12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
2.
பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1962
1972
1930
1985
3.
உடனடிச் சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
பொருட்கள்
பரிவர்த்தனை
ஒழுங்குமுறை
காலம்
4.
பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?
வகுப்பறையில்
வேலையில்லா நாட்களில்
தொழிற்சாலைக்கு வெளியே
விளையாட்டு மைதானத்தில்
5.
தேர்வு பொதுவாக ஒரு _____ செயலாக கருதப்படுகிறது.
நேர்மறை
எதிர்மறை
இயற்கை
இவை ஒன்றும் இல்லை
6.
பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.
அக வள
புற வள
புறத்திறனீட்டல்
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.
7.
மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.
அக, புற
முதலாளி, தொழிலாளி
உரிமையாளர், வேலைக்காரன்
முதல்வர், முகவர்
8.
9.
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
1988
1992
1995
1998
10.
நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
காளை
கரடி
மான்
வாத்து
11.
பங்குச் சந்தை _______ வியாபாரத்தை அனுமதிக்கிறது.
நிறுவனங்களின் அனைத்து வகையிலான பங்குகள்
அரசாங்கம் வெளியிடும் பத்திரங்கள்
பட்டியலிடப்பட்ட பத்திரங்கள்
பட்டியலிடப்படாத பத்திரங்கள்
12.
நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
21
24
20
25
13.
14.
15.
16.
உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
உடனடியாக
எதிர்காலத்தில்
நிலையானது
ஒரு மாதத்திற்குப் பின்னர்
17.
_________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.
முதுகலை வணிக மேலாண்மை (MBM)
விதிவிலக்கு மேலாண்மை (MBE)
குறியிலக்கு மேலாண்மை (MBO)
முதுகலை வணிக நிர்வாகம் (MBA)
18.
_____ ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது.
ஒருங்கிணைத்தல்
கட்டுப்படுத்துதல்
பணியமர்த்துதல்
ஒழுங்கமைத்தல்
19.
பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களில் அளவு _______.
அதிகம்
குறைவு
பன்மடங்கு
கூடுதல்
20.
மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும்.
மேலாளர்
கீழ்ப்பணியாளர்
மேற்பார்வையாளர்
உயரதிகாரி
21.
"விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன?
22.
நேர்காணல் என்றால் என்ன?
23.
பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?
24.
மாற்றம் என்பதன் பொருள் யாது?
25.
மூலதனச் சந்தை என்றால் என்ன?
26.
விதிவிலக்கு மேலாண்மையின் பொருளை எடுத்துக்கூறுக.
27.
மேலாளர் என்பவர் யார்?
28.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
29.
நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?
30.
சந்தை எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.(ஏதேனும் 5)
31.
மனித வளத்தின் தனிப்பட்ட அம்சங்களை விளக்குக.
32.
பணச்சந்தையின் ஆவணங்களை விவரி.
33.
நிதிச் சந்தையின் பணிகள் யாவை?
34.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
35.
36.
வணிகத்தின் மூன்று முக்கிய கூறுகள் யாவை?
37.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?
38.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
39.
காளை மற்றும் கரடி - விளக்குக.
40.
கருவூல இரசீதின் வகைகளை விவரி. (ஏதேனும் 3)
41.
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
1.
(a)
2.
(c)
1930
3.
(b)
பரிவர்த்தனை
4.
(b)
வேலையில்லா நாட்களில்
5.
(b)
எதிர்மறை
6.
(a)
அக வள
7.
(b)
முதலாளி, தொழிலாளி
8.
(b)
9.
(a)
1988
10.
(a)
காளை
11.
(c)
பட்டியலிடப்பட்ட பத்திரங்கள்
12.
(b)
24
13.
(c)
14.
(a)
15.
(b)
16.
(a)
உடனடியாக
17.
(c)
குறியிலக்கு மேலாண்மை (MBO)
18.
(a)
ஒருங்கிணைத்தல்
19.
(b)
குறைவு
20.
(a)
மேலாளர்
21.
(i) "விற்பனையாளர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" (Let the Seller Beware) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
(ii) விற்பனையாளர்கள் தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்க இயலாது. விளம்பரங்களில் "பொருட்கள் உள்ளது உள்ளபடி” என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டாலொழிய, பொருட்களை வாங்குபவருக்கு, அப்பொருளை வாங்குவதற்கான நோக்கத்தை அப்பொருள் நிறைவேற்றும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே' விற்பனையாளர் அப்பொருளை விற்பனை செய்ய வேண்டும்.
22.
(i) தேர்வு நடவடிக்கையில் அடுத்த நிலை நேர்காணல் ஆகும். இது 'வொயர்' எனும் பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் 'மற்றவரைக் காணல்' என்பதாகும்.
(ii) தேர்ந்தெடுப்பவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுபவர் இருவரும் முகத்திற்கு முகம் பார்த்து அறிந்து உரையாடுவதை குறிக்கிறது.
23.
1) நிரந்தரக் கணக்கு எண்
2) வாக்காளர் அட்டை
3) கடவுச் சீட்டு
4) ஓட்டுநர் உரிமம்
5) வங்கி செல்லேடு
6) வருமான வரி படிவங்கள்
7) மின்கட்டண ரசீது
8) தொலைபேசிக் கட்டண ரசீது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றிதழ்கள் சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள் போன்றவை அடையாள ஆதாரங்களாகும்.
9) சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள்
24.
ஒரு பத்திரத்தை வாங்குவதற்காக மற்றொரு பத்திரத்தை விற்பனை செய்ய கொண்டு செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட அதன் திறந்த சந்தை செயல்பாடு மாறுதல் என்று அழைக்கப்படுகிறது.
25.
(i) மூலதனச் சந்தை என்பது நிதி பத்திரங்களான பிணையங்கள், மற்றும் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடும் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கூடும் ஒரு சந்தை ஆகும்.
(ii) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் போன்ற பங்கேற்பாளர்களால் வாங்குதல் மற்றும் விற்றல் மேற்கொள்ளப்படுகிறது.
26.
விதிவிலக்கு மேலாண்மை என்பது நெறிமுறையிலிருந்து விலகிப் போகும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்கும், கையாளுவதற்கும் கவனம் செலுத்துகின்ற வணிக நிர்வாகத்தின் ஒரு பாணியாகும்.
27.
(i) ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
(ii) ஒரு மேலாளர் என்பவர் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் என இரண்டினையும் மேற்கொள்கிறார்.
28.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
29.
1. நுகர்வோரை வணிகத்தின் மன்னராக கருதப்பட்டாலும் அவர்களுடைய நலன்கள் ஏறத்தாழ புறக்கணிக்கப்படுகின்றன.
2. பொருட்களின் பற்றாக்குறை, கிடைத்ததை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு நுகர்வோரை தள்ளி விடுகின்றது.
3. பொருட்களின் தரம் விட்டுக்கொடுக்கப்படுகிறது. உத்திரவாதம் அர்த்தமற்றதாகிறது. நுகர்வோருக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.
4. வணிக நிறுவனங்களுக்கு கொள்ளை இலாபம் ஈட்டுதல் எனும் ஒற்றை நோக்கம் மட்டுமே மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது.
5. எனவே இத்தகைய சூழலில் நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
30.
பல்வேறு அணுகுமுறையின் அடிப்படையில் சந்தையை பகுதிகள், பொருட்களின் இயல்பு மற்றும் பொருளாதார பார்வை, பரிமாற்றம், ஒழுங்குமுறை, காலம், அளவு மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் சந்தை வகைப்படுத்தப்படுகிறது.
புவியியல் அடிப்படையில்:
(i) குடும்ப சந்தை
(ii) உள்ளூர் சந்தை
(iii) தேசிய சந்தை
(iv) பன்னாட்டு சந்தை அல்லது உலகளாவிய சந்தை
பண்டகங்களின் / பொருட்களின் அடிப்படையில்:
அ. பண்டக சந்தை
(i) உற்பத்தி பொருள் மாற்று சந்தை
(ii) தயாரிப்பு பொருள் மாற்று சந்தை
(iii) சூரிய உலோகச் சந்தை
ஆ. மூலதன சந்தை
(i) பண சந்தை
(ii) அந்நிய செலாவணி சந்தை
(iii) பங்கு சந்தை
இ. பொருளாதாரத்தின் அடிப்படையில்:
(i) முறையான சந்தை
(ii) முறையற்ற அல்லது செம்மையற்ற சந்தை
ஈ. நடவடிக்கைகளின் அடிப்படையில்:
(i) உடனடிச்சந்தை
(ii) எதிர்கால சந்தை
உ. ஒழுங்குமுறை அடிப்படையில்:
(i) ஒழுங்குமுறை சந்தை
(ii) ஒழுங்குமுறையற்ற சந்தை
காலத்தின் அடிப்படையில்:
(i) மிகக் குறுகிய கால சந்தை
(ii) குறுகிய கால சந்தை
(iii) நீண்ட கால சந்தை
எ. தொழில் அளவின் அடிப்படையில்:
(i) மொத்த விற்பனை சந்தை
(ii) சில்லறை விற்பனை சந்தை
ஏ. முக்கியத்துவத்தின் அடிப்படையில்:
(i) முதன்மை சந்தை
(ii) இரண்டாம் நிலை சந்தை
(iii) முனையச் சந்தை
31.
1. உற்பத்தி செய்யும் ஒரே காரணியாக மனித வளம் திகழ்கிறது.
2. பிற அனைத்து வளங்களையும் மனித வளம் ஊக்குவிக்கிறது.
3. பணியமர்த்தப்பட்ட பணியாளர்களைக் கொண்டதே தவிர மனித வளம் என்பது பணியாளர் அல்ல.
4. மனித வளமானது கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
5. மனித வளங்கள் உணர்ச்சிபூர்வமானவை.
6. மனித வளங்களின் நடத்தைகளை ஊகிக்க முடியாது.
7. மனித வளங்கள் நகரும் தன்மை கொண்டது.
8. மனித வளமானது ஒரு குழுவாக செயல்படலாம்.
9. மனித வளங்கள் தனியாக சிந்திக்கவும், செயல்படவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் விளக்கவும் முடியும்.
10. மனித வளங்களால் உண்டாகும் மதிப்பு மற்றும் பாராட்டுக்கள் நீண்ட காலத்திற்கு கிடைக்கிறது.
11. நிதியுடன் அல்லது நிதியில்லாமலும் மனித வளங்கள் ஊக்குவிக்கப்படலாம்.
32.
1. கருவூல இரசீதுகள்:
(i) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கருவூல இரசீதுகள் தற்போது மிகவும் பிரபலமாக உள்ள வணிக மற்றும் அதிகளவு நீர்மைத் தன்மை கொண்ட ஆவணங்களாகும்.
(ii) கருவூல இரசீதுகள் என்பது குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய கடன் உறுதிப் பத்திரம்.
(iii) இதன் காலம் ஒரு வருடத்திற்கு மேல் இருக்காது.
i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்:
91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
ii) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்:
இந்திய ரிசர்வ் வங்கி, 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடுகிறது.
iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்:
(i) இது எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை.
(ii) இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினைப் பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது.
2. வைப்பு சான்றிதழ்கள்:
(i) வைப்பு சான்றிதழ்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் குறுகிய கால வைப்பு ஆவணங்களாகும்.
(ii) வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களது நிதி ஆதாரங்களை உயர்த்திக் கொள்வதற்காக வெளியிடுகின்றன.
(iii) வைப்பு சான்றிதழ்கள் எளிதில் மாற்றக்கூடிய இயல்புடையதாகவும், விரைவாக சந்தைப்படுத்தக் கூடியதாகவும், குறிப்பிட்ட முகமதிப்பு மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
(iv) இது மாற்றுமுறை ஆவண வைப்புச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
3. வணிக இரசீதுகள்:
(i) பொருட்களின் விற்பனையாளர்கள் மூலம் பொருட்களை வாங்குபவர் மீது எழுதி தயாரிக்கப்படும் ஒரு ஆவணமே வணிக இரசீது ஆகும்.
(ii) வணிக இரசீது சுய நீர்மை தன்மை, இரு நபர்களுக்கிடையிலான பரிமாற்றம், நடவடிக்கையின் சரியான தேதியை தெரிந்து கொள்ளும் தன்மை, நடவடிக்கை குறித்த வெளிப்படைத் தன்மை போன்ற நன்மைகளைக் கொண்டது.
i) தேவை மற்றும் பண்பாட்டு இரசீதுகள்:
(i) தேவை இரசீது என்பது பணம் செலுத்துவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படாத இரசீது ஆகும்.
(ii) தேவை இரசீது என்பது இந்த இரசீதை வைத்திருப்பவர் தனக்கு எப்பொழுது பணம் தேவைப்படுகிறதோ அப்போது இந்த இரசீதுக்கு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
ii) தூய்மை இரசீது மற்றும் ஆவண இரசீதுகள்:
(i) பொருட்களின் உரிமை ஆவணம் மூலம் இணைக்கப்பட்ட இரசீதுகள் ஆவண இரசீதுகள் எனப்படும்.
(ii) எந்த ஒரு ஆவணமும் எழுதி இணைக்கப்படாத இரசீதுகள் தூய்மை இரசீதுகள் ஆகும்.
iii) உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இரசீதுகள்:
(i) இந்தியாவில் எழுதப்பட்ட மற்றும் செலுத்த வேண்டிய இரசீதுகள் உள்நாட்டு இரசீதுகள் எனப்படும்.
(ii) இந்தியாவிற்கு வெளியே எழுதப்பட்டு இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ செலுத்தப்படும் இரசீதுகளை அயல்நாட்டு இரசீதுகள் என்றழைக்கப்படும்.
iv) தனித்துவமான இரசீதுகள்:
வரைதல் மற்றும் ஏற்றுக் கொள்ளல் உள்ளூர் வழக்கப்படி அல்லது வர்த்தகப் பயன்பாட்டின் மூலம் நிர்வகிக்கப்படுவதை குறிக்கும்.
v) இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள்:
உண்மையான வியாபார நடவடிக்கைகள் அல்லாமல் உருவாக்கப்படும் இரசீதுகளை இருப்பிட மற்றும் வழங்கள் இரசீதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
33.
இடைநிலையர் பணிகள்:
அ) வள ஆதாரங்களின் பரிமாற்றம்:
நிதிச் சந்தைகள் பொருளாதார மூல வளங்களை கடன் தருபவர்களிடமிருந்து கடன் பெறுபவர்களுக்கு மாற்ற உதவி புரிகின்றது.
ஆ) வருவாயை அதிகரித்தல்:
நிதிச் சந்தைகள் கடன் வழங்குபவர்கள். அவர்களின் உபரி நிதிநிலை முதலீடு செய்வதன் மூலம் வட்டி / பங்காதாயம் ஈட்ட அனுமதிக்கிறது. இது தேசிய வருமானத்தை அதிகரிக்க பங்களிப்பை வழங்குகிறது.
இ) ஆக்கப்பூர்வ பயன்பாடு:
நிதிச் சந்தை பெற்ற கடன் நிதியை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது தேசிய மொத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஈ) மூலதன உருவாக்கம்:
நிதிச் சந்தைகள் புதிய சேமிப்பு ஓட்டம் மூலம் ஒரு நாட்டின் மூலதன உருவாக்கத்திற்கு உதவி புரிய வழிவகை செய்கிறது.
உ) விலை தீர்மானம்:
வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் கலந்துரையாடல் மூலம் நிதி சார்ந்த சொத்துக்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தேவை மற்றும் அளிப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் நிதிகளை பங்கீடு செய்வதற்கு நிதிச் சந்தை வழி வகுக்கிறது.
ஊ) விற்பனை வழிமுறைகள்:
நிதிச் சந்தைகள், முதலீட்டாளர்கள் நிதிச் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு வழிமுறைகளை வழங்குகிறது.
எ) தகவல்கள்:
நிதிச் சந்தையில் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகள் சந்தையின் பல்வேறு பகுதிகளில் தகவல்களை உற்பத்தி செய்ய மற்றும் பரவலாக்க வழி வகுக்கிறது.
நிதிச் சார்ந்த பணிகள்:
அ) கடன் வாங்குபவர்களுக்கு நிதியை வழங்குகிறது. இதன் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த முடிகிறது.
ஆ) கடன் வழங்குபவர்கள் சொத்துக்களை ஈட்ட வழிவகை செய்கிறது. இதன் மூலம் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த துணிகர முயற்சியை பயன்படுத்தி செல்வம் ஈட்ட முடிகிறது.
இ) சந்தையில் நீர்மைத் தன்மையை வழங்குகிறது. இதன் மூலம் நிதியை வணிகம் செய்ய உதவுகிறது.
34.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
35.
36.
(i) உற்பத்தியாளர்கள்
(ii) நுகர்வோர்
(iii) அரசாங்கம்
37.
1. நவீன சந்தையிடுகை கொள்கையானது அறிவு தரத்தை பயன்படுத்த உதவுகிறது.
2. சந்தையிடுகை துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
3. கொள்கை வழிகாட்டல் மேம்பாடு மற்றும் நல்லதொரு பயனுள்ள முடிவினை செயல்படுத்துகிறது.
4. சந்தையிடுகை தொடர்புள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வழிவகை செய்கிறது.
5. சந்தையிடுகை தொடர்பான பிரச்சனை குறித்து மேலும் தகவல்களை கண்டு உணருகிறது.
6. முன்னேற்ற செயல் குறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்கிறது.
38.
(i) புறத்தோற்றமற்ற பத்திரங்கள் உருவாக்கம் என்பது நிறுவன பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து புறத்தோற்றமில்லாத வகையில் பத்திரங்களாக மாற்றல் என்பதாகும்.
(ii) முதலீட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலில் வைப்பக பங்கேற்பாளர்களுடன் (Depository Participant) கணக்கை தொடங்க வேண்டும்.
(iii) 1996 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
(iv) அங்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகள் விற்பனையில் ஈடுபட்டது. 1997 டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
39.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
40.
கருவூல இரசீதின் வகைகள் :
கால வரையறை அடிப்படையில் இந்த இரசீதுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
அவை பின்வருமாறு.
(a) 91 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(b) 182 நாட்கள் கருவூல இரசீதுகள்;
(c) 364 நாட்கள் கருவூல இரசீதுகள்
(i) 91 நாட்கள் கருவூல இரசீதுகள் ஒரு நிலையான 4 சதவீத தள்ளுபடி விகிதத்தில் ஏலத்தின் மூலம் வெளியிடப்படுகின்றன.
(ii) இந்திய ரிசர்வ் வங்கி 91 நாட்கள் மற்றும் 182 நாட்கள் கருவூல இரசீதுகளை ஒரு வாரம் முழுவதும் வடிகட்டும் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
(iii) 364 நாட்கள் கருவூல இரசீதுகள் எவ்வித நிலையான விகிதமும் கொண்டு செயல்படுவதில்லை. இந்த தள்ளுபடி விகிதம் அதிகார அமைப்பின் இசைவினை பெற்று பங்கேற்பாளர்களுக்கு ஏலத்தில் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய விகிதத்தையே தள்ளுபடி விகிதம் என்று குறிப்பிடப்படுகிறது.
41.
(i) குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளை இணைக்க குறியிலக்கு மேலாண்மை முயற்சி செய்கிறது.
(ii) சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
(iii) குறியிலக்கு மேலாண்மை இலக்குகளை மட்டும் அடையச் செய்வதல்ல, திறமையான செயல்திறனையும் அடையச் செய்கிறது.
(iv) இது அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைவதற்கான அமைப்பின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை மூலம் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊக்கம் மற்றும் திருப்தி கிடைக்கச் செய்கிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards