9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் யாவை?
2.
உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?
3.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
4.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
5.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
6.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
7.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
8.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
9.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறது?
10.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
11.
மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின - விவாதி.
12.
இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சியினை விளக்குக.
13.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
14.
ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் நிலவுகின்ற வேலைவாய்ப்பை ஒப்பிடுக
15.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு
16.
நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி
17.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
18.
நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?
1.
1. வளர்ந்து குழந்தைகள் கற்க குறுக்கெழுத்து ஒரு சிறந்த முறையாகும். குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு கல்வி குறுக்கெழுத்துப் போட்டியை இணையத்தில் காணலாம்.
2. யூகிக்கும் விளையாட்டை விளையாடு - சாலையில் கேட்கும் சத்தம் எது தொடர்பானது எனக் கேட்டு விளையாடுவது.
3. சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு குழந்தைகளை ஓடவிட்டு யாரவது சிவப்பு விளக்கு எனச் சொல்ல குழந்தைகள் ஓடுவதை நிறுத்த வேண்டும். பச்சை விளக்கு எனச் சொல்லும் வரை அவர்கள் ஓடிக் கூடாது.
2.
1. கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள். புல்டோசர்கள். கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியியங்கி பணபரிமாற்றக் கருவிகள் (ATM) என அனைத்திலும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுகிறது.
2. உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம். வழி மற்றும் திசை) மிகத் துல்லியமாகத் தருவதாகும்.
3. இராணுவ போர்த்தேடல்கள் மற்றும் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது.
4. நம்பிக்கையான சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளது.
5. விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகால தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
6. வானிலை முன்னறிவிப்பு. நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன உலக அமைவிட கண்டறியும் தொகுதிகள் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
3.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
4.
கல்வித்தகுதி:
1. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் - 30%
2. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 10%
3. தொழில் பயிற்சி பெற்றவர்கள் - 15%
4. பட்டப் படிப்பு படித்தவர்கள் - 11%
5. தொழிற்கல்வி முடித்தவர்கள் - 12%
6. முதுகலை பட்டதாரிகள் - 11%
தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
5.
1. தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
2. நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கவல்லது.
3. நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவும் மழைப் பொழிவின் போது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்தால் துன்பமில்லை.
4. மாறாக நிலத்தடி நீரை எடுக்கும் அளவு கூடக்கூட நீர்மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
5. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
6. நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
7. தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன.
8. 136 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீரின் அளவு குன்றாமலும் தரம் குறையாமலும் உள்ளன.
9. தமிழக வேளாண்மை நிலத்தடி நீரை நம்பியுள்ளதால், அதன் பயன்பாட்டைச் சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
6.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
7.
1. ஊராட்சி மற்றும் நகராட்சிகள் 'உள்ளாட்சி அமைப்பு' நிறுவனங்களாகச் செயல்படும்.
2. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் மற்றும் பகுதிக் குழுக்கள் இயங்குகின்றன.
3. வட்டாரம். மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
4. சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
5. நேரடித் தேர்தவின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுதல்.
6. பட்டியல் இனத்தவர் மற்றும் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தல்,
7. பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள் தொகை விகிதாச்சார
8. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
9. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம்.
10. ஆட்சி கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
8.
ஒற்றையாட்சி முறை :
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.
1. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
3. ஒற்றை ஆட்சிமுறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
4. ஒற்றை ஆட்சிமுறை குறைந்த செலவுடையது
5. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்
6. ஒற்றுமை சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
9.
தேசிய மனித உரிமைகள் ஆணையம்:
1. தேசிய மணித உரிமைகள் ஆணையம்: 1993 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
2. இது ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
3. ஒரு தனிமனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.
ஆணையத்தின் பணிகள்:
1. மனித உரிமை மீறம் அல்லது அத்தகைய மீறல் குறித்து அரசு ஊழியர் அலட்சியம் காட்டுதல் ஆகியவை மீது விசாரணை நடத்துதல்.
2. மனித உரிமை மீறல் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்,
3. மனித உரிமைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல்,
4. சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமைக் கல்வியைப் பரப்புதல்.
5. மனித உரிமைத்துறையில் பணியாற்றும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் முயற்சிகளை ஊக்குவித்தல்.
10.
சூழ்நிலை மண்டலத்தின் மூன்று கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள்
2. உயிருள்ள கூறுகள்
3. ஆற்றல் கூறுகள்
உயிரற்ற கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள் சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற கரிம, இயற்பியல், இரசாயனக் காரணிகளை உள்ளடக்கியதாகும்.
2. உதாரணமாக நிலம், காற்று. நீர். சுண்ணாம்பு. இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள்:
1. உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினாங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
2. இவை உற்பத்தியாளர். நுகர்வோர் மற்றும் சிதைப்போர் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. மேலும் நுகர்வோர். தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் மற்றும் தாவர உண்ணியையும். ஊன் உண்ணியையும் உணவாகக் கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் கூறுகள்:
1. உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
2. உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக் கூடியதாக உள்ளது.
3. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது.
11.
மறுமலர்ச்சி:
(i) மறுமலர்ச்சி என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Renaissance என்பது மறுபிறப்பு எனப்பொருள்படும். இத்தாலியச் சொல்லான Renascita என்பதிலிருந்து தோன்றியது.
(ii) மறுமலர்ச்சி என்று இது அழைக்கப்படுவதற்குக் காரணம், கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தில் ஒரு மறுபிறப்பு அல்லது புத்தாக்கம் நிலவியதாகும்.
மதச் சீர்த்திருத்தம் :
(i) இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது.
ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக்
கொண்டிருந்தது.
(ii) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர். அவருடைய அப்பதவி பபாசி (Papacy) என்று அறியப்பட்டிருந்தது. அவர் ஓர் இளவரசரைப் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
(iii) அவருடைய அதிகாரிகளுள் பலர் ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்; திருச்சபையின் பதவிகள் ஒவ்வொன்றும் விலைகூறி விற்கப்பட்டன.
(iv) அதோடு மட்டுமின்றி மக்கள் தங்களின் பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவமன்னிப்புக் கோருவார்களெனில் அவர்கள் பாவச்சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்றும் மக்களை நம்பச் செய்திருந்தது.
(v) மதச்சீர்திருத்தக்காரர்கள், திருச்சபையின் ஊழல் மிக்க நடைமுறைகளைக் கடுமையாகக் கண்டித்து பிரசுரங்களை விநியோகித்தனர்; புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
புவியியல் சார் கண்டுபிடிப்புகள்:
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப் பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
(ii) பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின் 'ஜியாகரபி' (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி, பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது.
12.
வணிகம்:
(i) மிகப்பெரும் உற்பத்தித் துறையானது முக்கியமாக சொந்தப் பயன்பாட்டிற்காக அல்லாமல் பரிமாற்றத்திற்காகவே பொருட்களை உற்பத்தி செய்தது.
(ii) பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்காக இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. செலாவணி என்பது பண்டமாற்றமாகவே இருந்தது.
வணிக மையங்கள் :
(i) நகரங்கள் எப்போதும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்டன. இந்நகரங்கள் பல சாலைகளால் இணைக்கப்பட்டிருந்ததால் வணிகத்தில் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
(ii) இத்தரைவழி வணிகத்தோடு நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப்பகுதி வணிகத்தில் சிறு கப்பல்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன.
கடல் வணிகம்:
(i) நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் (சூரத், மசூலிபட்டிணம், கோழிக்கோடு) கடல்சார் வணிக முனையங்களாகவும் செயல்பட்டன.
(ii) இந்தியப்பெருங்கடலின் குறுக்காக, கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை விரிந்து பரந்திருந்த கடல் வணிகம் நூற்றாண்டுகளுக்கு செழித்தோங்கியது.
(iii) பதினேழாம் நூற்றாண்டில் குஜராத்தில் சூரத், கோல்கொண்டா, ஆந்திராவில் மசூலிபட்டினம் வங்காளத்தில் சிட்டகாங், சோழமண்டலக் கடற்கரையில் புலிக்காட் (பழவேற்காடு), நாகப்பட்டினம். கேரளக் கடற்கரையில் கோழிக்கோடு ஆகியன ஆசிய வணிகத்தின் முக்கியத் துறைமுகங்களாகும்.
ஏற்றுமதி:
(i) துணி, மிளகு, விலைமதிப்புமிக்க நவரத்தினக்கற்கள் சற்றே விலைமதிப்புக் குறைந்த நவரத்தினக் கற்கள்-முக்கியமாக வைரம் அதுவும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய வைரம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ததில் இந்தியாவும் ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக இருந்தது.
ii) இரும்பையும் எஃகையும் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியா முக்கியமான ஒன்றாகும்.
இறக்குமதி:
(i) சீனாவிலிருந்து பட்டு, சீன செராமிக் ஓடுகள், தங்கம்,நறுமணப் பொருட்கள், நறுமண மரங்கள். கற்பூரம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன. பட்டு, மருந்து வகைகள், சாய மரங்கள், சர்க்கரை ஆகியன பாரசீகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கியப்பொருட்களாகும். தங்கம், தந்தம் ஆகியவை ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
(ii) ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் இந்திய வணிகர்களோடு தங்களுக்குத் தேவையானப் பொருட்களைப் பெற்றுத்தரவும் தாங்கள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை விற்றுத்தரவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
(iii) ஐரோப்பிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்திய வணிகர்கள் பயனடைந்தனர்.
13.
சோகுனேட்களின் ஆட்சி உருவாதல் :
(i) ஜப்பானில் தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ என்பவர் வெற்றி பெற்றார்.
(ii) கி.பி. (பொ.ஆ.பி) 1192 இல் பேரரசர் இவருக்கு செய் - ய் -தாய் - சோகன் என்னும் பட்டத்தைச் சூட்டினார்.
(iii) இப்பட்டம் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தும் உரிமையைக் கொண்டிருந்தது.
(iv) காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரானார். இவ்வாறு சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
எழுச்சி:
(i) யோரிடோமா தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினர். இதனால் முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
(ii) வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது. பேரரசர் ஓர் அலங்காரத் தலைமையாக மட்டுமே இருந்தார்.
(iii) நிலப்பிரபுத்துவ ராணுவத்தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டது. மங்கோலியரை சோகாேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
(iv) இருந்தபோதிலும் இவ்வம்சத்தின் சரிவு தொடங்கியது. கி.பி. (பொ.ஆ) 1338-இல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது.
(v) சோகுாேட்டுகளில் வேறொரு பிரிவைச் சேர்ந்த 'அஷிக்காகா' சோகுனேட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர்களின் ஆட்சி 235 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
(vi) இறுதியில் மூவர் ஜப்பானை நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர். அவர்கள் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் அல்லது ஹிடயோஷி எனப்பட்ட விவசாயி, தொகுகவா இய்யாசு என்ற அக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபு ஆகியோராவர்.
(vii) 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
14.
| ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள் | ஒழுங்கமைக்கப்படாத துறைகள் |
| பதிவு செய்யப்பட்டதும். அரசாங்க விதி களையும் ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவதும். ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை ஒழுங்கமைக்கப்பட்ட துறை எனப்படும். |
ஒழுங்கமைக்கப்படாத துறைகள் அரசாங்கத்தில் பதிவு பெற்றவைகள் அல்ல. மேலும் இவற்றிற்கு விதிகளும் ஒழுங்கு முறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. |
| வங்கிகள், ரயில்வே. காப்பீடு, உற்பத்தித் தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படும் துறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளாகும். |
வீட்டு உபயோகப் பொருள்கள் சிறு மற்றும் குடிசைத்தொழில்கள், தெருக்களில் விற்பனை செய்வோர். பழுதுகள் சரி பார்ப்போர் போன்ற சிறிய அளவிலான தொழில் செய்யும் மக்களை இத்துறை உள்ளடக்கியுள்ளது. |
| இந்தத் துறைகள், சட்டத்திலுள்ள குறிப்பிட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் படி செயல்படுகின்றன. |
இதற்கு விதிகளும், ஒழுங்குமுறைகளும் இருந்தாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. |
| ஊழியர்களுக்கு பணிப்பாதுகாப்பு உண்டு. | வேலை உத்தரவாதம் கிடையாது. |
| நல்ல ஊதியம், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம். ஊதியத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவ உதவித்தொகை மற்றும் காப்பீடு போன்றவை வழங்கப்படும். |
குறைந்த கூலி, பல நேரங்களில் தொடர்ச்சியாக வேலையும் இருக்காது. பெரும்பாலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு. மருத்துவ விடுப்பு போன்றவை கிடையாது. |
15.
அ) ஹரோகிளிபிக்ஸ்:
(i) எகிப்தியர்கள் தமது எழுத்து முறைக்காகப் புகழ்பெற்றவர்கள். இவர்களது எழுத்து ஹரோகிளிபிக் என்று அழைக்கப்படுகிறது.
(ii) இந்த எழுத்து வகை நினைவுச்சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது.
(iii) பொதுவான தகவல் தொடர்புக்கு ஹெரிடிக் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும்.
(iv) இது சுமார் கி.மு.(பொ.ஆ.மு) 3000ல் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும் பிரதிகளும் எழுதப்பட்டன.
ஆ) க்யூனிபார்ம்:
(i) சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது.
(ii)எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால், இப்பெயர் இடப்பட்டது.
(iii) கி.மு.(பொ.ஆ.மு) காலகட்டத்தில் உருவான இம்முறை, உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும்.
(iv) வணிகப் பரிமாற்றங்களுக்கும்,கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கும் இந்த எழுத்து முறையைச் சுமேரியர்கள் பயன்படுத்தினார்கள்.
(v) இந்த எழுத்துகள் எழுதப்பட்ட சுட்ட களிமன் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
16.
நிலத்தடி நீரின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்:
(i)டெர்ரா ரோஸா (இத்தாலிய மொழியில் செம்மண்) : சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களி உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங் படியவைக்கப்படுவதால் இந்நிலத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இம்மண் சிகப்பு நிறம காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு காரணமாகும்.
(ii)லேப்பீஸ் : கரடு முரடாக உள்ள கண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடு போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன. இக்குடைவுகளே லேப்பீஸ்கள் என் அழைக்கப்படுகின்றன.
iii) உறிஞ்சு துளைகள்: சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்க உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் வரை காணப்படு
iv) குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள் : குகைகளும், அடிநிலக் குகைகளும் சுண்ணாம் பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத் தோற்றங்களாகும். கரியமில அமிலம் கண்ணாட பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவை உருவத்திலு அளவிலும் வேறுபட்டுக் காணப்படும். அடிநிலைக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படு (உதாரணம்) மேற்கு பீஹாரிலுள்ள குப்ததாம்.
v) குகைகளிலும், அடிநிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன. ட்ரேவர்டைன், டூஃபா மற்றும் சொட்டுப்படிவுக ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.
vi) குகைகள், யுவாலாக்கள், போலின்கள், போல்ஜேக்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உலகின் பி பகுதிகளில் காணப்படும் சுண்ணாம்பு நிலப்பிரதேச நிலத்தோற்றங்கள் ஆகும்.
17.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிருவாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
18.
1. நிலநடுக்கத்தின்போது பொருள்கள் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. கண்ணடி ஜன்னல், கதவுகள், மதில், மின்விளக்குகள் நம் மேலே விழ வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நாம் மேஜைக்கு அடியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
2. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அதிர்ச்சியால் நாம் உருண்டோடிய இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மேஜையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
3. பொருட்கள் தலையில் விழுந்து தலைக்காயம் ஏற்படாமல் இருக்க தலையைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards