12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
இந்தியப் பத்திர மற்றும் மாற்றகங்களின் வாரியம் (செபி)
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுவது
இழப்பு
திருட்டு
மோசடி
இவை அனைத்தும்
2.
PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும்.
நிரந்தரத் தொகை எண்
முதன்மைக்கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு வாரிசு
3.
தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும்.
ஜனவரி 1996
ஜூன் 1998
டிசம்பர் 1996
டிசம்பர் 1998
4.
5.
இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (SEBI) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______
1988
1992
1995
1998
6.
முகவரிச் சான்று ஆதாரங்களை கூறுக?
7.
செபி இந்தியாவில் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
8.
செபி என்பது யாது?
9.
செபியின் மூன்று முக்கிய செயல்பாடுகள் யாவை?
10.
பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?
11.
செபியின் தலைமையகம் பற்றி குறிப்பிடுக.
12.
செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக
13.
செபியின் நோக்கங்களை கூறு?
14.
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
15.
உள்வழி வர்த்தகம் என்றால் என்ன?
16.
புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன?
17.
புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.
18.
செபியின் பணிகளை விவரி.(ஏதேனும் 5)
19.
முகவரிச் சான்று
20.
அடையாள சான்று
21.
செபியின் உறுப்பினர்
22.
செபி
23.
புறத்தோற்றமற்ற கணக்கு துவங்கிய பின் ________ இருப்பு பராமரிக்க தேவையில்லை
24.
ரிலையன்ஸ் நிறுவனம் _________ பங்குகளை புறத்தோற்றமற்ற வடிவில் முதன்முதலாக பத்திர விற்பனையில் ஈடுபட்டது
25.
________ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை செபி கொண்டுள்ளது
26.
பத்திரங்களை பரிமாற்றப்படுவதற்காக ________ கட்டண கடமை அவசியமில்லை.
27.
________ நலன்களை பாதுகாப்பதற்கான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்களை செபி ஒழுங்குபடுத்துகிறது
1.
(d)
இவை அனைத்தும்
2.
(c)
நிரந்தரக் கணக்கு எண்
3.
(c)
டிசம்பர் 1996
4.
(b)
5.
(a)
1988
6.
1. குடும்ப அட்டை
2. கடவுச் சீட்டு
3. வாக்காளர் அடையாள அட்டை
4. ஓட்டுநர் உரிமம்
5. வங்கி செல்புத்தகம்
6. மின் கட்டண ரசீது
7.
(i) இந்தியாவில் முதன் முதலில் 1988ல் சந்தைப் பாத்திரங்களை ஒழுங்குபடுத்தும், ஒரு சட்டபூர்வமற்ற அமைப்பாக நிறுவப்பட்டது
(ii) 1992 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி இந்திய அரசாங்கத்தால் சுயமாக இயங்கக்கூடிய ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது
8.
(i) இந்தியப் பத்திர மாற்றக வாரியம் (செபி)
(ii) பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தப்படும், கட்டுப்படுத்தும், சட்டபூர்வமான அமைப்பு ஆகும்
9.
(i) விதிமுறைகளை வகுப்பது
(ii) விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவது
(iii) ஆணைகள் மற்றும் தீர்வுகளை இயற்றுவது
10.
1) நிரந்தரக் கணக்கு எண்
2) வாக்காளர் அட்டை
3) கடவுச் சீட்டு
4) ஓட்டுநர் உரிமம்
5) வங்கி செல்லேடு
6) வருமான வரி படிவங்கள்
7) மின்கட்டண ரசீது
8) தொலைபேசிக் கட்டண ரசீது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றிதழ்கள் சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள் போன்றவை அடையாள ஆதாரங்களாகும்.
9) சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள்
11.
1. மும்பையில் உள்ள பாந்திரா குர்லா வளாகத்தின் வணிக மாவட்டத்திலுள்ளது செபியின் தலைமையகம் உள்ளது
2. மேலும் புதுதில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் அஹமதாபாத்தில் வடக்கு, கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.
12.
(i) பங்கு பரிவர்த்தனைகளின் ஒழுங்குமுறை : செபியின் முதல் நோக்கம் பங்குச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
(ii) முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு : முதலீட்டாளர்கள் இல்லாத நிலையில் மூலதனச் சந்தை அர்த்தமற்றதாகும்.
13.
1. பரஸ்பர நிதி இயக்கத்தின் செயல்பாடுகளை கண்காணித்தல்
2. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிறுவனங்களை தடை செய்தல்
3. முதலீட்டாளர்கள் நலன்களை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்குதல்
4. தணிக்கை மற்றும் ஆய்வுகளை நடத்துதல்
5. உள் வழி வணிகத்தை தடுத்தல்
14.
செபி அதன் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பின்வருவன அடங்கும்
15.
நிறுவனத்தின் சில ரகசிய தகவலை அணுகும் மற்றும் ரகசிய தகவலைப் பயன்படுத்த விரும்பும் நபர்களான இயக்குனர்கள், தோற்றுவிப்பாளர்கள் மற்றும் பிற நபர்களால் மேற்கொள்ளப்படும் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் உள்வழி வர்த்தகம் (அல்லது) உள்வழி வியாபாரம் எனப்படுகிறது.
16.
(i) புறத்தோற்றமற்ற பத்திரங்கள் உருவாக்கம் என்பது நிறுவன பதிவாளரால் காகித வடிவிலான பங்குச் சான்றிதழை அழித்து புறத்தோற்றமில்லாத வகையில் பத்திரங்களாக மாற்றல் என்பதாகும்.
(ii) முதலீட்டாளர்களின் வேண்டுகோளின் பேரில் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக உருமாற்றம் செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் முதலில் வைப்பக பங்கேற்பாளர்களுடன் (Depository Participant) கணக்கை தொடங்க வேண்டும்.
(iii) 1996 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) முதன்முதலாக புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
(iv) அங்கு ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக 100 பங்குகள் விற்பனையில் ஈடுபட்டது. 1997 டிசம்பர் மாதம் மும்பை பங்குச் சந்தை புறத்தோற்றமற்ற பத்திரங்கள் வர்த்தகத்தை தொடங்கியது.
17.
1. இழப்பு, திருட்டு, மோசடி மற்றும் சேதம் போன்ற பங்குச் சான்றிதழ்களைப் பற்றிய அபாயங்களை புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுகின்றன.
2. விரைவான பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தகத்தில் அதிக செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது.
3. தரகர்களின் வருகை தேவையில்லாமலேயே கணினி மூலம் வர்த்தகம் செய்ய முடியும்.
4. நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குகள் இணைப்பு மூலம் உருவாக்கப்படும் பங்குகள் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
5. எல்லா பரிவர்த்தனைகளும் வைப்பக பங்குதாரர்கள் மூலமாக நடக்கும் போது, ஒரு வர்த்தகர் தனித்தனியாக எல்லா நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ள தேவையில்லை.
6. பத்திரங்களை பரிமாற்றுவதற்காக முத்திரைத்தாள் கட்டண கடமை அவசியமில்லை. இதனால் கணிசமான அளவு பரிவர்த்தனை செலவு குறைகிறது.
7. ஒரு குறிப்பிட்ட கணக்கில் பங்கு மற்றும் கடனீட்டுப் பத்திரங்களை இருவரும் வைத்திருக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.
8. வங்கிகள் அனைத்து நடைமுறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சேவையாளர்களை வைத்துள்ளனர்.
9. புறத்தோற்றமற்ற கணக்கு வைத்திருப்பவர் பங்குகளை எந்த அளவு வாங்கவும், விற்கவும் முடியும்.
10. கடன் வழங்குபவர்களுக்கு ஒரு இணைப்பாக வழங்குவதன் மூலம் புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு வைத்திருப்பவர் நடைபெறும் பத்திரங்களுக்கு எதிரான கடனை வழங்குகின்றனர்.
18.
(i) போதுமான கல்வி மற்றும் வழிகாட்டல் மூலம் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கிறது.
(ii) பங்குச் சந்தைகளில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல். தரகர்கள் மற்றும் துணை தரகர்கள் ஆகியோர் நிதிச்சந்தையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பங்கு பரிவர்த்தனை விசாரணைகள், இடைத்தரகர்கள் மற்றும் தன்னியக்க ஒழுங்குபடுத்தும் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை செபி எடுக்கிறது.
(iii) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை தடை செய்கிறது.
(iv) பங்குச் சந்தைகளில் செயல்படும் நிதி இடைத்தரகர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் நியாயமற்ற முறைகளை தடை செய்கிறது.
(v) நிதி இடைத்தரகர்களுக்கு பொருத்தமான பயிற்சி அளித்தல், பங்குச் சந்தையில் ஆரோக்கியமான சூழலுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், முதலீட்டாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
(vi) சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான கட்டணம் வசூலித்தல் அல்லது சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கான வேறு எந்த வகை கட்டணம் வசூலித்தலும் இதில் அடங்கும்.
(vii) இந்திய மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
(viii) இடைத்தரகர்களின் சுய ஒழுங்குமுறை அமைப்பை ஊக்குவித்தல்.
(ix) இது விரிவான சட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது.
19.
கடவுச் சீட்டு
20.
நிரந்தர கணக்கு எண்
21.
பிரிவு அலுவலர்
22.
1992
23.
( )
குறைந்தபட்ச
24.
( )
100
25.
( )
உள்வழி
26.
( )
முத்திரைத்தாள்
27.
( )
முதலீட்டாளர்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards