6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 28/02/2020
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 (6th Standard Social Science Tamil Medium Important questions All Chapter 2020 )
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________
டாலமி
கௌடில்யர்
ஜெர்சக்ஸ்
மெகஸ்தனிஸ்
2.
கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அஜாதசத்ரு
பிந்துசாரா
பத்மநாப நந்தா
பிரிகத்ரதா
3.
நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அங்கம்
மகதம்
கோசலம்
வஜ்ஜி
4.
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?
லும்பினி
சாரநாத்
தட்சசீலம்
புத்தகயா
5.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
6.
பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அங்கங்கள்
திரிபிடகங்கள்
திருக்குறள்
நாலடியார்
7.
ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.
சீனா
வடக்கு ஆசியா
மத்திய ஆசியா
ஐரோப்பா
8.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
9.
தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
10.
பரிணாமத்தின் வழிமுறை ________
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
11.
அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?
14(1)
15(1)
16(1)
17(1)
12.
ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு
1997
1996
1995
1994
13.
பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?
சமூகமயமாக்கல்
பொருளாதார நண்மைகள்
அதிகாரத்துவ ஆளுமை
புவியியல்
14.
'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________
இராஜாஜி
வ.உ.சி
நேதாஜி
ஜவஹர்லால் நேரு
15.
மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.
கேரளா
தமிழ்நாடு
மணிப்பூர்
கர்நாடகா
16.
மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.
மணிப்பூர்
சிக்கிம்
நாகலாந்து
மேகாலயா
17.
இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.
கண்டம்
துணைக்கண்டம்
தீவு
இவற்றில் எதுவுமில்லை
18.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
19.
தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
அ) கல்லணை
ஆ) காஞ்சிபுர ஏரிகள்
இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
ஈ) காவிரி ஆறு - இவற்றில்
அ) மட்டும் சரி
ஆ) மட்டும் சரி
இ) மட்டும் சரி
அ மற்றும் ஆ சரி
20.
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்
பூம்புகார்
மதுரை
கொற்கை
காஞ்சிபுரம்
21.
உறைந்த கண்டம்
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
22.
அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
23.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
24.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
25.
மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
மார்ச் 21
ஜூன் 21
செப்டம்பர் 23
டிசம்பர் 22
26.
சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.
27.
பூம்புகார் வணிகர்களை மதிப்பிடுக.
28.
சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?
29.
கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.
30.
வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?
31.
நிலையான வளர்ச்சி என்றால் என்ன?
32.
தனிநபர் வளம்.
33.
புதுப்பிக்க கூடிய வளங்கள்
34.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
35.
நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.
36.
மட்பாண்டங்களும் அதன் உடைந்த துண்டுகளும் சிந்துவெளி பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நீ அறிவது என்ன?
37.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.
38.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?
39.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?
40.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.
41.
பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?
42.
இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?
43.
பாரபட்சம் என்றால் என்ன?
44.
பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.
45.
பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.
46.
வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?
47.
பெருங்கடல் என்றல் என்ன?
48.
பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
49.
வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.
50.
வரலாறு என்றால் என்ன?
51.
படத்தை பார்த்து விடையளி

i) இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
ii) இது எவ்வகை நிலத்தோற்றம் ?
ii) இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது ?
52.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.
53.
நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.
54.
பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.
55.
சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?
56.
குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
57.
கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.
58.
காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.
59.
பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.
60.
மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.
61.
பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.
63.
சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.
64.
புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.
65.
புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?
66.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
1.
(d)
மெகஸ்தனிஸ்
2.
(a)
அஜாதசத்ரு
3.
(b)
மகதம்
4.
(b)
சாரநாத்
5.
(a)
ரிஷிபா
6.
(b)
திரிபிடகங்கள்
7.
(c)
மத்திய ஆசியா
8.
(a)
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
9.
(b)
ஆப்பிரிக்கா
10.
(c)
படிப்படியானது
11.
(b)
15(1)
12.
(a)
1997
13.
(d)
புவியியல்
14.
(d)
ஜவஹர்லால் நேரு
15.
(a)
கேரளா
16.
(d)
மேகாலயா
17.
(b)
துணைக்கண்டம்
18.
(b)
வேட்டையாடுதல்
19.
(d)
அ மற்றும் ஆ சரி
20.
(d)
காஞ்சிபுரம்
21.
(c)
அண்டார்டிகா
22.
(b)
அட்லாண்டிக் பெருங்கடல்
23.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
24.
(b)
சனி
25.
(d)
டிசம்பர் 22
26.
கெளடியல்யர்(Kautilya) என்பது சாணக்கியரின் மறு பெயராகும். அவரது புகழ்மிக்க நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும்.
27.
பூம்புகார் வணிகர்கள் நேர்மைக்கும் மாண்புக்கும் உரியவர்களாகத் திகழ்ந்தார்கள்.
28.
மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன. மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடன், வடிவில் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.
29.
மொகஞ்சதாரோவில் இருந்த மிகப் பெரிய பொது கட்டடம் கூட்ட அரங்கம் ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளைக் கொண்ட பறந்து விரிந்த கட்டடம் ஆகும்.
30.
வரலாற்றுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றின் தொடக்க காலம் ஆகும்.
31.
நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலை முறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி எனப்படும்.
32.
தனிநபர் வளங்கள் என்பது, ஒரு தனி நபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். (எ.கா) அடுக்குமாடிக் கட்டடங்கள்.
33.
ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: காற்று, நீர், சூரிய ஒளி.
34.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
35.
| நாளங்காடி | அல்லங்காடி |
| சங்ககாலத்தில் இருந்த பகல்நேரக் கடைகள் நாளங்காடி என்று அழைக்கப்பட்டன | சங்ககாலத்தில் இருந்த இரவு நேரக் கடைகள் அல்லங்காடி என்று அழைக்கப்பட்டன. |
36.
சிந்து சமவெளி மக்கள் சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை உருவாக்கினார். அவை சிவப்பு வண்ணத்தில் இருந்தன. ஆகவே மட்பாண்டத் தொழில் அவர்கள் சிறந்து விளங்கினர் என்பதை நன்கு புரிய முடிகிறது.
37.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனப்படுவதற்கு அதன் திட்டமிட்ட நகர அமைப்பு சிறந்த கட்டடக்கலை, உடல்நலம் மற்றும் சுகாதார முறைகளே காரணமாகும்.
38.
சிந்து வெளி நாகரிகம் வெண்கல பயன்பாட்டை நன்கு அறிந்திருந்தது. மக்கள் பயன்படுத்திய பொருட்கள் வெண்கலத்தாலே உருவாக்கப்பட்டிருந்தால் இதனை வெண்கல காலம் (Bronze Age) என அழைக்கிறோம்.
39.
இந்திய மக்கள் யாவரும் மதம், சாதி, மொழி, இனம், கலாச்சாரம் என பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் இந்தியர்கள் என்ற உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை நிலவும் நாடு என அழைக்கப்படுகிறது.
40.
இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்கள்
மாநிலங்கள்
(i) தமிழ்நாடு
(ii) கேரளா
(iii) கர்நாடகா
(iv) ஆந்திரப்பிரதேசம் & தெலுங்கானா
(v) ஒடிசா
(vi) மணிப்பூர்
(vii) அசாம்
(ix) வட இந்தியா
புகழ்பெற்ற செவ்வியல் நடனங்கள்
(i) பரத நாட்டியம்
(ii) கதகளி
(iii) யக்ஷகானம்
(iv) குச்சிப்புடி
(v) ஓடிசி
(vi) மணிப்புரி
(vii) சத்ரியா
(viii) கதக்
41.
(i) நில அமைப்புகள் மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத்தன்மை.
(ii) சமூகப் பன்முகத்தன்மை.
(iii) சமய பன்முகத்தன்மை.
(iv) மொழிசார் பன்முகத்தன்மை.
(v) பண்பாட்டுப் பன்முகத்தன்மை
42.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 (1)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 17 (1)
43.
(i) பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர் மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
(ii) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும்.
44.
(i) சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.
(ii) மனிதர்கள் களிமண்ணில் பானை செய்யக் கற்றுக் கொண்டார்கள். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பானை செய்வதை எளிதாக்கியது.
(iii) மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர சக்கரம் உதவியது.
(iv) வாணிபம் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்பட்டது.
(v) நவீன காலத்தில் அனைத்து வகையான போக்குவரத்திலும் சக்கரம் முக்கிய பங்காற்றுகிறது
(vi) மேலும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவதிலும் பெரும்பங்காற்றுகிறது.
45.
(i) குழுவாகச் சென்று வேட்டையாடுதல்.
(ii) கழி தோண்டி, அதில் விலங்குகளைச் சிக்க வைத்து வேட்டையாடுதல்.
46.
அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்.
47.
பெரும் நீர்ப்பரப்பபு பெருங்கடல்கள் எனப்படும்.
48.
(i) வேட்டைக்குச் சென்றவர்கள் அங்கு நடந்தவற்றை தங்களோடு வர இயலாதவர்களுக்கு காட்டுவதற்கு பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் ஓவியங்களை தீட்டியிருக்கலாம்
(ii) பொழுதுபோக்காகவும் வரையப்பட்டிருக்கலாம்
49.
வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்.
50.
வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு ஆகும்.
51.
1.சமவெளி
2.மூன்றாம் நிலை நிலத்தோற்றம்
3. அரித்தல், படிய வைத்தல்
52.
இயற்கை வளங்களின் வகைப்பாடு :
இயற்கை வளங்களை அதன் தோற்றம். வார்ச்சி நிலை, புதுப்பித்தல், பரவஸ் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.
தோற்றத்தின் அடிப்படையில் :
(i) தோற்றத்தின் அடிப்படையில் வாங்களை உயிரியல் வனங்கள் மற்றும் உயிரற்ற வளங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(ii) உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். உதாரணமாக தாவரங்கள். விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்.
(iii) உயிரில்லாத அனைத்து வாங்களும் உயிரற்ற வணங்கள் எனப்படும் உதாரணமாக நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.
வளர்ச்சியின் அடிப்படையில் :
(i) வளர்ச்சி நிலையின் அடிப்படையில் வளங்களை, கண்டறியப்பட்ட வசங்கள் மற்றும் மறைந்திருக்கும் வாங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
(ii) கண்டறியப்பட்ட வங்கள் தற்போது பயன்படுத்தப் படுவதும் அதன் இருப்பின் அளவும் அறியப்பட்டிருக்கிறது.
எ.கா நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்.
புதுப்பித்தலின் அடிப்படையில் :
(i) வளத்தினை புதுப்பித்தலின் அடிப்படையில் புதுப்பிக்கக் கூடிய வனங்கள் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள் என வகைப் படுத்தப்படுகிறது.
(ii) ஒருமுறை பயன்படுத்தப்பட்ட வாங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள், புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(எ.கா) காற்று, நீர், சூரிய ஒளி
53.
நான் அசோகரப் போல் ஒரு அரசராக இருந்தால் மருத்துவமனைகளை அமைத்து ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பேன். கால்நடைகள், விலங்குகளுக்கு தனி மருத்துவமனை அமைப்பேன். பின்தங்கிய மக்களுக்கு இலவச உணவு, உடை வழங்குவேன். ஆதரவற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும் காப்பகம் அமைப்பேன். கால்வாய்கள், கண்மாய்களைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு உதவி செய்வேன்.
54.
| ஹூனயானம் | மகாயானம் |
| புத்தரின் சிலைகளையோ உருவப் படங்களையோ வணங்க மாட்டார்கள். | புத்தரின் உருவங்களை வணங்கினர். |
| மிக எளிமையாக இருப்பர். | விரிவான சடங்குகளைப் பின்பற்றினர். |
| தனிமனிதர்கள் முக்தி அடைவதே தங்களின் நோக்கம் என்று நம்பினர். | அனைத்து உயிரினங்களும் முக்தி பெறுவதே தங்களது நோக்கம் என நம்பினர். |
| பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர் |
சமஸ்கிரத மொழியைப் பயன்படுத்தினர். |
55.
சமணத்தின் ஐந்து நடத்தை விதிகள் :
அகிம்சை - எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது.
சத்யா - உண்மை மட்டுமே பேசுதல்.
அஸ்தேய - திருடாமை.
அபரிக்கிரகா - பணம், பொருள் சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமல் இருப்பது.
பிரம்மச்சாரியா - திருமணம் செய்து கொள்ளாமை.
56.
| குருகுலக் கல்வி முறை | நவீன கல்விமுறை |
|
மாணவர்கள் குருவுடன் தங்கியிருந்து, அவருக்கு சேவை செய்து கல்வி சுற்று அறிவை வளர்த்தனர் |
மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக் கூடங்களுக்குச் சென்று ஆசிரியர் உதவியுடன் கல்வி கற்று அறிவை வளர்க்கின்றனர். |
|
வாய்மொழி வாயிலாக பாடங்களை மனப்பாடம் செய்து கற்றனர். |
மாணவர்கள் புத்தகங்கள் மூலம் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறைப்படி கல்வி கற்கின்றனர் |
|
வேதங்கள் புராணங்கள் போன்ற பாடங்கள் முக்கியமான பாடங்களாகக் கற்றுக் கொடுக்கப்பட்டன |
அறிவியல், கணிதம், கணினி மற்றும் மொழி சார்ந்த கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. |
|
ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டது. |
வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. |
|
இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப் பட்டது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது |
அனைவருக்கும் தரமான ஒரேவிதமான கல்வி வழங்கப்படுகிறது. |
57.
தொல்லியல் ஆய்மிடம் கொடுமணல் :
(i) பதிற்றுப்பத்து என்னும் சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கொடுமணல் என்ற ஊர் இதுவென அடையாளப் படுத்தப்படுகிறது.
(ii) இங்கு தமிழ்பிராமி எழுத்துகளைக்கொண்ட முன்னூற்றுக்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) மேலும், நூல் சுற்றிவைக்கப்பயன்படும் சுழல் அச்சுகள், சுருள்கள். துணிகளின் சிறிய நுண்டுகள். கருவிகள், ஆயுதங்கள். அணிகலன்கள். மணிகள் முக்கியமாக சிவப்புநிற மணிக்கற்கள் ஆகியவற்றையும் தொல்லியல் ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
(iv) புதைஞழி மேட்டிற்கு அருகே காணப்பட்ட நினைவுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது.
58.
(i) கல்வி கற்பதற்கான இடத்தினை பள்ளி என்றழைக்கிறோம்
(ii) இப்பள்ளிகள் காஞ்சி நகரில் தான் முதன் முதலில் ஏராளமாக அமைக்கப்பட்டன
(iii) சமணர் அமைத்த பள்ளிகளில் சமண மாணவர்களும், புத்த விகாரங்களில் புத்த மாணவர்களும் பயின்றனர்
(iv) நாளந்தப் பல்கலைக் கழகத்தில் பயின்ற சீன வரலாற்ற்றாசிரியர் யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காக காஞ்சியிலிருந்த கடிகைக்கு வந்திருக்கிறார்
(v) ''நகரங்களில் சிறந்தது காஞ்சி '' என்று கவிஞர் காளிதாசர் கூறுகிறார்
(vi) ''கல்வியில் கரையிலாத காஞ்சி'' என்று நாயன்மார்களுள் முதன்மையானவரான திருநாவுக்கரசர் காஞ்சி நகரைப் புகழ்ந்துள்ளார்.
(vii) மேலே கூறியுள்ளவற்றிலிருந்து காஞ்சிபுரம் கல்வியில் தலைசிறந்து விளங்கிய தென்பதை நிரூபிக்கலாம்
59.
(i) பூம்புகார் துறைமுகத்தில் சீரும், சிறப்புமாக நடந்த வணிகம் குறித்து சங்க இலக்கிய நூலான பட்டினப் பாலையிலிருந்தும், இரட்டை காப்பிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்
(ii) இங்கு வணிகம் செய்ய கிரேக்கம், நேரம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்த்த வணிகர்கள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
(iii) கடல் வழியாகக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) கருமிளகு தரைவழித் தடங்கள் வழியே இறக்குமதி செய்யப்பட்டது
(v) வடமலையிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது
(vi) மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சந்தனமும் , தென்கடல் பகுதியிலிருந்து முத்தும், கிழக்குப் பகுதியிலிருந்து பவளமும், ஈழத்தில் இருந்து உணவுப் பொருள்களும் இறக்குமதி ஆயின
60.
மொழிசார் பன்ழகத்தன்மை:
(i) இந்தியாவின் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
(ii) இந்தோ-ஆரியன், திராவிடன், ஆஸ்ட்ரோ ஆஸ்டிக், சீன திபெத்தியன் ஆகிய நான்கும் முக்கிய மொழி குடும்பமாகும்.
(iii) தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.
(iv) இந்தியாவில் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக ஆங்கிலம் பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும் மற்றும் அன்றாட வாழ்விலும் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
பன்பாட்டு பன்முகத்தன்மை :
(i) பண்பாடு என்ற சொல்லானது, மக்களின் மொழி. உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள். இசை, கலை மற்றும் கட்டிடக்கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.
(ii) ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.
(iii) கலை மற்றும் கட்டிடக்கலை என்பது ஒவ்வொரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.
(iv) இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபு மற்றும் நுண்ணிய கலை வெளிப்பாட்டு வடிவங்களை பெற்றிருக்கின்றன.
61.
சாதி பாகுபாடு
பாலினப் பாகுபாடும்
மத பாகுபாடு
சாதி பாறுபாது:
(i) இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாறிமுறை ஆகும்.
(ii) இந்தியாவில் சாதி ஒடுக்கு முறைக்கெதிராக பலரும் போராடி வருகின்றனர்.
(iii) இவர்களுக்குமுன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் ஆனார்.
(iv) இவர் இந்திய மக்களிடையே சமத்துவம் நிலவ பெரிதும் பாடுபட்டார்.
பாலினப் பாதயாறும் :
(i) பாலினப் பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல் நலம்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது.
(ii) எடுத்துக்காட்டாக ஒரு பெண் பள்ளிப் படிப்பை முத்தடியின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை.
(iii) இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்தி. அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளையன் நவீன ஆடைகளை அணித்தி அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாகுபாடு ஆகும்.
62.
பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்கள் :
(i) புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் ஆகும்.
(ii) இது புவியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது.
(iii) இதன் பரப்பளவு சுமார் 168.72 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும்.
(iv) இப்பெருங்கடல் முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது.
(v) பேரிங் கடல், சீனக் கடல், ஜப்பான் கடல், தாஸ்மானியா கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவை பசிபிக் பெருங்கடலிலுள்ள எல்லையோரக் கடல்களாகும்.
(vi) இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹவாய், நியூசிலாந்து உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.
(vii) புவியின் ஆழமான பகுதியான மரியானா அகழி 10,994 மீ பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
(viii) பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக அமைந்துள்ளதால் பசிபிக் "நெருப்பு வளையம்” என அழைக்கப்படுகிறது.
63.
சமஜெனி மக்கன் நெருக்கம் பிறந்ததாகக் காணப்படுகிறது. இதற்கு காரணம்:
(i) சமவெளி சமமான மற்றும் தாழ்நிலத் தோற்றமாகும்.
(ii) இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீ-க்கும் குறைவான உயரம் கொண்ட நிலத்தோற்றம் ஆகும்.
(iii) பெரும்பாலும் சமவெளிகள், ஆறுகள் அதன் துணை ஆறுகள் மற்றும் கிளை ஆறுகளால் உருவாக்கப்படுகின்றன.
(iv) இங்கு வளமான மண்ணும் நீர்ப்பாசனமுமிருப்பதால் வேளாண்மை தழைத்தோங்குகிறது
(v) மக்கள் வாழ்வதற்கு சமவெளிகள் ஏற்றதாய் உள்ளன.
(vi) எனவே அவை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களாக விளங்குகின்றன.
(vii) வட இந்தியாவிலுள்ள கங்கைச் சமவெளி உலகின் பெரிய சமவெளிகளில் ஒன்றாகும்.
(viii) தமிழ்நாட்டிலுள்ள முக்கிய சமவெளிகள் காவேரி மற்றும் வைகை ஆறுகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
64.
(i) உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.
(ii) புவியில் காணப்படும் மூன்று தொகுதிகள் பாறைக் கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும்.
பாறைக் கோலம்:
(i) புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக் கோளம் என்று கூறுகிறோம்.
(ii) இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.
நீர்க்கோளம்:
(i) ஹைட்ரோ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும்.
(ii) இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.
(iii) இது பெருங்கடல்கள், கடல்கள். ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள்.
வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
உயிர்க்கோளம் :
(i) பாறைக்கோளம், நீர்க்கோளம், மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக் கூடிய ஒரு பகுதி 'உயிர்க்கோளம்' எனப்படுகிறது.
(ii) 'பயோ' என்ற கிரேக்கச் சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள்.
(iii) உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(iv) ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை. தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.
65.
புலியின் சுழலுதல் :
(i) புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதைச் சுழலுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சுழலுவதன் காரணமாக இரவு, பகல் ஏற்படுகிறது.
(iii) புவி கோள வடிவமாக உள்ளதால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டுமே படுகிறது.
(iv) அப்பகுதிக்கு அது பகல் பொழுது ஆகும்,
(v) புவியின் ஒளி படாத பகுதி இரவாக இருக்கும்.
புவியின் சுற்றாதவ் :
(i) புவி தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வையே சுற்றுதல் என்று கூறுகிறோம்.
(ii) புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் தோன்றுகின்றன.
66.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards