9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 09/01/2019
9th Science New Syllabus Important Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிளாஸ்மிடு
2.
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?
3.
கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?
4.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
5.
பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
6.
கெப்ளரின் விதிளை வரையறு
7.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
8.
துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?
9.
சுழற்சித் திசைவேகம் வரையறு.
10.
சூரிய மண்டலம் என்றால் என்ன ?
11.
சாம்பல் நீர் என்றால் என்ன?
12.
கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

13.
தகவமைப்பு என்றால் என்ன?
14.
விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக
15.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
16.
வேதிச்சிகிச்சை என்றால் என்ன?
17.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
18.
வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்
19.
கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.
20.
மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
21.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
22.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
23.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
24.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
25.
சங்கிலித் தொடர் என்றால் என்ன? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது?
26.
ஓரு பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
27.
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?
28.
கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?
1.
பாக்டீரியா செல்லில் காணப்படும் சிறிய வட்டமான குரோமோஸோமல் டி.என்.ஏ பிளாஸ்மிடு எனப்படுகிறது. இது சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
2.
குறியீடு # 3, குறியீடு # 6, குறியீடு # 7.
3.
கார்பன் நான்கு இணைத்திறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
4.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
5.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால் தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது.
6.
முதல் விதி - நீள்வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இரண்டாவது விதி - சமபரப்புகளின் விதி
கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சமபரப்புகளைக் கடக்கிறது.
மூன்றாவது விதி - ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
7.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
8.
ஒரு சுற்றுப் பாதையில் சூரியமண்டலத்திலுள்ள கோள்களை சுற்றி வரும் பொருள் துணைக்கோள் எனப்படும்.
துணைக்கோள்கள் இரண்டு வகைப்படும். அவை ,
1. இயற்கையான துணைக்கோள்
2. செயற்கைக்கோள்
9.
கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில், செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கு அதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுழற்றித் திசைவேகம் எனப்படும்.
10.
சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலமாகும். அதில் கோள்கள், வால் விண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும்.
11.
வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியல் அறைகள், வாறல் இறைப்பான்கள் (shower drains), மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
12.
இத்தாவரத்தின் பெயர் ஹைட்ரில்லா எனப்படும் வேலம்பாசி ஆகும். இதன் வேர்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. நீரில் அமிழ்ந்திருக்கும் இச்செடியின் இலைகள் குறுகலாகவும் பல பிரிவுகளைக் கிளைத்தும் காணப்படுகின்றன.

13.
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
14.
| வீரியான் | வீரியாய்டு |
| உயிருள்ள செல்களில் மட்டுமே வளர்ந்து பெருகும் | தாவர செல்களில் காணப்படும். |
| புரத உறையுள்ள வைரஸ் துகளாகும் | வைரஸிலுள்ள புரத உறையற்ற தீங்களிக்கும் ஆர் என் ஏ ஆகும் |
15.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
16.
மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதிச்சிகிச்சை என்கிறோம்.
17.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
18.
| வைரம் | கிராபைட் |
| ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது. |
ஒவ்வொரு கார்பனும் மூன்று |
| கடினமானது, அடர்த்தியானது ஒளிபுகும் தன்மை உடையது. |
மிருதுவானது, தொடுவதற்கு வழவழப்பானது ஒளி புகாத்தன்மை உடையது. |
|
நான்முகி அலகுகள் முப்பரிமாண |
அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன. |
| இது வெப்பம் மற்றும் மின்சாரத்தை கடத்தாது. |
இது வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும். |
19.
பால் உற்பத்தி செய்யும் கால்கடைகளுக்கு சமச்சீரான சரிவிகித உணவு அவசியமாகும்.இத்தீவனங்களில் அனைத்துவித தீவனப் பொருட்களும் அதாவது தாதுக்கள் வைட்டமின்கள், உயிர் எதிர்பொருள்கள் மற்றும் ஹார்மோன்கள் சரிவிகித அளவில் காணப்படுகின்றன.இவை விலங்குகளின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும் உறுதுணையாக உள்ளன.
பல உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு தினமும் கொடுக்க வேண்டிய தீவனத்தை சராசரி விகிதங்களாவன.
i) 15 முதல் 25 கி.கி தவிடு அல்லது சக்கை (உலர் புல் மற்றும் பசுந்தாள் தீவனம்)
ii) 4 முதல் 5 கி.கி தானியக் கலவை.
iii) 100 முதல் 150 லிட்டர் நீர்
20.
| வ.எண் | தமிழ் பெயர் | தாவரவியல் பெயர் | மருந்து | பயன்படும் பகுதிகள் | குணப்படுத்தும் நோய்கள் |
|---|---|---|---|---|---|
| 1 | கற்றாழை | அலோ விரா | ஆந்தராக்குயினோன் | இலைகள் | காயங்களை சரிபடுத்துதல்தோல் நோய், புற்றுநோய். |
| 2. | துளசி | ஆசியம் சாங்டம் | பயன்பாட்டு எண்ணெய் | இலைகள் | சளி, காய்ச்சல் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் |
| 3. | நன்னாரி | ஹெமிடெஸ்மஸ் இன்ட்கஸ் | டெர்பீன் | வேர்கள் | பாக்டீரியத் தோற்று வயிற்றுப்போக்கு. |
| 4. | நிலவேம்பு | ஆன்ட்ரோரி கிராஹிஸ், பேனிகுளேட்டா | டெர்பினாய்டுகள் | அனைத்து பாகங்கள் | டெங்கு காய்ச்சல்,நீரிழவு நோய், சிக்கன குனியா. |
| 5. | வெப்பாலை | ரைட்டியா டிங்டோரியா | பிளவினாய்டுகள் |
மரப்பால் இலைகள் |
படர் தாமரை, வயிற்றுபோக்கு வீக்கம். |
| 6. | சின்கோனா மரம் | சின்கோனா அபிசினாலிஸ் | குயினைன் | மரப்பட்டைகள் | மலேரியா , நிமோனியா காய்ச்சல். |
| 7. | சிவன் அவல் பொறி | ரவுல்பியா செர்பன்ட்னா | ரிசெர்பைன் | வேர்கள் | இரத்த அழுத்தம் குறைய பாம்பின் விஷ முறிவுக்கு |
| 8. | தைலமரம் | யூக்கலிப்ட்ஸ் குளோலஸ் | யூக்கலிப்ட்ஸ் எண்ணெய் | இலைகள் | காய்ச்சல் தலைவலி |
| 9 | பப்பாளி | காரிகா பப்பாயா | பாப்பைன் | இலைகள் , விதைகள் | டெங்கு காய்ச்சல் |
| 10. | நித்திய கல்யாணி | கேத்தராந்தஸ், ரோலியஸ் | அல்கலாய்டுகள் | அணைத்து பகுதிகள் | இரத்தப் புற்றுநோய் (லுயுக்கேமியா ) |
21.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
22.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
23.
நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கிய பங்களிக்கின்றன. இவை கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(i) உயரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிர்கள்:
தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கம் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிர்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இவைகள் உயரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் உயிரி பூச்சிக்கொல்லி) என அழைக்கப்படுகின்றன. பேசிலஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற அழைக்கப்படும் புரதமானது உற்பத்தியாகிறது. இந்தப் புரதமானது பூச்சிகள் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கிறது.
பேசில்லஸ் துரின்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் பூச்சிகளின் இளம் உயிரியானது கொல்லப்படுகின்றது.
(ii) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:
நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றது. பாக்டீரியா, சயனோபாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவைகள் உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும். தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும். வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தப்படக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன. எ.கா. நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் என்ற தனித்து வாழ்பவைகள், கூட்டுயிர் வாழ்க்கைமுறையுடைய ரைசோபியம், ஃப்ரோன்கியா, மைகோரைசா போன்றவைகள்.
தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்
மனிதனின் நலத்திளற்காக பல்வேறு மதிப்புமிக்க பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்வதில் நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அ. நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் தயாரித்தல்
நொதிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசங்கள் (வைன்) சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்) என்ற உயிரியில் நொதியால் தானியங்கள் மற்றும் பழங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
ஆ. காஃபி விதைகள், தேயிலை மற்றும் புகையிலையை பதப்படுத்துதல்
காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச்செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகளை நொதிக்க வைத்து குடிநீர் சாறு தயாரிப்பதற்கு ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
இ. தயிர் தயாரித்தல்
லாக்டோபேசில்லஸ் சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.
ஈ. கரிக அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல்
ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவைகள் ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன. லிப்பேஸ், இன வெர்டேஸ், புரோட்டியேஸ் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற நொதிகள் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.
24.
i) அமிலச்சாயங்கள்: இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும், இவை விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளுக்கு சாயமேற்றுவதற்கு பயன்படுகின்றன. கம்பிளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்.
ii) காரச்சாயங்கள்: இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.
iii) மறைமுக சாயம்: இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே, அவை முதலில் நிறமூன்றிகளுடன் (mordants) செயல்படுத்தப்பட வேண்டும். நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கப்படக்கூடிய பொருளாகும். இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது. அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமூன்றிகளாக பயன்படுகின்றன. எ.கா: அலிசரின்.
iv) நேரடி சாயங்கள்: இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சியை உடையன. இவை துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: காங்கோ சிவப்பு.
v) தொட்டிச்சாயம்: இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பிளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. எ.கா: இண்டிகோ.
25.
சங்கிலித் தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலிச் சேர்மங்களாகவோ இணைவதாகும். சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பனாகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளை சங்கிலி மற்றும் வளையச் சங்கிலிகளை உருவாக்குகின்றது.


26.
பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. எனவே அந்த பயிர் நிலமானது அமிலத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே. காரத்தன்மை வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட், கால்சியம் பாஸ்பேட், யூரியா போன்ற வேதியியல் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நிலமானது நடுநிலையாக இருக்கும். பயிர்கள் நன்றாக வளர்ச்சியடையும்.
27.
PVC நெகிழியை எரிப்பதன் மூலம் டைஆக்சின்கள் உருவாகிறது. இது பாலிவினைல் குளோரைடு நெகிழியுடன் தொடர்புடையது. இந்த பாலிவினைல் குளோரைடுடன் காட்மியம் மற்றும் காரீயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. மேலும் தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. மேலும் இவற்றை எரிப்பதால் ஆக்சின்கள் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்களை வெளியிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
28.
i) நாம் இருக்கும் இந்த உயிர்க்கோளத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனின் சேர்மங்களால் உருவானவை.
ii) நான் பயன்படுத்தும் அனைத்து வகையான படிக எரிபொருளும் ஹைட்ரோகார்பன் என்ற கார்பனின் சேர்மங்களால் உருவாக்கப்பட்டவை.
iii) உயிர்புவி வேதிச்சுழற்சியில் உயிர்க்கோளம், புவிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலத்துடன் கார்பனானது பரிமாறப்படுகிறது.
iv) நைட்ரஜன் மற்றும் நீர் சுழற்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அனைத்து நிலைகளிலும் கார்பன் ஈடுபடுவதும் மேலும் இதில் நான்கு கட்டுறா எலக்ட்ரான்கள் இருப்பதாலும் இவை இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards