10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 10th Standard Social Science Tamil Medium Model Questions All Chapter 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ______ என அழைத்தனர்
சார்
சுவாமி
அண்ணா
அய்யா
2.
______ பழமைவாத முஸ்லீம் உலோமாக்களால் தொடங்கப்பெற்றது
அலிகார் இயக்கம்
ஆரிய சமாஜ்
தியோபந்த் இயக்கம்
பார்சி இயக்கம்
3.
பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்
ஆரிய சமாஜம்
பிராத்தனை சமாஜம்
தியோபந்த் இயக்கம்
அலிகார் இயக்கம்
4.
தைடிங் கலகத்தில் விதைக்கப்பட்ட மக்கள்
ஒரு கோடி மக்கள்
இரண்டு கோடி மக்கள்
மூன்று கோடி மக்கள்
நான்கு கோடி மக்கள்
5.
________ ஜப்பான் அச்சு நாடுகளுடன் கை கோர்த்தது
1940
1920
1914
1925
6.
இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றிய நாடு _______
தென் அமெரிக்கா
தென் ஆப்பிரிக்கா
பிரேசில்
எகிப்து
7.
ஜெர்மனியர்கள் இறுதியில் ________ ஆம் ஆண்டு நவம்பரில் சரணமடைந்தனர்
1914
1918
1920
1925
8.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
மகாதேவ் கோவிந்த் ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
ஜோதிபா புலே
அய்யன்காளி
9.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
ஹபீஸ் அல்-ஆஸாத்
யாசர் அராபத்
நாசர்
சதாம் உசேன்
10.
பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
ரூஸ்வெல்ட்
சேம்பெர்லின்
உட்ரோ வில்சன்
பால்டுவின்
11.
12.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
13.
வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?
14.
ஆரிய சமாஜம் பற்றி குறிப்பு எழுதுக
15.
பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமனின் வரையறை எழுதுக
16.
ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்தது பற்றி எழுதுக
17.
இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன?
18.
முதல் உலகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?
19.
இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக
20.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
21.
முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
22.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
23.
தியோபந்த் இயக்கம்
அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் யாவை ?
இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கள் சமய ஆணையைப் பிறப்பித்தனர்?
24.
தென்கிழக்கு ஆசியாவை ஜப்பான் ஆக்கிரமித்தல்
அ) ஜப்பானிடம் வீழ்ந்த தென்கிழக்கு ஆகிய நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
ஆ) பசிபிக் பகுதியில் நேசநாடுகள் சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களைக் கணக்கிடுக.
இ) மிட்வே போரின் முக்கியத்துவம் யாது?
ஈ) பர்மாவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு என்ன நேர்ந்தது?
25.
இந்தோ-சீனாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம்
அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?
26.
ஏகாதிபத்தியம்
அ) முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
ஆ) ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வடிவெடுத்தது?
இ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு காலனிகள் ஏன் தேவைப்பட்டன?
ஈ) முதலாளித்துவம் உருவாக்கிய முரண்பாடுகள் யாவை?
27.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
28.
அரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக
29.
பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்
30.
போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்
31.
ரஷ்யப் புரட்சியின் விளைவுகள் பற்றி விளக்கவும்
32.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
33.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
34.
உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
ஹிரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ
35.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
36.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
1917 - ரஷ்யப் புரட்சி
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்
1.
(d)
அய்யா
2.
(c)
தியோபந்த் இயக்கம்
3.
(b)
பிராத்தனை சமாஜம்
4.
(b)
இரண்டு கோடி மக்கள்
5.
(a)
1940
6.
(b)
தென் ஆப்பிரிக்கா
7.
(b)
1918
8.
(a)
மகாதேவ் கோவிந்த் ரானடே
9.
(b)
யாசர் அராபத்
10.
(c)
உட்ரோ வில்சன்
11.
(c)
12.
(b)
ரஷ்யா
13.
வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப்பிசாசுகளின் ஆட்சியென்றும் கருப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும் விமர்சித்தார்
14.
(i) ஆரிய சமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்று கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது
(ii) ஆரிய சமாஜம் சமூக சீர்திருத்தக் களத்திலும் கல்வியைப் பரப்பும் பணியிலும் முக்கிய சாதனைகள் புரிந்தது. சமாஜம் பல தயானந்த ஆங்கிலோ - வேதப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கியது
15.
(i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சோவியத் நாட்டில் விடுவிக்கப்பட்ட நாடுகளில், அந்நாடு 1948 முதல் பொதுவுடைமை அரசுகளை ஏற்படுத்தியிருந்தது
(ii) ஐக்கிய நாட்டின் குடியரசு தலைவரான ட்ரூமென் பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன்மொழிந்தார்
(iii) சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பொதுவுடைமை கருத்தை பரப்ப தீர்மானமாக இருந்தது
16.
(i) 1941 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன.
(ii) ஜெர்மன் மக்களைக் குடியேற்றுவதற்குத் தேவையான முக்கிய நிலப் பகுதிகளைப் பெறுதல், கம்யூனிச ஆட்சியை ஒழிப்பது, ரஷ்யாவின் இயற்கை வளங்களைக் குறிப்பாக எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது போன்ற நீண்டகால நோக்கங்களுடன் இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது
17.
இன ஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கி வைத்தல் என்பதாகும். இது 1947 ஆம் ஆண்டில் தேசியவாதக் கட்சியின் கொள்கையாயிற்று
18.
(i) 1917 ஆம் ஆண்டு லூசிடானியா என்னும் அமெரிக்கக் கப்பல் ஜெர்மனியின் நீர் மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
(ii) இதன் விளைவாகப் பல அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அதனால் அமெரிக்காவில் பெருங்கோபமும் சீற்றமும் ஏற்பட்டது. குடியரசு தலைவர் உட்ரோ வில்சன் ஜெர்மனிக்கு எதிரான 1917 ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் போர்பிரகடனம் செய்தார்.
(iii) அமெரிக்க தன்னுடைய மாபெரும் பொருளாதார பலத்தோடு போரில் இறங்கியது. அது நேச நாடுகளின் வெற்றியை முன்னரே எழுதப்பட்ட முடிவுரையாக்கிற்று.
19.
1. ராமலிங்க சுவாமிகள் உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
2. அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
3. அவர் 1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
4. 1866 இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867 இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
20.
1. மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் டோவேஜரின் மரணத்தோடு துவங்கியது.
2. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டனர்.
3. உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மடங்குகளில் பரவியது.
4. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
21.
1. துருக்கி ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சாவின் உன்னதமான பங்கு முக்கியமானதாகும்.
2. அவர் துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.
22.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
23.
அ) பழமைவாத முஸ்லிம் உலமாக்கள்
ஆ) குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளை பரப்பதல் செய்தல், இஸ்லாம் அல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல் என்பனவாகும்
இ) முகமது குவாஸிம் நானோதவி (1832 - 1880), ரஷித் அகமத் கங்கோகி (1826 - 1905) ஆகியோரின் தலைமையில் 1866 - ல் உத்திரபிரதேசத்தில் சஹரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்
ஈ) தியோபந்த் உலோமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான 'தி யுனைடெட் பேட்ரியாடிக் அசோசியேசன்' (The United Patriotic Association). முகமதன் ஆங்கிலோ - ஓரியண்டல் அசோசியேஷன் (The Mohammedan Anglo - Oriental Association) ஆகிய அவற்றிற்கு எதிரான சமய ஆணையைப் பிறப்பித்தது
24.
அ) குவாம், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர், மலேயா, டச்சுகிழக்கிந்தியா, (இந்தோனிசியா), பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன
ஆ) போதுமான அளவிற்கு தயாரிப்பின்மையின் காரணமாக நேசநாடுகள், பசிபிக் பகுதியில் பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. காலனிய ஆட்சியாளர்கள் குறிப்பாக ஆங்கிலேயர் தாங்கள் ஆண்டு வந்த பகுதியிலிருந்து வெளியேறினார். இதனால் ஜப்பானியரின் அட்டூழியங்களை உள்ளூர் மக்களே எதிர்கொள்ள நேர்ந்தது
இ) மிட்வே போரில் அமெரிக்க கடற்படை ஜப்பானின் கப்பற்படையைத் தோற்கடித்தது. இந்நிகழ்வு போரின் போக்கை நேசநாடுகளுக்கு சாதகமாக மாற்றியது
ஈ) பல இந்தியர்கள் பர்மாவிலிருந்து கால்நடையாகவே இந்திய எல்லையை வந்தடைந்தனர். இடையில் பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். நோயின் காரணமாகவும் களைப்பினாலும் பலர் இறந்துவிட்டனர். அந்நாடுகளிடையே தங்கியவர்கள் ஜப்பானியரிடம் துயருற்றனர்.
25.
அ) காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்
ஆ) இந்தோ - சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் கம்போடியா, லாவோஸ் வியட்நாம்
இ) சீனத் தலைநிலப் பகுதியிலிருந்து பரவிய கம்யூனிச சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியத்திலிருந்து இந்தோ - சீனாவின் கணிசமான செல்வம் காலனியாதிக்க சக்திக்கே பயன்படுவதை பலர் உணர்ந்தனர்
ஈ) இந்தோ - சீனாவில் வியட்நாம் தேசியக் கட்சியே இருந்த அரசியல் கட்சிகளில் முக்கியமானது
26.
அ) 1870 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கியப் பண்புக் கூறான தொழில், நிதி சக்திகள் இரண்டும் அணி சேர்ந்து சந்தைகளில் தங்களின் பொருட்கள் மற்றும் மூலதனத்திற்கான லாபத்தை தேடும் என்பது பத்தாயிரம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெளிவாக உணரப்பட்டது
ஆ) (i) ஆட்சியாளர்கள் நிலமானிய முறை சிந்தனைகளைக் கொண்டு இருந்தாலும் ஜப்பான் மேலைநாட்டுக் கல்வியையும் இயந்திரத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொண்டது
(ii) நவீன ராணுவம், கப்பற்படை ஆகியவற்றுடன் தொழில்துறையில் முன்னேறிய நாடாக ஜப்பான் விளங்கியது.
இ) சந்தை கச்சாப்பொருள் ஆகிய கூற்றுக்கான தேவைகள் வளர்ந்து கொண்டே இருந்தால் சுரண்டுவதற்காகத் தங்கள் பேரசை விரிவாக்கம் செய்ய முதலாளித்துவ நாடுகளுக்கு காலனிகள் தேவைப்பட்டன
ஈ) முதலாளித்துவம் மிகப்பெரிய முரண்களை ஏற்படுத்தின. அம்முரண்கள் அதிக அளவு வறுமை, குடிசைப் பகுதிகள், விண்ணை மூட்டும் கோபுரங்கள், பேரரசுகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் சுரண்டப்பட்ட காலனிகள் போன்றவை ஆகும்
27.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
28.
(i) வெர்செல்ஸ் உடன்படிக்கையின் (1919) மூலம் துருக்கிய அரபுப் பேரரசை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டது.
(ii) பிரான்ஸ் நாடு சிரியாவையும் லெபனானையும் ஒருங்கிணைக்கவும் பிரிட்டன் நாடு ஈராக், பாலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கவும் ஏற்பாடானது
(iii) முதலாம் உலகப்போருக்குப் பின் சுதந்திரத்தை எதிர்பார்த்த அரேபியர்கள் இவ்வேறுபாட்டால் அதிர்ச்சியடைந்தார்
(iv) சீயோனிய இயக்க தலைவர்களுக்கு பிரிட்டன் நாடு பாலஸ்தீனத்தின் பகுதிகளை யூதக் குடியிருப்புகளுக்கு வழங்க உறுதியளித்தது
(v) யூதர்கள் அரேபியரின் எந்த ஒரு கிளர்ச்சியையும் பிரிட்டனுடன் சேர்ந்து ஒடுக்க உறுதியளித்தனர்
(vi) வசதியான அரேபியரிடம் விலைபேசி நிலங்களைப் பெற்றுக் கொண்ட யூதர்கள் அங்கே பல தலைமுறைகளாக வேளாண்மை செய்து வந்தவர்களை விரட்டியதால் அரேபியர்களின் வெறுப்புணர்ச்சியும் எதிர்ப்பும் மிகுந்தது
(vii) 1945 அக்டோபர் திங்கள் கடைசியில் யூதத் திரை மறைவு அமைப்புகளான இர்கூன் ஸ்வாய் லூமி (சீயோனியத் துணை இராணுவ அமைப்பு) ஸ்டென் காங்கும் (சீயோனிய பயங்கரவாத அமைப்பு) தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்களை பெருமளவில் தொடுத்தன
(viii) இருப்புப் பாதைகள், பாலங்கள், விமானத் தளங்கள், அரசு அலுவலங்கள் போன்றவை வெடி வைத்துத் தாக்கப்பட்டன
(ix) பிரிட்டிஷ் அரசு பிரச்சனையை ஐக்கிய சபைக்கு எடுத்துச் சென்று தீர்வு கோரியது. ஐ.நா சபையும் அதற்கு உடன்பட்டு பிரிவினை சம்மதித்தது.
(x) பிரிட்டன் தனது துருப்புகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்தபோது அங்கு மீண்டும் சண்டை மூண்டது
(xi) இஸ்ரேலியர்கள் ஜெருசலேமுக்குச் செல்லும் முக்கிய சாலையை வெற்றிகரமாகக் கைப்பற்றி அதை மீட்க அரேபியர்கள் மேற்கொண்டப் பல முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தனர்
29.
(i) பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட் ஜான் மேனார்டு கெயின்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உற்ற குழந்தையாகும்
(ii) இவ்வமைப்பு 1945 - இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப் பெற்றது தற்போது 189 நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
(iii) இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாக இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டளவில் நிதிசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவையாகும்.
(iv) இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனினில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடிவதில்லை.) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல் செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது
(v) இந்நடவடிக்கை பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் அவை மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது
30.
(i) இங்கிலாந்தின் காலனிகளான நோட்டால் கேப் காலனி ஆகிய இரண்டிற்கும் சுதந்திர போயர் நாடுகளான டிரான்ஸவால் மற்றும் ஆரஞ்சு சுதந்திர அரசு ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக நட்புறவு நிலவவில்லை
(ii) 1886 இல் டிரான்ஸ்வால் பகுதியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் ஆங்கிலேயச் சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர்
(iii) இவர்களை வெறுத்த போயர்கள் இவர்களை யுட்லேண்டர்ஸ் என்றே குறிப்பிட்டனர். குடியேறியவர் மீது அதிக வரிகளை விதித்த போயர்கள் அவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் மறுத்தனர்
(vi) யுட்லேண்டர்ஸின் அரசியல் உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகளேதும் ஏற்படவில்லை
31.
ரஷ்யப் புரட்சியின் விளைவுகள்:
(i) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் குறிப்பிட்ட கால அளவுக்குள் ரஷ்யாவில் எழுத்தறிவின்மையும் வறுமையையும் ஒழிக்க முடிந்தது
(ii) ரஷ்யாவின் தொழிற்துறையும் வேளாண்மையும் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றன
(iii) வாக்குரிமை முதலாக பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன
(iv) தொழிற்காலைகளும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன
(v) நிலம் சமுதாயத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டது
(vi) ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன
(vii) போரிலிருந்து விலகாமலிருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என லெனின் நினைத்தார்
(viii) எனவே, அவர் உடனடியாக அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்
(ix) மைய நாடுகளின் கடும் நிபந்தனைகள் குறித்துக் கவலை கொள்ளாமல், புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக அவர் போரிலிருந்து விலக்கினார்.
(x) 1918 ஆம் ஆண்டு பிரெஸ்ட் - லிடோவ்ஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது
32.
ஐ.நா. சபை
1. அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவிடவும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்திடவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2. ஐ.நா சபையின் சாசனத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
3. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுச்சபை:
1. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
2. இவ்வமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும், முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சபை:
1. பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும், மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு. எந்த முடிவையும் இதன்மூலம் தடுத்துவிடலாம்.
நிர்வாக அமைப்பு:
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
2. இதன்பொதுச்செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3. பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐ.நா சபையை நடத்துகிறார்.
4. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா. சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது.
5. பொருளாதார மற்றும் சமூகமன்றம் ஐ.நா.சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
ஐ.நா.வின் இதன் முக்கியத் துணைஅமைப்புகள்
1. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - (FAO)
2. உலக சுகாதார நிறுவனம் - (WHO)
3. ஐ.நா. வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு - (UNESCO)
4. ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் - (UNICEF)
5. ஐ.நா. வளர்ச்சி திட்டம் - (UNDP)
ஐ.நா வின் செயல்பாடுகள்:
1. கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா. சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
2. 1960 களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும்.
3. மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐ.நா. சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
4. ஐ.நா. வின் அமைதிப்படை உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அடிப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய ராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
33.
1. சோவியத்துகளில் மென்ஷ்விக்குகள் ஆதிக்கம் செலுத்த சிறுபான்மையினரான போல்ஷ்விக்குகள் அச்சமுற்றவர்களாகவும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருந்தனர். லெனினின் வருகையால் இச்சூழ்நிலை மாறியது.
2. ரஷ்யப் புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
3. அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
4. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் "ரொட்டி, அமைதி, நிலம்" எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
5. தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
i) நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்படவேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
ii) போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
6. ஏமாற்றமடைந்த விவசாய ராணுவ வீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர். இது பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
7. அரசு "பிராவ்தா" -வை தடைசெய்து போல்ஷ்விக்குகளை கைது செய்தது.
8. டிராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்.
9. அக்டோபர் திங்களில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டார்.
10. டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார். நவம்பர் 7ஆம் நாள் முக்கியமான அரசுக்கட்டிடங்கள்.
11. குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும் புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
12. 1917 நவம்பர் 8ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப்பெயரிடப்பட்டது.
13. போரிலிருந்து விலகாமல் இருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என லெனின் நினைத்தார், எனவே உடனடியாக விலகினார்.
14. புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
15. 1918 இல் பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
34.
35.
36.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards