12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?
டிசம்பர் 31, 1929
மார்ச் 12, 1930
ஜனவரி 26, 1930
ஜனவரி 26, 1931
2.
1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.
முஸ்லீம் லீக் எழுச்சி
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.
3.
4.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1920
1925
1930
1935
5.
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் _______.
புலின் பிஹாரி தாஸ்
ஹேமச்சந்திர கானுங்கோ
ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்
குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
6.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்தோ கோஷ்
தாதாபாய் நெளரோஜி
பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
7.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1917
1918
8.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?
9.
ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?
10.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
11.
கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?
12.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
13.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
14.
தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.
15.
தேசியம் என்றால் என்ன?
16.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
17.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
18.
19.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.
20.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
21.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.
22.
இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.
23.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?
1.
(a)
டிசம்பர் 31, 1929
2.
(b)
காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
3.
(c)
4.
(a)
1920
5.
(c)
ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்
6.
(d)
லாலா லஜபதிராய்
7.
(a)
1915
8.
(i) 1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தன் பணியைத் தொடங்கியது.
(ii) அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(iii) டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அரசியலமைப்பு வரைக்குழுவின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார்.
(iv) 1949 நவம்பர் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பை இச்சபை ஏற்றுக்கொண்டது.
(v) 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
(vi) அது முதல் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
9.
(i) தனிநபர் சத்தியாகிரகம் என்பது அரசுப் பிரதிநிதி லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடியாகும்.
(ii) லின்லித்கோ பிரபு 8 ஆகஸ்ட் 1940 அன்று அளிக்க முன்வந்ததாவது 'வரையறுக்கப்படாத தேதியில் டொமினியன் அந்தஸ்து, செயற்குழு விரிவாக்கம் செய்தல் ஆகும்.
(iii) மேலும் ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க மேலும் உறுதியளித்தல் ஆகியவையாகும்.
10.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
11.
(i) பஞ்சாப்பை சேர்ந்த பசுப்பாதுகாவலர்கள் மத்திய மாகாணத்தின் "கௌராக்ஷினி" சபா (பசுப்பாதுகாப்பு சங்கங்கள்) செயல்பாட்டாளர்கள் ஆவர்.
(ii) இவர்கள் மிகவும் போர்க்குணம் கொண்டவர்களாக பசுப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
(iii) இவர்கள் தேவநாகிரி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தனர்.
(iv) மேலும் பசுக்களின் விற்பனை அல்லது பசுக் கொலையில் இந்த சங்கங்களின் தலையீடுகள் இருந்தன.
(v) ஐக்கிய மாகாணங்கள் பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலவரங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கின.
12.
1. கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இஸ்லாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
2. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கலீபா மீது பற்றும் அனுதாபமும் கொண்டவர்கள் அதனால் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்டது.
3. மெளலானா முகமது அலி மெளலானா செளஹத் அலி என்ற முஸ்லிம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
4. 1920 இல் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.
13.
1. ஆங்கில அரசு அறிவித்த 1908 டிசம்பரின் மிண்டோ-மார்லி நடவடிக்கைகள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
2. 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை.
3. வெடிமருந்துச் சட்டம் (1908), இந்திய பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனி அரசு வரிசையாக இயற்றியது.
14.
பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் தொடக்ககால முக்கிய தேசியவாதிகள் ஆவார்கள்.
15.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
16.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
17.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
18.
19.
1. ஆங்கில பேரரசின் காலனி பகுதியான இலங்கையின் ஆளுநர் 1815-இல் சென்னை மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
3. 1837 இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித்தோட்டங்களில் சுமார் 10,000 தொழிலாளிகள் வேலை செய்தனர்.
20.
21.
1. கிலாபத் மாநாட்டில் காந்தியடிகள் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்ட் 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
2. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களை புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்தது.
3. 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைப்பிடித்தது.
4. காந்தியடிகள் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
6. 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
7. காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கிய தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
8. இதனால் பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.
22.
இராஜாஜி 14 ஏப்ரல் 1944 இல் ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார், அதன் அம்சங்களாவன:
(i) போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்க்கு முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றி முடிவை எடுத்தல் வேண்டும்
(ii) ஒரு வேலை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதிமுக்கியப் பணிகளான பாதுகாப்பு, தொலைத்தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துதல் வேண்டும்.
(iii) எல்லையில் அமையப்பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
(iv) இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்கு கொண்டுவரப்படுதல் வேண்டும்.
(v) சிறையிலிருந்து காந்தியடிகள் ஜூலை,1944 இல் விடுவிக்கப்பட்ட பின் இராஜாஜி திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முயன்றார் ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
23.
1. நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
2. மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
3. மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
5. மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
6. தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்கக் கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
7. இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கு இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்க வேண்டும்.ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards