11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 03/01/2019
XI Full Test Model Question
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இறுதிநிலை வருவாயை கணக்கிடும் சூத்திரம் _______
\(\eta d={-p\over x}{dx\over dp}\)
xn என்பது \({x^{n+1}\over n+1}+c\)
\({dq \over dp}\)
Qd=Qs
2.
"மொத்த நாடுகள் மகிழ்ச்சிக் குறியீடு"(GNHI)என்ற தொடரை உருவாக்கியவர்________.
பூடானின் முதல் மன்னர்-மார்ஷல்
பூடானின் இரண்டாவது மன்னர் -J.M.கீன்ஸ்
பூடானின் மூன்றாவது மன்னர் -ஷாஜஹான்
பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக்
3.
மேல்நிலையில் அமைந்துள்ள சமநோக்கு வளைகோடு ______பெறும்.
அதிக அளவு மனநிறைவை
அதிக செலவை
குறைந்த செலவை
கரைந்த அளவு மனநிறைவை
4.
_____ இந்தியாவின் முதுகெலும்பு ஆகும்.
தொழிற்துறை
வேளாண்மை
சுரங்கம்
வாணிபம்
5.
நுண்ணியல் என்பது _________ ஆகும்.
சிறிய
பெரிய
ஒட்டுமொத்த
அனைத்தும்
6.
உற்பத்திப் பாதையில் ________ என்பது மனித இடுபொருள் ஆகும்.
உழைப்பு
வேலை பகுப்புமுறை
தொழில்முனைவோர்
புத்தாக்கம் புனைவோர்
7.
ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான். ரே மற்றும் ___________ஐச் சாரும்.
போம் போகுவர்க்
பென்ஹாம்
வாக்கர்
நட் விக்செல்
8.
நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ________ அறிமுகப்படுத்தினார்.
திருமதி.ஜான் ராபின்சன்
E.H.சேம்பர்ஸின்
மார்ஷல்
ஆடம் ஸ்மித்
9.
பூ கோள ரீதியாக தமிழ்நாடு _________________ வது பெரிய மாநிலமாகும்.
பத்தாவது
பதினொன்னாவது
முதல்
ஆறாவது
10.
x n என்பதன் வகையீட்டுக்கெழு _____________ ஆகும்.
nx(n-1)
nx (n+1)
பூஜ்யம்
ஒன்று
11.
முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
1914
1814
1941
1841
12.
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
மூலதனம்
உழைப்பாளி
நிலம்
அமைப்பு
13.
கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?
மதுரை
திருச்சி
தூத்துக்குடி
கோயம்புத்தூர்
14.
மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
திறந்த
மறைமுக
பருவ கால
ஊரக
15.
GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு_______ ஆகும். (ஜீலை 1, 2017 –நாளின்படி)
18%
24%
28%
32%
16.
17.
உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது.
உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு
18.
19.
சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.
சம நோக்கு வளைகோடுகள்
இயல்பெண் ஆய்வு
தேவை விதி
அளிப்பு விதி
20.
பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
இராபின்ஸ்
ராபர்ட்சன்
21.
தேவை நெகிழ்ச்சியில் வகைகள் யாவை?
22.
சம அளவு உற்பத்தி என்றால் என்ன?
23.
ரிகார்டோ வாரக் கோட்பாட்டின் வரைபடம் வரைக.
24.
சில்லோர் முற்றுரிமை என்றால் என்ன?
25.
பண்டங்கள் மற்றும் பணிகள் மீதான வரி எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
26.
MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?
27.
மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.
28.
சாதகமான பாலின விகிதம் கொண்ட இரண்டு மாவட்டங்களைக் கூறுக. விகிதங்களையும் குறிப்பிடுக
29.
இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.
30.
பொருளியல் என்றால் என்ன?
31.
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.
32.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
33.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
34.
முற்றுரிமையின் போட்டியில் வீண் செலவுகள் யாவை?
35.
சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?
36.
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].
37.
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
38.
39.
பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?
40.
ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.
41.
காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.
42.
43.
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
44.
பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு
45.
பொருளியல் கணித முறையில் பயன்படுத்தும் பல்வேறுவகையான சூத்திரம் யாவை?
46.
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.
47.
மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.
48.
மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.
49.
தமிழ்நாட்டின் தொலைத்தொடர்பு போக்குவரத்தினைப் பற்றி விவரி.
50.
சிறிய அளவிலான தொழிற்சாலைகள் பற்றி எழுதுக.
51.
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை சுருக்கமாக கூறுக
52.
53.
புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக
54.
வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.
1.
(a)
\(\eta d={-p\over x}{dx\over dp}\)
2.
(d)
பூடானின் நான்காவது மன்னர்-ஜிக்மே சிங்யே-வாங்கக்
3.
(a)
அதிக அளவு மனநிறைவை
4.
(b)
வேளாண்மை
5.
(a)
சிறிய
6.
(a)
உழைப்பு
7.
(a)
போம் போகுவர்க்
8.
(a)
திருமதி.ஜான் ராபின்சன்
9.
(b)
பதினொன்னாவது
10.
(a)
nx(n-1)
11.
(a)
1914
12.
(c)
நிலம்
13.
(c)
தூத்துக்குடி
14.
(b)
மறைமுக
15.
(c)
28%
16.
(b)
17.
(c)
உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு
18.
(c)
19.
(a)
சம நோக்கு வளைகோடுகள்
20.
(c)
இராபின்ஸ்
21.

22.
1. ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்திக் காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி ஒரு குறிப்பிட்டஅளவு உற்பத்திச் செய்வதை காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு எனப்படும்.
2. ஐசோ(ISO),குவான்ட (quant) என்றும் இணைப்புத்தான் சம அளவு உற்பத்திக் கோடு என்று அழைக்கப்படுகிறது.
23.
24.
(i) சில்லோர் முற்றுரிமை அங்காடியில் சில நிறுவனங்களே ஒரே மாதிரியான அல்லது வித்தியாசமான பண்டங்களை உற்பத்தி செய்யும்.
(ii) சில்லோர் முற்றுரிமைப் போட்டியில் எத்தனை நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிட முடியாது.
(iii) சில நிறுவனங்களே இருப்பதால், ஒரு நிறுவனத்தின் நடவடிக்கை மற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
25.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி 29-3-2017 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.
26.
வார்த்தை செயலி (word processor) யின் அம்சங்கள்:
1. ஆவணத்தை உருவாக்க நகலெடுக்க திருத்தியமைக்க, வடிவமைக்க முடியும்.
2.வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை இடையில் சேர்த்திட, மாற்றிட (அ)நீக்கிட முடியும்.
3.வடிவமைப்பினை பயன்படுத்த முடியும்.
4.பக்கங்களின் அளவு மற்றும் விளிம்பு அளவுகளை சரிசெய்து கொள்ள முடியும்.
5. பிழைத்திருத்தம் செய்யும் வசதியுள்ளது.
6.பல ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஒன்றாக இணைக்க முடிகிறது.
27.
(i) HDI1 ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மனித மேம்பாட்டு அறிக்கையினை பொருத்துள்ளது).
(ii) HDI 2 (வாழ்க்கைதரம் )
(iii) HDI3 (வறுமை ஓழிப்பு) மற்றும் HDI4 (நகரமயமாதல்) ஆகிய நான்கும் மனித மேம்பாட்டுக் குறியீடுகளாகும்.
28.
(i) நீலகிரி மாவட்டம் (1041 பெண்கள், 1000 ஆண்களுக்கு).
(ii) தஞ்சாவூர் மாவட்டம் (1031 பெண்கள், 1000 ஆண்களுக்கு) சாதகமான பாலினம் பெண்கள்.
29.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு வேளாண்மையாகும்.
30.
1. ' பொருளியல் 'என்றால் இல்லங்களில் நிர்வாகம் என்று பொருள்படும்.
2. பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்க சொல்லிலிருந்து வந்தது
3. ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இவ்வியல். பிற்பகுதியில் ' பொருளியல் ' என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.
31.
1.அதிக மக்கள் தொகை:
1.மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது.
2.மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது.
3.மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000பேருக்கு 1.7 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது.
4.ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.
2.ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:
1.இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு நிலை நீடிக்கிறது.
2.அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
3.சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது.
3.அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும் அத்தியாவசியப் பண்டங்களும் விலை தொடர்ந்து உயர்கிறது.
4.உள் கட்டமைப்பு பலவீனம்:
கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து,பண்டங்கள், பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5.வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை:
அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது.
6.பழமையான தொழில் நுட்பம்:
வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
32.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
33.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
34.
வீணாக்கப்பட்ட சக்தி :
(i) வீணாக்கப்பட்ட சக்தி என்பது உத்தம அளவு உற்பத்திக்கும் உண்மை அளவு உற்பத்திக்கும் உள்ள வேறுபாடாகும்.
(ii) நீண்ட காலத்தில் நிறுவனங்கள் குறைந்தளவு சராசரிச் செலவு இருந்தாலும் உத்தம அளவு உற்பத்தி விட வேண்டுமென்றே குறைந்த அளவு உற்பத்தி செய்கின்றன.
(iii) முற்றுரிமைப் போட்டியில் இந்த அளவு சக்தி வீணாக்கப்படுவதாகவே கருதப்படுகிறது.
வேலையின்மை:
(i) முற்றுரிமையாளர் போட்டியில் நிறுவனங்கள் உத்தம அளவை விட குறைவாக உற்பத்தி செய்வதால் வளங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை.
(ii) உற்பத்தி திறன் முழுமையாக பயன்படுத்தபடுவதில்லை.
(iii) இதனால் மனிதர்களுக்கு வேலையின்மை ஏற்படுகிறது.
விளம்பரம் :
(i) முற்றுரிமை போட்டியில் போட்டியின் காரணத்தினால் விளம்பரத்திற்காக அதிகப் பணம் செலவிடப்படுகிறது.
(ii) வீண் விளம்பரங்களினால் நுகர்வோருக்கு விலை அதிகரிக்கிறது.
(iii) விளம்பரங்களில் உண்மையற்ற தகவல் மூலம் நுகர்வோர் ஏமாற்ற படுவதும் நடக்கிறது.
பல்வேறு விதமான பண்டங்கள்:
முற்றுரிமை போட்டியில் ஒரே பயனுக்கு பல்வேறு விதமான பண்டங்களை அறிமுகப்படுத்துவது மற்றொரு வீண் செலவாகும்.
செயல்திறன் குறைந்த நிறுவனங்கள்:
(i) முற்றுரிமை போட்டியில் சில செயல்திறன் குறைந்த நிறுவனங்கள் தமது இறுதிநிலைச் செலவை விட அதிக விலை வசூலிக்கின்றனர்.
(ii) நிறுவனங்கள் வெளியேற்றப்பட வேண்டும்,ஆனால் நுகர்வோர் பெரும்பாலும் உணர்ச்சி தூண்டுதலால் இத்தகைய நிறுவனப் பொருட்களை வாங்குவதால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
(iii) திறமையான நிறுவனங்கள் நுகர்வோரைக் கவரும் வகையில் விளம்பரம் செய்ய போதிய அளவு செலவு செய்வதில்லை இதனால் திறமைக் குறைவான நிறுவனங்களை வெளியேற்ற முடிவதில்லை.
35.
இடுபொருள்களின் செலவு உயர்வு:
(i) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.
(ii) தாராள மயமாக்குவதற்கு முன் மாநில அரசாங்கத்திடமிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்கின.
(iii) தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்துவிடப்பட்டன.
(iv) கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.
(v) இதன் விளைவாக, விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகின.
வேளாண்மை மானியக் குறைப்பு:
தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரமானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மின் கட்டணங்களும் அதிகரித்தன ஆனால் விவசாயப் பொருட்களின் விலை உயரவில்லை.
இறக்குமதி சுங்க வரி குறைப்பு:
(i) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டன.
(ii) மேலும் 1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டன.
(iii) இதன் விளைவாக, சந்தையில் பொருட்கள் குவிந்து, பருத்தி மற்றும் மிள்கு போன்ற பயிர்களின் விலை சரிந்தது.
கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்:
(i) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையின் பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.
(ii) விவசாயிகள் வட்டிக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
36.
(அ) (i) தேவைச்சார்பு என்பது Qt=f(Pt,Y,A,N,Pc)
(ii) தேவை தீர்மானிக்கும் காரணிகளானவன.
Y=குடும்பத்தின் சராசரி வருமானம்
A = பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு.
N = அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை
Pc= பதப்படுத்தப்பட்ட பாலின் விலை.
(ஆ) இம்மாறிகளில் சார்பற்ற மாறிகள் = A மற்றும் N.A என்பது விளம்பரச் செலவு N என்பது மக்களின் எண்ணிக்கை
(இ) குடும்பத்தின் சராசரி வருமானம் கூடும்பொழுது பதப்படுத்தப்படாத பாலின் தேவை அதிகரிக்கும்.
(ii) Pc- பதப்படத்தப்படாத பாலின் விளம்பரச் செலவு அதிகரித்தால் அப்பாலின் தேவை குறையும்.
(iii) அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாலின் தேவை அதிகரிக்கும்.
(iv) பதப்படுத்தபட்ட பாலின் தேவை அதிகரித்தால் பதப்படுத்தப்படாத பாலின் தேவை குறையும்.
(v) ஆகையால் Qt=-a Pt+bY-cA+dN-e Pc) எனவே இதனை நேர்கோட்டு சார்பு எனலாம்.இங்கு சாய்வின் மதிப்பு எதிர்மறையாக இருப்பதால் இந்த சார்பு தேவைச் சார்பாக அமையும்.
37.
தேவை நெகிழ்ச்சிக் கெழு = η
\(ηd=\frac{dp}{dq}\)
p=60-0.2 Q
\(\frac{dp}{dq}= -0.2\)
\(\boxed { \eta d=\frac { -q }{ p } \frac { dp }{ dq } } \)
\(\eta d=\frac{+q}{60-2.0q}(+0.2)\)
=\(\frac{0.2q}{60-0.2q}\)
இதில் q=0 எனில்
\(= \frac{0.2(0)}{60-0.2(0)}=0\)
q=20 எனில்
\(\eta d=\frac{0.2(20)}{60-0.2(20)}\)
=\(\frac{4.0}{60-4}\)
\(\eta d=\frac{1}{14}\)
இதில் q=40 எனில்
\(\eta d=\frac{0.2(40)}{60-0.2(40)}\)
\(=\frac{8}{60-8}\)
\(\eta d=\frac{2}{13}\)
விடை :
| q | 0 | 20 | 40 |
| ባd | 0 | \(\frac{1}{14}\) | \(\frac{2}{13}\) |
38.
39.
சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு ;
(i) சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறையாக உள்ளன.
(ii) அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது.
(iii) சிறுதொழில் உழைப்பு முதலீடு விகிதம் அதிகம்.
சிறுதொழில் சமமான மண்டல வளர்ச்சி:
(i) சிறு தொழில்கள் பெருபாலும் பின்தங்கிய பகுதிகளிலும் கிராமபுறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது.
(ii) கிராம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேற்றுமைகளை களைய உதவி செய்கிறது.
உள்ளூர் வளங்களை பயன்படுத்த சிறுதொழில் உதவி செய்கிறது:
(i) சிறு சேமிப்பு , தொழில் முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல் அது வெளிப்படவும் , பலருக்கும் பயன்படவும் சிறு தொழில் காரணமாகிறது.
(ii) கைவினைப் பொருட்கள் தயாரிபோரின் பாரம்பரிய குடும்பத் திறன்களை வளர்ச்சியற சிறு தொழில் உதவுகிறது.
மூலதன பயன்பாடு முழுமை பெற சிறு தொழில் வழி வகிக்கிறது:
(i) சிறு தொழில் மூலதனத்தின் தேவை குறைவே இத்துறையில் செய்த முதலீட்டிற்கு காத்திறுப்புக் காலம் மிக குறைவாக இருக்குமாதலால் வருமானம் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
(ii) அதிக வெளியிடு மூலதன விகிதத்தையும் அதிக வேலை வாய்ப்பு மூலதன விகிதத்தையும் நிலைப்படுத்தும் சக்தியாக சிறுதொழில் முறை உள்ளது.
சிறு தொழில் முறை ஏற்றுமதியை உருவாக்கிறது:
(i) சிறு தொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் தேவையில்லை.எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய அவசியமில்லை.
(ii) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சிறு தொழில்கள் கணிசமான அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.
பெரிய அளவிலான தொழில்களுக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு:
(i) சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களின் வாழ்ச்சிக்கு ஆதரவு தருகின்றன.
(ii) பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைத்துள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தேவையான அனைத்து பாகங்களையும் தயாரித்து வழங்கி உதவுகின்றன.
சிறுதொழில் நிறுவனங்கள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுகின்றனர்:
இந்தியாவில் நுகர்வோருக்கு தேவையான பல்வேறு பொருட்களை சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கின்றன
சிறுதொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்றன:
(i)சமூகத்தில் தொழில் முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.
(ii) வேலை தேடுவோரை வேலை வாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.
(iii) மக்கள் சுயவேலை வாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய உதவுகின்றன.
40.
ஊரகக் கடன் சுமை:
ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஊரகக் கடன்களுக்கான காரணங்கள்:
விவசாயிகளின் ஏழ்மை நிலை:
வறுமைக்கொடும் சுழலானது நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காகவும், விவசாயிகளின் கடன் பெறத் தூண்டுகிறது.
பருவமழை பொய்த்தல்:
(i) அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது.
(ii) விவசாயம் எப்போதும் சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை.
வழக்குகள்:
(i) நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதிக கடன் பெறுகிறார்கள்.
(ii) கல்வியறிவின்மையாலும், அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகிறது.
வட்டிக்கு கடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்:
உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் (ம) அசலுடன் வட்டியை சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உளது.
41.
காந்தியடிகள்:
1.காந்தியப் பொருளாதாரம் நன்னெறியை அடிப்படையாகக் கொண்டது.
2.காந்தி "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது "என எழுதுகிறார்.
காந்தியப் பொருளாதார சிந்தனை:
1.கிராமக் குடியரசு:
1.காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார்.
2.தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார்.
3.அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
2.இயந்திரங்கள்:
1.காந்தியடிகள் இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று வர்ணித்தார்.
2.இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
3.இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றார்.
3.தொழில் மயம்:
தொழில் மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார்.
4.உற்பத்தி பரவலாக்கம்:
1.உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்.
2. சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்.
5.கிராம சர்வோதயா:
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ,புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான் இருக்கிறது"என்று கூறினார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
6. உடல் உழைப்பு:
1.மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள்.
2.மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறினார்.
7.அறக்கட்டளைக் கோட்பாடு:
தற்போதைய முதலாளித்து முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு என்று கூறினார்.
7.உணவுப் பிரச்சனை:
1.உணவுப் பொருட்களின் மீதான எவ்விதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். ஏனெனில் அது செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார்.
2. தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளன.
9.மக்கள் தொகை:
1. காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார்.
2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார்.
10.மதுவிலக்கு:
1. காந்தியடிகள் "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வதில்லை மாறாக நோயைத் தருகிறது" என்றார் காந்தியடிகள்.
2."இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்றார்.
42.

43.
மொத்த மாறாச் செலவு (TFC):
1. மாறாத உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மொத்த மாறாச் செலவாகும்.
2. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறுபடுவதில்லை.
மொத்த மாறும் செலவு (TVC):
1. மாறும் உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மாறும் செலவாகும்.
2.உற்பத்தி புஜ்ஜியமாக இருக்கும் போது மாறும் செலவு புஜ்ஜியமாக உள்ளது.
மொத்தச் செலவு(TC):
1. ஓர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பல்வேறு செலவுகளில் மொத்த கூடுதல் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவு எனப்படுகிறது.
2.

சராசரி மாறாச் செலவு (AFC):
1. சராசரி மாறாச் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறாச் செலவு என்பதாகும்.
2. சராசரி மாறாச் செலவு என்பது, மொத்த மாறாச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AFC={TFC\over Q}}\)

சராசரி மாறும் செலவு (AVC):
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2. மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC \over Q}}\)

4.AVC- வளைகோடு 'U'வடிவத்தில் இருக்கும்.
சராசரி செலவு(AC):
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான ஓர் அலகு செலவு ஆகும்.
2. (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
\(\boxed{AC={TC\over Q}}\)

| Q in unit | TFC in (Rs) | TVC in (Rs) | TC(TFC+TVC) in (Rs) | ATC TC/Q(in Rs) | AFC (TFC / Q )in (Rs) | AVC (TVC / Q)in (Rs) | ATC (AFC+AVC)(in Rs) |
| 0 | 1000 | 0 | 1000 | 1000/0=\(\alpha\) | 0 | 0 | 0+0=0 |
| 1 | 1000 | 200 | 1200 | 1200/1=1200 | 1000 | 200 | 1000+200=1200 |
| 2 | 1000 | 300 | 1300 | 1300/2=650 | 500 | 150 | 500+150=650 |
| 3 | 1000 | 400 | 1400 | 1400/3=466 | 333 | 133 | 333+133=466 |
| 4 | 1000 | 600 | 1600 | 1600/4=400 | 250 | 150 | 250+150=400 |
| 5 | 1000 | 900 | 1900 | 1900/5=380 | 200 | 180 | 200+180=380 |
இறுதிநிலைச் செலவு (MC):
1.கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படும்.
2.\(\boxed{MC=\triangle TC / \triangle Q}\) (or) \(\boxed{MC= TC_n-TC_{n-1}}\)

44.
பொருளியில், நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. நுகர்வு:
1. மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
2. மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில், நுகர்வோரின் நடத்தை குறைந்துசெல் பயன்பாடு, நுகர்வோரின் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
2.உற்பத்தி:
1. உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
2. நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு, வெளியீடுகளுக்கிடையேயான உறவு ஆகியவையாகும்.
3. பரிமாற்றம்:
1. பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
2. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்றபோதுதான் பரிமாற்றம் சாத்தியமாகிறது.
4.பகிர்வு:
1. பகிர்வு என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
2. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.
45.
1. சாய்வு m=\({(y-y_1)\over(x-x_1)}\)
2.(y-y1)=m(x-x1) என்பது நேர்கோட்டின் சமன்பாடு
3.3 x 3 உடைய A என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு =|A|=a1(b2c3-b3c2)a2(b1c3-b3c1)+a3(b1c2-b2c3)
4.மாறிலியின் வகையீட்டு கெழு மதிப்பு பூஜ்யமாகும்.
5.xnன் வகையீடு nx(n-1)
6. ed= இறுதிநிலை சார்பு / சராசரிச் சார்பு
7. ed= \({-p\over x}{dx\over dp}\)
8.என்ற சார்பின் தொகையீடு \({x^{n+1}\over n+1}+c\)
9. நுகர்வோர் உபரி \((cs)=[\int^{x0}_{0}f(x)dx]-x_op_o\)
10. உற்பத்தியாளர் உபரி \((ps)=x_op_o \int^{xo}_{o}g(x)dx\)
46.
1."மொத்த நாட்டு மகிழ்ச்சி"என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
2.இரு நிலைத்த முன்னேற்றம் சுற்றுக்சுழல் பாதுகாப்பு கலாச்சார மேம்பாடு சிறந்த நிர்வாகம்.
3.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமான நாடுகளை குறிக்கும்.
4.(எ.கா.)அமெரிக்க ஐக்கிய நாடுகள்,கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ் மற்றும் ஜப்பான்.
47.
1.அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும், முடிவுமாக செல்வமே என்று கருதப்படவில்லை மாறாக மனித நலத்தை மேம்படுத்த முயல்கிறான்.
2. பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே, அவர்கள் சாதாரண அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி,உச்ச பட்ச பணம் பெறுவதை நோக்கிச் செல்பவர்கள் அல்லர்.
3. பொருளியல் ஓர் சமூக அறிவியலாகும்.அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிய படிக்கிறது.
48.

49.
(i) இந்தியாவில் இணையத்தின் பயன்பாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உள்ளன.
(ii) மார்ச் 2016 ஆம் ஆண்டு அரசு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் 28.01 மில்லியன் இணைய சந்தாதாரர்கள் உள்ளனர்.
(iii) இந்தியாவில் மொத்தம் 342.65 மில்லியன் இணையதள சந்தாதாரர்கள் உள்ளன.
50.
(i) இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) மொத்த புத்தங்களில் 60 முதல் 70 சதவீதம் சிறு தொழில்கள் சிறு தொழில் மூலமாக கிடைத்தவையே
(iii) இன்றைய பெரிய தொழில்களின் பெரும்பான்மையான தொழில்கள் சிறு தொழில்களாக உருவாக்கப்பட்டு பின் வளர்ந்து பெரிய தொழில்களாக மாறியுள்ளன
(iv) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு தொழில்களின் பங்கு மிகப் பெரியதாகும்
51.
(i) ஜோசப் A சும்பீட்டர் புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) சும்பீட்டர் கருத்துப்படி, ஒரு தொழில்முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார்.
(iii) புத்தாக்கம் புனைவதற்கான வெகுமதியே இலாபம்.
(iv) சும்பீட்டரின் கூற்றுப்படி, புத்தாக்கம் புனைதல் என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
(1) புதிய பண்டங்களை அறிமுகப்படுத்துதல்.
(2) புதிய உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துதல்.
(3) புதிய சந்தைகளைத் தொடங்குதல்.
(4) புதிய மூலப்பொருட்களைக் கண்டறிதல்.
(5) தொழில்/நிறுவனங்களை மறு சீரமைத்தல் புத்தாக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் தான் அதிக இலாபம் பெற முடியும்.
திறனாய்வு:
புத்தாக்கம் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே காரணமல்ல. மேலும் இது இடர் தங்கும் பணியைப் புறக்கணித்துவிட்டது
52.
53.
1991 முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தக கொள்கையின் முக்கிய அம்சங்களாவன.
சுதந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி:
(i) 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப்பண்டங்களுக்காண இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது.
(ii) 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.
சுங்கக் கட்டண அமைப்பு மற்றும் அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல்:
(i) செல்லையா குழு அறிக்கையானது இறக்குமதிக்கான தீர்வுகளை உச்ச அளவான 50% குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.
(ii) 1991-92 ஆம் ஆண்டிற்கான நிதி, அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 150% ஆக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் படிப்படியாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
54.
1. பிறவாய்ப்பு செலவு என்பது அடுத்த சிறந்த மாறுபட்ட செலவைக் குறிக்கும்.
2. ஒரு பண்டத்தின் சிறந்த பயன்பாடு தேந்தெடுக்கப்படுவதால் அதனுடைய அடுத்த சிறந்த பயன்பாடு விட்டுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
3. எடுத்துக்காட்டாக, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் நெல் சாகுபடி செய்தால், நெல்லின் வாய்ப்புச் செலவு யாதெனில் விட்டுத்தந்த கரும்பு உற்பத்தியின் அளவே ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards