கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் 

    ரூ.

    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    பிரின்ஸ் 30,000   பொறித்தொகுதி 50,000
    தேவ்  50,000   அறைகலன் 10,000
    சசிரேகா 20,000 1,00,000 சரக்கிருப்பு 15,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   10,000 கடனாளிகள் 20,000
    பொதுக்காப்பு   15,000 வங்கி ரொக்கம் 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   17,000    
    பற்பல கடனீந்தோர்   8,000    
        1,50,000   1,50,000

    1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  2. பிரபு, ரகு மற்றும் சிவா என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல், 1 ஆம் நாளன்று பிரபு கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    (i) கட்டடத்தின் மதிப்பு ரூ.12,000 உயர்த்துவது
    (ii) அறைகலன் மதிப்பை ரூ. 8,500 குறைப்பது
    (iii) கொடுபடா சம்பளத்திற்காக ரூ. 6,500 ஒதுக்கு உருவாக்குவது
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  3. கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
    (i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
    (ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
    (iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  4. தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  5. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  6. இராணி, ஜெயா மற்றும் ரதி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று ரதி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு:
    2014: ரூ.10,000; 2015: ரூ.20,000; 2016: ரூ.18,000 மற்றும் 2017: ரூ.32,000 2018 ஆம் ஆண்டில் கூட்டாளி விலகல் நாள் வரையிலான இலாபத்தில் ரதிக்குரிய இலாபப் பங்கினை கீழ்க்கண்ட நிலைகளில் தயாரிக்கவும்.
    (i) இலாபம் முந்தைய ஆண்டுகளின் இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    (ii) இலாபம் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படுவதாக இருந்தால்
    மேலும் மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  7. ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
    (ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.

  8. நற்பெயர் சர்க்கட்டப்படுத்தல் பற்றி சிறு குறிப்பு வரைக

  9. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  10. கூட்டாளியின் இறப்பின் போது செய்ய வேண்டிய சரிக்கட்டுதல்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Retirement And Death Of A Partner Three Marks Questions )

Write your Comment