9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 17/09/2019
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
2.
பொதுத் துறையையும், தனியார் துறையையும் வேறுபடுத்துக
3.
ஏதேனும் ஐந்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் அவற்றின் செயல்களையும் விவரி
4.
மேகங்களின் வகைகளை விவரி.
5.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
6.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
7.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
8.
பனியாறு என்றால் என்ன?
9.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
10.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
1.
மக்களாட்சியின் நிறைகள்:
1. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் மக்களுக்கான ஆட்சியாகும்.
2. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
3. அனைத்து குடிமகன்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
4. அனைத்து மக்களுக்கான சம உரிமை வழங்கப்படுகிறது.
5. நாட்டின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களுக்கும் பலன் கிடைக்கிறது.
மக்களாட்சியின் குறைகள்:
1. தகுதியில்லாத தலைவர்கள் தமக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.
2. திறமையில்லாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சியும் குறையுள்ளதாக இருக்கும்.
3. லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.
4. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் கூட்டாட்சியோ, குறை ஆயுள் ஆட்சியோ அமைய வாய்ப்புள்ளது.
5. எண்ணற்ற படித்தவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை.
2.
| பொதுத்துறை | தனியார் துறை |
|---|---|
| சேவை நோக்கம் கொண்டது. | இலாப நோக்கம் கொண்டது |
| சொத்துக்கள் அரசாங்கத்திற்குச் சொந்தம் | சொத்துக்கள் தனிநபர்களுக்குச் சொந்தமானது |
| ஊதியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. | ஊதியம் உரிமையாளரால் வழங்கப்படுகிறது. |
| நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், பாரத தொலைபேசி நிறுவனம் போன்றவை பொதுத் துறை நிறுவனங்கள். | டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், அசோக் லேலண்ட், டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை போன்றவை தனியார் நிறுவனங்கள். |
3.
| சட்டம் | செயல்பாடு |
|---|---|
| 1. தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம், 2010 | சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறது. |
| 2. பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 | பல்லுயிர்மைகளைப் பாதுகாத்தல் |
| 3. சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986 | சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலுக்கான அதிகாரம் வழங்குதல் |
| 4. வன (பாதுகாப்பு) சட்டம், 1980 | காடுகளை அழித்தலை தடை செய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்துதல். |
| 5. நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 | அனைத்து வகையான ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டுப் பராமரித்தல். |
| 6. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972 | காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. |
4.
உயரத்தின் அடிப்படையில் மேகங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
அ) மேல்மட்டமேகங்கள் (High clouds) (6-20 கி.மீஉயரம் வரை)
ஆ) இடைமட்டமேகங்கள் (Middle clouds) (2.5-6 கிமீ உயரம் வரை)
இ கீழ்மட்டமேகங்கள் (Low clouds) (புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ. உயரம் வரை)
மேகங்கள் அதன் வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்படுகின்றன.
அ) மேல்மட்ட மேகங்கள்:
கீற்று மேகங்கள் (Cirrus):
(i) வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன.
(ii) இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். எனவே, இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.
கீற்றுத் திரள் மேகங்கள்(Cirro Cumulus):
கீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்களாகவோ, விரிப்பு போன்றோ, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.
கீற்றுப்படை மேகங்கள்(Cirro Stratus):
கீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும்.
ஆ) இடைமட்ட மேகங்கள் (Middle Clouds):
இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status):
சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும். இடைப்பட்ட திரள்மேகங்கள் ( Alto Cumulus):
தனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்றுடனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை 'செம்மறியாட்டுமேகங்கள்' (Sheep Clouds), அல்லது 'கம்பளிக்கற்றைமேகங்கள்' (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுகிறது.
கார்படை மேகங்கள்(Nimbo Stratus):
புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது.
இ) கீழ்மட்ட மேகங்கள் (Low Clouds):
படைதிறல் மேகங்கள் (Strato Cumulus):
(i) சாம்பல் மற்றும் வெள்ளை நிற வட்டத்திட்டுக்கள் 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் 'படைத்திரள்மேகங்கள்' எனப்படுகின்றன.
(ii) பொதுவாக இம்மேகங்கள் தோன்றும்போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.
படைமேகங்கள் (Stratus):
மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும். இவை மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்.
திரள் மேகங்கள் (Cumulus):
தட்டையான அடிபாகமும், குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு 'காலிபிளவர்' போன்ற வடிவத்துடனும் காணப்படும். இது தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகமாகும்.
கார்திரள் மேகங்கள் (Cumulo - Nimbus):
(i) மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன். இடியுடன் கூடிய மழைதரும் மேகங்கள் கார்திரள் மேகங்கள் எனப்படும்.
(ii) இவை பொதுவாக கனமழையையும் அதிக பனிப்பொழிவையும் சில நேரங்களில் கல்மாரி மழை மற்றும் சுழற்காற்றுடன் கூடிய மழையையும் தருகின்றன.
5.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
6.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
7.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
8.
பனியாறு:
(i) பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
(ii)பனிக்குவிந்து காணப்படும் இடம் பனிவயல் என அழைக்கப்படுகிறது.
(iii) உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியின் எல்லைக்கோடே உறை பனிக்கோடு எனப்படுகிறது.
(iv) உயர் அட்சங்களுக்குச் செல்லச் செல்ல உறைபனிக் கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.
(v) பனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் என்று அழைக்கின்றோம்.
(vi) இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் உருவாகின்றன.
9.
எரிமலையின் விளைவுகள்.
அ) நன்மைகள்:
(i) எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது.
(ii) அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
(iii) எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை (Geothreniral energy) பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
(iv) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகில் சிறந்த சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
(v) எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது.
ஆ) தீமைகள்:
(i) எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
(ii) வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
(iii) அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
(iv) எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
10.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards