6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 16/03/2020
6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?
2.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
3.
பட்டனப்பாலையின் ஆசிரியர் பற்றிக் குறிப்பு வரைக.
4.
மதுரைக்கும் ரோம் நகருக்கும் இருந்த வர்த்தகத் தொடர்பினை விளக்குக.
5.
சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?
6.
கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.
7.
வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.
8.
கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய விதம் பிற ஆதாரங்கள் யாவை?
9.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
10.
தலநேரம் என்பது என்ன?
11.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.
12.
இடி, மின்னல் - குறிப்பு வரைக
13.
குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
14.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
15.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
16.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?
17.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
18.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
19.
சேமிப்பு என்றால் என்ன ?
20.
வணிகம் என்றால் என்ன?
21.
உயிரற்ற வளங்களை வரையறு.
22.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
23.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
24.
தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?
25.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.
26.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
27.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?
28.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
29.
இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?
30.
மாறாக் கருத்து என்றால் என்ன?
31.
மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன?
32.
பரிணாமம் என்றால் என்ன?
33.
பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?
34.
அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?
35.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
36.
வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
1.
சியாரா நெவேடா, பைரினீஸ், ஆல்ப்ஸ், அப்பென்னைன்ஸ், டினாரிக், ஆல்ப்ஸ் , காகசஸ் மற்றும் கார்பேதியன் மலைத்தொடர்கள்.
2.
டோக்கியோ, ஷங்காய், சிங்கப்பூர், ஹாங்காங், சென்னை, மும்பை, கராச்சி மற்றும் துபாய் ஆகியன ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களாகும்.
3.
பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இவர் பொ.ஆ.மு.2 ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.
4.
ரோம மற்றும் பிறநாடுகளின் நாணயங்கள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது மதுரைக்கும் ரோமிற்கும் இருந்த வர்த்தகத் தொடர்பிற்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
5.
மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன. மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடன், வடிவில் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
6.
மொகஞ்சதாரோவில் இருந்த மிகப் பெரிய பொது கட்டடம் கூட்ட அரங்கம் ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளைக் கொண்ட பறந்து விரிந்த கட்டடம் ஆகும்.
7.
திருமலை நாயக்கர் மஹால், வேலூர் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், சாஞ்சி ஸ்தூபி மாறும் மடாலயம்.
8.
கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய பாறை ஓவியங்கள் மற்றும் குகைச்சுவர் ஓவியங்கள் ஆதாரங்களாக அமைகின்றன.
9.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
10.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
11.
| நிலச்சரிவு | பனிச்சரிவு |
| பாறைகள், பாறைச் சிதைவு மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது |
பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும். |
| இது மலைச் சரிவில் ஏற்படுகிறது |
இது 00 குறைவான வெப்பமுள்ள மலை உச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது. |
12.
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒளி அலைகளும் ஏற்படுகின்றது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.
13.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியாகத் தசம எண் முறையும் குப்தர்கள் நவீன உலகிற்கு விட்டுச்சென்றுள்ள மரபுவழிச் சொத்தாகும். ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தா அகியோல் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல், வானியல் அறிஞ்சர்கள் ஆவர். ஆரியபட்டர் தனது நூலான 'சூரிய சித்தாந்தா' வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
14.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
15.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
16.
1. ஊராட்சி மன்றத் தலைவர்
2. பகுதி உறுப்பினர்கள்
3. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
4. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
17.
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே பிரதிநிதித்துவ மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
18.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
19.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்துபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
20.
உபரியான பொருட்களை வாங்குவதும் விற்பதும் வணிகம் எனப்படும்.
21.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
22.
கண்டறியப்பட்ட வளங்கள் தற்போறு பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழப்பு நிலக்கரிச் சுரங்கம்,
23.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
24.
(i) பண்டைய தமிழ் இலக்கியங்கள்
(ii) அயல் நாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகள்
(iii) தொல்லியல் கண்டுபுடிப்புகள் ஆகியவை தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் ஆகும்
25.
பெருங்குளம் என்பது அகன்ற செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கமாகும். சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு சுவரில் இயற்கை தார் பூசி நீர் கசிவு தடுக்கப்பட்டிருந்தது. நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டிருந்தது.
26.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல பயன்பாட்டை நன்கு அறிந்திருந்தது. மக்கள் பயன்படுத்திய பொருட்கள் வெண்கலத்தாலே உருவாக்கப்பட்டிருந்தால் இதனை வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கிறோம்.
27.
இந்திய மக்கள் யாவரும் மதம், சாதி, மொழி, இனம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.
28.
(i) கண்டம் எனப்படுவது மலைகள், பீட பூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலைப்பரப்பாகும்.
(ii) இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா "துணைக் கண்டம்" என்று அழைக்கப்படுகிறது.
29.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 (1)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17 (1)
30.
(i) முன் முடிவு வலுவாக இருக்கும் பொது ஒத்த கருத்து உருவாகிறது.
(ii) ஒத்தக்கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றி தவறான கருத்தாகும்.
31.
(i) மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி படிப்பது மானுடவியல் ஆகும்.
(ii) மானுடவியல் என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
(iii) anthropos என்பதன் பொருள் மனிதன்.
(iv) logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.
32.
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
33.
ஆசியா,
ஆப்ரிக்கா,
வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா,
அண்டார்டிகா
ஐரோப்பா
ஆஸ்திரேலியா.
34.
கிழக்கு - ஐரோப்பா , ஆப்ரிக்கா
மேற்கு - வட அமெரிக்கா, தென் அமேரிக்கா
35.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
36.
தமிழ்நாடு - அத்திரம் பாக்கம், ஆதிச்சநல்லூர் , பையம் பள்ளி
கர்நாடகா - ஹன்சாகி பள்ளத்தாக்கு
மத்தியப் பிரதேசம் - பிம்பேட்கா
ஆந்திராப் பிரதேசம் - பிரம்மகிரி
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards