12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இயற்கை பண்ணை முறை - வரையறு.
2.
அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:
3.
உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?
4.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?
5.
கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?
6.
பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.
7.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?
8.
நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?
9.
பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:
10.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.
11.
12.
கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.
13.
உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க
14.
அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.
15.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.
16.
பணத்தின் பணிகளை விளக்குக.
17.
பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி.
18.
சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.
19.
நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக.
20.
1.
இயற்கை பண்ணை முறை என்பது கால்நடை சாணம், இயற்கைக் கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும் பயிரிட்டு பயிர் சுழற்சி முறையையும் பயன்படுத்தி செய்யப்படும் வேளாண்மையாகும்.
விவசாய சூழல் அமைப்பிலுள்ள நிலத்தின் தன்மை, பயிர்கள், கால்நடைகள் மற்றும் மக்களைக் கருத்தில் கொண்டு உத்தம அளவு உற்பத்தி செய்யும் உள்ளடக்கிய அமைப்பு முறையே "இயற்கை பண்ணைகளாகும்".
2.
1. சுழற்சியின் ஏற்ற இறக்கம்:
மந்த காலங்களில் பன்னாட்டு வாணிகம் வீழ்ச்சி அடைகிறது. செழிப்பான காலங்களில் வாணிகம் வளர்கிறது.
2. கட்டமைப்பு மாற்றங்கள்:
வளரும் நாடுகளில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள். அபரிமிதமான முதலீடு கட்டமைப்பை மாற்றி அமைத்து அயல்நாட்டு செலுத்து சமநிலையை உருவாக்குகிறது.
3. மேம்பாட்டுச் செலவு:
நாடுகள் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் ஏற்றுமதி வாய்ப்பு குறைவு. நாட்டம் அதிகம்.
4. மிகை நுகர்வுப் போக்கு:
ஆடம்பரப் பொருட்களின் மீது பேராசை அயல்நாட்டுச் செலுத்து நிலையில் பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.
5. வெளிக்காட்டும் விளைவு:
மற்றவர் வாங்கும் பொருட்களை தாமும் வாங்க வேண்டும் என்பது வெளிக்காட்டும் விளைவு.
6. வெளிநாட்டில் கடன் வாங்குதல்:
வாங்கும் ஆண்டில் அயல்நாட்டு செலுத்து நிலையில் உபரியும் வட்டியும் பற்றாக்குறை சமமின்மையை ஏற்படுத்தும்.
3.
உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை கணக்கிடுவது ஆகும். இதனை சரக்கு முறை என்பர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் விவசாயம், தொழில் வாணிபம் போன்ற துறைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் தேசிய வருமானம் ஆகும். இதனை கணக்கீடு செய்யும்போது ஒரு துறையின் வெளியீடு வேறு துறை உற்பத்தியின் உள்ளீடாக அமைய வாய்ப்புள்ளது. இதனை கணக்கில் எடுக்காவிடில் இரண்டு முறை கணக்கில் சேர்ந்து வரும்.
பண்ணை உற்பத்தியின் மதிப்பு கணக்கிடல்:
1. 64 வகை விவசாய பொருள்களின் மொத்த உற்பத்தி மதிப்பிடப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு சராசரி உற்பத்தியை கணக்கிட்டு பயிரிடப்பட்ட நிலப்பரப்பால் பெருக்கினால் உற்பத்தியின் அளவு கிடைக்கும்.
2. ஒவ்வொரு பொருளின் மொத்த உற்பத்தியும் சந்தை விலையால் மதிப்பிடப்படுகிறது.
3. எல்லா பயிர்களின் மொத்த உற்பத்தியை எடுத்துக் கொண்டு விவசாயத்துறையின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
4. விவசாய உற்பத்தியின் நிகர மதிப்பு கணக்கிடுவதற்கு மொத்த விவசாய உற்பத்தி மதிப்பிலிருந்து விதை, உரம், அங்காடி கட்டணம் சரி செய்தல் தேய்மானம் போன்றவற்றை கழிக்க வேண்டும்.
5. மேலும் மற்ற துறைகளான கால்நடை, காடுகள், மீன் வளர்ப்பு, சுரங்க தொழில், தொழிற்சாலை போன்றவற்றின் மொத்த உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் மொத்த மதிப்பு கணக்கிடப்படுகிறது.
இவை அனைத்தையும் ஒன்று கூட்டினால் நாட்டின் உற்பத்தி முறையில் தேசிய வருவாயை கணக்கிடலாம்.
4.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் முக்கிய பணிகள் இரு பிரிவுகளாக பிரித்து கூறப்பட்டுள்ளன.
1. மற்ற தொழில் நிறுவனங்களுக்கு நிதியளிப்பது.
2. தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாகவோ அல்லது மற்ற நிதியளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்தோ நேரடியாக கடன் வழங்குவது ஆகும்.
5.
கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மைகள்:
1. அதிவேக பொருளாதார வளர்ச்சி: இதன் சிறந்த தன்மை அதிவேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். பொது தேவைகளும் சிந்திக்கப்படுகின்றன
2. சமமான வளர்ச்சி: பொருளாதாரத்தில் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறது
3. வளங்களை சரியாக பயன்படுத்துதல்: அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தும். மேலும் தனியார் துறையை மறைமுகமாக கட்டுப்படுத்தும்.
4. பொருளாதார சமத்துவம்: அரசு வருவாய் வரியை வளர்வீத முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தைக் கொண்டு வருகிறது
5. சமூகத்திற்கு சிறப்பு நன்மைகள்: குறைந்தபட்ச கூலி, பகிர்வு முறை சட்டம், நியாய விலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் சமூக நல நடவடிக்கைகளை உருவாக்குகிறது
கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள்:
1. ஒருங்கிணைப்பு இல்லாமை: கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறைக்கும், தனியார் துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததாகும்.
2. போட்டி மனப்பான்மை: அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயலாற்ற வாய்ப்பு குறைவு. இவை இரண்டும் போட்டித் தன்மையுடைதான் செயல்படும்
3. திறமையின்மை: மந்தமான அதிகார முறை, சிவப்பு நாடா முறை, ஊக்கமின்மை ஆகியவை திறமையின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.
4. தேசியமயமாக்கல் பற்றிய பயம்: தேசியமயமாக்குதல் என்ற பயம் தனியார் துறையின் வளர்ச்சியையும், புதிதாக்க முயற்சியையும் தடை செய்யும்
5. விரிவடையும் சமத்துவமின்மை: வளங்களின் உரிமை, பரம்பரை சட்டம், மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர், ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன
6.
1. நாணய மாற்று வீதத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருதல்
(i) ஐ.எம்.எஃப்-ன் முதல் மற்றும் முக்கிய பணி நாணய மாற்று வீதத்தை நிலைப்படுத்துதல்.
(ii) நாணய மதிப்பு குறைப்பை வலியுறுத்துதல்
(iii) உறுப்பு நாடுகள் பன்முக மாற்று வீதங்களுக்கு செல்வதைத் தடுத்தல்.
2. அயல் நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்
உறுப்பு நாடுகளுக்கு அந்நிய செலாவணியை விற்பனை செய்தல் மற்றும் அவற்றை கடனாக வழங்கி, அயல்நாட்டு செலுத்து சமமின்மையை சரிசெய்தல்.
3. இணை மதிப்பை உறுதி செய்தல்
உறுப்பு நாடுகள் அதன் நாணய மதிப்பினை தங்கள் அல்லது அமெரிக்க டாலர்கள் என்ற அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும்.
4. நாடுகளின் பணத்தேவையை அளிப்புக்கு சமமாகும் வகையில் பராமரித்தல் :
(i) உயர்வான தேவையுள்ள எந்த நாட்டுப் பணத்தையும் பற்றாக்குறையுள்ள பணம் என நிதியம் அறிவிக்கலாம்.
(ii) அந்த நாட்டிலிருந்து அவர்களின் பணத்தை கடன் வாங்கியோ தங்கத்தைக் கொடுத்து கொள்முதல் செய்தோ அளிப்பை நிதியம் உயர்த்தும்.
5. வாணிபத் தடைகளைக் குறைத்தல் :
இந்நிதியம் உறுப்பு நாடுகளால் விதிக்கப்படுகின்ற சுங்கவரி மற்றும் பிற வாணிபத் தடைகளைத் குறைப்பதன் மூலம் வாணிபத் தடைகளை குறைத்தல்.
6. கடன் வசதிகளை வழங்குதல் :
அடிப்படை கடன் வசதி, விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி, ஈடுசெய் நிதி வசதி, கட்டமைப்பு சரிசெய்தல் ஆகிய கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
7.
கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் கருத்துப்படி, பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிகளை மூன்றாக பிரிக்கலாம்.
அவை:
1. பணவியல் முறைகள்
2. நிதியியல் முறைகள் (JM கீன்ஸ்) மற்றும்
3. இதர முறைகள்
I. பணவியல் முறைகள்
பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறைகள்.
அவைகள்:
1) வங்கி விகிதத்தை உயர்த்துதல்
2) வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்
3) ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல்.
4) நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்
5) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்
6) மீள் வாங்கல் விகிதம் மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.
II. நிதியியல் நடவடிக்கைகள்:
பணவீக்கத்தின் போது அரசு செலவினங்களைக் குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரி விதிப்புகளை விரிவாக்குவது போன்ற நிதியியல் நடவடிக்கைகள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
III. இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள்:
இதர நடவடிக்கைகள் குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.
a) குறுகிய கால நடவடிக்கைகள்:
குறுகிய கால நடவடிக்கையாக பொது விநியோக முறையின் கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து விலை உயரா வண்ணம் தடுக்கப்படுகிறது.
b) நீண்ட கால நடவடிக்கைகள்:
நீண்ட கால நடவடிக்கையாக பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கில் சேமிப்பு முதலீடுகளை மேம்படுத்துதல். மேலும் பொது விலை மட்டத்துடனும், வாழ்க்கைச் செலவுடனும் நேரடி தொடர்பு கொண்டுள்ள கூலிப் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்துதல் பணவீக்கத்தை தடுக்கும் வழிமுறைகளாகும்.
8.
நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள்:
1) மாதிரியில் கொடுக்கப்பட்டுள்ள சில மாறிகள் சம வாய்ப்பு மாறிகள்
2) சில மாதிரிகளில் Ui மற்றும் விளக்க மாறிகள் (X1, X2, X3 ...) இடையேயுள்ள தொடர்பை விளக்கும்
மதிப்புகளின் பரவல் பற்றிய எடுகோள் சாதாரண குறைந்த வர்க்க முறையில் கூறப்பட்ட சமவாய்ப்பு மாறி எடுகோள்கள் ஆகும். விளக்க மாறிகளின் தொடர்பும் அவற்றிற்கு இடையிலான தொடர்பு பற்றியும் மற்ற எடுகோள்கள் குறிப்பிடுகின்றது
எடுகோள்கள்:
1. U என்பது சமவாய்ப்புள்ள உண்மையான மாறி. அதாவது U வின் மதிப்பு நேரிடையாகவோ எதிரிடையாகவோ அல்லது பூஜ்யமாகவோ இருக்கலாம். எனவே U வின் சராசரி மதிப்பு பூஜ்யமாகும்
2. விலக்க அளவை மதிப்பு U மாறிக்கு நிலையானதாக இருக்கும்
3. U மாறி சமசீர் பரவலை உடையது
4. இணை விலக்க அளவை மதிப்பு Ui மாறிக்கும் எந்த Uj மாறிக்கும் பூஜ்யமாகவே இருக்கும்
5. U மாறி விளக்க மாறிகளிலிருந்து தனித்து உள்ளது
6. விளக்க மாறிகளின் மதிப்புகள் பிழை இல்லாமல் அளவிடப்படுகின்றது.
7. விளக்க மாறிகள் முழுமையாக நேர்கோட்டுத் தொடர்பு உடையவை அல்ல
8. மாறிகளை அனைத்தும் சரியான முறையில் தொகுக்கப்பட வேண்டும்
9. தொடர்பு சரியாக, குறிப்பிட்டதாக இருக்க வேண்டும்
10. தொகுதி அளவுகள் நேர்கோட்டு முறையில் அமைக்கப்பட வேண்டும்
9.
நாட்டின் மொத்த உற்பத்தி (GNP):
ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டுத்த தொகையை கூட்டினால் வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் கிடைக்கும் மொத்த மதிப்பே மொத்த நட்டு உற்பத்தி எனலாம். இந்த கருத்தினை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடலாம்
தலாவீத மொத்த நாட்டு உற்பத்தி:
இந்த அளவிடும் முறை நீண்டகாலத்தில் தலா உற்பத்தி மதிப்பு அதிகரித்தலைக் குறிப்பிடுகிறது. தலா வருமானம் அதிகரிக்கும் வேகத்தை விட உயர்வாக இருக்க வேண்டும் என இந்த அளவிடும் முறை வலியுறுத்துகிறது
நலன்:
பண்டங்கள் மற்றும் பணிகளை மக்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரிப்பதையே பொருளாதார முன்னேற்றமாக கருதப்படுகிறது. மக்கள் நலன் என்ற கண்ணோட்டத்தில் பொருளாதார முன்னேற்றத்தை மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்படுவதாக சார்ந்து வரையறுக்கலாம்
சமூகக் குறியீடுகள்:
மக்களின் அடிப்படை மற்றும் கூட்டுத் தேவையை நிவர்த்தி செய்வதை சமூக குறியீடுகள் என அழைக்கப்படுகிறது. நேரடியாக வழங்கப்படும் அடிப்படைத் தேவை என்பது மக்களின் சுகாதாரம், கல்வி, உணவு, குடிநீர், துப்புரவு மற்றும் வீட்டு வசதி ஆகியவையாகும் இவற்றைக் கொண்டு சமூக பின்னடைவு தவிர்க்கப்படுகிறது.
10.
திட்டமிடலுக்கு எதிரான வாதங்கள் :
அங்காடி இயங்காமல் தோல்வியடைந்ததால் அரசு திட்டமிடல் மூலம் தலையிடும் அவசியம் உருவானது.
திட்டமிடலுக்கு எதிராக வாதங்களையும் குறைகளையும் புரிந்து கொள்வோம்.
தன் விருப்பம்போல் செயல்பட இயலாமை :
தன் விருப்பம் போல் செயல்பட இயலாததால் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.
திட்டமிடல் கட்டுப்பாடுகளையும் வழி முறை களையும் விதித்து நாட்டிற்கு முதுகெலும்பாக உள்ளது.
தலையிடாப் பொருளாதாரத்தில் நுகர்வு, பணியைத் தேர்வு செய்தல், உற்பத்தி செய்தல், விலை நிர்ணயம் செய்தல் ஆகியவற்றில் தன் விருப்பம்போல் முடிவெடுக்க அனுமதி உள்ளது.
தன் முனைப்புக் குறைதல் :
மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்துதல், புதுமைகளைப் புகுத்துதல் ஆகியவற்றுக்கு ஊக்கமிருக்காது.
தனியார் உரிமை இல்லாதது, இலாப நோக்கைக் குறைத்து தொழில் முனைவோர் திறம்பட முடிவு எடுப்பதையும், இடர் எதிர்நோக்குதலையும் குறைக்கிறது.
திட்டமிடல் பொருளாதாரத்தில் அனைவருக்கும் அவர்களது முயற்சி, திறமை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் போக்குத் திட்டமிடலில் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
அதிகமான நிர்வாகச் செலவு:
திட்டமிடலின் நோக்கமெனனவோ தொழில் மயமாக்கல், சமூகநீதி, நாட்டு நிலைமையைச் சமப்படுத்துதல் ஆகியன உயர்வானவை. ஆனால் அதற்கு நாடு செலவிடும் தொகை அடையவுள்ள பலனைவிட அதிகமாக இருக்கும்.
சரியான புள்ளிவிவரம் இல்லாமை, தவறாக கணிப்பது, திட்டமிடுதலை சரிவர செயல்படுத்துவது ஆகியவை வளங்களை வீணடித்து உபரி அல்லது பற்றாக்குறை நிலைக்குக் கொண்டு செல்லும்.
முன்கணிப்பதில் உள்ள சிரமங்கள் :
அரசு தடையில்லாத நாட்டில், விலை இயக்க முறையில், விலை, தேவை மற்றும் அளிப்பு ஆகியவை தானாக இயங்கி ஒன்றையொன்று சரி செய்து கொள்கின்றன.
திட்டமிடல் நாடுகளில் இப்படி ஒரு வசதி இல்லை. நுகர்வும் உற்பத்தி அளவுகளைத் துல்லியமாக முன்கூட்டியே நிர்ணயிப்பது கடினம்.
நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக, சமத்துவத்தையும் திட்டமிடுதல் மூலம் சாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
11.

12.
கூட்டாட்சியின் கொள்கைகள் :
சுதந்திரம் :
கூட்டரசு நிதி முறையின் கீழ், ஒவ்வொரு அரசும் தன்னுடைய நிதியில் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசும் வருவாய் ஆதாரங்கள், வரி விதிப்பதற்கான அதிகாரம், பணத்தைக் கடன் வாங்குவது, செலவினை சமாளிப்பது முதலானவை பற்றி தன்னாட்சி பெற்றிருக்க வேண்டும்.
சமத்துவம்:
சமத்துவ நீதியின் அடிப்படையில், மாநிலங்கள் நியாயமான வருவாய்ப் பங்கினைப் பெறும் வண்ணம் வளங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்.
ஒரே மாதிரியான தன்மை:
கூட்டரசு முறையில், ஒவ்வொரு மாநிலமும் கூட்டாட்சி நிதிக்கு சம வரி செலுத்துதல்களை செய்ய வேண்டும்.
நிதி வசதி:
கூட்டரசு நிதி முறையில், மத்திய மாநில அரசுகளும் புதிய வரி ஆதாரங்களை தங்களது நிதி தேவைக்கேற்றவாறு பெருக்கிக் கொள்ள முடியும்.
ஒருங்கிணைப்பும் ஒன்றுபடுதலும்:
அனைத்து நிதிமுறைகளும் முழுவதும் நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
நாட்டின் பல்வேறு அடுக்குகளுக்கிடையே உள்ள நிதி முறைகளில் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது.
செயல் திறன் :
நிதிமுறைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து, திறமையான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஏய்ப்பு, மோசடி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் இருக்கக் கூடாது.
நிர்வாகச் சிக்கனம் : வசூலிக்கும் செலவு குறைவாக இருப்பதோடு அதிக வருவாய் பெற்று அரசின் பிற துறைகளுக்குச் செலவிடுவதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
13.
உலக வங்கியின் பணிகள் : உறுப்பு நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கடன் வழங்கும் பணியை உலக வங்கி செய்கிறது. இதற்காக நீண்ட கால கடன்களை வழங்குகிறது.
உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் முதலீட்டுக்கான கடன் உதவி:
உற்பத்திக்குக் கடன் முதலீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உறுப்பு நாடுகளின் நில எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மறுகட்டமைப்புக்கும் மேம்பாட்டுக்கும் உதவி செய்யும் பணியை உலக வங்கி செய்கிறது.
பன்னாட்டு வாணிகத்தின் சரிவிகித வளர்ச்சி:
1. பன்னாட்டு கடன் மூலதனம் வழங்கி உறுப்பு நாடுகள் அனைத்தும் சரிவிகித பன்னாட்டு வணிக நீண்டகால வளர்ச்சியடைய உதவும் பணியை வங்கி செய்கிறது.
2. இதன் விளைவாக உறுப்பு நாடுகளின் அயல்நாட்டுச் செலுத்துநிலை சமநிலையை அடையும்.
கடன் மற்றும் ஈட்டுறுதி வழங்குதல் :
முக்கியமான திட்டங்களுக்கு கடன் வழங்குவது, பிற வழிகளில் கடன் பெற ஈட்டுறுதி வழங்குவது ஆகிய பணிகளையும் வங்கி செய்கிறது.
வெளிநாட்டுத் தனியார் முதலீட்டிற்கு ஊக்கமளித்தல்:
1. தனியார் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் உலக வங்கியின் உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்க ஈட்டுறுதிகள் வழங்கும் பணியைச் செய்து வெளிநாட்டு மூலதனத்துக்கு ஊக்கமளிக்கிறது.
2. இந்தப் பணியின் மூலம் தனியார் மூலதனத்துடன் ஒன்று சேர்ந்து சொந்த நிதியிலிருந்து மட்டும் கடன் வழங்காமல் கடன் நிதியிலிருந்தும் கடன் வழங்க முடிகிறது.
தொழில்நுட்ப பணிகள் :
உலக வங்கி வாஷிங்டனில் அமைந்துள்ள பணியாளர் கல்லூரி நிபுணர்களைக் கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகளையும் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது.
14.
அயல் நாட்டுச் செலுத்துநிலை சமனற்ற நிலையின் மூன்று வகைகள்.
1. சுழற்சிச் சமனற்ற நிலை
2. நீண்ட காலச் சமனற்ற நிலை
3. கட்டமைப்புச் சமனற்ற நிலை
சுழற்சிச் சமனற்ற நிலை:
1. வாணிகச் சுழற்சியின் விளைவாக எழும் அயல் நாட்டு செலுத்து சமனற்ற நிலையைச் சுழற்சி சமனற்ற நிலை என்கிறோம்.
2. கீழ்க்காணும் இரண்டு காரணங்களால் இது நிகழ்கிறது. முதலாவது, நாடுகள் வாணிகச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களிலிருப்பது.
3. இரண்டாவது, நாடுகளுக்கிடையே தேவை நெகிழ்வு அளவு மாறுபடுவது.
நீண்டகாலச் சமனற்ற நிலை:
1. நாடுகள் பொருளாதார வளர்ச்சிப் படி நிலைகளில் முன்னேறும்பொழுது நீண்டகாலத் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்வதால் உண்டாகும்.
2. வளர்ச்சியின் துவக்க நிலையில் ஒரு நாட்டின் உள்நாட்டு முதலீடு உள்நாட்டு சேமிப்பைவிடக் கூடுதலாக இருக்கும்.
3. இறக்குமதி ஏற்றுமதியைவிட அதிகமாக இருக்கும்.
4. இந்தியாவில் 1951 ஆம் ஆண்டிலிருந்தே இந்தச் சூழ்நிலை நிலவுகிறது.
கட்டமைப்புச் சமனற்ற நிலை:
1. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றங்களினால் நிகழும் அயல்நாட்டு செலுத்துச் சமனற்ற நிலையே கட்டமைப்பு சமனற்ற நிலையாகும்.
2. மாற்று வழங்கல் ஆதாரங்களை கண்டுபிடித்தல், செயற்கையான பதிலீட்டுப் பண்டங்களை கண்டுபிடித்தல், போக்குவரத்து வழிகளும் செலவும் மாற்றமடைதல் ஆகியவற்றை பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் என்கிறோம்.
15.
ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் தலைமை வங்கியாகும். இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது. 1935ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினைத் துவங்கியது.
ரிசர்வ் வங்கியின் பணிகளாவன :
பண அதிகார அமைப்பு : இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அயல்நாட்டு செலாவணி பரிமாற்ற விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்துநிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வங்கி அமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றைச் செய்கிறது.
காகிதப் பண வெளியீடு : காகிதப் பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமைப் பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும்.
வங்கி உரிமங்கள் வழங்குபவர் : வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22இன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும். இப்பணியையும் ரிசர்வ் வங்கி செய்கின்றது.
அரசுக்கான வங்கி : இது மத்திய, மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். அரசுகளுக்கு குறுகியகாலக் கடன்கள், கடன் தொடர்பான சேவைகள், அரசின் கடன் பத்திரங்களை உருவாக்கி விற்பனை செய்வது மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்கிறது.
வங்கிகளின் வங்கி : இது அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். வங்கிகளின் வைப்புகளை ஏற்று, மாற்று சீட்டுகளை மறு தள்ளுபடி செய்வதால் இது வங்கிகளின் வங்கி எனப்படுகிறது.
கடை நிலைக் கடன் ஈவோன் : வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலில் இருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது.
தீர்வாக செயல்படுகிறது : வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிமாற்றங்களை தனது 14 தீர்வகங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. பரிமாற்றக் கருவிகளைப் பரிமாறிக் கொள்ள உதவுவதுடன், பரிமாற்றம் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது.
16.
அ. முதல்நிலைப் பணிகள் :
i) பணம் ஓர் பரிமாற்றக் கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம்பெறுகிறது.
ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக : பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது.
ஆ. இரண்டாம் நிலைப் பணிகள்
i) பணம் ஒரு மதிப்பின் நிலைக்கலனாக: பண்டங்களைச் சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பண்டங்களையும் பணிகளையும் சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன.
ii) பணம் வருங்காலச் செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாகச் செயல்படுகின்றது.
iii) பணம் வாங்கும்திறனை மாற்றிக் கொள்ளும் ஒரு கருவியாக : பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிமாற்றம் விரிவடைந்து செல்கிறது.
இ. துணைப்பணிகள் :
i) கடனுக்கான அடிப்படை : கடன் முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பின் அளவை பொருத்தே கடன்களை உருவாக்குகின்றன.
ii) பணம் நாட்டு வருமானப் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் நாட்டு வருமானப் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி, இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது நாட்டு வருமானத்தை எளிதாகப் பகிர்ந்தளிக்க முடிகிறது.
iii) இறுதிநிலைப் பயன்பாடுகளையும், இறுதி நிலை உற்பத்தித் திறன்களையும் சமன் செய்திட பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்தப் பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தாம் நுகரும் பல்வேறு பண்டங்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது.
iv) பணம் மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துகிறது : மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும்.
ஈ. இதர பணிகள் :
i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது: பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்கப் பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.
ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனைக் குறிக்கிறது : எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் எனும் வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையைத் தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடு பொருட்களையும் வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.
17.
1. அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலியும், இதர பண்டங்கள் வாங்குவதற்காகச் செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடியனாது உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும்.
2. அவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 (80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடியைச் சேமிக்கவும் செய்வர்.
இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில்
3. நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.
எனவே இறுதி முடிவுகள்
ΔΥ = 100 + 100 × 4/5 + 100x [4/5]2 + 100 x [4/5]3
அல்லது,
ΔΥ = 100 + 100 × 0.8+100x (0.8)2 + 100 x (0.8) = 100+80+64 +51.2...
= 500
அதாவது 100 × 1/1-4/5
100 x 1/1/5
100 × 5 = ₹500
உதாரணமாக C
100+ 0.8Y, I = 100,
என்றால் Y 1Y-0.8Y 0.2Y Y 100+0.8Y + 100 200 = 200/0.2 = 1000 → B
I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால் 0.2Y = 210 Y = 210/0.2 = 1050 → D
1, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.
இது பெருக்கியின் விளைவு.
புள்ளி Aயில், Y = C = 500
C = 100+0.8 (500) = 500; S = 0
புள்ளி Bயில், Y = 1000
C = 100 + 0.8 (1000) = 900; S = 100 = I
புள்ளி Dயில், Y = 1050
C = 100 + 0.8 (1050) = 940; S = 110 = I
I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.
K = \(\frac{1}{0.2}=5\)
18.
J.B.சேயின் சந்தை விதியின் திறனாய்வுகளாவன:
1. கீன்சின் கருத்துப்படி, அளிப்பு அதற்கான தேவையை உருவாக்காது.
2. உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் இந்த விதி செயல்படாது.
3. பொருளாதாரத்தில் தானாக சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையைக் குறைக்காது.
4. தனிமனிதர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளுக்காகவும்,' வணிகர்கள் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் பணத்தை இருப்பாக வைத்திருப்பார்கள் ஆகவே பணம் நடுநிலையாக இருக்காது.
5. சேயின் அங்காடி விதியானது, அளிப்பு தன் தேவையைத் தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் செயல்படுவதால், அதிக உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறது.
6. முதலாளித்துவ நாடுகளில் குறைவான வேலை உள்ளதால் முழு வேலை வாய்ப்புக்கு வாய்ப்பில்லை என்று கீன்சு கூறுகிறார்.
7. அளவுக்கு அதிகமான உற்பத்தியும், அதிக வேலையின்மையும் பல முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதால் அரசுத் தலையீடு அவசியம் என கீன்சு கருதுகிறார்.
19.
நாட்டு வருமானத்தை மூன்று முறைகளைப் பயன்படுத்தி அளவிடலாம். அவை,
1. உற்பத்தி அல்லது மதிப்புக் கூடுதல் முறை.
2. வருமானம் அல்லது காரணிகளின் ஊதிய முறை மற்றும் செலவு முறை.
உற்பத்தி முறை :
1. உற்பத்தி முறை என்பது ஒரு நாட்டின் உற்பத்தியைக் கணக்கிடுவது ஆகும். இம்முறை சரக்கு முறை என்றும் அழைக்கப்படுகிறது.
2. ஒரு துறையின் வெளியிடு பொருள் மற்றொரு துறையின் உள்ளிடுபொருளாகச் செல்ல வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இருமுறை அல்லது பல முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.
3. இதற்கு இருமுறைக் கணக்கிடல் எனப் பெயர். இதனைத் தவிர்க்க வினை முடிந்த பண்டங்களின் மதிப்பையோ அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வருமான முறை :
1. வருமான முறை என்பது நாட்டு வருமான கணக்கிடலைப் பகிர்வு பகுதியிலிருந்து அணுகுகிறது.
2. உற்பத்தி நிலைகளில் உற்பத்திக் காரணிகள் பெற்ற அனைத்து வித ஊதியங் களையும் கூட்டி நாட்டு வருமானத்தைக் கணக்கிடலாம்.
3. வருமான முறையானது, காரணிகள் ஈட்டும் வருமான முறை எனவும் அழைக்கப்படுகிறது.
செலவு முறை:
1. இம்முறையில் ஓர் ஆண்டில் சமுதாயத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் மொத்தச் செலவுகள் அனைத்தையும் கூட்டி நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
2. தனிமனிதரின் சொந்த நுகர்வுச் செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டுப் பொருள் வாங்கும் செலவு, நிகர ஏற்றுமதி முதலான அனைத்துச் செலவுகளையும் கூட்டி செலவு முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது.
GNP = C+I+G+(X-M)
20.

12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards