12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?
2.
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?
3.
இரகசிய வானொலி ஒலிபரப்பு பற்றி எழுதுக.
4.
முகமது அலி ஜின்னா பற்றியும் அவரின் சிறப்பு பற்றி எழுதுக.
5.
சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?
6.
ரிஸ்லி அறிக்கை (Risley Papers) என்றால் என்ன? அதன் நோக்கம் யாது?
7.
பிரான்சில் 1830இல் நடந்த ஜூலை புரட்சி ஐரோப்பாவின் பிற பகுதிகளை எவ்வாறெல்லாம் பாதித்ததென்பதை எடுத்தெழுதுக.
8.
“சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது” – ஆதாரப் பின்புலத்தோடு உறுதிப்படுத்துக.
9.
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
10.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
11.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன ?
12.
சுதேசி இயக்கம் (1905) பற்றி எழுதுக?
13.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
14.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
15.
16.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
17.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
18.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.
19.
1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?
1.
1. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124 A அடக்கு முறை ஒழுங்குமுறைச் சட்டம் இருந்தது.
2. பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் 1878 எதிர்ப்புகளை தூண்டின.
3. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான உள்நாட்டுத் தீர்வை உயர்த்தப்பட்டதும் நாடு முழுவதும் மனநிறைவின்மையை ஏற்படுத்தியது.
4. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா ஏற்பட்டது.
5. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தியிழைத் துணிகளின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது.
2.
(i) 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது.
(ii) சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்கும், புரட்சியாளர்கள் தேசியக் கொடியை ஏற்றி "வந்தே மாதரம்", "புரட்சி ஓங்குக" போன்ற கோஷங்களை முழங்கிக் குறிப்புணர்ந்தினர்.
(iii) இந்தத் தாக்குதல்களும் எதிர்ப்பும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
3.
1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பான அம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமையாகும்.
2. பத்திரிக்கைச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் வானொலி ஒலிபரப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
3. இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவரால் பயன்படுத்தப்பட்டது.
4. வானொலி ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது.
4.
1. முதலில் ஜின்னாவோ நவாப் ஜாஃபருல்லா கானோ முஸ்லிம்களுக்கு தனி நாடு உருவாக்குவது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
2. இருந்தபோதிலும் 1940 மார்ச் 23 இல் முஸ்லிம் லீக் பின்வருமாறு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தீர்மானத்தின் வாசகங்கள் பின்வருமாறு.
3. இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் இந்த அமர்வின் ஒருங்கிணைந்த கருத்தாகும்.
4. 1933 இல் செளத்ரி ரஹமத் அலி பாகிஸ்தான் எனும் பெயர் உருவாக்கினார். இதை முகமது அலி ஜின்னா பரவலாக்கினார்.
5. ஜின்னா 1947 இல் மார்ச் 27-யை பாகிஸ்தான் தினமாக கொண்டாடினார்.
6. பாகிஸ்தானின் முதல் பிரதம அமைச்சராக முகமது அலி ஜின்னா பதவி ஏற்றார்.
7. "இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர்" என சரோஜினி நாயுடுவால் புகழப்பெற்றவர் ஜின்னா ஆவார்.
5.
1. ஒத்துழையாமை இயக்கத்தைத் திருப்பிப் பெற்ற பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய வழியில் செயல்பாட்டை அறிவித்தனர்.
2. சுயராஜ்ஜியம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (Pro - changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக் குழுவில் இணைந்தார். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள்.
6.
1. கர்சன் பிரபு தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் (1903) ஒரு திட்டத்தை தீட்டியிருந்தார்.
2. அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risley Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
3. பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்களை இவ்வறிக்கை முன்வைத்தது.
4. அவை, வங்காளத்திற்கு சுமை குறைவு, அஸ்ஸாமின் முன்னேற்றம் ஆகியனவாகும்.
7.
1.1830 ஜூலை புரட்சியானது நெதர்லாந்தில் வெற்றி பெற்று பெல்ஜியம் பிரிக்கப்பட்டு தனியான சுதந்திர நாடானது.
2.1832ல் துருக்கி ஆட்சியிலிருந்து கிரீஸ் விடுதலை பெற்றது.
3.ரஷ்ய சார் மன்னருக்கு எதிரான போலந்து நாட்டினரின் போராட்டம் தோல்வியை தழுவியது.
8.
1.ஆரம்பத்தில் தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை பெரிதும் நம்பி வாழ்ந்தனர்.
2.ஒருங்கிணைந்த அமைப்பு முறையும் ஒற்றுமையும் ஏற்படாதவரை நிரந்தரமான முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார்கள்.
3.ஆகவே தொழிற்சங்கங்களை ஏற்படுத்த முனைந்தனர்.
4.தொழிலாளர் நலம் காக்கவும் எனப் பலருக்கும் வழிகாட்டியது.
9.
1.நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவா பிரேசிலுக்கு தப்பி ஓடினார்.
2.பிரேசில் முன்னேற்றமடைய அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
3.தனது மகன் டாம் பெட்ரோவிடம் பிரேசிலை ஒப்படைத்து விட்டு போர்த்துகல் திரும்ப முடிவு செய்தார்.
4.பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்க அடிமைகளைச் சார்ந்திருந்தனர்.
5.டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.1822 ல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது.
10.
1.அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்றே உணர்ந்தனர்.
2.எனவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப் பாதுகாப்புத் தீர்வை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டன.
3.1948 ல் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை கையெழுத்தானது.
4.இவ்வுடன்படிக்கை இராணுவ,அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளில் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழிவகுத்தது.
5.சில காலங்களுக்குப் பின்னர் அமெரிக்கா,இத்தாலி,கனடா,ஐஸ்லாந்து,டென்மார்க் நார்வே, அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கை நாடுகளுடன் இணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.
11.
1.வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகளில் ஒன்று அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
2.பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்தால் அவர்களை அடிமைகளாக்கும் முயற்சி தோல்வி கண்டதால் ஆப்பிரிக்கர்களை இறக்குமதி செய்தது.
3.வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழியமைத்தது.
12.
1. இந்தியத் தொழிற்சாலைகள் செயல்பட ஆரம்பித்தனர்.
2. போர்க் காலப் பொருட்களை தயாரித்த இந்திய தொழிற்சாலைகளுக்கு பிரிட்டிஷார் போரின் போது ஊக்கம் தந்தனர்.
3. உலகம் முழுவதும் பரவிய இன்ஃபுளுயன்சா தொற்றுநோயின் தாக்கத்தின் பிடியில் இந்தியாவும் சிக்கித் தவித்தது.
4. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
13.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
14.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
15.
16.
1. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
2. "கோமாகட்டா மாரு" என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது
3. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர்
4. இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
5. 1913 இல் லாலா ஹர்தயாள் கதார் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினார்.
17.
(i) 1907 இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எ∴கு நிறுவனம் ( TISCO ) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(ii) ஜே. என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜீ " நுஸர்வஞ்சி டாடா- ( 1839 - 1904 ) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.
(iv) இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(v) 1910 இல் மிகப் பெருமளவில் டாடா நீர்மின் சக்தி நிறுவனம் உதயமானது.
(vi) டாடா இரும்பு மற்றும் எ∴கு உற்பத்தி 1912 - 13- ல் 31, 000 டன்னிலிருந்து 1971 - 78 இல் 1, 81, 000 டன்னாக அதிகரித்துள்ளது.
18.
1. ஆங்கில பேரரசின் காலனி பகுதியான இலங்கையின் ஆளுநர் 1815-இல் சென்னை மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
3. 1837 இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித்தோட்டங்களில் சுமார் 10,000 தொழிலாளிகள் வேலை செய்தனர்.
19.
1. சென்னைவாசிகளின் சங்கத்தின் மனு 1853 மார்ச்சில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
2. இந்திய சீர்திருத்த தலைவரான H.D. செய்மோர் 1853 அக்டோபரில் சென்னை வந்தார்.
3. குண்டூர், கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
4. 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கிழக்கு இந்திய கம்பெனி தொடர அனுமதி வழங்கியது.
5. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்கு சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கூறியது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards