6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 18/01/2019
Class 6 - Term 3- Social Science All Chapter Important Questions
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் திட்டநேரத்தைப் பற்றி விளக்குக
2.
முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
3.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
4.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
5.
வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?, செய்யக்கூடாதவை எவை?
6.
கல்யாணி மேலைச் சாளுக்கியர் குறித்து எழுதுக.
7.
எலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
9.
மெளரியருக்குப் பின்வந்த காலத்தில் தென்னிந்தியாவில் வணிக-வர்த்தக நிலை குறித்து எழுதவும்.
10.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
11.
கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
12.
சாகர்கள் யார்?
13.
இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?
14.
கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?
15.
கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.
16.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
17.
மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
18.
களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக
19.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக
20.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
21.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
22.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
23.
கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை
24.
தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்
1.
இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 680 7' கிழக்கு முதல் 970 25' கிழக்கு வரை உள்ளது. இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82 \(\frac { 1 }{ 2 }\)0 கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது.

2.
புவி தனது அச்சில் 23 \(\frac { 1 }{ 2 }\)0 சாய்ந்து நிலையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. அவ்வாறு சுற்றி வரும்போது சூரியக்கதிர்கள் புவியில் விழுகின்ற கோணத்தின் அடிப்படையில், கீழ்க்கண்ட அட்சக்கோடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள்,

00 அட்ச கோட்டிலிருந்து 23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'தாழ் அட்சக்கோடுகள் - லோ Latitudes எனவும்.
23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு வரையிலும், 23 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'மத்திய அட்சக் கோடுகள்' Middle Lattitudes எனவும்.
66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 900 வடக்கு வரியிலும், 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 900 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் 'உயர் அட்சக்கோடுகள்' High Lattitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.
புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இஃது அட்சக்கோடுகளின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டலம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டிலிருந்து (00) வடக்கில் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி 'வெப்பமண்டலம், என அழைக்கப்படுகிறது.
மித வெப்பமண்டலம் (Temperate Zone)
வட அரைக்கோளம் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) மகரரேகை முதல் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) அண்டார்டிக் வட்டம் வரைந்துள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'மித வெப்பமண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
குளிர் மண்டலம் (Frigid Zone)
வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் வடதுருவம் (900 வ) வரியிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) முதல் தென்துருவம் (900 தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்து நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி "குளிர்மண்டலம்" என அழைக்கப்படுகிறது.
3.

வட அரைக்கோளம் (Northern Hemisphere)


00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.
தென் அரைக்கோளம் (Southern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 தென்துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.
கிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 1800 கிழக்கு தீர்க்கக்கூடு வரை காணப்படும் புவிப்பரப்புப் பகுதி 'கிழக்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere)

00 தீர்க்கக் கோட்டிலிருந்து 1800 மேற்கு தீர்க்கக் கோடுவரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி 'மேற்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
4.
புவி மாதிரியின் பயன்கள்: உலகிலுள்ள கண்டங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது. இடங்கள், கடல் வழிகள், வான் வழிகள் பற்றி அறிய உதவுகிறது. கண்டங்கள், கடல்கள், நாடுகள், ஆறுகள் மற்றும் நகரங்கள் பற்றி அறிய உதவுகிறது.
5.
அளவுக்கு அதிகாமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கறைகளை அல்லது சிற்றாறுகளின் கறைகளைக் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது.
வெள்ளத்தின் போது செய்யக் கூடாதவை
1. துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல்க் கூடாது.
2. வண்டிகளை இயக்குதல் கூடாது.
3. வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது.
4. வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
5. வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது.
வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை
1. மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
2. கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
3. பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.
4. குடிநீரைக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும்.
5. பிளிச்சீங் பவுடர் கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
6. எரிவாயுக் கசிவு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்த வேண்டும்.
7. வயிற்றுப் போக்கு இருந்தால் அதிக அளவில் உணவு உண்ணக் கூடாது.
6.
கல்யாணி மேலைச் சாளுக்கியர்கள் வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் ஆவர். கல்யாணியைத் (தற்போதைய பசவ கல்யாண்) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இரண்டாம் தைலப்பர் என்பவர் ராஷ்டிரகூடர்களின் சிற்றரசராக பிஜப்பூர் பகுதியை ஆண்டு வந்தார் இவர் கி.பி. 973இல் மாளவ அரசர் பராமரரைத் தோற்கடித்து கல்யாணியைக் கைப்பற்றினார். இவருடைய வம்சம் முதலாம் சோமேஸ்வரனின் ஆட்சியின் போது பேரரசாக வேகமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் சோமேஸ்வரர் தலைநகரை மன்யகேட்டாவிலிருந்து கல்யாணிக்கு மாற்றினார்.
7.
எல்லோரா: எல்லோராவின் குன்றுப்பகுதியில் அமைந்துள்ள முப்பது குடைவரைக் கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. முதலாம் கிருஷ்ணருடைய ஆட்சிக் காலத்தில் இக்கோவில் உருவாக்கப்பட்டது. இக்கோவில் அதன் கட்டடக்கலை பிரமாண்டத்திற்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றதாகும். இக்கோவில் 60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனுடைய விமானத்தின் (கோபுரம்) உயரம் 90 அடிகளாகும். இக்கோவில் மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலின் சாயலைப் பெற்றுள்ளது. கைலாசநாதர் கோவில் திராவிடக் கட்டடக்கலைக் கூறுகளைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு: இத்தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி. உள்ளூர் மக்களால் காரபூரி என்று அழைக்கப்படுகிறது. எலிபெண்டா மும்பைக்கு அருகிலுள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவிலுள்ள பெரிய யானையின் உருவத்தைக் கண்ணுற்ற போர்த்துக்கீசியர்கள். இத்தீவுக்கு எலிபெண்டா தீவு எனப் பெயரிட்டனர். எலிபெண்டா குகையிலுள்ள திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட) சிவன் சிலையின் வனப்பு ஈடு இணையற்றதாகும். கோவிலின் நுழைவாயிலில் காணப்படும் துவாரபாலகர்களின் சிலைகள் நமது கண்ணையும் கருத்தையும் கவர்பவை.
8.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
9.
i) சாதவாகனர்கள் ஆட்சிக்காலத்தில் வாணிகமும், தொழிலும் வளர்ச்சியடைந்தன.
ii) வணிகர்கள் தங்களது வாணிபத்தைப் பெருக்குவதற்காக வணிகக் குழுக்களை அமைத்துக் கொண்டனர்.
iii) குயவர்கள், நெசவுத் தொழில் செய்வோர், எண்ணெய் உற்பத்தியாளர்கள் போன்ற கைவினைஞர்களும் கழகங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
iv) கர்ஷபணம் என்றழைக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
v) சாதவாகனர்கள் காலத்தில் அயல்நாட்டு வர்த்தகமும் நன்கு செழித்தது.
vi) தக்காணத்திலிருந்து பல்வேறு துறைமுகங்கள் பற்றி டாலமி குறிப்பிட்டுள்ளார்.
vii) மேற்கு தக்காணத்திலிருந்த கல்யாண் சாதவானர்களின் மிகப்பெரிய துறைமுகமாகும்.
viii) கிழக்குக் கடற்கரையிலிருந்த கண்டகசேலா, கஞ்சம் என்ற துறைமுகங்களும் சிறப்பு வாய்ந்தவை.
10.
இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன் மூலம் குடைவரைச் சிறிய கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
11.
கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தகத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதிரிப்பவராகவும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார். கனிஷ்கர் பௌத்தத்தை அரச மதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேற்பாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில் தான் மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
12.
இந்தியாவில் இந்தோ -கிரேக்கரின் ஆட்சிக்கு சாகர் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினருக்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சித்தியார் ஆவர். சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.
13.
மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிடப்பட்ட நாணயங்கள் பறந்து விரிந்து பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைக்கின்றன.
14.
இந்தோ -பார்த்திய அரசு அல்லது கோண்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ -பார்த்தியார் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிருஸ்துவ உபதேசியார் புனித தாமஸிடம் தொடர்புடையதாகும். கிருஸ்துவ மரபின்படி, புனித தாமஸ், கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு வந்து கிருத்துவத்திற்கு அவரை மதம் மாற்றினார்.
15.
சாதவாகன அரச குடும்பத்தன் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்னியாவார். இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் பேரரசு மஹாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட இவருடைய நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும், அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
16.
பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார்.
17.
வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ - கிரேக்கர்கள் அல்லது பாக்டீரியா - கிரேக்கர்கள், குஷாணார்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
18.
களப்பிரர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி இரண்டரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். களப்பிரர்களைப் பற்றி அறிய நமக்கு குறைவான குறிப்புகளே கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள், தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இலக்கியச் சான்றுகள், தமிழ் நாவலர் சரிதை, யாப்பெருங்கலம், பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது. சமஸ்கிரதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்துமுறை உருவானது. பதினெண்கீழ்கணக்கைச் சேர்ந்த பல நூல்கள் இயற்றப்பட்டன. இக்காலத்தில் வணிகமும் வர்த்தகமும் தொடர்ந்து செழித்தோங்கின. எனவே களப்பிரர் காலமானது பொதுவாகச் சித்திரிக்கப்பட்டதைப் போன்று இருந்த காலம் அல்ல.
19.
சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால வளவன் அல்லது கரிகாலன் ஆவார். அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றுரில் தோற்கடித்தார். அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். பட்டினப்பாலை எனும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியில் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
20.
சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண் புலவர்கள் வாழ்வது அறிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றுத்தனர்.
21.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எப்படியெனில், மக்களுக்காக பல்வேறு சேவைகளை உள்ளாட்சி அமைப்புகளே வழங்குகின்றன. எ.கா - குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்துப் பராமரித்தல், பொதுப்பூங்காக்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல் போன்றவையும், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
22.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
23.

24.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards