12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 11/03/2020
12ஆம் வகுப்பு வரலாறு அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (12th Standard History All Chapter Two Marks Important Questions 2020 )
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நேரு அறிக்கை பற்றிக் குறிப்பு வரைக?
2.
மொழி வாரி மாநிலம் உருவாக்கம் ஏன் முதலில் மறுக்கப்பட்டது?
3.
கல்பனா தத் பற்றி சிறு குறிப்பு தருக?
4.
அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?
5.
நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.
6.
மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.
7.
நேரடி நடவடிக்கை நாள் என்றால் என்ன?
8.
ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம் குறிப்பு தருக?
9.
இடதுசாரி இயக்கம் பற்றி எழுதுக?
10.
லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி?
11.
பஞ்சங்களும், இந்தியர்கள் பஞ்சத்தினால் உயிரிழந்ததை வில்லியம் டிக்பி குறிப்பிடுவது யாது?
12.
காலனியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யாவர்?
13.
சுதேசி பற்றி காந்திஜியின் கருத்து யாது?
14.
சுயராஜ்ஜியம் பற்றி திலகரின் கருத்து யாது?
15.
கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.
16.
கெல்லாக் - பிரையாண்ட் உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.
17.
அமெரிக்கப் பொருளாதார வரலாற்றில் 1873ஆம் ஆண்டின் முக்கியத்துவம் யாது?
18.
மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய கூட்டு (Concert of Europe) எத்தகைய பங்காற்றியது என்பதனை விளக்குக.
19.
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
20.
பண்டைய ஆட்சி முறையின் மூன்று எஸ்டேட்டுகளை விவாதிக்கவும்.
21.
ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?
22.
'கோமின்ஃபார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
23.
பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கு இடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?
24.
ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தது ஏன்?
25.
ஸ்பெயினில் சமயவிசாரணை நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?
26.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
27.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
28.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
29.
காந்தியடிகளுக்கு கெய்சர் - இ - ஹிந்த் பட்டம் எவ்வாறு கிடைத்தது?
30.
கிலாபத் இயக்கம் பற்றி எழுதுக?
31.
அரசமைப்பின் ஷரத்து 370 ன் முக்கியத்துவம் என்ன?
32.
33.
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?
34.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
35.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
36.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
37.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
38.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
39.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
40.
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
41.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
42.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக?
43.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
44.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
45.
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.
46.
தேசியம் என்றால் என்ன?
1.
1. 129 - இல் வெளியாக நேரு அறிக்கை பிரிவு 86 - இல் பின்வருமாறு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
2. நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களை மொழி வாரியாக மறு சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாகும்.
2.
1. மொழி வாரி மாநில மறுசீரமைப்பானது பெரும்பணி என்பது முதற் காரணம், இந்தியப் பிரிவினையும் அது தொடர்பான வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன.
2. இந்த நேரத்தில் மொழிவாரியாக மாநிலம் குறித்து விவாதம் மேலும் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதற்காக முதலில் மொழிவாரி மாநிலம் உருவாக்கம் மறுக்கப்பட்டது.
3.
(i) 1920 ல் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் கம்யூனிஸ்ட் தலைவர் பி.சி. ஜோஷியைத் திருமணம் செய்துகொண்டார்.
(ii) கல்பனா ஜோஷி-சிட்டாகாங் ஆயுதப் படைத்தளத்தை துணிகரமாகத் தாக்கினார்.
(iii) இதன் மூலம் இளம் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
4.
(i) வேலை நிறுத்தங்களின் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு, 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம் மற்றும்
(ii) 1928 பொது மக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
5.
1. முஸ்லிம் லீக் ஆகஸ்ட் 1946 அன்று நேரடி நடவடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தது.
2. கல்கத்தாவிலும் டெல்லி உட்பட பிற பகுதிகளிலும் இரத்த ஆறு ஓடியது.
3. காந்தியடிகள் 1946-இல் அவர் "இஸ்லாமியர்களும் இந்தியர்களே! அதனால் அவர்களைப் பாதுகாப்பது நமது கடமை" என்று கூறினார்.
6.
1. மெளண்ட் பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார்.
2. அதன்படி பஞ்சாப் மேற்கு-கிழக்காகப் பிரிப்பதும் மேற்பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.
3. அது போன்றே வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை வைத்துக் கொள்ளவும் கிழக்கு பகுதியை பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன.
7.
1. காங்கிரசும் ஜின்னாவும் அமைச்சரவை தூதுக்குழுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்.
2. ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஜூலை 29, 1946 இல் முஸ்லிம் லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
3. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று "நேரடி நடவடிக்கை நாளில்" ஈடுபடவும் அழைப்பு கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின.
8.
1. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் 1922 இல் நிறுத்தப்பட்டது.
2. 1924 இல் கலிஃபா பதவி ஒழிக்கப்பட்டதும், முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
3. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்குக்குமான ஒப்பந்தம் சிதைந்தது.
9.
1. இடதுசாரிகள் தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்களைத் தொடங்கினார்கள்.
2. இடதுசாரி சித்தாந்தத்தை பரப்புவதில் நேரு மற்றும் சுபாஷ் ஆகியோர் தங்கள் பங்களிப்பை தந்தார்கள்.
10.
1. இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.
2. 1929 டிசம்பர் 31 - இல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
3. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11.
1. 1770 - 1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2. போர்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக இருக்க 1891 முதல் 1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமே இந்தியாவில் பத்தொன்பது மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வில்லியம் டிக்பி குறிப்பிட்டுள்ளார்.
12.
காந்திக்கு முன்னர் தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர் போன்றோரும், ஏனையோரும், காலனியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.
13.
சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும். இங்குள்ளவர்களால் தயார் செய்யும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
14.
1. தீவிர தேசியவாத தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் என்பதாகும்.
2. திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீது ஆன இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தும் துண்டித்துக் கொள்வதல்ல எனக் கருதினர்.
15.
1.கவைட் ஆயுத கிடங்கில் 200 பிலிப்பைன்ஸ் துருப்புகள் கிளர்ச்சியை நடத்தினர்.
2.இதை ஸ்பானிய ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக கையாண்டனர்.
3.இது அந்நாட்டில் தேசிய உணர்வை வளர்க்க பெரிதும் உதவியது.
4.பிலிப்பைன்ஸ் நாட்டின் அறிவார்ந்த மக்கள் கைது செய்யப்பட்டனர்.
16.
1.கெல்லாக் - பிரையாண்ட் ஒப்பந்தம் 1928ல் கையெழுத்தானது.
2.அமெரிக்க ஐக்கிய நாடுகள் பன்னாட்டுச் சங்கத்தில் இடம் பெறவில்லை என்றாலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டது.
3.உலகநாடுகள் அனைத்தும் போரை கைவிடுவது என உறுதிமொழி எடுத்துக்கொண்டது.
17.
1. 1873ல் உலகளாவிய பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது.
2. இது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பாதித்தது.
3. அமெரிக்க இருப்புப் பாதை நிறுவனம் திவாலானது.
18.
1.மெட்டர்னிக்கின் தலைமையில் செயலாற்றிக் கொண்டிருந்த முடியரசை ஆதரிக்கும் முன்னேற்றத்தை விரும்பாத பழமைவாத சக்திகள் ஐரோப்பிய இணைவின் வாயிலாக கொடுங்கோன்மை முறையை கையாளத் தொடங்கின.
2.சுதந்திர இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
3.வெளிநாடுகளின் துணை கொண்டு மக்களின் எழுச்சி ஒடுக்கப்பட்டது.
19.
1.1819ல் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக 60,000 அதிருப்தியடைந்த மக்கள் ஹென்றி ஹன்ட் என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2.ஆர்ப்பாட்டக்காரர்களின் மனநிலையை கண்டு அதிகாரிகள் பீதியடைந்தனர்.
3.மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படையை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க உத்தரவிட்டனர்.
4.700 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.17 நபர்கள் கொல்லப்பட்டனர்.
20.
1.பிரெஞ்சு சமூகம் மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.
2.இவை எஸ்டேட்டுகள் என அழைக்கப்பட்டது.
3.மதகுருமார்கள்,நிலப்பிரபுக்கள்,உரிமைகளற்ற சாதாரண மக்கள் ஆகியனவாகும்.
21.
1.ஸ்டாலினுடைய ஆட்சியின்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ரகோசி 1953ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2.இம்ரே நாகி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் அரசாங்கம் அவருக்கு ஆதரவாக இல்லை.
3.அக்டோபர் 23ல் ஒரு சில அறிவார்ந்த மக்களால் திட்டமிடப்பட்ட கிளர்ச்சி புதாபெஸ்டில் வெடித்தது.
4.நவம்பர் 4 ல் சோவியத் ரஷ்யா ஹங்கேரிக்கும் படைகளை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.
22.
1.மார்ஷல் திட்டத்திற்குப் பதிலளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்ஃபார்ம் என்ற அமைப்பை 1947 ல் உருவாக்கியது.
2.ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
3.கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுத்தது.
23.
1.ஆங்கிலோ-ஜப்பானியக் கூட்டால் பிரான்ஸ் பிரிட்டனிடம் நட்பைக் கோரியது.
2.இது 1904 இல் நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை விளைவித்தது.
3.மொராக்கோவில் பிரான்சை தன்னிச்சையாக செயல்பட பிரிட்டன் ஒத்துக் கொண்டது.
4.எகிப்தில் பிரிட்டனின் ஆக்கிரமிப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது.
24.
1.1871 ல் பிராங்கோ-பிரஷ்ய போரில் அல்சாஸ்,லொரைன் பகுதியை இழந்தது.
2.அதற்காக பிரான்ஸ் பழி வாங்கக்கூடும் என பிஸ்மார்க் எதிர்பார்த்தார்.
3.அதனால் பிரான்ஸை தனிமைப்படுத்த தீர்மானம் கொண்டார்.
25.
1.ஸ்பெயினில் அரசர் பெர்டினான்ட் நீதி விசாரணை அமைப்பை அமைத்தார்.
2.மதம் மாறிய யூதர்களும் மூர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
3.சமய நம்பிக்கைகள் இல்லாதவர்கள் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
26.
1.இங்கிலாந்தில் பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
2.நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இப்பெயர் பெற்றது.
27.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
28.
முக்கிய கடமைகள் :
1.புதிய இந்திய அரசு பொருளாதாரத்தை வளர்த்தல்.
2.வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
3.உற்பத்தி துறையை விரிவாக்கம் செய்தல்.
4.வேலை வாய்ப்புகளை பெருக்குதல் .
5.வறுமையைக் குறைத்தல் போன்றவை முக்கிய கடமைகளாக இருந்தன.
29.
தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காகக் காந்தியடிகளுக்கு கெய்சர் - இ - ஹிந்த் என்ற தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
30.
1. மௌலானா முகமது அலி மௌலானா ஷௌகத் அலி என்ற முஸ்லீம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கினார்கள்.
2. இவர்களின் தலைமையில் கீழ் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டனர்.
3. 1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.
31.
(i) ஜம்மு காஷ்மீருக்காக சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது உறுப்பு அளிக்கிறது.
(ii) இதன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசமைப்புச் சட்டம் உள்ளது.
(iii) இந்திய அரசமைப்புச் சட்டத்திலுள்ள பகுதி IV, IVA (அடிப்படை கடமைகள்) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.
(iv) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் அந்த மாநில எல்லையை மாற்றும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.
32.
33.
(i) வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
(ii) அரசப் பிரதிநிதியின் குழுவிற்கு முஸ்லீம் லீக் தனக்கு மட்டுமே இஸ்லாமியப் பிரதிநிதிகளை நியமிக்க உரிமை உள்ளது என்றது.
(iii) காங்கிரஸ், ஜாதி இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று வலியுறுத்தியது. இது மேலும் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் முயற்சி என்று வேவல் பிரபு கருதி சிம்லா பேச்சுவார்த்தையைக் கைவிட்டார்.
34.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
35.
1. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி காத்திருந்தது துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது.
2. காந்தி இருதரப்பையும் சந்தித்துப் பேசினார்.
3. 35% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தி அறிவுரை வழங்கினார்.
4. தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
36.
1. இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921-இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
2. இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
3. நாடு முழுவதும் தொழிலாளிகளும் விவசாயிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
37.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
38.
(i) ஆரிய சமாஜியத்தின் சுத்தி இயக்கம் மூலம் பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டது.
(ii) மேலும் ஆரிய சமாஜியத்தின் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிளவுப்படுத்தியது.
39.
1. கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இஸ்லாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
2. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றும் அனுதாபமும் கொண்டவர்கள் அதனால் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
3. மெளலானா முகமது அலி மெளலானா செளஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
4. 1920 இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
40.
1 1903-ல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார்.
2 1908 வெடிபொருட்கள் சட்டம், 1910 தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தினர்.
3 1914-ல் இயற்றப்பட்டது புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டம் இயற்றப்பட்டன.
4 இவை தேசிய இயக்கம் வளர்ந்து வருவதை கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
41.
மாட்சிமை பொருந்திய அமர்வு நீதிபதி ஹோம்ஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாகப் பணியாற்றியபோது சௌரி சௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
42.
(i) 1924 ஆம் ஆண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929 ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன.
(ii) கே. எஃப். நாரிமன், எம்.சி. சுக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர்.
43.
1. ஆங்கில அரசு அறிவித்த 1908 டிசம்பரின் மிண்டோ-மார்லி நடவடிக்கைகள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
2. 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை.
3. வெடிமருந்துச் சட்டம் (1908), இந்திய பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனி அரசு வரிசையாக இயற்றியது.
44.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
45.
1. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடக்ககால முயற்சிகளிலொன்று கிறித்துவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
2. மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை சமயப்பரப்புக் குழுக்கள் வழங்கின.
46.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards