சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து 12-ம் வகுப்புக்கு தேர்வு ஒத்திவைப்பு
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடந்து வந்தன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
அந்தவகையில் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 7-ந் தேதி வரையிலும், அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடந்து வந்தன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
அந்தவகையில் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 7-ந் தேதி வரையிலும், அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.