12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Five Mark Important Questions - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
2.
வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் கடுமையானதாகவும் அவமானப்படுத்தக்கூடியதாகவும் தெரிந்தது-இக்கூற்றினுக்கான ஆதாரப்பின்புலத்தை உறுதிப்படுத்துக.
3.
இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பொதுவான மற்றும் வேறுபட்ட கூறுகளை ஒப்பிட்டாய்ந்து எழுதுக.
4.
இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்கு காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.
5.
1848ஆம் ஆண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அரசியல் தோல்விகளை ஏற்படுத்தியமை குறித்து விவாதித்து எழுதுக.
6.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
7.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
8.
“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்
9.
10.
பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?
11.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளாக உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.
12.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
13.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
14.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
15.
16.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
17.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
18.
19.
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
20.
21.
பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.
22.
1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
23.
24.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
25.
1.
காரணம் :
1.ஐரோப்பாவில் பெரும் சக்திகள் 1907 ஆம் ஆண்டில் இரு எதிரெதிர் முகாம்களாக மூவர் கூட்டணி (ஜெர்மனி,ஆஸ்திரிய-ஹங்கேரி,இத்தாலி) என்றும்,முக்கூட்டு நட்பு (பிரிட்டன்,பிரான்ஸ்,ரஷ்யா) என்றும் உருவெடுத்து நின்றன.
2.இங்கிலாந்தோடு ஏற்பட்ட புரிதலை முன்னிறுத்தி (Entente Cordiale,1904) பிரான்ஸ் மொராக்கோவில் தனது திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைத்தது.ஒரு பிரெஞ்சு தூதுக்குழு 1905 இல் மொராக்கோவின் ஃபெஸ் நகரை வந்தடைந்தது அதை பிரான்சின் பாதுகாப்பிற்குட்பட்ட (Protectorate) பகுதியாகவே கருதி செயல்பட்டது.
3.ஆஸ்திரிய-ஹங்கேரி அதுவரை ஆஸ்திரியாவின் பாதுகாப்பில் இருந்த போஸ்னியாவையும் (செர்பிய மக்களை உள்ளடக்கியது)ஹெர்ஸிகோவினாவையும் 1908 இல் திடீரென இணைப்பதாக அறிவித்ததினால் தொடர் சிக்கல்கள் தோன்றின.
4.பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பாதியில் துருக்கி தென்மேற்கு ஐரோப்பாவில் சக்திவாய்ந்த ஒரு நாடாகத் திகழ்ந்தது.
5.மாசிடோனியாவை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்யா,கிரீஸ்,செர்பியா,பல்கேரியா சிறிது காலத்துக்குப்பின் மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் 1912 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் உருவாக்கியதே பால்கன் ஐக்கியமாகும்.
6.மே 1913 இல் கையெழுத்திடப்பட்ட லண்டன் உடன்படிக்கையின்கீழ் மாசிடோனியோ பிரிக்கப்பட்டு அல்பேனியோ என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.
7.வெற்றிபெற்ற நாடுகள் மாசிடோனியாவை பிரிக்கும் முடிவில் சண்டையிட்டு கொண்டன.
8.இரண்டாம் பால்கன் போர் ஆகஸ்ட் 1913 இல் புக்காரெஸ்ட் உடன்படிக்கையை கையெழுத்திட்டத்தோடு முடிவுக்கு வந்தது.
9.பால்கன் சம்பவங்களின் உச்சக்கட்டம் போஸ்னியாவின் செராஜிவோவில் நிகழ்ந்தது. ஆஸ்திரிய-ஹங்கேரியன் பேரரசர் ஃபிரான்ஸ் ஜோசப்பின் (Franz Joseph) வாரிசும் ஆர்ச்டியூக் அந்தஸ்தில் இருந்தவருமான ஃபிரான்ஸ் ஃபெர்டினான்ட் (Franz Ferdinand) 1914 ஜூன் 28 அன்று போஸ்னியாவில் மாணவராக இருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த பிரின்சிப் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார்.
விளைவுகள்:
1.அமைதி மாநாடு ஜனவரி 1919 ல் பாரிசில் துவங்கியது.
2.அமைதி உடன்படிக்கை 1919 ஜூன் 28 அன்று வெர்செய்ல்ஸில் உள்ள கண்ணாடி மாளிகையில் (Hall of Mirror) கையெழுத்திட்டப்பட்டது.
3.தனித்தனியான உடன்படிக்கைகள் வரையப்பட்டு அவற்றை நேச நாடுகள் ஆஸ்திரியாவுடனும் (செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை) ஹங்கேரியுடனும் (டிரையனான்) பல்கேரியாவுடனும் (நியூலி).துருக்கியுடனும் (செவ்ரெஸ்) கையெழுத்திட்டுக் கொண்டன.
2.
1.அல்சேசையும்,லொரனையும் ஜெர்மனி பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.
2.சார் பள்ளத்தாக்கின் நிலக்கரி சுரங்கங்கள் பிரான்சிடம் வழங்கப்பட வேண்டும்.
ரஷ்யா,ஆஸ்திரியா,ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குள் பிரிந்து கிடந்த போலந்து மாகாணங்களை ஒன்றிணைத்து பால்டிக் கடல்வெளிக்கு ஜெர்மானிய துறைமுகமான டான்சிக்கை (Danzig)உள்ளடக்கிப் பாதையமைத்தது,அதனை பன்னாட்டு சபையின் அரசியல் கட்டுப்பாட்டில் விடுவிக்க வேண்டும்.
3.உரிமைகள்,பட்டங்கள்,கடல்வெளியில் ஜெர்மனி வைத்திருந்த பகுதிகள் யாவையும் தோழமை நாடுகளுக்கு விட்டுக்கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டது.
4.ஜெர்மானிய காலனிகள் யாவும் பன்னாட்டு சபையின் கட்டாயத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
5.பிரான்ஸ்மீதும்,பெல்ஜியம் மீதும் புதிய தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு ரைன் பள்ளத்தாக்கில் அதன் அமைக்கவோ,படைகளைக் குவிக்கவோ ஜெர்மனிக்கு தடை விதிக்கப்பட்டது.
6.ரைன் நதியின் கிழக்குக்கரைப்பகுதிகள் இராணுவக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவதொன்றானது.
7.கிழக்கு ஐரோப்பாவில் பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கையின் கீழ் ரஷ்யா ஜெர்மனிக்கு விட்டுக்கொடுத்த மாகாணங்களான பின்லாந்து,எஸ்டோனியா லாட்வியா,லிதுவேனியா ஆகியவற்றை சுதந்திர குடியரசுகளாக மாற்றலாம் உத்தேசிக்கப்பட்டது.
8.ஜெர்மனி நிராயுதபாணியாக்கப்பட்டு அதன் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இழக்கச் செய்யப்பட்டது.
9.ஜெர்மனியும்,ஆஸ்திரியாகவும் ஐக்கியமாதல் தவிர்க்கப்பட்டு ஜெர்மனி ஆஸ்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வற்புறுத்தப்பட்டது.
10. ஜெர்மனியும் அதன் கூட்டு நாடுகளுமே போரில் விளைந்த இழப்புகளுக்கும்,சேதங்களுக்கும் பொறுப்பெனக் கொள்ளப்பட்டது.
11.போர் சேதங்கள் 1921 இல் கணக்கிடப்பட்டு 33 மில்லியன் டாலர்கள் என மதிக்கப்பட்டது.
12.ஜெர்மானியப் பேரரசர் இரண்டாம் வில்லியம் மீது நன்னடத்தையை மீறியமை ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை மதிக்கத் தவறியமை போன்ற உச்ச பட்ச குற்றங்கள் சுமத்தப்பட்டது.
3.
பொதுவான கருத்துக்கள்:
1.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
2.இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலை அடைந்தன.
3.இரு நாடுகளிலும் தேசியவாத பொதுவுடைமை கட்சிகள் தோன்றின.
4.இரண்டு நாடுகளிலும் ஆங்கில மொழியும் ஐரோப்பிய கலாச்சாரமும் திணிக்கப்பட்டது.
வேறுபட்ட கருத்துக்கள்:
1.இந்தோனேஷிய டச்சு காலனி ஆகும்.பிலிப்பைன்ஸ் ஸ்பானிய காலனியாகும்.
2.இவை இரண்டும் ஐரோப்பிய ஏகாதிபத்திய காலனி நாடுகள் ஆகும்.
3.இரண்டாம் உலகப்போரின் போது இந்தோனேஷியா பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் பிலிப்பைன்ஸ் அமெரிக்கா கட்டுப்பாட்டிலும் இருந்தது.
4.இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐ.நா.சபையின் அழுத்தம் காரணமாக இந்தோனேஷியா 1948ல் விடுதலை அடைந்தது.அமெரிக்கா அளித்த வாக்குறுதியின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு பிலிப்பைன்ஸ் விடுதலை அடைந்தது.
4.
ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைக்கப்படல்:
1.வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி 1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2.வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள் ஜெர்மனியோடு இணைவதேயே விரும்பினார்கள்.
3.அதனால் மார்ச் 1935 இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு இணைக்கப்பட்டது.
4.இது ஹிட்லருக்கு பெரும் மனவலிமையை ஊட்டியது.
ரைன்லாந்து இணைக்கப்படல்:
1வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து விலகிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும் மீறி 1936 இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில் இராணுவத்தை குவிக்கலானார்.
ஆஸ்திரியா-ஜெர்மனியுடன் இணைப்பு:
1.ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே அவர் விரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 ல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும் நிமித்தமாக அழைத்தார்.
2.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம அமைச்சரான ஸ்கூனிக்கை பிப்ரவரி 1938 இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு கலந்துரையாடும். நிமித்தமாக அழைத்தார்.
3.இந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் படையெடுப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற ஒற்றை தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார்.
சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு:
1.ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர் தனது பார்வையை செகோஸ்லோவாக்கியா மீது திரும்பினார்.
2.சூட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள் மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப் பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன் நாஜி கட்சிப் பரப்பியது.
3.பிரான்சையும்,செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின் பாதிக்கு மேல் ஜெர்மனிய தொகையை உள்ளடக்கிய மூனிச் ஒப்பந்தம்.
4.மூனிச் மாநாட்டில் பிரிட்டன்,பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1 இல் நிர்ப்பந்தித்தது போல சூட்டன்லாந்தை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை போலாந்திற்கும் ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
போலந்து மீது படையெடுப்பும்,போரின் துவக்கமும்:
ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் கொண்டிருந்த ஹிட்லர் முதலில் 1939 செப்டம்பர் 1 இல் "போலந்து நாடு தனது நட்பு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து தன் நாட்டை சுற்றி வளைத்து தரைமட்டமாக்கத் திட்டம் தீட்டுவதாகவும் போலந்தில் வாழும் ஜெர்மானிய இனத்தை அந்நாடு ஒடுக்குவதாகவும் குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது படையெடுத்தார்.
5.
1. 1848 இல் பிரான்சின் பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து இத்தாலியின் மாநிலங்களான பியட்மாண்ட் - சார்டினியா, சிசிலி,போப்பாண்டவரின் பகுதிகள்,மிலான்,லம்பார்டி வெனிஷியா ஆகிய பகுதிகளில் மக்களின் கிளர்ச்சி மீண்டும் வெடித்தது.
2. அதன் விளைவாக சிசிலி,பியட்மாண்ட்-சார்டினியா மற்றும் போப்பாண்டவரின் பகுதிகளில் தாராளக் கூறுகளைக் கொண்ட அரசியல்சாசனம் வழங்கப்பட்டது.
3. புரட்சியால் உந்தப்பட்ட பியட்மாண்ட்- சார்டினியப் பகுதிகளின் மன்னரான சார்லஸ் ஆல்பர்ட் லம்பார்டி மற்றும் வெனிஷியா மீது படையெடுத்தார்.
4. எனினும்,ரஷ்யப் படைகளின் உதவியைப் பெற்ற ஆஸ்திரியா அவரைத் தோற்கடித்தது.ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து பியட்மாண்ட் - சார்டினியாவைத் காத்த சார்லஸ் ஆல்பர்ட் வீழ்ச்சிக்குரிய பழியைத் தான் ஏற்றுக்கொண்டு பட்டம் துறந்ததோடு தனது மகனான இரண்டாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார்.
5. பியட்மாண்ட்- சார்டினியா தோல்வியை அடைந்தது போலப் பல குறு இராஜ்ஜியங்களின் எழுந்த கிளர்ச்சிகள் ஒடுக்கப்பட்டாலும்,தாராளவாத கருத்துக்களும்,தேசியவாதமும் தாக்குப்பிடித்து நின்றன.
6.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்:
1.வியாபார,வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள்,முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
2.கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில், இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும்,காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
3.இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன.
4.பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
5.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
6.நிலக்கரி, இரும்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் கிடைத்ததென்பது தொழில் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
7. தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் மூலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
8. தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
6.நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
தொழிற்புரட்சியின் தாக்கம்:
1.இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தி இழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
2.மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது.
3. தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.
4.இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருள் உற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.ஆயிரக்கணக்காக கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.
5.தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
6.தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள்,ஆலை தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது,தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.
7.இயந்திரங்களை உடைப்பது பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
7.
பாஸ்டில் சிறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.1794 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
8.
1.1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது.
2.அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் பொதுவுடைமைத் தத்துவத்தின் பரவலைக் கட்டுப்படுத்தவும் விரும்பியது.
3.மற்றொருபுறத்தில் சோவியத் ரஷ்யா பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்பவும்,தனது கோட்பாடுகளுடன் இணைந்து செல்லும் எல்லைப்புற நாடுகளுடன் நட்புணர்வைப் பேணவும் விருப்பம் கொண்டது.
4.தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன.
5.அவை பொருளாதார உதவி,இராணுவ ஒப்பந்தங்கள்,பரப்புரை செய்தல் உளவறிதல் நேரடியாக மோதாமல்,மோதலின் விளிம்புரை செல்லுதல் மற்றும் மறைமுகப் போர் ஆகியவையாகும்.
6.ஐக்கிய நாடுகள் சபையின் உதயமும் பனிப்போரின் தொடக்கமும் ஒரே சமயத்தில் நடைபெற்றன.
7.இக்காலகட்டத்தில் போர்களைத் தடுப்பதில் ஐ.நா.சபை முக்கியப் பங்காற்றியது.
8.ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர ஐ.நா.சபை முக்கியப் பங்காற்றியது.
9.ஐ.நா.சபை ஒரு இராணுவத்தைப் பெற்றுள்ளது.அது ஐ.நா.அமைதி காக்கும் படை என அறியப்படுகிறது.
9.
10.
சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள்:
1.பாவ மன்னிப்பு வழங்கும் முறைக்கு பணம் பெற்றது (ஒருவரின் பாவத்தை மன்னித்து அவருக்கு புனிதத்தை வழங்கும் போப்பாண்டவரின் பாவமன்னிப்புக்கு மன்னித்து பெற்றது).வேண்டியவர்களுக்கு வேலை வழங்குவது தேவாலயப் பணிகளை பணத்துக்கு விற்பது ஆகியன தாக்குதலுக்கு உள்ளானது.
2.ஆறாம் அலெக்ஸாண்டர்,இரண்டாம் ஜூலியஸ்,பத்தாம் லியோ ஆகிய சில போப்பாண்டவர்கள் இது போன்ற நடைமுறைகளால் ஆட்சியாளர்களிடம் சண்டையிட்டனர்.
3.போப் பத்தாம் லியோவுக்கு பணம் கொடுத்து மெயின்ஸின் ஆல்பர்ட் என்பவர் ஆர்ச்பிஷபாக பதவியேற்ற சம்பவமும் நடந்தது.
4.மெடிசி குடும்பம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்கள் சொத்தைப் பெருக்கவும் தங்களுக்கு முறைதவறிப் பிறந்த மகன்களுக்கு அந்தச் சொத்தைப் வழங்கவும் போப்பாண்டவர்களாக மாறினார்கள்.
மார்ட்டின் லூதர்:
1.கிறித்துவப் பாதிரியரான மார்ட்டின் லூதர் ரோமுக்கு எதிராக ஜெர்மனியில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.ரோமுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு அவர் தேவாலயத்தின் ரோமானிய தேவாலயத்திற்கு எதிராக அவர் 95 புகார்களை எழுதினார்.
2.தேவாலய சீர்திருத்தத்துக்காக அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
3.பைபிள் மட்டுமே உன்னதமானது'போப்பாண்டவரே அல்லது பிஷப்புகளோ இல்லை என்று அவர் வாதிட்டார்.
4.லூதர் பைபிளை ஜெர்மனிய மொழியில் மொழிபெயர்த்தார்.
5.லூதரன் புராட்டஸ்டன்ட்கள் சில விதிகளையும் நெறிமுறைகளையும் வகுத்தனர்.அவர்கள் போப்பாண்டவரின் அதிகாரத்தை ஏற்கவில்லை.
6.அவர்கள் தங்களுக்கு என்று தேவாலயங்களை நிறுவினார்கள்.நிர்வாக அமைப்புகளை உருவாக்கினார்கள்.பைபிளின் உன்னதம் பற்றி மட்டுமே நம்பினார்கள்.
7.பாதிரியர்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அவர்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
11.
ஸ்பெயின் தேசிய அரசு:
1.அராபிய அரசர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம் மன்னர்களாகிய மூர்களின் கட்டுப்பாட்டில் ஸ்பெயினின் பெரும்பாலான பகுதிகள் இருந்தன.
2.அராகன்,காஸ்டைல் என இரண்டு முக்கிய அரசுகள் அங்கிருந்தன.
3.ஸ்பெயின் நாட்டின் வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அராகன் அரசர் பெர்டினான்ட் காஸ்டைல் இளவரசி இசபெல்லாவை திருமணம் செய்தார்.
4.1479 இல் அரசரும் அரசியும் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்தனர்.
5.மன்னர் சபையில் இருந்து பிரபுக்களை நீக்கியதன் மூலம் அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.ஸ்பெயின் ஒரு தனி நாடாக உருவெடுத்தது.
இங்கிலாந்து அரசு:
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லாங்காஸ்டர் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூக்கள் போர் நடந்தது.அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர்.அதனால் இப்பெயர் பெற்றது.
3.இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி,இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
4.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார்.இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசராக உருவெடுத்தது.
5.பிரான்சின் கிழக்கே உள்ள பர்கண்டி என்பது ஒரு சக்திவாய்ந்த நாடாகும்.பெயரளவிற்கே பிரான்ஸ் அரசரின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த கிளர்ச்சிமிகுந்த பகுதியான பர்கண்டியை ஆங்கிலேயர்கள் பிரான்சுக்கு எதிராக ஆக்கிரமித்தனர்.
6.பிரெஞ்சு அரசர் ஏழாம் சார்லசுக்குக்காக ஜோன் ஆஃப் ஆர்க் என்ற பெயருடைய ஒரு இளம்பெண் வீரதீரமாகப் போரிட்டு ஆர்லியன்ஸ் போரை வென்றார்.ஆர்லியன்ஸின் பணிப்பெண் (Maid of Orleans) என்ற பட்டம் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கைக்கு வழங்கப்பட்டது.
7.ஜோன் ஆஃப் ஆர்க்கின் மறைவுக்குப் பிறகு நூறாண்டுகள் போரைத் தொடர்ந்த பிரெஞ்சு அரசு அதில் வெற்றி பெற்றது.
8.கிளர்ச்சி மிகுந்த இந்தப்பகுதி இறுதியாக 1483 ஆம் ஆண்டு பிரான்சின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
9.பிரான்ஸ் ஒரு வலுவான மத்திய மன்னராட்சி நடைபெறும் அரசாக பதினோராம் லூயி உருவெடுத்தது.
12.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IISc)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of fundamental Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-physics) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Cellular and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and Industrial Research) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Information Technology - NIT) செயல்பட்டு வருகின்றன.
13.
1.இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2.அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும்.
3.இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும்,சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களுக்கிடையே ஒரே சீரான தன்மையில்லை.
4.அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை இயற்றின.
5.நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்பு சட்டங்களின் அரசியலமைப்பு சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர்.
6.இதன்படி ஜமீன்தார்கள் தங்களின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்தோ இழப்பீடு குறித்தோ கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
7.முடிவில் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு 1956-இல் நிறைவு பெற்றது.இது மிகவும் வெற்றிகரமான நிலச்சீர்திருத்தமாகும்.
8.இருந்தபோதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.
9.இந்நிலங்கள் தங்களது "தனிப்பட்ட விவசாயத்தின்" கீழிருந்தன என உரிமைகொண்டாடி ஜமீன்தார்களால் குடியானவர்களை வெளியேற்றவிட்டு நிலங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது.
10.இவ்வாறு ஜமீன்தாரி என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டாலும் பல நிலவுடையாளர்கள் தொடர்ந்து பெருமளவிலான நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
14.
1.1960 களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை.
2.கிராமப்பகுதிகள்,நகர்ப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது.
3.கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
4.சமூக வளர்ச்சித் திட்டங்கள்,பஞ்சாயத்துராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது,சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகப் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
5.1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
6.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
7.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
8.நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
9.உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன.
10.இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999 இல் இது மறுசீரமைக்கப்பட்டது.
11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12.ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு,வேலையைத் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் 100நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது.
13.இம்முயற்சியின் கீழ்க்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள்,கால்வாய்கள்,சிறிய நீர்ப்பாசன வேலைகள்,மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.
15.
16.
1. 1917- இல் சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
2. கேதா போராட்டம் : 1918 நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர்.
3. ரௌலட் சட்டத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆகஸ்ட் 31. 1920 ல் தொடங்கினர்.
4. சௌரி சௌரா சம்பவம் (1922) காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி திரும்பப் பெற்றார்.
5. 1930 ஆம் ஆண்டு தொடங்கிய சட்டமறுப்பு இயக்கம்.
6. 1930 தண்டி பயணம் தொடங்குதல் உப்பு மீது வரியைக் குறைக்க செய்தல்.
7. 1931 காந்தி இர்வின் உடன்படிக்கை மேற்கொள்ளுதல்.
8. 1942, வெள்ளையனே வெளியேறு இயக்கம். போன்ற பல போராட்டங்கள் மூலம் காந்தி இந்திய விடுதலைக்கு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்.
17.
1. 1929 - டிசம்பர் -31 இல் லாகூரின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -26 ஆம் நாள் விடுதலை நாள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
2. சட்ட மறுப்பு இயக்கம் காந்தி தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3. லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
4. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயன் இல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
5. காங்கிரஸ் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் - 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
18.
19.
(i) ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பினர்.
(ii) சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
(iii) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பசுப்பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
(iv) ஆரிய சமாஜம் போன்ற நிறுவனர் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னி பெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் தனது கருத்துக்களை பின்வருமாறு குறிப்பிட்டார்.
(v) "பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே, இந்தியர்களின் முதற்பணி" ஆகும்.
(vi) ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேசப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும் நாட்டு புனரமைப்பதற்கான தோற்றமாகவும் உருவாக்கப்பட வேண்டும்.
20.
21.
(i) இந்திய தேசிய காங்கிரஸ் புரட்சியாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு மாறாக வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டியது.
(ii) உலக அளவிலான பொருளாதார பெருமந்த நிலையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயிகள் துயரத்தில் இருந்தார்கள்.
(iii) விவசாயிகள் கிசான் - சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
(iv) 1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது.
(v) 1931 மார்ச்சில் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
(vi) இதுவே சுதந்திர இந்தியாவிற்கான தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது.
(vii) இந்த உரிமைகளும் சமூக மற்றும் பொருளாதாரத் திட்டங்களும் உறுதி செய்வது யாதெனில், அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் என்பது பிரித்துப்பார்க்க முடியாத ஒன்றாகும்.
22.
(i) 1929 - 30 களில் இந்தியாவில் -44% வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் ஆகும்.
(ii) 1933 - 34 இல் பெருமந்த நிலைக்கு பின்னர் 20.5% ஆக குறைந்துவிட்டது.
(iii) இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியும் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழில் வளர்ச்சியைக் கண்டது.
(iv) "சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட்" (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது.
(v) 1939-இல் அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
(vi) மேலும் வளர்ச்சியடைந்த தொழில் நிறுவனங்கள் காகிதம், வேதிப்பொருட்கள், சிமெண்ட், உரங்கள், தோல் பதனிடுதல் முதலியன ஆகும்.
(vii) 1923 - 24 -இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
23.
24.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
25.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards