தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  2. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
    (a)
    3 1 4 2
    (b)
    1 2 3 4
    (c)
    3 4 1 2
    (d)
    1 2 4 3
  4. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு; காரணம் சரி

  5. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

    (a)

    பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

    (b)

    பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்

    (c)

    பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.

    (d)

    பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்

  6. 3 x 2 = 6
  7. மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?

  8. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

  9. தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?

  10. 3 x 3 = 9
  11. காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.

  12. 1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

  13. வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.

  14. 1 x 5 = 5
  15. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மாதிரி வினாத்தாள்

Write your Comment