6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 6th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020)
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
2.
கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அர்த்த சாஸ்திரம்
இண்டிகா
முத்ராராட்சஷம்
இவை அனைத்தும்
3.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
4.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?
லும்பினி
சாரநாத்
தட்சசீலம்
புத்தகயா
5.
மூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
ராஜகிரகம்
வைசாலி
பாடலிபுத்திரம்
காஷ்மீர்
6.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
7.
ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.
பஞ்சாப்
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
காஷ்மீர்
வடகிழக்கு
8.
சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.
பழைய கற்கலாம்
இடைக்கற்கலாம்
புதிய கற்கலாம்
உலோக காலம்
9.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
10.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
11.
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு
செஸ்
மல்யுத்தம்
கேரம்
டென்னிஸ்
12.
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகம் / கள்
இந்தியா 2020
அக்கினிச் சிறகுகள்
எழுச்சி தீபங்கள்
இவை அனைத்தும்
13.
பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது
திரைப்படங்கள்
விளம்பரங்கள்
தொலைக்காட்சி தொடர்கள்
இவை அனைத்தும்
14.
வி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.
பெரிய ஜனநாயகம்
தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்
இனங்களின் அருங்காட்சியகம்
மதச்சார்பற்ற நாடு
15.
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _________
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
அம்பேத்கர்
இராஜாஜி
16.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________
25
23
22
26
17.
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
27.9
29.7
28.7
28.9
18.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
19.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
ஹரப்பா
20.
6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்
ஈராக்
சிந்துவெளி
தமிழகம்
தொண்டைமண்டலம்
21.
உறைந்த கண்டம்
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
22.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
23.
மிகச் சிறிய பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
24.
மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
செவ்வாய்
சந்திரன்
புதன்
வெள்ளி
25.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
ஆண்டி ரோமெடா
மெகலனிக்கிளவுட்
பால்வெளி
ஸ்டார்பர்ஸ்ட்
26.
பட்டனப்பாலையின் ஆசிரியர் பற்றிக் குறிப்பு வரைக.
27.
சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.
28.
சிந்து வெளி மக்களின் தொழில் பற்றிக் குறிப்பு வரைக.
29.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.
30.
வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.
31.
உயிரற்ற வளங்களை வரையறு.
32.
வளங்கள் என்றால் என்ன?
33.
மூன்றாம் நிலை செயல்பாடுகள்.
34.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
35.
காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யார்? யார்?
36.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?
37.
கழிவு நீர் வடிகால் அமைப்பின் சிறப்பைக் கூறு.
38.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
39.
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.
40.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
41.
பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?
42.
பாகுபாடு என்றால் என்ன?
43.
பாரபட்சம் என்றால் என்ன?
44.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
45.
ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.
46.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
47.
கண்டம் என்றால் என்ன?
48.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
49.
பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
50.
வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
51.
ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.
52.
முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைச் செயல்பாடுகளை விவரி.
53.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
54.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
55.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
56.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
57.
வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.
58.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.
59.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
60.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
61.
பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.
62.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
63.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
64.
புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.
65.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
66.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
1.
(d)
மெகஸ்தனிஸ்
2.
(d)
இவை அனைத்தும்
3.
(b)
மகதம்
4.
(b)
சாரநாத்
5.
(c)
பாடலிபுத்திரம்
6.
(b)
திரிபிடகங்கள்
7.
(b)
கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி
8.
(d)
உலோக காலம்
9.
(b)
ஆப்பிரிக்கா
10.
(c)
படிப்படியானது
11.
(c)
கேரம்
12.
(d)
இவை அனைத்தும்
13.
(d)
இவை அனைத்தும்
14.
(c)
இனங்களின் அருங்காட்சியகம்
15.
(a)
ஜவஹர்லால் நேரு
16.
(c)
22
17.
(d)
28.9
18.
(b)
வேட்டையாடுதல்
19.
(a)
மதுரை
20.
(a)
ஈராக்
21.
(c)
அண்டார்டிகா
22.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
23.
(d)
ஆர்க்டிக் பெருங்கடல்
24.
(b)
சந்திரன்
25.
(c)
பால்வெளி
26.
பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இவர் பொ.ஆ.மு.2 ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.
27.
கெளடியல்யர்(Kautilya) என்பது சாணக்கியரின் மறு பெயராகும். அவரது புகழ்மிக்க நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும்.
28.
சிந்து வெளி மக்கள் வேளாண்மை, கைவினைப் பொருட்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர் என தெரிகிறது. அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்கள் இருந்துள்ளனர். கால்நடை வளர்ப்பும் அவர்களது தொழிலாக இருந்தது. அவர்கள் சக்கரத்தின் பயனையும் அறிந்திருந்தனர்.
29.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை இருப்பினும் கிடைக்கப் பெற்ற பெண் சிலைகளைப் பார்க்கும் போது தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
30.
திருமலை நாயக்கர் மஹால், வேலூர் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், சாஞ்சி ஸ்தூபி மாறும் மடாலயம்.
31.
(i) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வாங்கள் எனப்படும்
(ii) உதாரணம் - நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
32.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
33.
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். (எ.கா) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
34.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
35.
தர்ம பாலர்,
ஜோதி பாலர்,
சுமதி
போதி தர்மர்.
36.
சுற்றுச் சூழல் மாற்றம், படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹரப்பா அழிவுக்கு வந்தது என நம்பலாம்.
37.
சிந்து வெளி நாகரிக பாதாள சாக்கடை முறை வியக்க வைக்கிறது. கழிவு நீர் விரைவாக செல்வதற்காக சற்று சாய்வாகவும் சுத்தம் செய்வதற்கான துவாரங்களோடு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திடக்கழிவுகள் ஒவ்வொரு வீட்டிலும் வடிகட்டப்பட்ட பின்னரே வடிகால்களுக்கு கழிவு நீர் சென்றது.
38.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல பயன்பாட்டை நன்கு அறிந்திருந்தது. மக்கள் பயன்படுத்திய பொருட்கள் வெண்கலத்தாலே உருவாக்கப்பட்டிருந்தால் இதனை வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கிறோம்.
39.
(i) தீபாவளி
(ii) ஹோலி
(iii) தசரா
40.
(i) கண்டம் எனப்படுவது மலைகள், பீட பூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலைப்பரப்பாகும்.
(ii) இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா "துணைக் கண்டம்" என்று அழைக்கப்படுகிறது.
41.
(i) நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை.
(ii) சமூகப் பன்முகத்தன்மை.
(iii) சமய பன்முகத்தன்மை.
(iv) மொழிசார் பன்முகத்தன்மை.
(v) பண்பாட்டுப் பன்முகத்தன்மை
42.
(i) பாகுபாடு என்பது மக்களின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் தவறான செயலாகும்.
(ii) பாகுபாடானது நிறம், வர்க்கம், மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுவது ஆகும்.
43.
(i) பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர் மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
(ii) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும்.
44.
(i) சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
(ii) மனிதர்கள் களிமண்ணில் பானை செய்யக் கற்றுக் கொண்டார்கள். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பானை செய்வதை எளிதாக்கியது.
(iii) மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர சக்கரம் உதவியது.
(iv) வாணிபம் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது.
(v) நவீன காலத்தில் அனைத்து வகையான போக்குவரத்திலும் சக்கரம் முக்கிய பங்காற்றுகிறது
(vi) மேலும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதிலும் பெரும்பங்காற்றுகிறது.
45.
(i) நவீன மனிதன் வேட்டையாடும் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தான்.
(ii) கரடு முரடான கருவிகளை பயன்படுத்தினான்.
46.
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்.
47.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
48.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
49.
விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகள்
கரடு முரடான கூர்மையாக்கப்பட்ட கற்கருவிகள்
கூர்மையாக்கப்பட்ட மரக்கிளைகள்
50.
தமிழ்நாடு - அத்திரம் பாக்கம், ஆதிச்சநல்லூர் , பையம் பள்ளி
கர்நாடகா - ஹன்சாகி பள்ளத்தாக்கு
மத்தியப் பிரதேசம் - பிம்பேட்கா
ஆந்திராப் பிரதேசம் - பிரம்மகிரி
51.
நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதனை நன்கு அறிந்து கொள்ள தமிழக நில அமைப்பியலை எடுத்துக் கொள்ளலாம். பழங்கால தமிழர்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்துக் கொள்ளலாம். பழங்கால தமிழர்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்தனர், அவை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகும். குறிஞ்சி மக்களின் தொழில்களாக வேட்டையாடுதல் மற்றும் தேன் சேகரித்தலே பிரதானமான இருந்தன. முல்லை நில தொழில் அப்பகுதியில் நில அமைப்பு சார்ந்தே இருந்தது. குறிப்பாக மருத நிலத்தை எடுத்துக் கொண்டால் அதன் சமவெளித்தன்மையும் நீர் ஆதாரமும் வேளாண்மையை முதன்மைத் தொழிலாக அம்மக்களை ஈடுபடவைத்தது. ஆகவே புவியின் எப்பகுதியிலும் நில அமைப்பியல்தான் தொழில்களைத் தீர்மானிக்கிறது.
52.
முதல்நிலை செயல்பாடுகள் :
(i) அக்கால மனிதனுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் மட்டுமே இருந்தன, அவை உணவு. உடை இருப்பிடம் ஆகும்.
(ii) இத்தேவைகளை நிறைவேற்ற அவன் முதல்நிலை செயல்பாடுகளான வேட்டையாடுதல், உணவு சேகர்த்தல்
மீன்பிடித்தல் மற்றும் காட்டு வளங்களை சேகரித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டான்.
(iii) அதன் பின்னர் வளங்கனில் பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிள் மூலமாக தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டான்.
இரண்டாம் நிலை செயல்பாடுகள் :
(i) மூலப் பொருள்களிலிருந்து வேறு பயன்பாட்டுப் பொருள்களாக மாற்றும் இச்செயல்பாடு இரண்டாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
(ii) இச்செயல்பாட்டிற்கு மணிதத்திறனும் அவனது சிந்தனைகளும் அடிப்படைத் தேவையாகும்.
மூன்றாம் நிலை செயல்பாடுகள் :
(i) முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.
(ii) (எ. கா ) வங்கி வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை.
53.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
54.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
55.
சமணத்தின் ஐந்து நடத்தை விதிகள் :
அகிம்சை - எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது.
சத்யா - உண்மை மட்டுமே பேசுதல்.
அஸ்தேய - திருடாமை.
அபரிக்கிரகா - பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
பிரம்மச்சாரியா - திருமணம் செய்து கொள்ளாமை.
56.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
57.
வேதகால பெண்களின் நிலை :
(i) ரிக்வேதகால சமூகத்தில் பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர் ஆனால் பிற்கால வேதகாலத்தில் இது குறைந்துபோனது.
(ii) ரிக் வேதகாலத்தில் பெண்கள் தமது வீட்டில் சடங்குகளை நடத்தினர். ஆனால் பிற்கால வேதகாலத்தில்
சடங்குகளை நடத்தமுடியாத நிலை உருவானது.
(iii) ரிக்வேதகாலத்தில் கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளத் தடைகள் இல்லை. ஆனால் பிற்கால வேதகாலத்தில் கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.
(iv) சொத்துரிமை மற்றும் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
(v) பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப்பங்கும் வகிக்கவில்லை.
58.
(i) கல்வி கற்பதற்கான இடத்தினை பள்ளி என்றழைக்கிறோம்
(ii) இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன் முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன
(iii) சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்
(iv) நாளந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சீன வரலாற்ற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியிலிருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்
(v) ''நகரங்களில் சிறந்தது காஞ்சி '' என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்
(vi) ''கல்வியில் கரையிலாத காஞ்சி'' என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
(vii) மேலே கூறியுள்ளவற்றிலிருந்து காஞ்சிபுரம் கல்வியில் தலைசிறந்து விளங்கிய தென்பதை நிரூபிக்கலாம்
59.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
60.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
61.
(i) புவியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரம்பிக் காணப்படுவது பெருங்கடல்கள் ஆகும்.
(ii) புவியின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் மேலும் 50% மேல் முதல்துறை பொருட்கள் கிடைக்கும் இடமாகும் விளங்குகிறது.
(iii) வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(iv) வானிலை மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
(v) கடல்வழி வாணிபத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
(vi) பெருங்கடல் நீரோட்டங்கள் கடலோரக் காலநிலையை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.
62.
சமஜெனி மக்கன் நெருக்கம் பிறந்ததாகக் காணப்படுகிறது. இதற்கு காரணம்:
(i) சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
(ii) இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீ-க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் ஆகும்.
(iii) பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள் அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
(iv) இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமுமிருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது
(v) மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன.
(vi) எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.
(vii) வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும்.
(viii) தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் காவேரி மற்றும் வைகை ஆறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
63.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
64.
(i) உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
(ii) புவியில் காணப்படும் மூன்று தொகுதிகள் பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும்.
பாறைக் கோலம்:
(i) புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக் கோளம் என்று கூறுகிறோம்.
(ii) இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.
நீர்க்கோளம்:
(i) ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
(ii) இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.
(iii) இது பெருங்கடல்கள், கடல்கள். ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள்.
வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
உயிர்க்கோளம் :
(i) பாறைக்கோளம், நீர்க்கோளம், மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக் கூடிய ஒரு பகுதி 'உயிர்க்கோளம்' எனப்படுகிறது.
(ii) 'பயோ' என்ற கிரேக்கச் சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள்.
(iii) உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iv) ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.
65.
புலியின் சுழலுதல் :
(i) புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதைச் சுழலுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.
(iii) புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது.
(iv) அப்பகுதிக்கு அது பகல் பொழுது ஆகும்,
(v) புவியின் ஒளி படாத பகுதி இரவாக இருக்கும்.
புவியின் சுற்றாதவ் :
(i) புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.
66.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards