By QB365 on 26 Feb, 2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 9th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
9th Standard
சமூக அறிவியல்
Section - I
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
சர் இராபர்ட் புரூஸ் ஃஸ்ட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _________ ஆகும்
ஜாடி
மதகுரு அல்லது அரசன்
பறவை
நடனமாடும் பெண்
மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.
புத்தர்
மகாவீரர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
மார்க்கோ போலோ
ஃபாஹியான்
மெகஸ்தனிஸ்
செல்யூகஸ்
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.
கருவம்
வெளிக்கரு
கவசம்
மேலோடு
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .
புவிமேலோடு
கவசம்
கருவம்
மேற்கண்ட எதுவுமில்லை
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _____________ நோக்கி நகர்ந்தது.
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்
காற்றடி வண்டல்
பர்கான்
ஹமாடா
மணல் சிற்றலைகள்
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன
காற்று
பனியாறு
ஆறு
நிலத்தடி நீர்
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு _________
12°C
13°C
14°C
15°C
நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்_________.
கூடுகிறது
மாற்றம் ஏதுமில்லை
குறைகிறது
நிலையாக இருக்கிறது
_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
மேகங்கள்
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை
சிறுகுழு ஆட்சி
நாடாளுமன்றம்
மக்களாட்சி
இவற்றில் எதுவுமில்லை
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
வாக்குரிமையின் பொருள்
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
Section - II
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
Section - III
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
புவி அமைப்பை விவரி
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக
மேகங்களின் வகைகளை விவரி.
இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
Section - IV
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
Section - V
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக?
வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக