12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/10/2020
12 ஆம் வகுப்பு பொருளியல் பயிற்சி 5 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Economics Tamil Medium Model 5 Mark Book Back Questions (New Syllabus 2020)
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
புள்ளியியலின் இயல்பு, எல்லைகளை விளக்குக.
2.
பொருளாதார முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.
3.
நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.
4.
5.
6.
7.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
8.
பணத்தின் பணிகளை விளக்குக.
9.
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
10.
சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.
11.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக.
12.
முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
1.
புள்ளியியலின் இயல்புகள்:
1. புள்ளியியலில் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் கலந்திருக்கின்றன.
2. முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பினை அறிவியலாக காண்கின்றோம்.
3. புள்ளியியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும்.
4. இது விவரங்களைப் பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை சோதனை செய்து துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.
5. புள்ளி விவரங்களை திரட்டுவது, அட்டவணையிடுவது. முடிவுகளை எடுப்பது. தீர்மானங்களைச் செய்வது என பல புள்ளிவிவர நடவடிக்கைகளில் கலையியலின் உட்கூறுகள் கலந்துள்ளன.
புள்ளியியலின் பரப்பு:
1. புள்ளியியல் பரப்பு மிகவும் விரிந்ததாகும்.
2. புள்ளியியல் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதனை காண்போம்.
பொருளியலில் புள்ளியியல் :
1. பொருளியியலில் பல சிக்கல்கள் உள்ளன.
2. எடுத்துக்காட்டாக, உற்பத்தி, வருமானம், செலவு, பகிர்வு, சேமிப்பு போன்றவையாகும்.
3. விவரங்களைத் திரட்டுவது, வகைப்படுத்துவது, பகுப்பாய்வு செய்வது, முடிவுகளை எடுப்பது, கொள்கைகளை வகுப்பது என புள்ளியியல் பொருளியலில் இரண்டறக் கலந்துள்ளது.
தொழிலில் புள்ளியியல் : தொழிற்சாலைகளில் புள்ளியலின் பயன்கள் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளன. மிக முக்கியமாக தரக்கட்டுப்பாட்டு நுட்பம் (Quality Control) இங்குப் பயன்படுத்தப்படுகிறது.
புள்ளியிலும் வாணிகமும் :
1. வாணிகத்திற்கு புள்ளியியல் முக்கியமானதாகும்.
2. நடப்பு நிலைகளைப் புரிந்து கொள்ளவும், எதிர்காலப் போக்கினை உணர்ந்து கொள்ளவும் சந்தை ஆய்வுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
புள்ளியியலும், கல்வியியலும் :
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய கல்விக்கான தேவையைக் கண்டறிவதில் புள்ளியியல் மிகப்பெரிய பங்கினை வகிக்கின்றது.
புள்ளியியலும் திட்டமிடலும் :
1. அனைத்து அரசுத் துறைகளும் சிறப்பாக இயங்கும் பொருட்டு திட்டமிடலின் அடிப்படையிலே செயல்படுகின்றன.
2. திட்டமிடுதலில் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் புள்ளிவிவரங்கள் துணை செய்கின்றன.
புள்ளியியலும், மருத்துவமும் :
1. மருத்துவத்தில் புள்ளியியல் பெருமளவுக்குப் பயன்படுகின்றது.
உடல் சோதனைகள் அனைத்தும் புள்ளி விவரங்களாகத் தொகுக்கப்படுகின்றன.
2. மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்திலும் புள்ளியியலின் பல்வேறு பகுதிகள் பயன்படுகிறது.
புள்ளியியலும் நவீன பயன்பாடுகளும்:
புள்ளியியல், நிறுவனங்களின் முடிவெடுத்தலில் புதிய மாதிரிகளை உருவாக்கி துல்லியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இப்பணியினைச் செய்வதற்குப் பல புதிய மென் பொருட்களை உருவாக்கியுள்ளனர்.
2.
பொருளாதாரம் சார்ந்த காரணிகள் :
இயற்கை வளங்கள் : ஒரு நாடு பெற்றுள்ள இயற்கை வளங்களின் அளவு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணியாகும். முன்னேற்றத்திற்கு தேவைப்படும் அளவுக்கு ஒரு நாடு இயற்கை வளங்களை பெற்றிருக்க வேண்டும்.
மூலதன உருவாக்கம் : மூலதனம் பொருளாதாரத்தின் அனைத்துச் செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனமே, மூலதன உருவாக்கம் என்பர்.
சந்தையின் அளவு : சந்தை அளவானது பெரிய அளவில் இருந்தால் கூடுதலான உற்பத்தி, அதிக வேலைவாய்ப்பு, தலா வருமானம் உயர்வு ஆகியவற்றைத் தூண்டி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
கட்டமைப்பு மாற்றம் : கட்டமைப்பு மாற்றம் என்பது பொருளாதாரத்தில் தொழில் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கும்.
விற்பனைக்குரிய உபரி : வேளாண் துறையில் குடும்பத்திற்கான நுகர்வுத் தேவையை விட கூடுதலாக செய்யப்படும் உற்பத்தியை விற்பனைக்குரிய உபரி என்கிறோம்.
பன்னாட்டு வாணிகம் : பன்னாட்டு வாணிகத்தில் சாதகமான சூழ்நிலை இருந்தால் ஒரு நாடு போதுமான அளவு அயல் நாட்டுச் செலவாணியைக் கையிருப்பில் வைக்க முடியும்.
பொருளாதார அமைப்பு முறை : ஒரு நாடு தடையில்லா பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தால் கட்டளைப் பொருளாதாரத்தைவிட வேகமான வளர்ச்சி பெறும்.
3.
இப்போதுள்ள சந்ததியினருக்கு மட்டுமின்றி எதிர்காலச் சந்ததியினருடன் வாழ்வதற்குத் தேவையான வளத்தை வைத்து விட்டு அடைகின்ற மேம்பாடே நீடித்த நிலையான மேம்பாடு எனப்படும்.
மேல்தட்டு மக்களின் ஆடம்பர விருப்பங்கள் மட்டுமல்லாது ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளான, உணவு, துப்புரவு, உடல்நலம், கல்வி முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
நீடித்த நிலையான மேம்பாட்டின் நோக்கங்கள்
1. எல்லா வடிவங்களிலும் எல்லா இடத்திலும் வறுமையை ஒழித்தல்.
2. அனைத்து வயதினரின் நலமான வாழ்வை உறுதிப்படுத்துதல்.
3. எல்லோரையும் உள்ளடக்கிய தரமான கல்வியை வழங்கி வாழ்நாள் முழுக்கக் கற்றுக்கொள்ள வசதி செய்தல்.
4. பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் பாலின சமன்பாட்டை சாதித்தல்.
5. குடிநீரும், துப்புரவும் அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
6. தூய்மையான, நீடித்த, நிலையான, எளிதில் பெறக்கூடிய, சக்தியினை அனைவருக்கும் உறுதிப்படுத்துதல்.
7. தேவையான கட்டமைப்புகளை வழங்குதல், தொழில்மயமாக்கல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல்.
8. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமமின்மையை அகற்றுதல்.
9. பாதுகாப்பான, அமைதியான யாவரையும் உள்ளடக்கிய நகரங்களை உருவாக்குதல்
10. நீடித்த நிலையான உற்பத்தியையும் நுகர்வினையும் உறுதிப்படுத்துதல்.
4.
5.
6.
7.
ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினைத் துவங்கியது.
ரிசர்வ் வங்கியின் பணிகளாவன :
பண அதிகார அமைப்பு : இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அயல்நாட்டு செலாவணி பரிமாற்ற விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்துநிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கி அமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது.
காகிதப் பண வெளியீடு : காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமைப் பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.
வங்கி உரிமங்கள் வழங்குபவர் : வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22இன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.
அரசுக்கான வங்கி : இது மத்திய, மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகாலக் கடன்கள், கடன் தொடர்பான சேவைகள், அரசின் கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வது மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
வங்கிகளின் வங்கி : இது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். வங்கிகளின் வைப்புகளை ஏற்று, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்வதால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
கடை நிலைக் கடன் ஈவோன் : வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.
தீர்வாக செயல்படுகிறது : வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிமாற்றங்களை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிமாற்றக் கருவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.
8.
அ. முதல்நிலைப் பணிகள் :
i) பணம் ஓர் பரிமாற்றக் கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக : பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
ஆ. இரண்டாம் நிலைப் பணிகள்
i) பணம் ஒரு மதிப்பின் நிலைக்கலனாக: பண்டங்களைச் சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பண்டங்களையும் பணிகளையும் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன.
ii) பணம் வருங்காலச் செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது.
iii) பணம் வாங்கும்திறனை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக : பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிமாற்றம் விரிவடைந்து செல்கிறது.
இ. துணைப்பணிகள் :
i) கடனுக்கான அடிப்படை : கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பின் அளவை பொருத்தே கடன்களை உருவாக்குகின்றன.
ii) பணம் நாட்டு வருமானப் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் நாட்டு வருமானப் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி, இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது நாட்டு வருமானத்தை எளிதாகப் பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளையும், இறுதி நிலை உற்பத்தித் திறன்களையும் சமன் செய்திட பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்தப் பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தாம் நுகரும் பல்வேறு பண்டங்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துகிறது : மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
ஈ. இதர பணிகள் :
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனைக் குறிக்கிறது : எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் எனும் வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையைத் தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடு பொருட்களையும் வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
9.
1. அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலியும், இதர பண்டங்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடியனாது உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும்.
2. அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியைச் சேமிக்கவும் செய்வர்.
இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில்
3. நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
ΔΥ = 100 + 100 × 4/5 + 100x [4/5]2 + 100 x [4/5]3
அல்லது,
ΔΥ = 100 + 100 × 0.8+100x (0.8)2 + 100 x (0.8) = 100+80+64 +51.2...
= 500
அதாவது 100 × 1/1-4/5
100 x 1/1/5
100 × 5 = ₹500
உதாரணமாக C
100+ 0.8Y, I = 100,
என்றால் Y 1Y-0.8Y 0.2Y Y 100+0.8Y + 100 200 = 200/0.2 = 1000 → B
I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால் 0.2Y = 210 Y = 210/0.2 = 1050 → D
1, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100+0.8 (500) = 500; S = 0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = \(\frac{1}{0.2}=5\)
10.
J.B.சேயின் சந்தை விதியின் திறனாய்வுகளாவன:
1. கீன்சின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது.
2. உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் இந்த விதி செயல்படாது.
3. பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது.
4. தனிமனிதர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளுக்காகவும்,' வணிகர்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் பணத்தை இருப்பாக வைத்திருப்பார்கள் ஆகவே பணம் நடுநிலையாக இருக்காது.
5. சேயின் அங்காடி விதியானது, அளிப்பு தன் தேவையைத் தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதால், அதிக உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது.
6. முதலாளித்துவ நாடுகளில் குறைவான வேலை உள்ளதால் முழு வேலை வாய்ப்புக்கு வாய்ப்பில்லை என்று கீன்சு கூறுகிறார்.
7. அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக வேலையின்மையும் பல முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதால் அரசுத் தலையீடு அவசியம் என கீன்சு கருதுகிறார்.
11.
நாட்டு வருமானத்தை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை,
1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் முறை.
2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும் செலவு முறை.
உற்பத்தி முறை :
1. உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியைக் கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது.
2. ஒரு துறையின் வெளியிடு பொருள் மற்றொரு துறையின் உள்ளிடுபொருளாகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இருமுறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.
3. இதற்கு இருமுறைக் கணக்கிடல் எனப் பெயர். இதனைத் தவிர்க்க வினை முடிந்த பண்டங்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வருமான முறை :
1. வருமான முறை என்பது நாட்டு வருமான கணக்கிடலைப் பகிர்வு பகுதியிலிருந்து அணுகுகிறது.
2. உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங் களையும் கூட்டி நாட்டு வருமானத்தைக் கணக்கிடலாம்.
3. வருமான முறையானது, காரணிகள் ஈட்டும் வருமான முறை எனவும் அழைக்கப்படுகிறது.
செலவு முறை:
1. இம்முறையில் ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்தச் செலவுகள் அனைத்தையும் கூட்டி நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
2. தனிமனிதரின் சொந்த நுகர்வுச் செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டுப் பொருள் வாங்கும் செலவு, நிகர ஏற்றுமதி முதலான அனைத்துச் செலவுகளையும் கூட்டி செலவு முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
GNP = C+I+G+(X-M)
12.
| வ.எண் | தன்மைகள் | முதலாளித்துவம் | சமத்துவம் | |
| 1 | உற்பத்தி மூலங்களின் உரிமை | தனியார் உரிமை | பொது (அரசு) உரிமை | |
| 2 | பொருளாதார நோக்கம் | இலாபம் | சமூக நலன் | |
| 3 | மைய பிரச்சனைகளின் தீர்வு | தடையில்லா சந்தை முறை | ஒன்றிய அரசின் திட்டமுறை | |
| 4 | அரசின் பங்கு | மூலப் பொருள்கள் கட்டுப்பாடு மட்டும் | முழு ஈடுபாடு | |
| 5 | வருமானப் பங்கீடு | சமனற்ற நிலை | சமநிலை | |
| 6 | நிறுவன தன்மை | தனியார் நிறுவனம் | அரசு நிறுவனம் | |
| 7 | பொருளாதார சுதந்திரம் | முழுமையான சுதந்திரம் | சுதந்திரமின்மை | |
| 8 | முக்கியமான சிக்கல் | சமமின்மை | திறனின்மை | |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards