10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 ஒலியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக் கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீ.வி-1 எனில் கடலின் ஆழம் என்ன?
2.
இரண்டு கேட்குநர்கள் 4.5 கி.மீ இடைவெளியில் இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு படகிலிருந்து, நீரின் மூலம் செலுத்தப்படும் ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன?
3.
ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச் சுவர்களுக்கு இடையே நிற்கிறார். அவர் தனது கைகளைத் தட்டும் ஓசையானது எதிரொலித்து முறையே 0.9 விநாடி மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?
4.
ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைந்து எதிரொலித்து 1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின் ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின் திசைவேகம் 1400 மீ.வி-1 )
5.
ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.
6.
வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீ.வி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?
7.
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.
8.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
9.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (Vo = 331 மீவி-1 )
10.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?
1.
மீயொலி எடுத்துக் கொள்ளும் காலஅளவு = 1 வி
நீரின் ஒலியின் வேகம் = 1450 மீ.வி-1

=\(\frac{1450\times 1}{2}\)725 மீ.
2.
படகுகளின் தொலைவு = 4.5 கி.மீ
= 4500 மீ
ஒலி எடுத்துக் கொள்ளும் காலஅளவு = 3 வினாடி

= 1500 மீ.வி-1.
3.
D = 680 மீ
t = 1.1 + 0.9 வி = 2 வினாடி
\(d=\frac{C t}{2} \)
\(c=\frac{2 d}{t}=\frac{2 \times 680}{2} \)
c = 680 மீ/வி-1
4.
மீயொலிக் கதிர்கள் எடுத்துக் கொண்ட கால அளவு = 1.6 வி
கடல்நீரில் ஒலியின் திசைவேகம் = 1400 மீ.வி-1
d = V x t
\(d=\cfrac { Vt }{ 2 } =\cfrac { 1400\times 1.6 }{ 2 } \)
d = 1120 மீ.
5.
ஒலியின் அதிர்வெண் n = 600 Hz
அலைவு நேரம் T = ?
\(T=\frac { 1 }{ n } = \frac { 1 }{ 600 } \) = 0.0016 வினாடி (அல்லது) 1.6 மி.வி.
6.
ஒலியின் திசைவேகம் v = 330 மீ/வி
காலஅளவு t = 9.8 வி
மேகக்கூட்டங்களின் உயரம் D = v \(\times\) t
= 330 \(\times\) 9.8
D = 2940 மீ
7.
1. ஒலி மூலம் மற்றும் கேட்குநர் இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
2. ஒலி மூலம் மற்றும் கேட்குநர் சம இடைவெளியில் நகரும் போதும் டாப்ளர் விளைவு நடைபெறுவதில்லை.
8.
1. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்க வேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்களில் பிரதிபலிக்கும் ஒலியானது, சுவரில் எங்கு மோதினாலும், ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப்புள்ளியில் குவிக்கப்படுகிறது.
3. இதனால் இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.
9.
வெப்பநிலை = 46°C
ஒலியின் திசைவேகம் = 331 மீ.வி-1
46°C ல் ஒலியின் திசைவேகம் = ?
VT = Vo + 0.61 T மீ.வி-1
= 331 + 0.61 \(\times\) 46
= 359.06 மீ.வி-1.
10.
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards