11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 12/09/2019
சுற்றுச்சூழல் வேதியியல்
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.
காரணம் (R): அடிவெளிமண்டமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை
i
ii
iii
iv
2.
கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.
i
ii
iii
iv
3.
கூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.
காரணம்(R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.
i
ii
iii
iv
4.
உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது
அதிகளவில் மாசுபட்டுள்ளது
குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்
அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது
குறைந்த COD
5.
CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது , ஏனெனில்
உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.
திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது
ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.
இரத்தத்தை உலரவைக்கிறது
6.
ஓசோன் படல சிதைவு உருவாக்குவது
காட்டுத்தீ
தூர்ந்து போதல்
உயிர் பெருக்கம்
உலக வெப்பமயமாதல்
7.
மழைநீரின் pH மதிப்பு
6.5
7.5
5.6
4.6
8.
நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக __________ ஐ கொண்டுள்ளது.
ஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்
ஓசோன், PAN மற்றும் NO2
PAN, புகை மற்றும் SO2
ஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2
9.
போபால் வாயு துயரம் என்பது ________ இன் விளைவு ஆகும்.
வெப்ப மாசுபாடு
காற்று மாசுபாடு
கதிர்வீச்சு மாசுபாடு
நில மாசுபாடு
10.
பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
காட்டுத் தீ
வெள்ளம்
அமில மழை
பசுமைக்குடில் விளைவு
11.
மாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை?
12.
அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.
13.
CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.
14.
துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.
15.
பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.
16.
பசுமை வேதியியல் என்றால் என்ன?
17.
மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?
18.
எது பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது? ஏன்?
19.
பனிப்புகை வரையறு.
20.
புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?
1.
(d)
iv
2.
(a)
i
3.
(d)
iv
4.
(c)
அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது
5.
(c)
ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.
6.
(c)
உயிர் பெருக்கம்
7.
(c)
5.6
8.
(b)
ஓசோன், PAN மற்றும் NO2
9.
(b)
காற்று மாசுபாடு
10.
(a)
காட்டுத் தீ
11.
1.கழிவு மேலாண்மை : கழிவுகளை முறையாக அகற்றுவதன் மூலம் சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும்.
2.மறு சுழற்சி: அகற்றப்பட்ட கழிவு பொருள்களில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இது, நில ஆக்கிரமைப்பைக் குறைக்கிறது. மேலும் தேவையில்லாத பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றுகிறது.
3.சில குறிப்பிட்ட தொழில் முறைகளில் பயன்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட கரைப்பான்களை நீக்கி குறைந்த நச்சுத்தன்மை கொண்ட கரைப்பான்களை பதிலீடு செய்தல்.
4.குறைந்தளவு சல்பரை கொண்டுள்ள எரிபொருட்களை பயன்படுத்துதல்.
5.அதிக மரங்களை வளர்த்தல்.
6. வாகனப்புகை வெளியேற்றத்தை கட்டிப்படுத்த தேவயான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
12.
1.வளிமண்டலத்தில் உள்ள CO2 மழை நீரில் கரைந்திருப்பின் காரணத்தால் சாதாரணமாக மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக உள்ளது.
2.மழை நீரின் pH மதிப்பு 5.6 க்கு கீழ் குறையும்போது, அது அமில மழை என்றழைக்கப்படுகிறது.
3.காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள், மேகங்களில் உலா நீர்த்திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அறியப்படுகிறது.
அமில மழையின் தீய விளைவுகள்:
1.அமில மழையானது, கட்டிடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருளின்மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது. பளிங்குக்கற்களின் மீது நிகழும் இந்தத்தாக்குதல் "கல்குஷ்டம்" எனப் பெயரிடப்படுகிறது.
\(CaCO_{ 3 }+{ H }_{ 2 }{ { { SO }_{ 4 } } }\longrightarrow CaSO_{ 4 }+{ H }_{ 2 }O+{ CO }_{ 2 }\uparrow \)
2.அமில மழையானது,நீர்ச் சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்குகளின் வாழ்க்கையை பாதிக்கிறது.
3.தாவர வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அமில மழை கரைத்து நீக்குவதன் மூலம் இது விவசாயம், மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு கேடு விளைவிக்கின்றன.
4.இது தண்ணீர் குழாய்களை அரித்து, இரும்பு, லெட் மற்றும் காப்பர் போன்ற கன உலோகங்களை குடிநீரில் கரைகிறது. இவை நச்சுவிளைவுகளை உருவாக்கும் தன்மை கொண்டவை.
5.இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளில் சுவாசக் கோளாறுகளை உருவாக்குகிறது.
13.
மீத்தேன் மற்றும் ஈத்தேனில் குளோரோபுளூரோ பெறுதிகளானவை ஃபிரியான்கள் எனும் வணிகப் பெயரில் குறிக்கப்படுகின்றன.
இந்த CFC சேர்மங்கள் நிலைத்தன்மை அகற்றவை,அரிக்கும் தன்மையற்றவை, எளிதில் தீப்பற்றாதவை மற்றும் எளிதில் திரவமாகும் வாயுக்கள்.
மேலும் இவை குளிர்ப்பதனப் பெட்டிகள், குளூரூட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் நுரைப்புகள் தயாரித்தலில் பயன்படுத்தப்படுகின்றன.
உயிர்வளி மண்டல அடுக்குகளில் பயணிக்கும் சூப்பர்சானிக் ஜெட்விமானங்கள் மற்றும் ஜம்போஜெட்களிலிருந்து CFC வாயுக்கள் வெளிப்படுகின்றன.
இவை அடிவெளிப்பகுதியிலிருந்து மெதுவாக அடுக்கு மண்டலத்திற்கு செல்கின்றன.
அவைகள் 50 முதல் 100 ஆண்டுகள் வரை மிக நீண்ட களத்திற்கு நிலைத்து உள்ளன.
uv கதீரவேசின் முன்னிலையில் CFC வாயுக்கள் தனி உறுப்புகளாக சிதைக்கின்றன.
வினைச் சங்கிலியில் குளோரின் தனி உறுப்புகள் மீண்டும் உருவாகின்றன.குளோரின் தனி உறுப்புகளின் இந்தத்தொடர் தாக்குதலின் காரணமாக ஓசோன் படலம் மெலிந்து, ஓசோன் துளைகள் உருவாகின்றன.
14.
துகள் மாசுபடுத்திகள் என்பவை, சிறிய திண்ம துகள்கள் மற்றும் காற்றில் நிலைநிறுத்தப்பட்ட திரவ துளிகள் ஆகும்.
(i) புகை: இது,திண்ம துகள்கள் அல்லது கரிம பொருட்களை எரிப்பதால் உருவாகும் திண்ம மற்றும் நீர்ம துகள்களின் கலவையை கொண்டுள்ளது.
(ii) தூசி: இது திண்ம பொருட்களை இடித்தல் மற்றும் அரைக்கும் பொது உருவாகும் நுண்ணிய திண்ம துகள்களால் ஆனது.
(iii) மூடுபனி:காற்றில் தெறிக்கப்படும் திரவ துளிகள் மற்றும் காற்றில் உள்ள குளிர்ந்த ஆவிநிலை மூலக்கூறுகளால் மூடுபனி உருவாகிறது.
15.
(i) பூமியின் வளிமண்டலமானது, சூரியனிலிருந்து வெளிப்படும் கட்புலனாகும் ஒளியின் பெரும்பகுதியை அனுமதித்து பூமியின் மேற்பரப்பை அடையச் செய்கிறது.
(ii) பூமியின் மேற்பரப்பு சூரிய ஒளியினால் வெப்பமடைகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதியை பூமி அதிக அலை நீளம் கொண்ட ஒளியாக வளிமண்டலத்தை நோக்கி திருப்பி அனுப்புகிறது.
(iii) வெப்பத்தின் ஒரு பகுதியானது வளிமண்டலத்தில் உள்ள CH4, CO2, CFC மற்றும் நீராவியால் சிறைப்பிடிக்கப்படுகிறது.
(iv) அவைகள் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சுகின்றன. இதனால் பூமியினால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் பெரும்பகுதியை வெளியே செல்லாமல் தடுக்கின்றன.
(v) உறிஞ்சப்பட்ட கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் மேற்பரப்பின் மீதே திருப்பி செலுத்தப்படுகிறது.
(vi) எனவே, பூமியின் மேற்பரப்பு பசுமைக்குடில் விளைவு எனும் நிகழ்வால் வெப்பமடைகிறது.
16.
பசுமை வேதியல் என்பது, அபாயகரமான பொருள்களின் பயன்பாடு அல்லது நீக்கும் உருவாக்கத்தை குறைக்கும் அல்லது நீக்கும் வகையில் விளைபொருள்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றை திட்டமிடுதலை ஊக்குவிக்கும் தத்துவம் ஆகும்.
17.
மக்கும் மாசுபடுத்திகள்:
இயற்கையான உயிரியல் செயல் முறைகளால், எளிதாக சிதைவடையக் கூடிய மாசுபடுத்திகள்.
மக்காத மாசுபடுத்திகள்:
இயற்கையான உயிரியல் செயல் முறைகளால், எளிதாக சிதைவடையாத மாசுபடுத்திகள்.
18.
ஓசோன் படலம் பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது.
இது தீங்கு விளைவிக்கும் UV கதீர்வீச்சிலிருந்து பூமியை காக்கும் குடையாக அல்லது கேடயமாக செயல்படுகிறது..
ஓசோன் போர்வையானது, தோல் புற்றுநோய் உருவாதல் போன்ற தீய விளைவுகளிலிருந்து நம்மை பாதுக்காக்கிறது.
19.
1. பனிப்புகை என்பது புகை மற்றும் மூடுபனி ஆகியவற்றின் சேர்க்கை ஆகும்.
2. இது காற்றில் விரவியுள்ள திரவதுளிகளை உருவாக்குகிறது.
20.
பூமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால், பூமியின் சராசரி புறப்பரப்பு வெப்பநிலை -18°C (0°F) ஆக்கத்தான் இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards