By QB365 on 02 Mar, 2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium History Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021
12th Standard
வரலாறு
பகுதி-I
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று சரி. காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் தவறு
தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?
1917
1916
1918
1915
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்த கோஷ்
தாதாபாய் நெளரோஜி
ஃ பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
இந்திய பத்திரிகைச் சட்டம்
1910
1912
1914
1915
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
(அ) கதார் கட்சி | i. 1916 |
(ஆ) நியூ இந்தியா | ii. 1913 |
(இ) தன்னாட்சி இயக்கம் | iii. 1909 |
(ஈ) மிண்டோ-மார்லி சீர்திருத்தம் | iv. 1915 |
ii, iv, i, iii
iv, i, ii, iii
i, iv, iii, ii
ii, iii, iv, i
பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
1.வெளிநாட்டினர் தமது விடுதலைபோரின் தொடக்ககாலத்தில் முக்கியப்பங்கினை ஆற்றினர்.
2.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இதே போன்று தொரு முக்கிய பணியை ஆற்றினர்.
3.அயர்லாந்தவரான டாக்டர் அன்னிபெசன்ட்,பிரிட்டனில் இருந்தபோத அயர்லாந்து தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோ'லிசவாதிகள் குடும்பக்கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரபங்காற்றினர்.
4.பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக அன்னிபெசன்ட் அம்மையார் இந்தியாவுக்கு 1893ல் வந்தார்.
1,2
1,3
இவற்றுள் எதுவுமில்லை
இவை அனைத்தும்
கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
தண்டியாத்திரை நடைபெற்ற ஆண்டு எப்போது?
1930
1931
1932
1935
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.
1852
1854
1861
1865
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் TISCO தொடங்கப்பட்ட ஆண்டு எப்போது?
1908
1907
1009
1911
நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1.அனைத்து இந்திய முஸ்லிம் லீக்
2.ஆரிய சமாஜம்
3.அனைத்திந்திய இந்து மகா சபை
4.பஞ்சாப் இந்து சபை
1, 2, 3, 4
2, 1, 4, 3
2, 4, 3, 1
4, 3, 2, 1
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட ஆண்டு எது?
1920
1921
1923
1922
சரியான வரிசையில் அமைத்து விடையைத்தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
ii, i, iii, iv
i, iv, iii, ii
iii, iv, i,ii
iii, iv, ii, i
கீழ்கண்ட கூற்றில் சரியானவை எது/எவை?
1) இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூன் 12 இல் வார்தாவில் கூடியது.
2) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
3) இராஜாஜியும் புலபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
ii மற்றும் iii
i மற்றும் ii
iii மற்றும்
i மட்டும்
தக்லா என்ற மலைப்பகுதியில் சீனப்படைகள் எப்போது தாக்குதல் நடத்தின?
1962, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 18
1965, செப்டம்பர் 8
1962, செப்டம்பர் 28
பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
பகுத்தறிவுவாதம்
ஐயுறவுவாதம்
அரசில்லா நிலை
தனித்துவம்
______ நகரம் 'காட்டன்பொலிஸ்'எனும் புனைப் பெயரைப் பெற்றது.
மான்செஸ்டர்
லங்காசயர்
லிவர்பூல்
கிளாஸ்கோ
பிராங்கோ -பிரஷ்யப் போர் உருவாகக் காரணமாக விளங்கியது ________ ஆகும்
காஸ்டெய்ன் மாநாடு
எம்ஸ் தந்தி
பிரேக் உடன்படிக்கை
அல்சேஸ் ,லொரைன் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் எழுந்த சர்ச்சை
பன்னாட்டு சங்கம் ________ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.
1939
1941
1945
1946
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லை ________ சேர்ந்தவராவார்.
பர்மா
ஜப்பான்
சிங்கப்பூர்
நார்வே
பகுதி-II
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?
அன்னிபெசன்ட் அம்மையாரின் ஆரம்பகால பணிகள் குறித்து கூறுக.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
அரசு ஒடுக்குமுறை என்றால் என்ன?
மெளண்ட்பேட்டன் பிரபு பற்றி எழுதுக.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?
எதனால் 1848 ஆம் ஆண்டின் ஜூன் 24 முதல் 26 வரையான காலம் 'இரத்த ஜூன் தினங்கள் ' எனக் கொள்ளப்படுகின்றன?
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்களைக் குறிப்பிடவும்.
பகுதி-III
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.
மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?
ராஷ்டிரிய சுயசேவா சங்கத்தின் குறிக்கோள் என்ன?
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தையை விவரி?
1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
“சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக
பகுதி-IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.
சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப்பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சி பற்றி கட்டுரை வரைக.
இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் யாவை?
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.
தனிநபர் சத்தியாகிரகம் பற்றி விரிவாக எழுதுக?
சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும்விளக்குக.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?
Answers
கூற்று சரி. காரணம் தவறு
1915
லாலா லஜபதிராய்
1910
ii, iv, i, iii
இவை அனைத்தும்
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
1930
1854
1907
2, 1, 4, 3
1922
i, iv, iii, ii
ii மற்றும் iii
1962, செப்டம்பர் 8
அரசில்லா நிலை
மான்செஸ்டர்
எம்ஸ் தந்தி
1946
நார்வே
1. 1908 இல் தீவிரவாத தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன.
2. முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு முறையே தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் குறைந்தது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பிரிட்டனில் இருந்தபோது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம்,ஃபேபியன் சோஷிசவாதிகள்,குடும்பக்கட்டுப்பாடு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றினார்.
1. இராஜேந்திர பிரசாத், மஜாருள் ஹக், ஆச்சார்ய கிருபாளினி மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
2. ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக "சம்பரானை" விட்டே வெளியேற்றிவிட்டனர்.
(i) வேலை நிறுத்தங்களில் அலையாலும் கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் பரவுவதாலும் கவலை அடைந்த ஆங்கிலேய அரசு, 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம் மற்றும்
(ii) 1928 பொது மக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
1. இந்தியாவில் வேவல் பிரபுவைத் தொடர்ந்து மெளண்ட்பேட்டன் பிரபு அரசாங்க பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.
2. அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் மெளண்ட்பேட்டன் பிரபு இந்தியா வந்தார்.
3.1947ஜூன் 3 இல் மெளண்ட்பேட்டன் பிரபு இந்திய அரசியல் பிரச்சனைகளை தீர்க்க மெளண்ட்பேட்டன் திட்டத்தை கொண்டு வந்தார்.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
1. முஸ்லிம் லீக் தனிநாடு கோரிக்கையைக் தொடர்ந்து கொண்டு வந்தது.
2. முஸ்லிம் லீக் 1940-ல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி நிறைவேற்றியது.
3. முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
1. லூயி பிளாங்கின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பட்டறைகள் மூடப்பட்டதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினர்.
2. ஜூன் 24 - 26ம் தேதிகளுக்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
3. பதினோராயிரம் புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
4. இக்காலம் இரத்தம் தோய்ந்த ஜூன் தினங்கள் என்று அழைக்கப்பட்டன.
1.அமெரிக்காவின் உளவு நிறுவனம் மத்திய புலனாய்வு முகமை (Central inteligence Agency -CIA)1947-இல் உருவாக்கப்பட்டது.
2.சோவியத் யூனியன் உளவு நிறுவனம் KGB(Komitre Gpousdars Tvennoy Besopasnbosti or Committe for National Security)1954 இல் உருவாக்கப்பட்டது.
1. காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுப்பட்டிருந்து, இந்துக்களிடையே பிராமணர்கள் உயர்நிலை சார்ந்த சமய, தத்துவ அறிவினைப் பெறும் தனியுரிமையைப் பெற்றிருந்தனர்.
2. கல்வியை தங்களின் முற்றுரிமையாக்கிக் கொண்ட அவர்கள் பிரதானமாக அர்ச்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் சமூகத்தில் அங்கம் வகித்தனர்.
3. இந்தியா போன்ற ஒரு பெரிய காலனி நாட்டை ஆள்வதற்கு ஆங்கிலேயர்களுக்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்றவர்கள் தேவைப்பட்டனர்.
4. தேவைப்படும் அளவிற்கான பெருவரியானவைப் படித்த நபர்களை இங்கிலாந்திலிருந்து அழைத்து வருவது சாத்தியமற்றது. இந்நோக்கத்தில் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றோரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
(i) சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்குப் பின் அதுபோன்று பெயர் சூட்டிக் கொண்டது.
(ii) சிட்டகாங்கைக் கைப்பற்றுவதற்காக மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடந்த அவர்கள் திட்டமிட்டனர்.
(iii) 1930- ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது.
(iv) புரட்சியாளர்கள் தேசியக்கொடியை ஏற்றி "வந்தே மாதரம் புரட்சி ஓங்குக" போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்த்தினர்.
(v) இந்த தாக்குதல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து.
1.இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று இவ்வமைப்பின் உறுப்பினர்கள் வெளிப்படையாக கூறினர்.
(i) பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல் ஆகும்.
(ii) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல்.
(iii) 500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.
(iv) மக்களாட்சி, இறையாண்மை, சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
1. பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும், பாக்கிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள் இருந்தனர்.
2. இந்து - முஸ்லிம் வன்முறைகளுக்கு இடையே ஏற்பட்ட உயிர்க் கொலைகள், அதிகாரப் பரிமாற்றம் மென்மையாக நடைபெறவில்லை.
3. இந்திய ராயல் கப்பற்படைகலகம், ஐ.என்.ஏ வழக்குகள் ஆகியவற்றின் போது நிலவிய இந்து முஸ்லிம் ஒற்றுமை தற்போது குலைந்து வெடிக்கும் எரிமலை போல் மாறியிருந்தது.
4. வகுப்பு வாதக் கலவரங்கள் இந்தியா வெங்கும், குறிப்பாக வங்காளம், மற்றும் பஞ்சாப்பில் அதிகமாக நடைபெற்றன.
1.1492 ல் கொலம்பஸ் காடிஸ் அருகே உள்ள பாலோஸ் துறைமுகத்திலிருந்து மூன்று சிறிய கப்பல்கள் (தி சான்டா மரியா,தி நிஸா) மூலமாகப் பயணித்தார்.
2.2 மாதங்கள் கழித்து இந்தியா என்று அவரால் நம்பப்பட்ட நிலப்பகுதியை வந்தடைந்தார்.
3.ஆனால் உண்மையில் அது அமெரிக்கா எனும் ஒரு புதிய கண்டமாகும்.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகு முறைகளை (avenutes) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாச்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
1.ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை பெரிதும் நம்பி வாழ்ந்தனர்.
2.ஒருங்கிணைந்த அமைப்பு முறையும் ஒற்றுமையும் ஏற்படாதவரை நிரந்தரமான முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள்.
3.ஆகவே தொழிற்சங்கங்களை ஏற்படுத்த முனைந்தனர்.
4.தொழிலாளர் நலம் காக்கவும் எனப் பலருக்கும் வழிகாட்டியது.
1.மூன்று பிரச்சனைகளை அது அணுகியிருந்தது.
2.ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான ஆலந்து தீவுகளின் பிரச்னையை தீர்த்து வைத்தது.
3.மேல்புற சைலேசியாவை முன்னிறுத்தி போலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான சிக்கலைத் தீர்த்து வைத்தது.
4.1925 ல் கிரீஸ் பல்கேரியா மீது படையெடுத்த போது சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளின் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறை சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
(i) தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது.
(ii) தொடக்கத்தில் இவ்வியக்கம் பெருமளவில் வங்கப்பிரிவினைக்கு எதிரான எதிர் வினையாகவே இருந்தது.
(iii) 1907 சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திரபால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களுக்கிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின.
(iv) தென்னாட்டுத் திலகர் என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் சுதேசி கருத்துக்களைப் பரப்பி வந்தார். 1906 இல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனியை நிறுவினார்.
(v) 1905 ல் வங்காளத்தில் தோன்றிய சுதேசி இயக்கம் தமிழக மக்களுக்கிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது . "வந்தே மாதரம்" என்ற முழக்கம் தமிழகத்தில் ஒலிக்கத் துவங்கியது.
(vi) சுதேசி இயக்கத் தலைவர்களான வ.உ.சி, பாரதியார், சிவா போன்றவர்களது பேச்சும், எழுத்தும் மக்களை எழுச்சியுறச் செய்தன.
(vii) வ.உ.சி.யின் சுதேசி இயக்கம் முன்னெடுப்பு தேசியத் தலைவர்களால் பாராட்டப்பெற்றது
(viii) சுதேசி முற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு அரவிந்தர் கோஷ் உதவினார்.
(ix) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார்.
(x) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒருவரான சங்கரன் நாயர், இந்தக் கொலை "தேசிய விழிப்பின் எதிரொலி" என்று குறிப்பிட்டார்.
1. 1906-இல் மிண்டோ இந்திய அரசுப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருது வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
2. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நெளரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3. இதில் சுதேசி, புறக்கணிப்பு தேசியக்கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் நிறைவேற்றினர்.
4. காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகள் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
5. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
6. காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளராக ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் மின்மொழிந்தனர்.
7. 1906-இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்று கேள்வியை ஒட்டி நிலைமை கொதிநிலையை எட்டியது.
8. பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்க கோரியது.
9. இதனால் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் 1907-இல் நடைபெற்ற சூரத் மாநாட்டில் 1885 டிசம்பரில் உருவான காங்கிரஸ் மிதவாத தேசியவாதிகள் தீவிர தேசியவாதிககென இரு குழுக்களாகப் பிரிந்தது. இதுவே "சூரத் பிளவு" எனப்பட்டது.
1. கிலாபத் விஷயம் பல பிரிவினரால் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
2. உத்திரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம்கள் கிலாப்(எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்துக்கு எதிரான பொதுக்கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
3. இவ்வாறே, மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுகளுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர்.
4. இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோராகத் தொழிற்சாலைப் பணியாளர்கள் என்ற புதிய வர்க்கத்தினர் உருவானார்கள்.
5. இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களைச் சேர்ந்த தொழிற்சாலை பணியாளர்கள் முதலில் மிகப்பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.
6. பம்பாயின் சோரப்ஜீ ஷபூர்ஜீ மற்றும் என்.எம்.லோக்காண்டே, வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் குரல்களை எழுப்பினர்.
7. பணியாளர்களுக்கான பணி நிலைமைகள் மிக மோசமாக இருந்தது.
8. மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகிய இந்த கிளர்ச்சியின் துயர விளைவுகள் ஆகும்.
1. 1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மைப்புள்ளியாக அம்பேத்கர் விளங்கினார்.
2. மஹர் சாதியின் ராணுவவீரரின் மகனாகப் பிறந்தார் டாக்டர். அம்பேத்கர்.
3. எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912 -ல் பட்டதாரி ஆனார்.
4. பரோடா அரசின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்பு பட்டத்தையும்.
5. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
6. சட்டம் மற்றும் பொருளாதார படிப்புகளுக்காக லண்டன் சென்றார்.
7. 1916- இல் மானுடவியல் தொடர்பான சரவதேச மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தார்.
8. தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்களின் ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிட்டார்.
9. அம்பேத்கர் புதிய பத்திரிகைகள் மற்றும் அமைப்புகளைக் தோற்றுவித்தார்.
1.பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழில்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது.
2.மற்ற காலணிகளைப் போலவே இந்தியாவும் ஒரு மூலப்பொருள் கொள்முதல் செய்யும் பகுதியாகவும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தையாகவும் கருதப்பட்டது.
3.இதுமட்டுமன்றி,முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெரும் மந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது.
4.1854 இல் பம்பாயில் கவஸ்ஜு நானாபாய் தவர் (1815-73)என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார்.இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது.
5.இந்தியத் தொழில் முனைவோரால் அகமதாபாத் ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டதும்,அகமதாபாத் மற்றும் ஆகியவை பருத்தி ஆலைகளின் முக்கிய மையங்களாக மாறின.
6.1914 ஆம் ஆண்டு வாக்கில்,பம்பாய் மாகாணத்திற்குள் 129 நூற்பு,நெசவு மற்றும் பிற பருத்தி ஆலைகள் இருந்தன.
7.1875-76 க்கும் 1913-14க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் பருத்தி ஜவுளி ஆலைகள் எண்ணிக்கை 47 லிருந்து 271 ஆக அதிகரித்தது.
8.இந்தியாவில் தொழில்துறையை நிறுவுவதில் ஒரு முக்கியமான மைல் கல் இந்தியாவின் இருப்புப்பாதை விரிவாக்கமும் புகைவண்டிப் போக்குவரத்து அதிகரித்ததுமேயாகும்.
9.முதல் பயணிகள் ரயில் 1853 இல் பம்பாய்க்கும் தானேவுக்குமிடையே இயங்கியது.இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் தொழில் இரயில்வே ஆகும்.
10.இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
11.1892க்குப் பிறகு நிலக்கரி உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகமெடுத்து முதல் உலகப்போரின் போது உச்சத்தையெட்டியது.
1. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரித்தியேகமான மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்ததது.
2. இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வை அவர்கள் இடம் ஏற்படுத்துதல்.
3. இந்திய முஸ்லிம்களை விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
4. இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
5. 1916-இல் முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.
(i) காந்தியடிகள் மே 1942 வாக்கில் இந்திய தேசிய காங்கிரசை அடுத்தகட்டச் செயல்பாட்டிற்கு தயார்படுத்தலானர்.
(ii) இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 14 ஜூலை 1942 இல் வார்தாவில் சந்தித்தது.
(iii) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்பு போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
(iv) கிரிப்ஸ் தூதுக்குழுவோடு ஏற்பட்டுயிருந்த கசப்பான அனுபவம் காந்தியடிகளையும் நேருவையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷார் மீது நம்பிக்கை இழக்க வைத்தது.
(v) இதை காந்தியடிகள் 16 மே 1942 இல் கூடியப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினர்.
(vi)மக்களை நோக்கி "செய்" அல்லது செத்துமடி" என்று கூறி முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக் கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போக்கு:
(i) காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் 9 ஆகஸ்ட் 1942 அன்று அதிகாலையில் கைது செய்து சிறையில் தள்ளியது.
(ii) கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் கடையடைப்புகளும், காவல் துறையினரோடு வன்முறை மோதலும் பதிலடியாகத் தரப்பட்டது.
(iii) இந்தியா முழுமையிலும் தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
(iv) ஜாம்ஷெட்புரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தப்போராட்டம் 20 ஆகஸ்ட் துவங்கி 13 நாட்கள் நடைப்பெற்றது.
(v) அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலையில் ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(vi) கைதானவர்களின் எண்ணிக்கை 1943 ஆம் ஆண்டு முடிவில் 91836 என்ற அளவை எட்டியது.
(vii) அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது.
(viii) அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலையங்களும், 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும், தேசத்திற்கு உட்படுத்தப்படவும் இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன.
1. காந்தியடிகள் சர்வாதிகாரத்திற்கு எதிரானப் போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்க தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார்.
2. சத்தியாகிரகிகள் தங்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவித்துவிட வரையறுக்கப்பட்டது.
3. சத்தியாகிரகள் முழங்க வேண்டியதாவது பிரிட்டிஷரின் போர்முயற்சிக்கு மனித சக்தியாகவோ, பணமாகவோ உதவுபுரிதல் தவறாகும்.
4. உருப்படியான செய்கை என்பது வன்முறையை கைக்கொள்ளாமல் எல்லா விதத்திலும் போர் முயற்சிகள் எதிர்ப்பதேயாகும்.
5. வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னேர் ஆசிரமத்திருகே 17 அக்டோபர் 1940-இல் முதல் சத்தியாகிரத்தை நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப்பட்டது.
(i) இந்தியாவிற்கான அரசமைப்பு வரைவுப்பணி தொடங்கியபோதே இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.
(ii) காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டன.
(iii) இதனால் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
(iv) ஹைதராபாத் நிஜாம் இந்திய ஆளுமைக்கு கீழ்ப்படிய மறுத்து, அவர் ஹைதராபாத் அரசை சுதந்திர அரசு என்று அறிவித்தார்.
(v) ஜுனாகத் அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்.
(vi) இதே போல், காஷ்மீரின் இந்து அரசான மகாராஜா ஹரிசிங் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்குமென்று அறிவித்தார்.
(vii) இதனால் அந்நாட்டு மக்கள் தேசிய மாநாட்டுத் தலைமையில் "காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்" என்று போராட்டத்தை அரசருக்குகெதிராக தொடங்கினார்.
(viii) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ix) 1946 முதலே படேல் காஷ்மீர் மஹாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
(x) இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குபின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரை சூறையாடினர்.
(xi) இந்த நடவடிக்கையை ஹரிஷிங்கால் தடுக்க முடியவில்லை.
(xii) காஷ்மீர் அரசுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம் அனுப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் ஹரிசிங் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
(xiii) இதன் விளைவாக காஸ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.
(xiv) சுதேச அரசுகளை இந்தியாவோடு நிறைவாக இணைக்கும் பணியை அப்போதைய இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகிய சர்தார் வல்லபாய் படேல், மற்றும் நேரு போன்றோர் திறம்பட செய்து முடித்தனர்.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IIC)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிம் நிறுவனம் (Tata Institute of fundametal Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-phyiscs) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Celluar and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientofic and Industraial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and IndustrialResearch) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் (National Institute of information Technology -IIT) செயல்பட்டு வருகின்றன.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்:
1.பாவ மன்னிப்பு வழங்கும் முறுக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு மன்னித்து பெற்றது).வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது.
2.ஆறாம் அலெக்ஸாண்டர்,இரண்டாம் ஜூலியஸ்,பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர்.
3.போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதிவியேற்ற சம்பவமும் நடந்தது.
4.மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தைப் வழங்குவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள்.
மார்ட்டின் லூதர்:
1.கிறித்துவப் பாதிரியரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ரோமானிய,தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினர்.
2.தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
3.பைபிள் மட்டுமே உன்னதமானது'போப்பாண்டவரே அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார்.
4.லூதர் பைபிளை ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்தார்.
5.லூதரன் பிரட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை.
6.அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்.நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள்.பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள்.
7.பாதிரியர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்:
1.வியாபார,வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள்,முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
2.கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும்,காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
3.இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன.
4.பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
5.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
6.நிலக்கரி, இருப்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில்அதிக அளவில் கிடைத்ததென்பது தொழில் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
7. தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் முலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
8. தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
6.நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
தொழிற்புரட்சியின் தாக்கம்:
1.இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
2.மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது.
3. தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.
4.இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருளுற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.ஆயிரக்கணக்காக கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.
5.தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
6.தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள்,ஆலை தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது,தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.
7.இயந்திரங்களை உடைப்பது பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1.பிரஷ்யாவின் பிரதம அமைச்சர் பதவிவகித்த ஆட்டோவான் பிஸ்மார்க் (Otto von Bismark ) பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மனியப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட வேண்டுமென்றே நோக்கோடு அதனை வலுப்படுத்தினார்.
2.ஒருங்கிணைவை அடைவதற்கு அவர் "இரத்தமும் இரும்பும்" என்ற வலுவான கொள்கையைக் கைக்கொண்டார்.
3.ஜெர்மனிய ஒருங்கிணைவை ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் மோதாமல் அடைவது சாத்தியமில்லை என்று அவர் புரிந்துகொண்டிருந்தார்.
4.இராஜதந்திர நகர்வுகளின் வாயிலாக ஆஸ்திரியாவுடன் பிரான்சுடனும் முரண்போக்கைக் கைக்கொள்ளலானார்.
5.ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கிய அவர் பிரஷ்யாவிற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் அந்நாடு தலையிடாது என்பதை உறுதி செய்து கொண்டார்.
6.அதன்பின் ஜெர்மனிய ஒருங்கிணைவை அடைய மூன்று போர்களை நடத்தும்படி ஆயிற்று.
ஸ்லெஸ்விக் -ஹால்ஸ்டின் சிக்கல்:
1.ஷெல்ஸ்விக்கும் ஹால்ஸ்டினும் டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருந்த இரு ஜெர்மானிய மாநிலங்களாகும்.
2.இவ்விரு பகுதிகளையும் (Duchies) 1863 இல் டென்மார்க் மன்னர் தனது அரசுடன் இணைத்தார்.
3.பிஸ்மார்க் ஆஸ்திரியாவுடன் சேர்ந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டு டென்மார்க்கை எதிர்க்க முன்மொழிந்தார்.
4.அதன்படி 1864இல் ஆஸ்திரியா ,பிரஷ்யாவின் கூட்டுப்படைகள் டென்மார்க்கைப் போரில் தோற்கடித்தன.
ஆஸ்திரிய - பிரஷ்யப் போர் 1866 :
1.தனது ராஜதந்திர செயல்பாடுகளின் வாயிலாக பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் நடுநிலையை பிஸ்மார்க் உறுதி செய்துகொண்டார்.
2.பின்னர் ஆஸ்திரியாவை வெனிஷியப் பகுதியை விட்டு அப்புறப்படுத்த விரும்பிய அவர் பியட்மான்ட் - சார்டினியாவின் ஆதரவைப் பெற்றார்.
3.பெரும் சக்திகள் எதுவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவளிக்காது என்பதனை உறுதி செய்து கொண்ட பிஸ்மார்க் பிரஷ்யாவை தாக்க ஆஸ்திரியாவைத் தூண்டும் செயல்களில் ஈடுப்பட்டார்.
4.இவ்வாறு நடந்த ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் ஏழு வாரப் போர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிராங்கோ-பிரஷ்யப்போர்,1870-71 :
1.பிஸ்மார்க் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒண்றின்னைக்கும் பொருட்டு பிரஷ்யாவிற்கும்,பிரான்சிற்குமிடையே பிளவை ஏற்படுத்த தனது கவனத்தைச் செலுத்தினார்.
2.அதற்கான வாய்ப்பு ஸ்பானிய அரசுரிமை வாரிசுப் பிரச்சனை தோன்றியபோது ஏற்பட்டது.
3.ஸ்பெயினில் ஏற்பட்ட ஒரு புரட்சிக்குப்பின் இரானி இஸபெல்லா வெளியேற்றப்பட்டு பிரஷ்ய மன்னரின் உறவினரான இளவரசர் லியோபால்டிற்கு அரியணை வழங்கப்பட்டது.
4.பிரஷ்யர்கள் தங்கள் மன்னர் மதிக்கப்படவில்லை என்று நினைக்கவும் தக்கபடி பிஸ்மார்க் மாற்றியமைத்தார்.இதனால் எம்ஸ் தந்தி பிராங்கோ பிரஷ்யப் போர் தோன்ற வழிவகுத்தது.
5.பிஸ்மார்க் கடுமையான பல சரத்துகளை பிரான்சின் மீது திணித்தார்.அல்செஸ் - லொரைன் பகுதிகளை விட்டுக்கொடுக்க நேர்ந்த பிரான்ஸ் பெருந்தொகையைப் போர் இழப்பீடாகவும் கொடுக்கும்படி ஆயிற்று.
6.வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரஷ்ய மன்னர் முதலாம் வில்லியம் வடக்கு ஜெர்மானிய கூட்டமைப்பிற்கும்,தெற்கத்திய ஜெர்மானிய மாகாணங்களுக்கும் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
7.இவ்வாறு இராஜதந்திர உத்திகளையும், போர் நடவடிக்கைகளையும் கொண்டு ஜெர்மானிய ஒருங்கிணைவு சாத்தியப்படுத்தப்பட்டது.