6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 18/01/2019
Term 3 All Lesson Short Answer Important
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
புவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.
2.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
3.
ஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்?
4.
தலநேரம் என்பது என்ன?
5.
ஜியாய்டு என்பது என்ன?
6.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.
7.
சென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.
8.
இடி, மின்னல் - குறிப்பு வரைக
9.
பேரிடர் – விளக்குக
10.
குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
11.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
12.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
13.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
14.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
15.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
16.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
17.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
18.
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை ?
19.
கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாள்கள் யாவை ? அந்நாள்களின் சிறப்புகள் யாவை ?
20.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
21.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?
22.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
23.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?
24.
உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரை எழுதவும்?
25.
நம் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்புகளாக நீ புரிந்து கொள்வன யாவை ?
26.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
27.
நேரடி மக்களாட்சி – வரையறு
28.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
29.
மக்களாட்சி என்றால் என்ன?
1.
வடக்கு அரைக்கோளம், தென் அரைக்கோளம், கிழக்கு அரைக்கோளம், மேற்கு அரைக்கோளம்.
2.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
3.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கு நேராக ஒரு நாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வரமுடியும்.
4.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
5.
புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோள (Sherical) வடிவமாக காணப்படுகிறது. ஆனாலும் புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது. எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்ற அழைக்கப்படுகின்றது.
6.
| நிலச்சரிவு | பனிச்சரிவு |
| பாறைகள், பாறைச் சிதைவு மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது |
பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும். |
| இது மலைச் சரிவில் ஏற்படுகிறது |
இது 00 குறைவான வெப்பமுள்ள மலை உச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது. |
7.
இவை புயல் உருவாகக் கூடிய வங்கக் கடல்பகுதியில் அமைந்துள்ளது.
வடகிழக்குப் பருவக்காற்றும் சுற்றவாளியும் இணைந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்தல்.
i) அடைமழை
ii) ஆற்றின் கறைகளை மீறி ஆறு பாய்ந்து செல்லுதல்.
iii) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு
iv) போதுமான பொறியியல் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்படாத கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள்.
8.
வளிமண்டல காலநிலையினால் திடீரென்று தொடர்ச்சியாக மின்சாரம் வெளிப்படும் நிகழ்வு இடி ஆகும். இதனால் திடீர் ஒளியும், அதிரும் ஒளி அலைகளும் ஏற்படுகின்றது. இது மின்னல் என்றும் இடி என்றும் அழைக்கப்படுகிறது.
9.
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.
10.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியாகத் தசம எண் முறையும் குப்தர்கள் நவீன உலகிற்கு விட்டுச்சென்றுள்ள மரபுவழிச் சொத்தாகும். ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தா அகியோல் அக்காலப் பகுதியைச் சேர்ந்த மிக முக்கிய கணிதவியல், வானியல் அறிஞ்சர்கள் ஆவர். ஆரியபட்டர் தனது நூலான 'சூரிய சித்தாந்தா' வில் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர் அவரேயாவார்.
11.
ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்த கவிஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார். அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, புரியதர்சிகா ஆகியனவாகும். பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.
12.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியும் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
13.
கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே, இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடித்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும். கோபுரங்களோடும் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்திய பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலப் பகுதிகளில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.
14.
சிரெஸ்தி: சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்களை ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் ஆவர்.
சார்த்தவாகா: சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.
15.
க்ஷேத்ரா: வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்
கிலா: தரிசு நிலங்கள்
அப்ரசுதா: வனம் அல்லது காட்டு நிலங்கள்
வஸ்தி: குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள்
கபத சரிகா: மேய்ச்சல் நிலங்கள்
16.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
17.
(i) இது ஒரு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் நிரந்தர அமைப்பு
(ii) கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
(iii) ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
(iv) அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.
18.
1. கிராம சபை அமைத்தல்
2. மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு
3. இடஒதுக்கீடு
4. தேர்தல்
5. பதிவிக்கலாம்
6. நிதிக் குழு
7. கணக்கு மற்றும் தணிக்கை போன்ற இன்னும் பிற.
19.
(i) ஜனவரி 26 - குடியரசு தினம்
(ii) மே 1 - தொழிலாளர் தினம்
(iii) ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
(iv) அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி
20.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
21.
1. ஊராட்சி மன்றத் தலைவர்
2. பகுதி உறுப்பினர்கள்
3. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
4. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
22.
(i) பேரூராட்சி,
(ii) நகராட்சி,
(iii) மாநகராட்சி.
23.
(i) மக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப் பணிகள் விருப்பப் பணிகள் என பகுக்கலாம்
(ii) இவையிரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன
24.
(i) எனது மாவட்டம் திருநெல்வேலி
(ii) திருநெல்வேலி மாநகராட்சி ஆகும்.
25.
(i) அரசு நிறுவனங்களின் வடிவமைப்பு. அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம்நிறுவனங்களின் வடிவமைப்பு, அவை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், அவற்றின் அதிகாரம் மற்றும் கடமைகளை விளக்குகிறது.
(ii) மேலும், குடிமக்களுக்கான உரிமைகள், கடமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் நிர்ணயம் செய்துள்ளது.
26.
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே பிரதிநிதித்துவ மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
27.
பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். எ.கா சுவிட்சர்லாந்து,
28.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
29.
ஒரு நாட்டின் குடிமக்கள் தேர்தல் வழியில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும், அதன்மூலம் அரசு அதிகாரத்தில் நேரடியாகப் பங்கேற்பதையுந்தான் மக்களாட்சி என்கிறோம்.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards