6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 27/02/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 6th Standard Science Tamil Medium Important Question All Chapter 2020 )
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்
தொலைவு : மீட்டர் ; வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?
சென்டி மீட்டர்
மீட்டர்
மில்லிமீட்டர்
கிலோ மீட்டர்
2.
LINUX என்பது.
கட்டண மென்பொருள்
தனி உரிமை மென்பொருள்
கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
3.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
வாத்து
கிளி
ஓசனிச்சிட்டு
புறா
4.
உற்பத்தியாளர் எனப்படுபவை
விலங்குகள்
பறவைகள்
தாவரங்கள்
பாம்புகள்
5.
சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.
புரதங்கள்
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
மண்
நுரை உருவாக்கி
6.
நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.
தாவர செல்
விலங்கு செல்
நரம்பு செல்
மீட்டர்
7.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
8.
ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.
வேதியியல் மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
மீளா மாற்றம்
இயற்பியல் மாற்றம்
9.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
வெள்ளி
மரம்
அழிப்பான்
நெகிழி
10.
300C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை
800C
500Cக்கு மேல் 800Cக்குள்
200C
ஏறக்குறைய 400C
11.
முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1980
1947
1946
1985
12.
சரியானதைத் தேர்ந்தெடு
கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ
கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ
கி.மீ > மீ > செ.மீ >மி.மீ
கி.மீ > செ.மீ > மீ > மி.மீ
13.
விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.
14.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
15.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
16.
எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.
17.
பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?
18.
ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?
19.
ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
அ) மெழுகு உருகுதல்.
ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.
20.
மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.
21.
கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.
22.
நீளம் - வரையறு
23.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
24.
பின்வருவன உருவாகும் மாசுபாடுகளை எழுதுக.
அ) ஒலி பெருக்கி
ஆ) நெகிழி
25.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
26.
நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?
27.
ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?
28.
மெதுவான மாற்றத்தை வரையறு.
29.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

30.
வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.
31.
ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.
32.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
33.
எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
34.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
35.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
36.
நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.
37.
மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
38.
காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.
40.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.
41.
கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

1. 10-3 என்பது
2. காலத்தின் அலகு
3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது
4. கடிகாரம் காட்டுவது
5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற் கு எடுக்கப்படுவது
7. ஒரு அடிப்படை அளவு
8. வாகனங்களின் கடக்கும் தொலைவைக் காட்டுவது
9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது
10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு
1.
(d)
கிலோ மீட்டர்
2.
(d)
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
3.
(c)
ஓசனிச்சிட்டு
4.
(c)
தாவரங்கள்
5.
(b)
விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
6.
(a)
தாவர செல்
7.
(a)
இலைத்துளை
8.
(d)
இயற்பியல் மாற்றம்
9.
(a)
வெள்ளி
10.
(d)
ஏறக்குறைய 400C
11.
(c)
1946
12.
(c)
கி.மீ > மீ > செ.மீ >மி.மீ
13.
1. மனிதர்கள் தங்களின் தேவைக்காக தாவரங்களைச் சார்ந்திருப்பது போல விலங்குகளும் தாவரங்களைச் சார்ந்துள்ளன.
2. பட்டுப் புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக எடுத்துக்கொண்டு பட்டு உற்பத்திக்கு உதவுகிறது, தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.
3. மலர்களிலிருந்து தேனீக்கள் தேனை எடுக்க செல்லும்போது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு தேனை சேகரிக்கிறது. இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது.
4. வன்கட்டைகள் உயர்தர மரச்சாமான்கள் மற்றும் பல பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
5. மென்கட்டைகள் நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
6. கடலில் பவளப்பாறைகளில் வாழும் பாசிகளும் தாவரங்களும் பெரும்பான்மையான மீன்களின் உணவாக இருப்பதால் அப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.
7. பல்வேறு தாவரங்களின் விதைகள் பரவவும், முளைக்கவும் விலங்குகளும், பறவைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
14.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
15.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
16.
| வ.எண் | செல்லின் பாகம் | முக்கிய பணிகள் |
| 1. | செல்சுவர் | செல்லைச் சுற்றியுள்ளதோடு பாதுகாப்பளிக்கிறது. செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தருகிறது. |
| 2. | செல்சவ்வு | செல்லிற்குப் பாதுகாப்பு தருகிறது.செல்லின் போக்குவரத்திற்கு உதவுகிறது. |
| 3. | சைட்டோபிளாசம் | நீர் அல்லது ஜெல்லி போன்ற, செல்லில் உள்ள நகரும் பொருள் |
| 4. | மைட்டோகாண்டிரியா | செல்லிற்குத் தேவையான சக்தியை உருவாக்கித் தருகிறது. |
| 5. | பசுங்கணிகம் | இதிலுள்ள பச்சையத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கிறது. |
17.
1. பூமியைச் சுற்றிலும் காற்றினால் மூடப்பட்டுள்ள ஒரு பெரிய மேலுறையே வளிமண்டலம் எனப்படுகிறது.
2. இம்மேலுறையானது புவிக்கு அருகில் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
3. உயரே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தியும், அளவும் குறைகிறது.
4. காற்றின் இயக்கமும், மேகங்களை உருவாக்கும் நீராவியும் அடிவளிமண்டலத்தில் உள்ளன.
5. இந்த அடி வளிமண்டலமே, நாம் அனுபவிக்கும் வானிலைக்குக் காரணமாக உள்ளது.
6. இவ்வடுக்கிற்கு மேலே வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் படலம், சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களை (UV) தடுத்து உயிர்களை பாதுகாக்கிறது.
18.
நமது உடல் சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட வெப்பமாக உணரும். ஏனென்றால் வெப்ப ஆற்றலானது உயர் வெப்பநிலையிலிருந்து தாழ் வெப்பநிலைக்கு கடத்தப்படுகிறது.
19.
அ) மெழுகுவர்த்தி உருகுதல்
ஆ) உருகிய மெழுகை மீண்டும் திண்மமாக மாற்றுதல் மெழுகுவர்த்தியில் எரிதல் என்பது ஒரு இயற்பியல்/ மீளக்கூடிய செயல்முறை ஆகும்.
20.
| வ.எண் | மின்சாதனம் | படம் | குறியீடு | குறிப்பு |
| 1. | மின்கலன் | |
பெரிய செங்குத்துக் கோடு நேர்முனையாகவும். சிறிய செங்குத்துக்கோடு எதிர்முனையாகவும் குறிப்பிடப்படுகின்றன. | |
| 2. | தொடர் மின்கலன் (மின்கலஅடுக்கு) |
![]() |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்கள் தொடராக இணைக்கப்பட்ட அமைப்பு |
|
| 3. | தொடு சாவி திறந்தது | ![]() |
தொடுசாவி செயல்படா நிலை (OFF) (சுற்றில் மின்னோட்டம் செல்லாது) | |
| 4. | தொடு சாவி மூடியது | தொடுசாவி செயல்படும் நிலை (ON) (சுற்றில் மின்னோட்டம் பாயும்) |
||
| 5. | மின்விளக்கு | ![]() |
மின்விளக்கு ஒளிர்கிறது | |
![]() |
மின்விளக்கு ஒளிரவில்லை | |||
| 6. | இணைப்புக் கம்பி | ![]() |
மின் சாதனங்களை இணைக்கப் பயன்படும். |
21.
1. கணினி பலதுறைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
2. துணிக்கடையில் பில் போட பயன்படுகிறது.
3. பெரிய மற்றும் சிறிய இயந்திரங்களை மனிதர் துணையின்றி கட்டுப்படுத்த பயன்படுகிறது.
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்விப்பெறுவதற்கு பெருமளவு கணினியைப் பயன்படுத்துகிறார்கள்.
5. ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு எடுப்பதற்கும் பிற விவரங்களுக்கும் கணினி பயன்படுத்தப்படுகிறது.
6. வங்கி, எ.டி.எம், அஞ்சலகம் ஆகியவற்றிலும் கணினி பல செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது.
7. கணினியில் நமக்குத் தேவையான தரவுகளை சேமித்து வைக்கலாம். இத்தரவுகளை நாம் தேவைக்கு ஏற்றவாறு தகவல்களாக மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.
22.
ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும்.
23.
நமக்கு உணவு தரும் தாவரங்கள் உணவுத்தாவரங்கள் எனப்படும்.
24.
அ) ஒலி பெருக்கி - ஒலி மாசுபாடு
ஆ) நெகிழி - நில மாசுபாடு
25.
1. கரும்பலகையில் எழுதும் பொருளாகப் பயன்படுகிறது
2. எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது
3. சிலைகள் செய்வதற்கான வார்ப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது
4. கட்டுமானத் துறையிலும் பயன்படுகிறது.
26.
சைட்டோபிளாசம் செல்லின் நகரும் பகுதி எனப்படுகிறது.
27.
i) அவரை அந்த இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
ii) நின்று கொண்டிருந்தால் அவரை அந்த இடத்திலேயே படுக்க செய்ய வேண்டும்.
iii) பின்பு, தரைத் தளத்திலேயே உருளச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் தீ மேலும் பரவாமல் தடுப்பதுடன், பெரிய பாதிப்பின்றி அவரைக் காப்பாற்றலாம்.
28.
அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு நிகழும் மாற்றங்கள் மெதுவான மாற்றங்கள் என அழைக்கப்படுகின்றன.
29.
இரும்புச்சங்கிலி ஒரு மின்கடத்தியாகும்.
30.
1) மின் இஸ்திரிப்பெட்டி
2) மின்வெப்பக்கலன்
3) மின்நீர் சூடேற்றி போன்றவை
31.
1. விசைப்பலகை
2. சுட்டி
3. ஸ்கேனர்
4. ஜாய்ஸ்டிக்
32.
கணினி இயங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளை கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் அல்லது இயங்குதளம் என்கிறோம். இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த இயலாது.
எ.கா : Windows, Linux, Android, Mac
33.
1. கரும்பு-தண்டு
2. அரிசி - விதை
3. கத்தரி - காய்
4. தக்காளி -கனி
5. கேரட்-வேர்
34.
அ) ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினகளுக்கிடையேயுள்ள உணவு உண்ணும் உறவுமுறையும், அந்த உயினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
ஆ) சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றில் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இ) சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஊர் உறுப்பினரின் நச்சுப்பொருள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிய உணவுச் சங்கிலி உதவுகிறது.
35.
இயற்கையில் கிடைக்கும் சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியனவற்றைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
36.
37.
மழைக் காலங்களில், வளிமண்டலக் காற்றில் காணப்படும் ஈரப்பதத்தை பிஸ்கெட்டுகள் உறிஞ்சி மிருதுவான தன்மையைப் பெறுகின்றன. எனவே, பிஸ்கெட்டுகள் மொறுமொறுப்பு தன்மையை இழக்கின்றன.
38.
காகிதம் எரிதல் வினை நிகழ குறைந்த அளவு நேரத்தையே எடுத்துக் கொள்கிறது. எனவே இது ஒரு வேகமான மாற்றம் ஆகும். இம்மாற்றத்தின் போது கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீருடன் வெப்பமும், ஆற்றலும் உருவாகின்றன.
39.
கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படாது. ஏனென்றால் மின்கலனின் மின்னழுத்தம் மிக மிக குறைவு.
40.
வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளின் அதிர்வு அல்லது இயக்கம் அதிகரிப்பதால் அவற்றிற்கிடையே இடைவெளி அதிகரிக்கிறது. இதனால் பொருட்கள் விரிவடைகின்றன.
41.
1. நேரம்,
2. நீளம் ,
3. மில்லி ,
4. நாடா ,
5. ஓடோ மீட்டர்,
6. சராசரி,
7. லிட்டர்
8, விநாடி ,
9. பிழை,
10. நிறை
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards