6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
370
380
360
390
2.
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
1240 நிமிடங்கள்
1340 நிமிடங்கள்
1440 நிமிடங்கள்
1140 நிமிடங்கள்
3.
கீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்?
இரண்டாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
தந்திவர்மன்
பரமேஸ்வரவர்மன்
4.
அ) பதஞ்சலி - 1. கலிங்கம்
ஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்
இ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்
ஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்
உ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.
4, 3, 2, 1, 5
3, 4, 5, 1, 2
1, 5, 3, 4, 2
2, 5, 3, 1, 4
5.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
ஐஸ்லா ந்து
நெதர்லாந்து
போலந்து
சுவிட்சர்லா ந்து
6.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
ஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.
ஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன
ஐர
ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
7.
குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
கொள்ளையடித்தல்
ஆநிரை மேய்த்தல்
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
வேளாண்மை
8.
தேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.
ஜனவரி 24
ஜுலை 24
நவம்பர் 24
ஏப்ரல் 24
9.
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______
ஆண்கள்
பெண்கள்
பிரதிநிதிகள்
வாக்காளர்கள்
10.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்
காளிதாசர்
அமரசிம்மர்
ஹரிசேனர்
தன்வந்திரி
11.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
12.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
13.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
14.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
15.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
16.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
17.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
18.
நேரடி மக்களாட்சி – வரையறு
19.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
20.
முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
21.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
22.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
23.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
24.
கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
25.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக
26.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
27.
வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம்_________
28.
குப்தர்களின் அலுவலக மொழி _______.
29.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ____________ஆகும்.
30.
கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை
31.
பன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.
1.
(c)
360
2.
(c)
1440 நிமிடங்கள்
3.
(b)
இரண்டாம் நந்திவர்மன்
4.
(b)
3, 4, 5, 1, 2
5.
(a)
ஐஸ்லா ந்து
6.
(d)
ஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்
7.
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
8.
(d)
ஏப்ரல் 24
9.
(d)
வாக்காளர்கள்
10.
(c)
ஹரிசேனர்
11.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
12.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கு நேராக ஒரு நாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வரமுடியும்.
13.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியும் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
14.
சமுத்திரகுப்தர் மகத்தான் போர்த்தளபதியாவார். அவர் பேரரசர் ஆனவுடன் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். தென்னிந்தியாவின் மீதும் படையெடுத்தார். தென்னிந்தியாவில் பல்லவநாட்டு அரசர் விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார். வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களை தனுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்களாக்கி அவர்களைக் கப்பம் கட்டச் செய்தார். கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.
15.
(i) இது ஒரு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் நிரந்தர அமைப்பு
(ii) கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
(iii) ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
(iv) அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.
16.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
17.
(i) ஊராட்சி,
(ii) ஊராட்சி ஒன்றியம்,
(iii) மாவட்ட ஊராட்சி.
18.
பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். எ.கா சுவிட்சர்லாந்து,
19.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
20.
புவி தனது அச்சில் 23 \(\frac { 1 }{ 2 }\)0 சாய்ந்து நிலையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. அவ்வாறு சுற்றி வரும்போது சூரியக்கதிர்கள் புவியில் விழுகின்ற கோணத்தின் அடிப்படையில், கீழ்க்கண்ட அட்சக்கோடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள்,

00 அட்ச கோட்டிலிருந்து 23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'தாழ் அட்சக்கோடுகள் - லோ Latitudes எனவும்.
23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு வரையிலும், 23 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'மத்திய அட்சக் கோடுகள்' Middle Lattitudes எனவும்.
66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 900 வடக்கு வரியிலும், 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 900 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் 'உயர் அட்சக்கோடுகள்' High Lattitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.
புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இஃது அட்சக்கோடுகளின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டலம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டிலிருந்து (00) வடக்கில் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி 'வெப்பமண்டலம், என அழைக்கப்படுகிறது.
மித வெப்பமண்டலம் (Temperate Zone)
வட அரைக்கோளம் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) மகரரேகை முதல் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) அண்டார்டிக் வட்டம் வரைந்துள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'மித வெப்பமண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
குளிர் மண்டலம் (Frigid Zone)
வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் வடதுருவம் (900 வ) வரியிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) முதல் தென்துருவம் (900 தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்து நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி "குளிர்மண்டலம்" என அழைக்கப்படுகிறது.
21.
புவி மாதிரியின் பயன்கள்: உலகிலுள்ள கண்டங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது. இடங்கள், கடல் வழிகள், வான் வழிகள் பற்றி அறிய உதவுகிறது. கண்டங்கள், கடல்கள், நாடுகள், ஆறுகள் மற்றும் நகரங்கள் பற்றி அறிய உதவுகிறது.
22.
எல்லோரா: எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு: இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. உள்ளூர் மக்களால் காரபூரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துக்கீசியர்கள். இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
23.
இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன் மூலம் குடைவரைச் சிறிய கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
24.
இந்தோ -பார்த்திய அரசு அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ -பார்த்தியார் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிருஸ்துவ உபதேசியார் புனித தாமஸிடம் தொடர்புடையதாகும். கிருஸ்துவ மரபின்படி, புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிருத்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.
25.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிரதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண்கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருந்த காலம் அல்ல.
26.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
27.
( )
டாகர் பாங்க்ஸ்
28.
( )
சமஸ்கிருதம்
29.
( )
வாலாஜாபேட்டை
30.

31.
பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்கக் காரணம், இது நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும். இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards