6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.
2.
________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.
3.
மகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.
4.
ஆதிச்சநல்லூர்____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
5.
முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
6.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
7.
சங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.
8.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
9.
நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
10.
இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
11.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?
12.
சேமிப்பு என்றால் என்ன ?
13.
வணிகம் என்றால் என்ன?
14.
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
15.
வரையறு: இறையாண்மை.
16.
மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?
17.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
18.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
19.
வளங்கள் என்றால் என்ன?
20.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
21.
தனிநபர் வளம்.
22.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
23.
அரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________
ஜனவரி 26
ஆகஸ்டு 15
நவம்பர் 26
டிசம்பர் 9
24.
தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________
50 வினாடிகள்
52 நிமிடங்கள்
52 வினாடிகள்
20 வினாடிகள்
25.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அர்த்த சாஸ்திரம்
இண்டிகா
முத்ராராட்சஷம்
இவை அனைத்தும்
26.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அஜாதசத்ரு
பிந்துசாரா
பத்மநாப நந்தா
பிரிகத்ரதா
27.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
28.
மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
ராஜகிரகம்
வைசாலி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
29.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
23
24
25
26
30.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
31.
வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
1/3
1/6
1/8
1/9
32.
ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.
பஞ்சாப்
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
காஷ்மீர்
வடகிழக்கு
33.
உணவு பதப்படுத்துதல்
34.
அனைவருக்கும் கல்வி உரிமை
35.
தேசிய பாரம்பரிய விலங்கு
36.
உலகளாவிய வளம்
37.
கணா
38.
புத்தர்
39.
அங்கங்கள்
40.
ஆதிச்சநல்லூர்
41.
இந்திய புறவரி நிலவரைபடத்தில் கீழ் கண்டவற்றை குறிக்கவும்
1. நெய்வேலி
2. வங்காள விரிகுடா
3. அரபிக்கடல்
4. தமிழக காடுகள்
5. இந்தியப் பெருங்கடல்
6. சேலத்தில் உள்ள கஞ்சமலை இரும்புச் சுரங்கம்
1.
( )
இரண்டாம் நிலைத்ததொழில்
2.
( )
மனித
3.
( )
திரிரத்தினங்கள்
4.
( )
தூத்துக்குடி
5.
முதல்நிலை செயல்பாடுகள் :
(i) அக்கால மனிதனுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் மட்டுமே இருந்தன, அவை உணவு. உடை இருப்பிடம் ஆகும்.
(ii) இத்தேவைகளை நிறைவேற்ற அவன் முதல்நிலை செயல்பாடுகளான வேட்டையாடுதல், உணவு சேகர்த்தல்
மீன்பிடித்தல் மற்றும் காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
(iii) அதன் பின்னர் வளங்கனில் பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிள் மூலமாக தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டான்.
இரண்டாம் நிலை செயல்பாடுகள் :
(i) மூலப் பொருள்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு இரண்டாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
(ii) இச்செயல்பாட்டிற்கு மணிதத்திறனும் அவனது சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.
மூன்றாம் நிலை செயல்பாடுகள் :
(i) முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
(ii) (எ. கா ) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
6.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
7.
(i) மதுரைக்கருகில் 15 கி.மீ தொலைவில் கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை என்ற பெயரில் ஒரு குன்று உள்ளது. சமணத்துறவிகளால் உருவாக்கப்பட்ட தீர்ந்தங்கரர்களின் உருவங்கள் இம்மலையில் காணப்படுகின்றன. இது தொல்லியல் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படும் நினைவு சின்னமாக உள்ளது.
(ii) அறவோர் பள்ளி என்பது சமணத் துறவிகள் வாழ்ந்த இடங்கள் என மணிமேகலையில் குறிப்பு உள்ளது.
தமிழகத்தின் பௌணத்தத்தின் செல்வாக்குக்கான சான்று
(i) சங்க காலத்திற்குப் பின்னர் இயற்றப்பட்ட இராடைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை பௌத்த இலக்கியமாகும்.
(ii) காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஒரு பொௗத்த மையமாகும். பேௗத்த தாக்கவியல் அறிஞரான தினைகர் மற்றும் நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தாமபாலர் போன்றோர் இங்கு வாழ்ந்தார்கள்.
8.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
9.
உற்பத்தி தொழிலும், சேவைத் தொழிலும் நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் ஆகும்.
10.
முதல்நிலைத்த தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பொருள்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்றும், தொழில் துறை அழைக்கப்படுகிறது.
11.
(i) பழங்காலத்தில் வேட்டையாடிகாக, உணவுசேகரிப்பாளர்கள் வாழ்ந்து வந்த மக்கள். படிப்படியாக வோண்மை செய்யக் கற்றுக்கொண்டனர்.
(ii) வேளாண்மை செய்வதற்கு வசதியாக நீர் நிலைகள் அருகே குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர்.
(iii) இல்லாறு குடியேறிய இடங்களே கிராமம் ஊர் என்று வளர்ச்சியடைந்தன.
12.
சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்துபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
13.
உபரியான பொருட்களை வாங்குவதும் விற்பதும் வணிகம் எனப்படும்.
14.
ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக்கொள்வது பண்டமாற்றுமுறை எனப்படுகிறது.
எ.கா. ஒரு முட்டை அரிசிக்குப் பதிலாக தேலைவான அவை துணியைப் பெற்றுக்கொள்வது போலாகும்.
15.
இறையாண்மை
(i) அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
(ii) நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
(iii) அவர்களிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.
(iv) இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.
16.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலையில் மயில்களுக்கான சரணாலயம் உள்ளது.
17.
நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலை முறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.
18.
கண்டறியப்பட்ட வளங்கள் தற்போறு பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழப்பு நிலக்கரிச் சுரங்கம்,
19.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
20.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். (எ.கா) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
21.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
22.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
23.
(c)
நவம்பர் 26
24.
(c)
52 வினாடிகள்
25.
(d)
இவை அனைத்தும்
26.
(a)
அஜாதசத்ரு
27.
(b)
மகதம்
28.
(c)
பாடலிபுத்திரம்
29.
(b)
24
30.
(a)
ரிஷிபா
31.
(b)
1/6
32.
(b)
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
33.
இரண்டாம்நிலைத் தொழில்
34.
ஏப்ரல் 1
35.
பொருந்தாதது: தேசிய பாரம்பரிய விலங்கு - புலி
குறிப்பு: புலி தேசிய விலங்காகும். யானை தேசிய பாரம்பரிய விலங்காகும்.
36.
காற்று
37.
மக்கள்
38.
துறவிகள்
39.
சாக்கியமுனி
40.
தங்க ஆபரணங்கள்
41.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards