9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 16/10/2019
Term 3 சூழ்நிலை அறிவியல்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
சாம்பல் நீர் என்றால் என்ன?
2.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
3.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?
4.
கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

5.
உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?
6.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
7.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
8.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
9.
வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
10.
உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.
1.
வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியல் அறைகள், வாறல் இறைப்பான்கள் (shower drains), மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
2.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
3.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம்:
i) நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
ii) போதுமான அளவு பயன்படுத்தக்கூடிய நீரானது நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது.
iii) நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
iv) ஆற்றில் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகின்றது.
4.
இத்தாவரத்தின் பெயர் ஹைட்ரில்லா எனப்படும் வேலம்பாசி ஆகும். இதன் வேர்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. நீரில் அமிழ்ந்திருக்கும் இச்செடியின் இலைகள் குறுகலாகவும் பல பிரிவுகளைக் கிளைத்தும் காணப்படுகின்றன.

5.
நீர் ஊடுருவல், உள்வழிந்தோடல்
6.
மழைநீர் சேகரிப்பு தவிர , நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக , மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனகள் , தொழிற்சாலைச் செயல்முறைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தடி நீரின் அளவினை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் இவை பயன்படுகின்றன.
நீர் மறுசுழற்சி நிலைகள்:
பழைய நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நிக்கப்படுகின்றன,கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.
முதல் நிலை சுத்திகரிப்பு:
முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநிரை தற்காலியமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும் இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு அனுப்பப்படுகின்றது.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு : இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நிக்கப்படுகின்றன.இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் கற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது, (உயிரியல் ஆக்ஸீஜனேற்றம்) கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவதால் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் உயிரியல் திண்மங்களைப் பிரிந்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகிறது.
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:
மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.இந்நிலையில் கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள் வேதியில் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து , விழ்படிவாக்கப்பட்டுசுத்திகரிக்கப்படுகின்றன.
7.
வௌவாலின் தகவமைப்புகள்:
வெளவால் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவைகள் பெரும்பலாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்த்து பாதுகாப்பத்தோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன. வெளவால் மரங்களிலும் பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன. இவைகள் பூச்சிகளை உண்டு ஆவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் உதவி செய்தாலும் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இரவுநேரப் பழக்கம்:
வெளவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன.இப்பழக்கம் அவைகளுக்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும்.ஏனெனில் பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத இறக்கைச் சவ்வானது அதிக வெப்பநிலை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.இதனால் அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.
பறத்தலின் தகவமைப்பு:
வெளவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும், இந்த எமிப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.பறக்கும் போது இயக்கத்தினை கட்டுப்படுத்த இதன் வால் உதவுகின்றது.சிறகடித்துப் பறக்க உதவும் வகைக்கு அவற்றின் சிறகுகளின் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும் அதிக சக்தி வாய்ந்ததகாவும் இருக்கின்றன.ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.
குளிர்கால உறக்கம்: குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து , செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும் , மற்ற குளிர் இரத்த பாலூட்திகழ போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
எதிரொலித்து இடம் கண்டறிதல்:
வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன (மீயொலி அலைகள் ultrasonic sound), இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த அலைகள் அவற்றின் இரையின் மீது (prey) பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினைக் கண்டறிய பயன்படுகிறது.
8.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்:
1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன. எ.கா.எருக்கு
2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
3.மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா.சப்பாத்திக்கள்ளி.
4. ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.
9.
கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது. கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும். கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும். அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்ற கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு, ஒளிச்சேர்க்கை மூலம் தவராங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக ) மாற்றமடைகிறது,இப்பொருளானது தாவரங்களிலிருந்து தவரா உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்கு கடத்தப்படுகின்றது. தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இவ்வாறாக கார்பன் வளிமண்டலத்தை சென்றடைகிறது.எரிமலைச் செயல்கள் படிம ஏரிபொருள்களை எரித்தல், இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் ஆகிய செயல்கள் மூலமும் கார்பன் டை ஆக்சைடு மீண்டும் வளிமண்டலத்தை வந்தடைகின்றது.
10.
ஆவியாதல்: ஆவியாதல் என்பது தண்ணீர் ஆவியாக மாறும் ஒரு வகையாகும்.இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது.பூமியின் மேற்பரப்பு பெருங்கடல்கள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
பதங்கமாதல் : பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒருபொறுக்க திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
நீராவிப்போக்கு (Transpiration) : தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை , பட்டைத்துளை முதலியன ) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகின்றன.
குளிர்வித்தல்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகல்வாகும்.உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாக காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது.இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும் பனிமூட்டங்களும் உருவாகின்றன.
மழைப் பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன.தூறல் மழை , பனி , ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
தரைமேல் வழிந்தோடும் நீர்: மழைப்பொழிவு ஏற்பட்டவுடன் பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள் , ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.
ஊடுருவல்: மழை நீரானது வழிந்தோடியவுடன் சில பகுதி நீரானது மண்ணுள் உட்புகுகின்றது. இது மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
உள் வழிந்தோடல்: மழை நீரின் மற்றோரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards