7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/11/2019
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.
2.
இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக.
3.
சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?
4.
சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.
5.
சுற்றுலா வரையறுக்க.
6.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
7.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
8.
இரும்பின் பயன்கள் யாவை?
9.
வளங்கள் - வரையறு
10.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
11.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
12.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.
13.
விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.
14.
துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
1.
1. கோவளம் கடற்கரை - காஞ்சிபுரம்
2. மெரினா கடற்கரை - சென்னை
3. கன்னியாகுமரி கடற்கரை - கன்னியாகுமரி
4. இராமேஸ்வரம் கடற்கரை - இராமேஸ்வரம்
5. சில்வர் கடற்கரை - கடலூர்
2.
கொடைக்கானல் - தமிழ்நாடு
டார்ஜிலிங் - மேற்கு வங்காளம்
நைனிடால் - உத்திர காண்ட்
ஷில்லாங் - மேகாலயா
சிம்லா - இமாச்சலப் பிரதேசம்
காங்டாக் - சிக்கிம்
3.
1. இதமான வானிலை
2. கண்கவர் இயற்கை காட்சிகள்
3. வரலாற்று மற்றும் பண்பாட்டு நினைவுச் சின்னங்கள்
4.
1. பொதுவாக இயற்கை சூழலில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் செழித்து வளரும் இடங்களுக்கு செல்வது சூழல் சுற்றுலா எனப்படுகிறது.
2. அமேசான் மலைக்காடுகள், ஆப்பிரிக்க வனப்பயணம் மற்றும் இமயமலை சிகரங்களில் மலையேற்றம் ஆகியவை புகழ் பெற்ற சூழல் சுற்றுலா தலங்களாகும்.
5.
1. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இன்றியமையாத வருவாய் ஆதாரமாகச் சுற்றுலா அமைந்துள்ளது.
2. நாட்டின் சமூக கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளிலும் பன்னாட்டு தொடர்புகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால் சுற்றுலா சமுதாயத்தின் ஒரு அவசியமான அங்கமாக உள்ளது.
6.
கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம் .
1.ஆந்திரசைட் ( Anthracite )
2.பிட்டுமினஸ் (Bituminous )
3.லிக்னைட் (Lignite )
4.பீட் (Peat )
7.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும்.
8.
இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் பொறியியல் தொழில்துறையில் அதாவது இயந்திர கட்டுமானப் பணி, இயந்திர கருவிகள், ஆட்டோ மொபைல்ஸ் கப்பல் கட்டுமானப் பணி பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
9.
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.
10.
1. சிவாஜியின் கீழ் மராத்தியர் நிர்வாகம்:
2. சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
3. இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
4. மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
5. கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டு இருபது முதல் நூறு எண்ணிக்கை வரையிலான கிராமங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தன.
6. இராணுவம் மீதும், இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் சிவாஜி மிகப்பெரும் கவனம் செலுத்தினார்.
7. சிவாஜி எட்டு அமைச்சர்களைக் கொண்ட குழுவிற்கு அஷ்டப்பிரதான் எனப் பெயரிட்டார்.
8. ஒவ்வொருவரும் ஒரு முக்கிய துறையைக் கொண்டிருந்தனர்.
9. முகலாயரின் நிர்வாகமுறை சிவாஜியின் மீது செல்வாக்குச் செலுத்தியிருந்தது. நிலவரியானது உண்மையான விளைச்சலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
10. நீதித்துறையில் சிவில் வழக்குகள் பஞ்சாயத்து எனப்படும் கிராமக் குழுக்களால் தீர்த்து வைக்கப்பட்டன.
11.
1. அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
2. பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
3. அபுல் பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் -இ - கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா பகவன் தாஸ், ராஜா மான் சிங் ஆகியோர் அக்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர்.
4. பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சேன், ஓவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
12.
முகலாயர்களின் நிலவருவாய் நிர்வாகம்:
1. அக்பரின் ஆட்சியின் போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
2. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார்.
3. இம்முறையின் படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.
4. பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (1/3) அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது.
5. முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர்.
6. இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும்.
7. ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர்.
13.
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:
1. 1565 -ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு முழு காரணமாகும்.
2. தக்காண சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகரப் படைகளைத் தோற்கடித்தன.
3. விஜய நகரம் கொள்ளையிடப்பட்டு அனைத்து கட்டடங்கள். அரண்மனைகள், கோவில்கள், சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பயங்கரமான மனிதப் படுகொலைகளும் நடந்தன.
4. இறுதியாக விஜயநகரப் பேரரசு அழிக்கப்பட்டது.
பாமினி சுல்தான்களின் பங்களிப்பு:
1. கட்டடக் கலைக்கு பாமினி சுல்தான்களின் பங்களிப்பை குல்பர்காவில் காணலாம்.
2. குல்பர்கா, பீடார், தௌலதாபாத் மற்றும் காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவி கல்வி கற்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தினர்.
14.
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக்கலவையை உருவாக்குகிறது. இது துராலுமின் எனப்படுகிறது.
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards