கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.

    (a)

    நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (b)

    முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (c)

    கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

    (d)

    கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

  2. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    இலாபம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  3. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.

    (a)

    ரூ.20,000 மற்றும் ரூ.10,000

    (b)

    ரூ. 8,000 மற்றும் ரூ.4,000

    (c)

    ரூ.10,000 மற்றும் ரூ.20,000

    (d)

    ரூ.15,000 மற்றும் ரூ.15,000

  4. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  5. கூட்டாளி விலகினால், முடிவுக்கு வருவது எது?

    (a)

    பழைய ஒப்பந்தம்

    (b)

    புதிய ஒப்பந்தம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  6. சொத்துக்களையம் பொறுப்புகளையும் மறுமதிப்பீடு செய்வது எத்தனை முறைகளில் கையாளப்படுகின்றன?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    நான்கு

    (d)

    ஐந்து

  7. கூட்டாளி இறப்பின் போது அவருக்குச் சேர வேண்டியத் தொகை யாரிடம் வழங்கப்படும்?

    (a)

    உரிமையாளரிடம்

    (b)

    பணியாளர்களிடம்

    (c)

    நிறைவேற்றாளரிடம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  8. ஒரு கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி ஒருவர் வெளியே சென்றதால், அது ________ எனப்படும்.

    (a)

    கூட்டாளி சேர்ப்பு

    (b)

    கூட்டாளி விலகல்

    (c)

    கூட்டாளி மரணம்

    (d)

    நிறுவனம் கலைப்பு

  9. தொழிலாளர் ஈட்டு நிதியில் எதிர்நோக்கக் கூடிய இழப்பீடுகளை சரி செய்த பின்னர் மீதமுள்ள தொகை கூட்டாளிகளின் _______  கணக்குக்கு மாற்றப்பட வேண்டும்.

    (a)

    முதல்

    (b)

    கடன்

    (c)

    நடப்பு

    (d)

    மறுமதிப்பீடு

  10. 4 x 1 = 4
  11. காப்புகள்

  12. (1)

    பெயரளவு கணக்கு

  13. இலாபங்கள் அல்லது நட்டங்கள் 

  14. (2)

    தொழிலாளர் ஈட்டு நிதி

  15. மறுமதிப்பீட்டுக் கணக்கு

  16. (3)

    ஒப்புக் கொண்ட விகிதம்

  17. புதிய இலாபப் பகிர்வு விகிதம்

  18. (4)

    பகிர்ந்து தரா இலாபங்கள்

    6 x 2 = 12
  19. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  20. கூட்டாளி விலகல் என்றால் என்ன?

  21. ஆதாய விகிதம் என்றால் என்ன?

  22. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

  23. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  24. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  25. 5 x 3 = 15
  26. ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும் 
    ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
    iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  27. கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.

  28. தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  29. ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     கட்டடம் 1,10,000
    ஆகாஷ் 40,000   வாகனம் 30,000
    முகேஷ் 60,000   சரக்கிருப்பு 26,000
    சஞ்சய் 30,000 1,30,000 கடனாளிகள் 25,000
    இலாபநட்டப் பகிர்வு க/கு   12,000 கைரொக்கம்  15,000
    பொதுக்காப்பு    24,000    
    தொழிலாளர் ஈட்டு நிதி   18,000    
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு   22,000    
        2,06,000   2,06,000

    பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் 

  30. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் ராஜன், சுமன் மற்றும் ஜெகன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுமன் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். அவர் விலகும் நாளன்று நற்பெயர் ரூ.45,000 என மதிப்பிடப்பட்டது. மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, நற்பெயருக்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  31. 2 x 5 = 10
  32. ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள்  ரூ.

    ரூ.

    முதல் கணக்குகள்:     அலவலக சாதனங்கள்    70,000
    ஜான் 80,000   இயந்திரம்    1,40,000
    ஜேம்ஸ் 60,000   பற்பல கடனாளிகள்  52,000  
    இராஜா 1,00,000 2,40,000 கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு  2,000 50,000
    பற்பல கடனீந்தோர்   1,20,000 சரக்கிருப்பு    60,000
          வங்கி ரொக்கம்    40,000
        3,60,000     3,60,000

    2019, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    i) இயந்திரம் ரூ.1,30,000 ஆக மதிப்பிடுவது
    ii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ. 2,000 குறைப்பது 
    iii) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 ஆக உயர்த்துவது 
    iv) ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ரூ.25,000 பதிவு செய்ய வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  33. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
    முதல் கணக்குகள்     நிலம் 80,000
    சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
    விவேக்  40,000   கடனாளிகள் 30,000
    பாண்டியன் 10,000 1,00,000 வங்கிரொக்கம் 14,000
    பொதுக்காப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
    பற்பல கடனீந்தோர்   14,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின்போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்ட வேண்டும்.
    (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
    (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்.
    (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை செலுத்தப்படவில்லை.
    கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிறுமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Retirement and Death of a Partner Model Question Paper )

Write your Comment