள்விகளுக்கு பதில் எழுத முதலில் நிகழ்வின் பெயரையும்,ஆண்டினையும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது 1885 ஆண்டு முதல் 1950 வரை குறிப்பு எடுத்து படிக்க வேண்டும்.அவ்வாறு படித்தால் மட்டுமே கொடுக்கப்பட்ட வருடங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளை விடுபடாமல் எழுத முடியும்
- அனைத்து கேள்விகளுக்கும் விடுபடாமல் விடையினை மிகவும் சரியாகவும், தெளிவாகவும்,சிறு தலைப்புடனும் எழுதுவது என்பது முழு மதிப்பெண் பெற உதவுகிறது.
Reviews & Comments about சமூக அறிவியலில் 100/100 பெற்று வரலாறு படைக்க விருப்பும் மாணவர்களுக்காக !!!
Write your Comment