9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 22/12/2018
Term 2 FA(B) Model Question
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?
2.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
3.
கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
4.
ஆச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.
5.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
6.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
7.
சீனப் பெருஞ்சுவர்.
8.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
9.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
10.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
11.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
12.
அடிப்படை உரிமைகள் யாவை?
13.
விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
14.
வெப்பமண்டல தாவரங்கள் - பாலைவனத்தாவரங்கள்
15.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
16.
உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது
17.
இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
18.
வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
19.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி.
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி, ஆனால் (R) தவறு.
(A) தவறு, ஆனால் (R) சரி.
20.
கடலில் காணப்படும் 'பிளாங்டனின்' அளவைத் தீர்மானிக்கும் காரணி.
1. நீரின் ஆழம்
2. கடல் நீரோட்டம்
3. வெப்பநிலை மற்றும் விவரப்பியம்
4. பகல் மற்றும் இரவின் நீளம்
1 மற்றும் 2 சரி
1,2 மற்றும் 3 சரி
1,3 மற்றும் 4 சரி
அனைத்தும் சரி
21.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு
சூழ்நிலை மண்டலம்
பல்லுயிர்த் தொகுதி
சுற்றுச்சூழல்
இவற்றில் ஏதுவும் இல்லை
22.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________
அமெரிக்க டாலர்
பவுண்டு
23.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
மாலுமி ஹென்றி
லோபோ கோன்ஸால்வ்ஸ்
பார்த்தலோமியோ டயஸ்
கொலம்பஸ்
24.
ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.
நாகப்பட்டினம்
அஜந்தா
கோழிக்கோடு
ஜஹோல்
25.
________ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
ஷின்டோ
கன்பியூசியானிசம்
தாவோயிசம்
அனிமிசம்
26.
_________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அக்ரோபொலிஸ்
ஸ்பார்ட்டா
ஏதென்ஸ்
ரோம்
27.
அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசர்கள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
28.
(i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
(ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
(iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
(iv) பெளத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iii) சரி
ஈ) (iv) சரி
29.
கண்டச்சரிவு
30.
குரோசியோ நீரோட்டம்
31.
அதிக மழை
32.
கிரேட் பேரியர் ரீப்
33.
ரியால்
34.
உப்பு
35.
நாணய சுழற்சி
36.
அமெரிக்க டாலர்
1.
1. வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இல்லை.
2. சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி குறைவாகத்தான் இருந்தன.
3. இதனால் குறைந்த மதிப்புக் கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டன.
4. இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
2.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
3.
(i) புவியின் சுழற்சி
(ii) வீசும் காற்று
(iii) கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியதில் உள்ள வேறுபாடு
4.
(i) அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நவீனமயமாதலை வேகப்படுத்தியது. ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் (கி.பி. (பொ. ஆ) 1394 - 1468) என்பவர் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ii) ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறுபிரதிகளின் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது; மேலும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் அவை பரவுவதற்கும் வழி வகுத்தது.
5.
1. புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
2. அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
3. கான்ஸ்டான்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
6.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
7.
(i)கி மு. (பொ.ஆ.மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன.
(ii) சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது.
(iii)இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
8.
1. பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
2. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
4. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
5. இது 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடித்த பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
6. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
9.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
10.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
11.
1. குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்.
2. குழந்தைகள் கடத்தப்படுதல், விற்பனை செய்தல் நடைபெற ஏழ்மை, பாவினப்பாகுபாடு மற்றும் சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகும்.
3. மேலும் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக கடத்தல் அல்லது விற்பனை செய்யப்படுகின்றனர்.
4. எனவே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது.
12.
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்க்கான உரிமை
5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6. அரசமைப்புச் சட்ட வழி தேர்வுகளுக்கான உரிமை
13.
(i) ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டது.
2. சங்கம வம்சம், சாளுவ வம்சம் மற்றும் துளுவ வம்சம், இவ்வரசை ஆட்சி புரிந்தனர்
14.
| வெப்பமண்டலத் தாவரங்கள் | பாலைவனத் தாவரங்கள் |
| வெப்பண்டலக் காடுகள் பல்வேறு விதமான உயிரினங்களின் வாழ்விடமாகவும், முதன்மைத் தொழில் நடைபெறும் இடமாகவும் உள்ளது. | பாலைவனப் பகுதிகளில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 25 செ.மீட்டருக்கும் குறைவாக உள்ளது. |
| இப்பகுதிகள் மிக அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. |
மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் வறண்ட காலநிலையின் காரணமாக இங்கு தாவரங்கள் அரிதாக வளர்கின்றன. |
| இங்கு குடியிருப்புகள் சிதறிக் காணப்படுகின்றன. | இங்கு வாழும் மக்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயாவர். |
| உணவு சேகரித்தல், மீன் பிடித்தல். மரம் வெட்டுதல். இடமாற்று விவசாயம் போன்றவை இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகும். |
இங்கு வாழும் மக்கள் உணவு சேகரித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். |
| ரப்பர், மூங்கில்,எபோனி போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மரங்களாகும். |
வறட்சியைத் தாங்கக்கூடிய முட்புதர்கள், குறுங் காடுகள் மற்றும் பனை போன்ற தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. |
15.
| கடலடிச் சமவெளி | கடலடிப் பள்ளம் |
| ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும். | பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடலடிப் பள்ளம் அல்லது அகழி ஆகும். |
| இச்சமவெளிகள் ஆறுகளினால் கொண்டு வரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது. |
படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன. |
16.
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்றச் சூழ்நிலைக் கொண்டுள்ளது.
17.
வெப்பமடைதலும், குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதிகளில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது. உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
18.
வட அரைக்கோளத்தில் நில பகுதிகள் அதிகம் காணப்படுகிறது. எனவே அப்பகுதி நில அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளப் பகுதிகளில் நீரின் அளவு அதிகம் காணப்படுகிறது. அப்பகுதியில் அண்டார்டிகா கண்டம் பணியாலானது. அதனால் அப்பகுதி நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
19.
(a)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
20.
(b)
1,2 மற்றும் 3 சரி
21.
(a)
சூழ்நிலை மண்டலம்
22.
(a)
அமெரிக்க டாலர்
23.
(b)
லோபோ கோன்ஸால்வ்ஸ்
24.
(d)
ஜஹோல்
25.
(a)
ஷின்டோ
26.
(c)
ஏதென்ஸ்
27.
அ)விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
28.
அ) (i) சரி
29.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
30.
ஜப்பான் கடற்கரையோரம்
31.
கடலில் உவர்ப்பியம் குறைவு
32.
ஆஸ்திரேலியா
33.
சவுதி அரேபியா
34.
பணத்தின் மாற்று
35.
85%
36.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards