6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 6th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி
நீர் சந்தி
சிறுகடல்
தீவு
தீபகற்பம்
2.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
சந்திரகுப்த மௌரியர்
அசோகர்
பிரிகத்ரதா
பிந்துசாரர்
3.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அஜாதசத்ரு
பிந்துசாரா
பத்மநாப நந்தா
பிரிகத்ரதா
4.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
5.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?
லும்பினி
சாரநாத்
தட்சசீலம்
புத்தகயா
6.
சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
23
24
25
26
7.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
8.
வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
1/3
1/6
1/8
1/9
9.
ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்
மண் மிகவும் வளமானதால்
சீரான கால நிலை நிலவுவதால்
போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
10.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
11.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
12.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
நாமக்கல்
சேலம்
கன்னியாகுமரி
சிவகங்கை
13.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?
14(1)
15(1)
16(1)
17(1)
14.
ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு
1997
1996
1995
1994
15.
மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
கேரளா
தமிழ்நாடு
மணிப்பூர்
கர்நாடகா
16.
_________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கேரளா
தமிழ்நாடு
பஞ்சாப்
கர்நாடகா
17.
இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.
கண்டம்
துணைக்கண்டம்
தீவு
இவற்றில் எதுவுமில்லை
18.
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
27.9
29.7
28.7
28.9
19.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
20.
கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்
மதுரை
காஞ்சிபுரம்
பூம்புகார்
ஹரப்பா
21.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
பூம்புகார்
மதுரை
கொற்கை
காஞ்சிபுரம்
22.
உறைந்த கண்டம்
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
23.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
24.
சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்
ஆண்டி ரோமெடா
மெகலனிக்கிளவுட்
பால்வெளி
ஸ்டார்பர்ஸ்ட்
25.
புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்
சுற்றுதல்
பருவகாலங்கள்
சுழல்தல்
ஓட்டம்
26.
மதுரைக்கும் ரோம் நகருக்கும் இருந்த வர்த்தகத் தொடர்பினை விளக்குக.
27.
சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.
28.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.
29.
லோத்தல் கப்பல் கட்டும் தளமாக எவ்வாறு சிறந்து விளங்கியது?
30.
வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?
31.
நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.
32.
கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?
33.
வளங்கள் என்றால் என்ன?
34.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
35.
தமிழகத்தின் பண்டைய நகங்களை குறிப்பிடுக.
36.
இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.
37.
ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?
38.
சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வேணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?
39.
புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?
40.
இந்தியாவில் நிகழும் பல்வேறு பாகுபாட்டினை விவரி
41.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
42.
பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?
43.
மாறாக் கருத்து என்றால் என்ன?
44.
கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?
45.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
46.
பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?
47.
கண்டம் என்றால் என்ன?
48.
பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
49.
பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
50.
வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
51.
| தொல்பொருள் ஆய்விடங்கள் | தொல்லியல் கண்டுபிடிப்புகள் | உண்மைகள் |
| ஆதிச்சநல்லூர் | தமிழ் - பிராமி எழுத்துக்கள் | வரலாற்றுக்கு முந்தைய பண்பாடு இருந்துள்ளது. |
| கீழடி | ரோமானிய தொல் பொருட்கள் | |
| பையம்பள்ளி | இரும்புக் கருவிகள் | |
| பொருந்தல் | அரிசி நிரப்பப்பட்ட பானை | |
| கொடுமணல் | சூழல் அச்சுக்கள் |
52.
படத்தைப் பார்த்து பதிலளி :

i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
ii) கோளின் நிறம் என்ன?
iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?
53.
வளங்களைப் பாதுகாப்பது எப்படி?
54.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
55.
பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :
56.
பெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
57.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
58.
கோயில் நகரம் - குறிப்பு வரைக.
59.
ஈராக் - குறிப்பு தருக.
60.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.
61.
இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி
62.
பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.
63.
நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.
64.
மலை மற்றும் பீடபூமி
65.
புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.
66.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
1.
(a)
நீர் சந்தி
2.
(c)
பிரிகத்ரதா
3.
(a)
அஜாதசத்ரு
4.
(b)
மகதம்
5.
(b)
சாரநாத்
6.
(b)
24
7.
(b)
திரிபிடகங்கள்
8.
(b)
1/6
9.
(d)
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்
10.
(b)
ஆப்பிரிக்கா
11.
(c)
படிப்படியானது
12.
(c)
கன்னியாகுமரி
13.
(b)
15(1)
14.
(a)
1997
15.
(a)
கேரளா
16.
(a)
கேரளா
17.
(b)
துணைக்கண்டம்
18.
(d)
28.9
19.
(b)
வேட்டையாடுதல்
20.
(a)
மதுரை
21.
(d)
காஞ்சிபுரம்
22.
(c)
அண்டார்டிகா
23.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
24.
(c)
பால்வெளி
25.
(c)
சுழல்தல்
26.
ரோம மற்றும் பிறநாடுகளின் நாணயங்கள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது மதுரைக்கும் ரோமிற்கும் இருந்த வர்த்தகத் தொடர்பிற்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
27.
கெளடியல்யர்(Kautilya) என்பது சாணக்கியரின் மறு பெயராகும். அவரது புகழ்மிக்க நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும்.
28.
சிந்து வெளி மக்களின் சமயம் பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை இருப்பினும் கிடைக்கப் பெற்ற பெண் சிலைகளைப் பார்க்கும் போது தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
29.
லோத்தல்(Lothal) குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சிறந்த கப்பல் கட்டும் தளமாக விளங்கியதை அகழ்வாராய்ச்சியின் மூலமாக கிடைத்த கட்டுமானங்களின் மூலம் அறிய முடிகிறது.
30.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்.
31.
(i) தமிழ்நாடு - பொங்கல்விழா
(ii) கேரளா - ஓணம்
(iii) மகாராஷ்டிரா - விநாயகர் சதுர்த்தி
(iv) கர்நாடகா - தசரா
(v) கல்கத்தா - துர்கா பூஜை
(vi) அஸ்ஸாம் - பீஹீ
32.
கண்டறியப்பட்ட வளங்கள் தற்போறு பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழப்பு நிலக்கரிச் சுரங்கம்,
33.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
34.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
35.
பூம்புகார்,
மதுரை,
காஞ்சிபுரம்
36.
ஹரப்பா, மொகஞ்சதாரோ
37.
சுற்றுச் சூழல் மாற்றம், படையெடுப்புகள், இயற்கைச் சீற்றங்கள், காலநிலை மாற்றம், காடுகள் அழிக்கப்படுதல் போன்ற காரணங்களால் ஹரப்பா அழிவுக்கு வந்தது என நம்பலாம்.
38.
ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தனர். தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்தினர். மெசபெரடோமியாவுடன் கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்து முத்திரைகள் ஈராக், குவைத் சிரியா பகுதிகளில் கிடைத்துள்ளதால் அவர்களோடு இருந்த வர்த்தகத் தொடர்பு உறுதியாடுகிறது.
39.
தற்கால அகழ்வாராய்ச்சியில் தொல் பொருட்களை கண்டறிவதற்கு ரேடார் கருவி மூலம் தொலை நுண்ணுணர்வு முறை பின்பற்றப்படுகிறது.
40.
(i) சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்துவமின்மை, இன வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு போன்ற பல்வேறு
ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.
(ii) மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும். சாதி, மதம், பாலினம் சார்ந்து கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகளே சமத்துவமின்மை, தீண்டாமை ஆகியவற்றுக்கான காரணிகள் ஆகும்.
(iii) வெள்ளை நிற நபர்களிடமிருந்து கடுமை வண்ண நிறத்தவர்களை வேறுபாடாக நடத்துதல், நிறம்-சாதி- பாலினம்-மதம் போன்றவை அடிப்படையில் உரிமைகள், வாய்ப்புகள், சமத்துவ நிலை ஆகியன மறுக்கப்படுதல் போன்ற பாகுபாடுகள் நிகழ்கின்றன.
(iv) எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) அறிவுறுத்துகிறது.
41.
(i) கண்டம் எனப்படுவது மலைகள், பீட பூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலைப்பரப்பாகும்.
(ii) இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா "துணைக் கண்டம்" என்று அழைக்கப்படுகிறது.
42.
(i) நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை.
(ii) சமூகப் பன்முகத்தன்மை.
(iii) சமய பன்முகத்தன்மை.
(iv) மொழிசார் பன்முகத்தன்மை.
(v) பண்பாட்டுப் பன்முகத்தன்மை
43.
(i) முன் முடிவு வலுவாக இருக்கும் பொது ஒத்த கருத்து உருவாகிறது.
(ii) ஒத்தக்கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றி தவறான கருத்தாகும்.
44.
கோடரிகள்
(i) மரம் வெட்டவும்
(ii) மரக்கிளைகளை நீக்கவும்
(iii) குழிதோண்டவும்
(iv) விலங்குகளை வேட்டையாடவும்
(v) விலங்குகளின் தோலை உரிக்கவும் உருவாக்கப்பட்டன.
45.
(i) குழுவாகச் சென்று வேட்டையாடுதல்.
(ii) கழி தோண்டி, அதில் விலங்குகளைச் சிக்க வைத்து வேட்டையாடுதல்.
46.
ஆசியா,
ஆப்ரிக்கா,
வட அமெரிக்கா,
தென் அமெரிக்கா,
அண்டார்டிகா
ஐரோப்பா
ஆஸ்திரேலியா.
47.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
48.
| பழைய கற்கால வாழ்க்கை முறை | தற்கால வாழ்க்கை முறை |
| பழைய கற்கால மனிதன் உணவைத் தேடி நாடோடி வாழ்க்கை வாழதந்தான் | தற்கால மனிதன் குடியிருப்புகளை அமைத்து நிலையாக தங்கி வாழ்கிறான் |
| இலை, மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்களை ஆடையாக உடுத்தினான் | பருத்தி, பட்டு, கம்பளி, மற்றும் செயற்கை இழை துணிகளை ஆடையாக உடுத்துகிறான் |
| காய்கள், கனிகள், கிழங்குகள் மற்றும் இறைச்சியை உண்டான் | காய்கள், கனிகள், கிழங்குகள் இவைகளை வேக வைத்து உண்கிறான் |
| குறைகளில் வாழ்ந்தான் | வீடுகள் கட்டி வாழ்கிறான் |
| இயற்கையை அண்டி வாழ்ந்தான் | நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்கிறான் |
49.
விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகள்
கரடு முரடான கூர்மையாக்கப்பட்ட கற்கருவிகள்
கூர்மையாக்கப்பட்ட மரக்கிளைகள்
50.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
51.
| தொல்பொருள் ஆய்விடங்கள் | தொல்லியல் கண்டுபிடிப்புகள் | உண்மைகள் |
| ஆதிச்சநல்லூர் | தமிழ் - பிராமி எழுத்துக்கள் | வரலாற்றுக்கு முந்தய பண்பாடு இருந்துள்ளது. |
| கீழடி | ரோமானிய தொல் பொருட்கள் | இந்தியா, ரோம் நாட்டிற்கிடையே இருந்த வணிகத் தொடர்பு பற்றிய சான்று. |
| பையம்பள்ளி | இரும்புக் கருவிகள் | இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று |
| பொருந்தல் | அரிசி நிரப்பப்பட்ட பானை |
அரிசி மக்களின் முக்கிய உணவாக இருந்தது. |
| கொடுமணல் | சூழல் அச்சுக்கள் | நூல் நூற்கப்பட்ட துணி நெய்யப்பட்டது. |
52.
i) யுரேனஸ்
2) பச்சை
3) மீத்தேன் வாயு இருப்பதால்.
53.
(i) வளங்கள் குறைந்து கொண்டு வருவதற்கான காரணங்களை அறிதல்.
(ii) வீராக்குதலையும், அதிகப்படியான பயன்பாட்டினையும் தடுத்தல்
(iii) மறுபயன்பாடுள்ள வளங்களை மறுசுழற்சி செய்தல்.
(iv) மாசைக் கட்டுப்படுத்துதல்.
(v) சற்றுச் கழலைப்பாதுகாத்தல்
(vi) இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
(vii) மாற்று வளங்களைப் பயன்படுத்துதல்.
54.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
55.
புத்தரின் நான்கு பேருண்மைகள்
1. வாழ்க்கை துன்பங்கள், துயரங்கள், நிறைத்தது.
2. ஆசையே துன்பங்களுக்கான காரணம்.
3. ஆசையைத் துறந்துவிட்டால் துன்ப துயரங்களைப் போக்கி விடலாம்.
4. சரியான பாதையைப் பின்பற்றாமல் (எண்வகை வழிகள்) ஆசைகளை வென்றுவிடலாம்.
56.
1. நல்ல நம்பிக்கை,
2. நல்ல எண்ணம்,
3. நல்ல பேச்சு,
4. நல்ல செயல்,
5. நல்ல வாழ்க்கை,
6. நல்ல முயற்சி,
7. நல்ல அறிவு,
8. நல்ல தியானம்.
57.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
58.
(i) காஞ்சி கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
(ii) இங்குள்ள கைலாசநாதர் கோவில் புகழ் பெற்றது
(iii) பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் காட்டினார்
(iv) பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன
59.
(i) உலகின் மிகத்தொன்மையான நாகரிகம் மெசபடோமியா நாகரிகம்
(ii) இது 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டது
(iii) மெசபடோமியா நகரம் என்பதே தற்போதைய ஈராக் ஆகும்
60.
மொழிசார் பன்ழகத்தன்மை:
(i) இந்தியாவின் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
(ii) இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும்.
(iii) தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
(iv) இந்தியாவில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக ஆங்கிலம் பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும் மற்றும் அன்றாட வாழ்விலும் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
பன்பாட்டு பன்முகத்தன்மை :
(i) பண்பாடு என்ற சொல்லானது, மக்களின் மொழி. உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள். இசை, கலை மற்றும் கட்டிடக்கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
(ii) ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
(iii) கலை மற்றும் கட்டிடக்கலை என்பது ஒவ்வொரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
(iv) இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபு மற்றும் நுண்ணிய கலை வெளிப்பாட்டு வடிவங்களை பெற்றிருக்கின்றன.
61.
சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகள்:
(i) அனைருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்,
(ii) தற்போதைய பாலின் பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்
(iii) பாலின ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்காக பொது வாழ்வில் மற்றும் நிறுவனத்தில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.
(iv) மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வார்ந்தல்.
(v) வகுப்பறையில் குழுவாக சாப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்த வித பாரபட்சமின்றி: மாணவர்களை ஒன்றாக இணைக்கச் செய்தல்.
(vi) பலதரப்பட்ட மக்களிடம் பேசுதல்.
(vii) சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
62.
(i) புவியின் மேற்பரப்பில் சுமார் 70% நீரம்பிக் காணப்படுவது பெருங்கடல்கள் ஆகும்.
(ii) புவியின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் மேலும் 50% மேல் முதல்துறை பொருட்கள் கிடைக்கும் இடமாகும் விளங்குகிறது.
(iii) வளிமண்டலத்தில் உள்ள கார்பனின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
(iv) வானிலை மற்றும் காலநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
(v) கடல்வழி வாணிபத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
(vi) பெருங்கடல் நீரோட்டங்கள் கடலோரக் காலநிலையை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.
63.
நிலத்தோற்றத்தின் வகைகள் :
முதல் நிலை ;
கண்டங்கள் - மிகப்பெரும் நிலப்பரப்பு ஆகும்.
பெருங்கடல்கள் - பெரும் நீர்ப்பரப்பு ஆகும்.
இரண்டாம் நிலை :
(i) மலைகள் - சுற்றுப் புற நிலப் பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகளாகும்
(ii) பீப்பூமிகள் - சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும்.
(iii) சமவெளிகள் - சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றம் சமவெளி ஆகும்.
மூன்றாம் நிலை :
(i) ஆறுகள், பனியாறுகள், காற்று மற்றும் கடல் அலைகள் போன்றவற்றின் முக்கியச் செயல்கள் அரித்தல் மற்றும் படியவைத்தல் ஆகும்.
(ii) இச்செயல்களால் மலைகள், பீடபூமிகள் மற்றும் சமவெளிகளில் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள் மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.
64.
|
மலைகள் |
பீடபூமிகள் |
|
சுற்றுப்புற நிலப்பகுதியை விட 600 மீக்கு மேல் உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றம் மலைகள் ஆகும். |
சமமான மேற்பரப்பைக் கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமி ஆகும். |
65.
(i) உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
(ii) புவியில் காணப்படும் மூன்று தொகுதிகள் பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும்.
பாறைக் கோலம்:
(i) புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக் கோளம் என்று கூறுகிறோம்.
(ii) இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.
நீர்க்கோளம்:
(i) ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
(ii) இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.
(iii) இது பெருங்கடல்கள், கடல்கள். ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள்.
வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
உயிர்க்கோளம் :
(i) பாறைக்கோளம், நீர்க்கோளம், மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக் கூடிய ஒரு பகுதி 'உயிர்க்கோளம்' எனப்படுகிறது.
(ii) 'பயோ' என்ற கிரேக்கச் சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள்.
(iii) உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iv) ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.
66.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards