12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/03/2021
12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Syllabus Three Mark Important Questions with Answer key - 2021(Public Exam)
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் பற்றிக் குறிப்பு வரைக.
2.
போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாகச் எடுத்துக் கூறுக
3.
சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.
4.
ஒரு ஏகாதிபத்திய சக்தியாக ஜப்பானின் திட்டங்கள் யாவை?
5.
நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது - விளக்குக.
6.
இங்கிலாந்தோடும், பிரான்சோடும் முழுமையான தேசங்களாக இத்தாலியும், ஜெர்மனியும் ஏன் உருப்பெற்று வெளிப்படமுடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பட்டியலிடுக.
7.
8.
9.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
10.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
11.
ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.
12.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
13.
மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?
14.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?
15.
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
16.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
17.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
18.
பிரதம அமைச்சர் ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
19.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
20.
இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுது.
21.
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
22.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
23.
24.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
25.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
1.
1.மூன்று பிரச்சனைகளை அது அணுகியிருந்தது.
2.ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான ஆலந்து தீவுகளின் பிரச்னையை தீர்த்து வைத்தது.
3.மேல்புற சைலேசியாவை முன்னிறுத்தி போலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான சிக்கலைத் தீர்த்து வைத்தது.
4.1925 ல் கிரீஸ் பல்கேரியா மீது படையெடுத்த போது சங்கம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது
2.
1.நீர்மூழ்கிகளின் படையெடுப்பு உக்கிரமானபோது அமெரிக்கர்கள் போரில் நுழைந்தார்கள்.
2.அமெரிக்கா போரில் இறங்கியது நேச நாடுகளின் வெற்றியை முன்பே உறுதி செய்தது போலாயிற்று.
3.பல்கேரியா சரணடைந்தது.
4.துருக்கியர்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட விரும்பினர்.
5.ஜெர்மனி நவம்பர் 11 அன்று சரணடைவதாக கையெழுத்திட்டது.
3.
1.சன் யாட் சென்னால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே கோமின்டாங் ஆகும்.
2.சன் யாட் சென் ஒரு குடியரசை அமைக்க விரும்பினார்.
3.சன் யாட் சென் மறைவுக்குப் பின் இக்கட்சியில் பொதுவுடைமை மறைந்தது.
4.கோமின்டாங் பெரும் நிலக்கிழார்கள் மற்றும் முதலாளிகளின் ஆர்வங்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.
4.
1.ஐரோப்பாவில் ஜெர்மனியின் அணுகுமுறையை கிழக்கு ஆசியாவில் ஜப்பான் பின்பற்றியது.
2.தைவானையும் கொரியாவையும் காலனிகளாக்கி மஞ்சூரியாவை ஆக்கிரமித்தது.
3.அதன் பேராசை பார்வை மலேசியா சிங்கப்பூர் மீதும் விழுந்தது.
4.இப்பேராசை இந்தோசீன பிரெஞ்சு காலனிகள் மீதும் அமெரிக்க ஆதரவு பெற்ற பிலிப்பைன்ஸ் மீதும் விழுந்தது.
5.
1.ஐசன்ஹோவரின் தலைமையை ஏற்ற நேச நாடுகளின் படைகள் பிரான்சின் மீது படையெடுத்து அங்கிருந்த ஜெர்மானிய படைகளை அகற்றியது.
2.நேச நாடுகளின் குண்டு வீச்சு ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை முற்றிலுமாக அழித்தது.
3.இக்குண்டு வீச்சால் 6,00,000 ஜெர்மன் குடிமக்கள் கொல்லப்பட்டார்கள்.
4.படிப்படியாக ஜெர்மன் படைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
6.
1. மறுமலர்ச்சி கண்ட இத்தாலி அரசியல் மாற்றங்களில் பங்கெடுக்கவில்லை.
2. இத்தாலியின் நகரங்களான மிலான்,ஃபிளாரன்ஸ்,வெனிஸ்,நேப்பில்ஸ் போன்றவை பேரரசுகளுக்கு பலியாகும் சூழல் ஏற்பட்டது.
3. இத்தாலியில் தனிப்பட்ட குடும்பத்தாரின் கொடுங்கோல் ஆட்சி நடத்தப்பட்டு வந்தது.
4. ஜெர்மனியிலும் இதே நிலைதான் இருந்தது.
5. ஜெர்மனி மட்டும் 300 முதல் 400 தனிநாடுகளைக் கொண்டிருந்தது.
6. ஆகவே 19 ஆம் நூற்றாண்டில் தான் இத்தாலியும் ஜெர்மனியும் தேசிய அரசுகளாக ஏற்றம் பெற முடிந்தது.
7.
8.
9.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (avenues) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
10.
1.அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றே உணர்ந்தனர்.
2.எனவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்புத் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டன.
3.1948 ல் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானது.
4.இவ்வுடன்படிக்கை இராணுவ,அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளில் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழிவகுத்தது.
5.சில காலங்களுக்குப் பின்னர் அமெரிக்கா,இத்தாலி,கனடா,ஐஸ்லாந்து,டென்மார்க் நார்வே, அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை நாடுகளுடன் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
11.
1.ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் லயோலா 1534 ஆகஸ்ட் 15 இல் இயேசு சபையை உருவாக்கினார்.
2.பிரம்மச்சரியம், வறுமை, கீழ்ப்படிதல், ஜெருசலேமுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வது ஆகிய உறுதிமொழிகளைக் கடைபிடிக்க அவரும் அவரது ஆறு பல்கலைக்கழக மாணவர்களும் உறுதியேற்றனர்.
12.
1.ஆங்கில மறுமலர்ச்சியில் முதலாம் எலிசபெத் பல அறிஞர்களை ஆதரித்ததை குறிப்பிடலாம்.
2.வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மார்லோவ், பிரான்சிஸ் பேகன் குறிப்பிடத்தக்கவர்கள்.
3.ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
13.
1.இத்தாலிய நகரங்களில் தொடங்கிய மறுமலர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவின் இதர நகரங்களுக்கு பின்னர் பரவியது.
2.இத்தாலியர்கள் தங்கள் ரோமானிய மூதாதையர்களின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையைப் பாதுகாத்து வந்தனர்.
3.தங்களுக்கு பிடித்தமானவற்றைத் தேடும் முயற்சியில் அவர்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைக் கண்டுபிடித்தனர்.
4.சட்டம் மற்றும் தத்துவவியல் படிப்புகளுக்காகவே முதன்மையாக இத்தாலிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
14.
விளைவுகள் :
1.உணவு உற்பத்தி பெருகியது.
2.இரசாயன உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை வளர்ச்சி பெற்றது.
3.உபரி உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
4.ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது.
5.இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டால் சூழலியல் பிரச்சனைகள் தோன்றியது.
15.
(i) பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல் ஆகும்.
(ii) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல்.
(iii) 500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.
(iv) மக்களாட்சி, இறையாண்மை, சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
16.
(i) இந்திய அரசமைப்பு உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட அரசமைப்பு ஆகும்.
(ii) இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகவுரை கூறுகிறது.
(iii) அடிப்படை உரிமைகள், குறிக்கோள், தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன.
(iv) இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
(v) வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் உறுதி செய்தது.
(vi) நீதித்துறையின் சுதந்திரத் தன்மையுடன் உறுதி செய்தது.
17.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
18.
1. இலண்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.
2. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது.
3. பிரிட்டிஷ் "பிரதமர் ராம்சே மேக் டொனால்டு" இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
4. 1932-ல் வகுப்பு வாரித் தொகுதி அறிவிக்கப்பட்டது.
19.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
20.
(i) முஸ்லிம் லீக்கானது, முடித்தல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான மையப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக இருந்தது. இதன் நோக்கங்கள் பின்வருமாறு,
(ii) இந்திய முஸ்லிம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை பிரிட்டிசாரிடம் ஏற்படுத்துதல்.
(iii) இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்கு தெரிவித்தல்.
(iv)இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும், முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
21.
1. 1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்
2. அதில் துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும் என்றும்,
3. சுல்தானிடம் புனிதமான பகுதிகள் தரப்பட்டு இஸ்லாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
4. ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
22.
(i) M. சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 - 11 பிப்ரவரி 1946 ) மதராசில் பிறந்தார்.
(ii) திரு.வி.க. உடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்.
(iii) 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்.
(iv) 1928 இல் இரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்; இதற்காக தண்டனை பெற்றார்.
23.
24.
1. புரட்சிகர பயங்கரவாதியாகிய அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர கனுங்கோ பாரிஸ் சென்று இராணுவப் பயிற்சிப் பெற்று நாடு திரும்பி மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில்கூடத்தை நிறுவினார்.
2. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை குண்டு வீசி கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.
3. கொலை செய்யும் பொறுப்பு புரட்சிவாதிகளான குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. 1908 ஏப்ரல் 30 இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
இதனால் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொல்ல, குதிரம் போஸ் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
25.
1. 1908 இல் கோரல் மில் தொழிற்சாலை ஊழியர்கள் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் கொண்டிருந்தனர்.
2. இது வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
3. இதனால் 1908 இல் மார்ச்சில் கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்
5. தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்தில் தீவிர தேசியவாதிகள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards