9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 25/12/2018
3rd Term Important Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
________ , _________ மற்றும் ________ ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
2.
ஹைஃபா க்கள் கிளைகளோடு சேர்ந்து ஒரு கடின வலைப்பின்னலை ஏற்படுத்துவது _____________ ஆகும்.
3.
பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.
4.
ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .
5.
இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப் பு விசையைத் தீர்மானிக்கிறது.
6.
கூற்று: மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு என்பது மண்ணில்லாமல் நீரிலேயே தாவரங்களை வளர்ப்பதாகும்
காரணம்: தாவரங்களுக்குத் தேவை யான நீர், தாது உப்புகள், பொதிய ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படுமானால் மண்ணில்லாச் சூழலிலும் நன்கு வளர்ந்து நல்ல விளை ச்சலைத் தரும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை .
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
7.
கூற்று: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்க முடியும்.
காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத்தடுக்கின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
8.
கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
9.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
10.
கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம் அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?
ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை .
ஒரு விநாடியில் அலை ஒன்று கடந்த தொலைவு.
இரு அடுத்தடுத்த முகடுகளுக்கிடையே உள்ள தொலைவு
அலை ஒன்று ஏற்படுத்தும் பெரும அதிர்வு.
11.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
டார்ஸெட்
ஷகிவால்
சிவப்பு சிந்தி
12.
கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்ம ங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் _______ நிலையில் நீக்கப்படுகின்றன.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
இவற்றில் எதுவுமில்லை
13.
வினிகரின் முக்கிய உட்கூறு _____________ ஆகும்.
சிட்ரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
ஹெட் ரோகுளோரிக் அமிலம்
14.
கீழ்கண்டவற்றுள் இரட்டைப் பிணைப்பு இல்லாதது எது?
CO2
C2H4
HCl
O2
15.
A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3 பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)
16.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
17.
100 செமீ-3 பருமனளவு கொண்ட ஒரு பொருள் நீர்க் குவளையில் முழுவதுமாக மூழ்கியுள்ள து. நீர் மற்றும் குவளையின் எடை நீரில் மூழ்குவதற் குமுன் 700 கிராம் எனில், நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும் குவளையின் எடையைக் கண்டுபிடி
18.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
19.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
20.
வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?
21.
ககன்யான்-குறிப்பு வரைக.
22.
சுற்றுக்காலம் வரையறு
23.
நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
24.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
25.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
26.
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?
27.
அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?
28.
அதிர்வெண்
29.
அலைவுக் காலம்
30.
மீயொலி
31.
Hardware
32.
MAC OS
33.
DPT
34.
HIV
35.
ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.
36.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
37.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
38.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
39.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
40.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
41.
பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?
42.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிரியான்கள்
1.
( )
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்
2.
( )
மைசீலியம்
3.
( )
அடிப்
4.
(b)
5.
(a)
6.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
7.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
8.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
9.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
10.
(a)
ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை .
11.
(a)
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
12.
(c)
மூன்றாம்
13.
(b)
அசிடிக் அமிலம்
14.
(c)
HCl
15.
அ) A மற்றும் B ஆகிய பொருள்களின் எடை காற்றல் சமமாக இருக்கும்.
ஆ) பொருள் A யின் அடர்த்தி (20செமீ3பருமன் உள்ள 4கி.கி ) அதிகம்.
இ) \(P=P\rho g\)
\(h=P/\rho g\)
\(h=\frac { 99960 }{ 13600\times 9.8 } =.75m\)
=750மி.மீ
16.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
17.
பொருளின் பருமனளவு cc =100 \(\times\) 10-6m3
m =\(\rho V\)
அலுமினியத்தின் அடர்த்தி =\(\rho \) = 2700 Kg m-3 எனக் கொள்க.
W = mg =\(\rho\)Vg = 2700 \(\times\) 100 \(\times\) 10-6 \(\times\) 9.8
= 2.646 N
பொருள் நீரில் மூழ்கியுள்ள போது எடை = 1000 kg-3
=2.646-g(1000 \(\times\) 100 \(\times\) 10-6)
=2.646 - 0.98
=1.666N
மூழ்குவதற்கு முன் நீர் மற்றும் குவளையின் எடை = 900 \(\times\) 10-3Kg force
=900 \(\times\) 10-3 kg \(\times\) 9.8
= 8.82 N
எனவே மூழ்கிய பின் நீர் மற்றும் குவளையின் எடை = 8.82 + 1.666N
= 10.486 N
= \(\frac { 10.486 }{ 9.8 } \) = 1.07 kg
= 1070 g
மூழ்கியுள்ள போது நீர் மற்றும் குவளையின் எடை = 1070 g.
18.
i) தேன் புரைத்தடுப்பானாகவும்,பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது,இது இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது
ii) இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
iii) ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவதில் பயன்படுகிறது.
iv) இருமல் , சளி , காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
v) நாக்கு , வயிறு மற்றும் குடற்பண்புகளை குணப்படுத்த உதவுகிறது.
vi) இது செரிமானத்திற்கும் , பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது
19.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
20.
வெற்றிடத்தில் ஒலி பரவாது. பரவ ஊடகம் தேவை.
21.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர், கே.சிவனின் கூற்றுப்படி,2021 / 2022 -ம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத்திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இதன் முதல் பணிக்குழுவில் மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பர். ஜி.எஸ்.எல்.வி - III ராக்கெட் மூலம் விண்வெளிக்கு இவர்களை எடுத்துச் செல்லும் திட்டம் ககன்யான் என்றழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஏவுதல் தொழிநுட்பத்தில் வல்லுநரான வீ.ஆர்.லலிதாம்பிகா என்பவர் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
22.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

23.
புதைபடிவ எரிப்பொருள்களை எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது. விவசாய நிலங்களில் பயன்படுத்தபடும் நைட்ரஜனானது ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை சென்றடைகிறது. இவ்வாறு கடத்தப்படுவதன் மூலம் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வாழிடங்கள் அழிகின்றன; உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றியமைக்கப்படுகின்றன.
24.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
25.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
26.
உலகில் உள்ள அனைத்து பொருள்களும் எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. குறைந்த காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிக்கப்படும்போது கார்பன் எரிபொருளானது முழுவதுமாக எரியாததால் அந்த அறையில் கார்பன் மோனாக்ஸைடு உருவாகின்றது. இந்த கார்பன் மோனாக்ஸைடு நச்சுத்தன்மை வாய்ந்தது. இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அங்கு இருப்பது ஆபத்தானது.
27.
படகின் அடியில் துளை இருப்பதால் அதிக அளவு நீர் படகினுள் சென்றுவிடும். என வே படகானது அதிக எடையுடன் காணப்படும். எனவே படகு மூழ்கத் தொடங்கும். படசின் அடிப்பகுதியில் உள்ள நீரின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தினை விட அதிகமாக இருப்பதால் படகு நீரினுள் மூழ்கி விடும்.
28.
ஹெர்ட்ஸ்
29.
விநாடி
30.
20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
31.
RAM
32.
கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்
33.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
34.
Human immunodeficiency virus
மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ்
35.

ஒலி எதிரொலித்தல் விதிகள்:
(i) ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்.
(ii) ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
(iii) படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு குழாய்களை எடுத்துக் கொள்க. காகிதத்தைப் பயனப்டுத்தியும் அவற்றை உண்டு பண்ணலாம். ஒரே மாதிரியான இரண்டு குழாய்களைச் செய்க. குழாயின் நீளம் தேவையான அளவு பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை ஒரு மேசையின் மீது படத்திலுள்ளவாறு அமைக்க வேண்டும். ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்துக்கடிகாரத்தை வைக்கவும். மற்றொரு குழாயின் மூலம் நிறுத்துக்கடிகாரத்தின் ஒலியினைக் கேட்ட முயற்சிக்கவும். குழாயின் நிலையை மாற்றி ஒளியானது தெளிவாகக் கேட்குமாறு செய்ய வேண்டும். இப்பொழுது படுகோனம் மற்றும் எதிரொலிப்புக் கோணம் ஆகியவற்றை அளக்கவும். அவற்றிக்கிடையேயான தொடர்பைக் கண்டறியவும். படுகோனத்தின் மதிப்பை சோதனையை மீண்டும் செய்யவும்.
36.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
37.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்:
1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன. எ.கா.எருக்கு
2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
3.மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா.சப்பாத்திக்கள்ளி.
4. ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
38.
வைரஸ்கள் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(i) தாவர வைரஸ்கள்:
இவை தாவரங்களைத் தாக்கி நோயினை உருவாக்குகின்றன. எ.கா: புகையிலை மொசைக் (பல வண்ண) வைரஸ், காலிபிளவர் மொசைக் வைரஸ், உருளைக்கிழங்கு வைரஸ்.

(ii) விலங்கு வைரஸ்கள்:
இவ்வகை வைரஸ்கள் விலங்குகளைத் தாக்கி நோயுண்டாக்குகின்றன. எ.கா: அடினோ வைரஸ், ரெட்ரோவைரஸ் (எச்.ஐ.வி) இன்புளுயன்சா வைரஸ்.

(iii) பாக்டீரியா வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்கள்): இவைகள் பாக்டீரியாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்கள் ஆகும்.
எ.கா: பாக்டீரிய அழிப்பு வைரஸ்.(T4)

39.
i) அமிலச்சாயங்கள்: இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும், இவை விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளுக்கு சாயமேற்றுவதற்கு பயன்படுகின்றன. கம்பிளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்.
ii) காரச்சாயங்கள்: இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.
iii) மறைமுக சாயம்: இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே, அவை முதலில் நிறமூன்றிகளுடன் (mordants) செயல்படுத்தப்பட வேண்டும். நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கப்படக்கூடிய பொருளாகும். இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது. அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமூன்றிகளாக பயன்படுகின்றன. எ.கா: அலிசரின்.
iv) நேரடி சாயங்கள்: இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சியை உடையன. இவை துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: காங்கோ சிவப்பு.
v) தொட்டிச்சாயம்: இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பிளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. எ.கா: இண்டிகோ.
40.
ரோட்டா வைரஸ் என்ற நுண்ணுயிரி வாந்தி பேதியினை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்புறம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது இதைத் தடுக்கும் முறையாகும்.
41.
அலெக்சாண்டர் ஃபிளமிங்
மற்ற எதிர் உயிர்ப்பொருள்கள்: ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ரோமைசின், பேசிட்ரோசின், செபலோஸ்ப்ராய்ன்
42.
பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல தீமையாக மாறிப்போன புரதத்துகள்கள் ஆகும். மேலும் இவை புரதங்களை மட்டுமே கொண்டுள்ள வைரஸ் துகள்களாகும், நியூக்ளிக் அமிலங்கள் காணப்படவில்லை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards