12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
வங்கியியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.
2.
பண அங்காடியையும், மூலதன அங்காடியையும் வேறுபடுத்துக.
3.
இந்தியத் தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.
4.
நபார்டின் பணிகள் யாவை?
5.
கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.
6.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?
7.
8.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
9.
வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக
10.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.
1.
பணமதிப்பு நீக்கம் : பணமதிப்பு நீக்கம் என்பது அரசின் சட்டப்படியான பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பைச் செல்லாது என அறிவிக்கும் செயலாகும்.
பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் :
1. கருப்புப் பணத்தை ஒழிப்பது.
2. இலஞ்சத்தைத் தடுப்பது.
3. தீவிரவாதத்திற்குப் பணம் செல்வதை தடுப்பது
4. கள்ளப் பணத்தைத் தடுப்பது ஆகியன.
2.
| பணச்சந்தை | மூலதனச்சந்தை | |
| 1 | அதிக நீர்மைத் தன்மையைக் கொண்டதும் குறுகிய காலத்தில், முதிர்ச்சியுறுவதுமான நிதிக்கருவிகளைக் கையாளும் அங்காடியே பண அங்காடி. | நீண்ட கால நிதிக் கருவிகளை வாணிபம் செய்யும் அங்காடி மூலதன அங்காடி |
| 2 | ஒருநாள் முதற்கொண்டு ஒரு ஆண்டிற்குள் முதிர்ச்சியடையும் நிதிக் கருவிகள் இவ்வங்காடியில் கையாளப்படுகின்றன. | உற்பத்தி நோக்கில் நிறுவனங்களும் அரசுக்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டும் இடமாகவும் மூலதன அங்காடி இருக்கிறது. |
| 3 | இங்கு கையாளப்படும் நிதிக்கருவிகள் அரசு பத்திரங்கள், வணிகப் பத்திரங்கள், அழைப்புப் பணம், வைப்புச் சான்றுகள், வங்கியாளர் ஏற்புகள், மாற்றுச் சீட்டுகள், மறு வாங்கல் ஒப்பந்தங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் அயல் நாட்டுச் செலாவணிகள் போன்றவை.. | மூலதன அங்காடியில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான நிதிக்கருவிகள், கடன் பத்திரங்களும், சமபங்குகளும் ஆகும் . |
3.
இந்தியத் தொழில் நிதிக் கழகத்தின் பணிகளாவன:
1. இந்திய ரூபாயிலும், வெளிநாட்டு பணத்தில் நீண்ட காலக் கடன்களை வழங்குகிறது.
2. வெளியிடப்பட்ட சம உரிமைப் பங்குகள், முன்னுரிமைப் பங்குகள், கடன் பத்திரங்களுக்கு ஒப்புறுதியளிக்கிறது.
3. இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கும் இந்தியாவிலிருந்து வாங்கப்படும் தொழிற்துறை இயந்திரங்களுக்குமான பணத்திற்கு உத்திரவாதம் அளிக்கின்றது.
4. வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அந்நாட்டின் பணத்தில் வாங்கப்படும் கடன்களுக்கான உத்திரவாதத்தையும் அளிக்கிறது.
4.
1. நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்திக்காகவும் முதலீட்டுக்காகவும், வேளாண்மை, சிறுதொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர ஊரக தொழில் நடவடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
2. இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் ஏற்பளிக்கப்படும் இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகிய கால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது.
3. கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்ட கால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
4. மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகியவற்றிற்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்ட கால கடனை அளிக்கிறது.
5. மைய அரசு, மாநில அரசுகள், திட்டக்குழு, மைய, மாநில அரசுகளின் - சிறுதொழில்கள், குடிசைத் தொழில்கள், கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், இதர மிகச்சிறு தொழில்களுக்கு உதவும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
6. நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள், துவக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியைச் செய்கிறது.
7. வேளாண்மைக்கும் ஊரக வளர்ச்சிக்குமான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.
5.
கடன் கட்டுப்பாட்டு முறை என்பது மைய வங்கியின் பணவியல் மேலாண்மையின் முக்கிய நோக்கம் ஆகும்.
6.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக பிரித்து கூறப்பட்டுள்ளன.
1. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பது.
2. தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது ஆகும்.
7.
8.
ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினைத் துவங்கியது.
ரிசர்வ் வங்கியின் பணிகளாவன :
பண அதிகார அமைப்பு : இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அயல்நாட்டு செலாவணி பரிமாற்ற விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்துநிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கி அமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது.
காகிதப் பண வெளியீடு : காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமைப் பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.
வங்கி உரிமங்கள் வழங்குபவர் : வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22இன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.
அரசுக்கான வங்கி : இது மத்திய, மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகாலக் கடன்கள், கடன் தொடர்பான சேவைகள், அரசின் கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வது மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
வங்கிகளின் வங்கி : இது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். வங்கிகளின் வைப்புகளை ஏற்று, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்வதால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
கடை நிலைக் கடன் ஈவோன் : வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.
தீர்வாக செயல்படுகிறது : வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிமாற்றங்களை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிமாற்றக் கருவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.
9.
வணிக வங்கிகள் இலாப நோக்கம் உடையவை. அவைகள் வைப்புகளைப் பெற்று முதலீட்டுக்கான கடன்களை அளிக்கின்றன.
வணிக வங்கியின் பணிகள்
முதன்மைப் பணிகள்:
வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்: பொதுமக்களால் செலுத்தப்படும் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். இது வங்கி வணிகத்திற்கான முக்கிய நிதியாதாரம் ஆகும். பொது வைப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
கேட்பு வைப்புகள் : இவை வங்கிகளில் வைப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர் முன்னறிவிப்பின்றி எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் ஒரு வைப்பாகும்.
கால வைப்புகள் : இவை ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை வங்கிகளிடமிருந்து மீளப் பெறப்படாமல் இருக்கும் வைப்புகளாகும். (எ.கா.) நிலை வைப்பு (Fixed Deposit), தொடர் (Recurring Deposit).
கடன் வழங்குதல் :
வணிக வங்கிகள் ரொக்கக் கடன், மாற்றுச் சீட்டு தள்ளுபடி, மிகைப்பற்று ஆகிய முறைகளில் கடன்களை வழங்குகின்றன.
இரண்டாம் நிலைப் பணிகள் :
முகமைப் பணிகள்: வங்கி வாடிக்கையாளர்களுக்கு முகவராக இருந்து செய்யும் பணிகள் முகமைப்பணிகள் எனப்படுகின்றன.
காசோலைகளைப் பணமாக்குதல்: தன் வாடிக்கையாளர்களுக்காக அவர்களுக்கு வரும் காசோலைகள், மாற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வங்கிகள் தீர்வகத்தின் மூலம் வசூல் செய்து கொடுக்கின்றன.
வருமானத்தைப் பெறுதல் : வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய இலாப ஈவு, ஓய்வூதியம், சம்பளம், வாடகை, வட்டி ஆகியவற்றினை வசூலித்துத் தருகின்றன.
செலவுகளைச் செலுத்துகிறது: தொலைபேசிக் கட்டணம், காப்பீட்டு பிரிமியம், கல்விக் கட்டணம், வாடகை செலுத்துதல் முதலானவற்றை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக செய்கிறது.
பொதுப் பயன்பாட்டுப் பணிகள் :
இது வங்கிகள் தன் வாடிக்கையாளர்களுக்காக சில கூடுதல் பயன்பாடுகளை உருவாக்கும் நோக்கில் செய்யும் பணிகளைப் பொதுப் பயன்பாட்டு பணிகள் என்கிறோம்.
பாதுகாப்புப் பெட்டக வசதி : நகைகள், பங்குகள், கடன் பத்திரங்கள் முதலான மதிப்புமிக்க பண்டங்களை பாதுகாக்க, பெட்டக வசதியை வணிக வங்கிகள் தருகின்றன.
பயணக் காசோலைகளை வழங்குதல்: பயணக் காசோலைகளை வழங்குவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத்தின் போது பணப்பாதுகாப்பினை வழங்குகிறது.
அயல்நாட்டுச் செலாவணியைக் கையாளுதல்: ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் வணிகர்களுக்கு வணிக வங்கிகள் அயல்நாட்டுச் செலாவணி வசதியைச் செய்து தருகின்றன.
நிதிமாற்றுதல்: ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு நிதியை மாற்றுவதாகும். வரைவு காசோலைகள், தொலைபேசி மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் மூலம் நிதி மாற்றப்படுகிறது.
கடன் உறுதியளிப்புக் கடிதம்: வாடிக்கையாளரின் கடன் நம்பகத்தன்மையைச் சான்றளிக்கும் விதமாக வணிக வங்கிகள் கடன் உறுதியளிப்பு கடிதங்களை வழங்குகின்றன.
இதர பணிகள் :
பண அளிப்பு : வணிக வங்கியின் முக்கியமான பணிகளில் ஒன்று பணப்புழக்க வேகத்தை அதிகரிப்பதன் மூலம் பண அளிப்பை அதிகரித்தல் ஆகும்.
கடன் உருவாக்கம் : கடன் உருவாக்கம் என்பது கடன்களையும், முன்பண அளிப்பினையும் அதிகரிக்கும் ஒரு செயல்.
புள்ளி விவரங்களை திரட்டுதல் : இந்திய ரிசர்வ் வங்கியை முதலான வணிக வங்கிகளும் வணிகம், தொழில், வேளாண்மை, நிதி முதலான அடிப்படைத் துறைகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.
10.
மூலதனத் திரட்சி :
1. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததான மூலதன திரட்சியில் வங்கிகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன
2. வணிக வங்கியானது தனது வங்கிப் பிரிவுகளின் கீழ் பரவலாகச் செயல்பட்டு பொதுமக்களின் சேமிப்பை வைப்புகளாகத் திரட்டி அவற்றை உற்பத்தி நோக்கத்திற்காக கடன்களாக வழங்குகின்றன.
கடன் உருவாக்கம் :
1. வங்கிகளின் கடன் உருவாக்கம் மூலம் முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக நிதியைப் பெற்றுத் தருகிறது.
2. இதன்மூலம் உற்பத்தி, வேலை வாய்ப்பு, வருமானம், விற்பனை ஆகியவை ஏற்றம் பெற்று விரைவான பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருகின்றன.
அதிக உற்பத்தித்திறனை கொண்ட முதலீட்டை நோக்கி பணத்தை முறைப் படுத்துதல் :
1. வங்கிகள் உற்பத்தி நோக்கில் பணத்தை முதலீடு செய்கின்றன.
2. ஒரு துறையில் செய்யப்பட்ட முதலீட்டின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தால் அத்துறைக்கு வழங்கப்படும் முதலீட்டுக் கடனைக் குறைத்துக்கொண்டு, அதிக உற்பத்தித்திறன் கொண்ட துறைகளுக்குக் கூடுதலாக முதலீட்டுக்கான கடனை மடைமாற்றம் செய்கிறது.
சரியான தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்:
1. வங்கிகள் சரியான தொழிலையும், சரியான நபர்களையும் தெரிந்தெடுத்துக் கடன் வழங்குவதால் தொழிற்பெருக்கம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உதவுகின்றன.
2. எந்த பொருளுக்கு அதிக தேவை உள்ளதோ அந்தப் பண்டத்தை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு கடன்களையும், முன் பணங்களையும் வழங்குகிறது.
கடனைப் பணமாக்குதல் :
வணிகத்தில் எழும் குறிப்பிட்ட காலக் கடன்களை இடையிலேயே ரொக்கமாக்கித் தருவதன் மூலம் உற்பத்தியிலும், வணிக நடவடிக்கைகளிலும் சுணக்கம் ஏற்படாமல் வணிக வங்கிகள் பாதுகாக்கிறது.
வேலைவாய்ப்பினை உருவாக்குதல் :
1. வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பின் வங்கித்துறை பெருமளவுக்கு வளர்ந்துள்ளது.
2. நிறைய எண்ணிக்கையில் கிளைகள் திறக்கப்பட்டு கடன் பெருக்கம் செய்வதால் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards