12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
நிதிப் பொருளியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
பொதுக்கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.
2.
முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?
3.
வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.
4.
தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.
5.
வரி விதிப்பு விதிகளை விவரிக்க.
6.
7.
8.
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
9.
மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?
10.
பொது நிதியின் எல்லைகளை விளக்குக.
1.
பொதுக்கடனை திரும்ப செலுத்தும் முறைகளாவன:
வரவு செலவுத் திட்ட உபரி:
உபரி வரவு செலவுத் திட்டத்தை அரசு தாக்கல் செய்யும்போது அந்த உபரியை கடன் திருப்பிச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளும்.
பொது வருவாய், பொதுச் செலவைவிட அதிகரிக்கும் போது உபரி ஏற்படுகிறது.
பகுதியாகச் செலுத்துதல்:
இந்த முறையின் கீழ் அரசு பொதுக்கடனை சமமான ஆண்டு தவணைகளாகச் செலுத்துகிறது.
இது பொதுக் கடனைச் செலுத்தும் மிக எளிதான முறையாகும்.
வட்டி வீதத்தை குறைத்தல்:
நிதிச் சிக்கல் ஏற்படும் நேரங்களில் கட்டாயமாக வட்டியைக் குறைத்துக் கடனை செலுத்துவதும் ஒரு வகையான கடன் தீர்வு முறையாகும்.
2.
முதன்மைப் பற்றாக்குறையானது நிதி பற்றாக்குறையிலிருந்து வட்டி செலுத்தலை கழித்த பின் உள்ள பற்றாக்குறையாகும். இது அரசின் உண்மையான சுமையைக் காட்டும்.
மேலும் இதில் முன்னர் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கணக்கில் கொள்ளாது. எனவே முதன்மைப் பற்றாக்குறை என்பது அரசின் கடனுக்கான குறிப்பாக வட்டி செலுத்தலுக்கான தேவையைக் குறிக்கும்.
எனவே நிதிப் பற்றாக்குறை முதன்மைப் பற்றாக்குறையைவிட அதிகமாக இருக்கும்.
| முதன்மைப் பற்றாக்குறை (PD) = நிதிப்பற்றாக்குறை (FD) - வட்டி செலுத்துதல் (IP) |
3.
வரியின் பண்புகளாவன:
வரி என்பது அரசுக்கு கட்டாயமாக செலுத்தக்கூடிய ஒன்றாகும்.
ஒவ்வொரு வரியும் வரி செலுத்துவோரின் தியாகத்தை உள்ளடக்கியது.
வரியானது சட்டத்தை மீறியதற்காக சுமத்தப்படும் தண்டத்தொகை போன்று விதிக்கப்படுவதல்ல.
4.
தனியார் நிதி மற்றும் பொது நிதியின் ஒற்றுமைகள்:
பகுத்தறியும் தன்மை: பொது நிதியும் தனி நிதியும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டும் குறைந்த செலவில் அதிக நலத்தைப் பெறுவதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டுள்ளன.
கடனுக்கான வரையறை: இரண்டுக்குமான கடன்கள் வரையறை கொண்டுள்ளது. அரசின் பற்றாக்குறை வரவு, செலவு, திட்டத்திற்கும் எல்லை இருக்கிறது.
வளங்களின் பயன்பாடு: தனியார் துறையும் பொது துறையும் வரையறுக்கப்பட்ட வளங்களையே கொண்டுள்ளன. இவ்விரண்டும் உத்தம அளவில் வளங்களைப் பயன்படுத்த முனைகின்றன.
5.
ஆடம் ஸ்மித்தின் கருத்துப்படி நான்கு புனித வரி விதிப்புகள் உள்ளன. அவையாவன:
1. செலுத்தும் திறன் பற்றிய விதி:
மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும்.
ஏழை அல்லது நடுத்தரப்பிரிவினரை ஒப்பிடும் போது செல்வந்தர்கள் அதிக வரி செலுத்த வேண்டும்.
2. நிச்சயத்தன்மை விதி:
வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியினை விதிக்க வேண்டும்.
அரசு தன்போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும்.
3. வசதி விதி: வரி செலுத்துவோர்கள் வரியை எளிதாகச் செலுத்தும் வண்ணம் வசதியான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
4. சிக்கன விதி :
அரசு வரிகளை வசூலிப்பதற்கு பணம் செலவிடுகிறது.
எடுத்துக்காட்டாக, வரிகளை வசூலிப்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. வசூலிப்பதற்கான செலவு வரிகளை விட அதிகமாக இருந்தால் அவை மோசமான வரிகளாகும்.
6.
7.
8.
கூட்டாட்சியின் கொள்கைகள் :
சுதந்திரம் :
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தைக் கடன் வாங்குவது, செலவினை சமாளிப்பது முதலானவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
சமத்துவம்:
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய்ப் பங்கினைப் பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை:
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்துதல்களை செய்ய வேண்டும்.
நிதி வசதி:
கூட்டரசு நிதி முறையில், மத்திய மாநில அரசுகளும் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பும் ஒன்றுபடுதலும்:
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
செயல் திறன் :
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து, திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஏய்ப்பு, மோசடி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது.
நிர்வாகச் சிக்கனம் : வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்குச் செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
9.
மறைமுக வரிகளின் நன்மைகள்:
பரந்து காணப்படுதல் :
எல்லா நுகர்வோர்களும் அவர்கள் ஏழை அல்லது பணக்காரர்களாக இருந்தாலும் மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டும்.
இதனால்தான் நேர்முக வரிகளை விட மறைமுக வரிகள் அதிகமானவர்களை உள்ளடக்கியுள்ளது.
சமத்துவம்:
பணக்காரர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஆடம்பரப் பண்டங்கள் மீது அதிக வரி சுமத்தப்படுவதால் மறைமுக வரி சமத்துவ விதியின் அடிப்படையில் அமைகிறது.
சிக்கனத் தன்மை:
உற்பத்தியாளர்களும், சில்லறை விற்பனையாளர்களும் வரியை வசூலித்து அரசுக்கு செலுத்துவதால் வசூலிப்பதற்கான செலவு குறைவாகிறது.
உடலுக்கு தீங்கான பண்டங்களின் நுகர்வைக் குறைக்கிறது:
அரசானது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பண்டங்கள் மீது மறைமுக வரியை விதிக்கிறது.
எ.கா. புகையிலை, மது போன்றவை மீதான் வரி ஆகும்.
வசதியானது:
மறைமுக வரியானது பண்டங்கள், பணிகள் மீது விதிக்கப்படுகிறது.
நுகர்வோர் இதனை வாங்கும்போது விலையுடன் சேர்த்து செலுத்திவிடுவதால், வரி செலுத்துவதை உணர்வதில்லை.
10.
பொது நிதியியலின் பாடப்பொருள்/எல்லைகள்:
பொது வருவாய்: பொது வருவாய் என்பது வருவாயைப் பெருக்கக்கூடிய முறைகளான வரி வருவாய்கள், வரியல்லா வருமானங்கள் பற்றியும், வரிக்கொள்கை, வரி விகிதம், வரிச்சுமை, வரியின் தாக்கம், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றையும் விளக்குகிறது.
பொதுச் செலவு : இப்பகுதி அரசின் செலவு, பொதுச் செலவின் விளைவுகள், பொதுச் செலவைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை சார்ந்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.
பொதுக்கடன் :
பொதுக்கடன் என்ற பகுதியில் உள்நாடு. வெளிநாட்டின் மூலம் பெறக்கூடிய கடன்களுக்கான வளங்களைப் பற்றி படிக்கிறது.
பொதுக்கடன் சுமை, அதன் விளைவுகள், திரும்பச் செலுத்தும் முறை ஆகியவை இத்தலைப்பின் கீழ் வருகின்றன.
நிதி நிருவாகம் :
இப்பகுதி அரசின் வரவு செலவு திட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பற்றி படிக்கிறது.
வரவு செலவுத் திட்டம் என்பது ஓராண்டிற்கான அரசின் பேரளவு நிதித் திட்டமாகும்.
வரவு செலவு திட்டத்தின் பல்வேறு நோக்கங்கள், அதனைத் தயாரிப்பதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, மதிப்பீடு, தணிக்கை முதலானவை நிதி நிருவாகத்தின் கீழ் வருகின்றன.
நிதிக் கொள்கை:
வரிகள், மானியங்கள், பொதுக்கடன், பொதுச் செலவு ஆகியவை நிதிக்கொள்கையின் கருவிகளாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards