தமிழகத்தில் மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள்
மே 6 முதல் ஊரடங்கின் போது மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது
மளிகை , பலசரக்குகள் , காய்கறி கடைகள் ஏசி வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் .
மளிகை , பலசரக்குகள் , காய்கறி கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி .
மளிகை , பலசரக்குகள் , காய்கறி கடைகள் இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை .
தேனீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் , பார்சலுக்கு மட்டுமே அனுமதி .
மீன் , இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 % பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி
பயணி ரயில் , மெட்ரோ ரயில் , அரசு மற்றும் தனியார் பேருந்து , வாடகை டாக்ஸி 50 % பேர் மட்டுமே அனுமதி
வணிக வளாகங்களில் பலசரக்குகள் ,காய்கறி கடைகளுக்கு இனி அனுமதி இல்லை .
இறுதி ஊர்வலம் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி
முழு ஊரடங்கு நாள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமண விழாக்களில் 50 பேர் பங்கேற்க தொடர்ந்து அனுமதி