12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வணிகவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
PAN என்பதன் விரிவாக்கம் ____ ஆகும்.
நிரந்தரத் தொகை எண்
முதன்மைக்கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு எண்
நிரந்தரக் கணக்கு வாரிசு
2.
நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர்
காளை
கரடி
மான்
வாத்து
3.
அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மைத் தன்மையை வழங்குகிறது.
குறைந்த இலாபத்தன்மை
உயர் இலாபத்தன்மை
வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை
நடுத்தர இலாபத் தன்மை
4.
குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?
முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது
நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது
குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
5.
மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும்.
மேலாளர்
கீழ்ப்பணியாளர்
மேற்பார்வையாளர்
உயரதிகாரி
6.
செபி அமைப்பின் கட்டமைப்புகளை வரைக.
7.
8.
மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன? விளக்குக. (ஏதேனும் 3)
9.
விதிவிலக்கு மேலாண்மையில் உள்ள செயல்முறைகள் என்ன?
10.
குறிப்பு வரைக:
i) ஒழுங்கமைத்தல்
ii) பணிக்கமர்த்துதல்
11.
மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
12.
பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை?
13.
பண்டமாற்று பரிவர்த்தனை என்றால் என்ன?
14.
பணச்சந்தை வரைவிலக்கணம் தருக.
15.
பரஸ்பர நிதி என்றால் என்ன?
16.
17.
மேலாண்மை என்றால் என்ன?
18.
புறத்தோற்றமற்ற பத்திரங்களின் நன்மைகளை விவரி.
19.
அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி. (ஏதேனும் 5)
20.
அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?
1.
(c)
நிரந்தரக் கணக்கு எண்
2.
(a)
காளை
3.
(a)
குறைந்த இலாபத்தன்மை
4.
(d)
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
5.
(a)
மேலாளர்
6.
செபி அதன் உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பின்வருவன அடங்கும்
7.
8.
மூலதனச் சந்தையின் வகைகள் : மூலதனச் சந்தை பின்வரும் வரைபடத்தின்படி முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முதல் நிலைச் சந்தை இரண்டாம் நிலைச் சந்தை
முதல்நிலைச் சந்தை:
(i) முதல்நிலைச் சந்தை என்பது புதிய வெளியீடுகளுக்கான ஒரு சந்தை ஆகும். ஆகையால் இது புதிய வெளியீடுகள் சந்தை எனவும் அழைக்கப்படுகிறது.
(ii) முதல்நிலைச் சந்தை பொது மக்களுக்கு முதன்முதலில் வெளியிடும் பத்திரங்களை கையாளுகிறது.
(iii) முதல்நிலை சந்தையில் கடனாளிகள் நீண்டகால நிதிக்காக புதிய நிதி பத்திரங்களை மாற்றம் செய்து கொள்கின்றனர்.
ஒரு முதல் நிலைச் சந்தையில் ஒரு நிறுமம் பின்வரும் மூன்று வழிகளில் மூலதனத்தை திரட்டிப் கொள்ளலாம்.
அவைகள்: 1) பொது வெளியீடு 2) உரிமை வெளியீடு 3) தனியார் வெளியீடு
இரண்டாம் நிலைச் சந்தை:
(i) ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட பத்திரங்களுக்கான சந்தை இரண்டாம் நிலைச் சந்தை என வரையறுக்கப்படுகிறது.
(ii) ஏற்கனவே முதல் நிலைச் சந்தையில் வெளியீடு செய்யப்பட்ட பத்திரங்கள் இங்கு வணிகம் செய்யப்படுகின்றன.
(iii) முதல் நிலைச் சந்தையின் வெளியீடுகளை பின்பற்றும் முதலீட்டார்களுக்கு இடையே வணிகம் மேற்கொள்ளப்படுகிறது.
(iv) இது பங்கு மாற்றகம் உடனடி மாற்றகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியுள்ளது.
9.
(i) முதன்மையாக, எதிர்பார்ப்பு அல்லது மதிப்பிடப்பட்ட முடிவுகளுடன் குறிக்கோள்கள் அல்லது நெறிமுறைகளை அமைப்பது அவசியமாகிறது. இந்த நிகழ்ச்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டு உண்மையான செயல்திறனுடன் சமமாக ஒப்பிடப்படுகின்றன.
(ii) அடுத்து, விலகல் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. முதுநிலை மேலாளர்கள் ஒரு சிறிய அல்லது எந்த விலகலும் இல்லாத போது, எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. அவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.
(iii) உண்மையான செயல்திறன்கள் கணிசமாக விலகி விட்டால், "ஒரு விதிவிலக்கு ஏற்பட்டுவிட்டது" என்ற பிரச்சினையை முதுநிலை மேலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
(iv) இந்த "விதிவிலக்கு" உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே இறுதியான நோக்கமாகும்.
10.
i) ஒழுங்கமைத்தல்:
ஒரு அமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கமான உறவை ஏற்படுத்துவதாலும், ஒரு வலைப்பின்னல் போன்ற அமைப்பை அவர்களது உறவுகளுக்கு இடையில் உருவாக்கும் செயல்முறையே ஒழுங்கமைத்தல் ஆகும்.
ii) பணிக்கமர்த்துதல்:
பணியாளர்களை தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணிக்கமர்த்துதல் என்றழைக்கிறோம்.
11.
(i) ஹென்றி ஃபோயல் என்பவரின் கூற்றுப்படி, "மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல், ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, கட்டுப்படுத்துவது." ஒருங்கிணைப்பது.
(ii) பீட்டர் F. டிரக்கர் என்பவரின் கூற்றுப்படி. மேலாண்மை என்பது பன்னோக்கு செயல். அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது. மேலாளரை மேலாண்மை செய்கிறது. மேலும் பணியாளரையும், பணியினையும் மேலாண்மை செய்கிறது.
12.
1) நிரந்தரக் கணக்கு எண்
2) வாக்காளர் அட்டை
3) கடவுச் சீட்டு
4) ஓட்டுநர் உரிமம்
5) வங்கி செல்லேடு
6) வருமான வரி படிவங்கள்
7) மின்கட்டண ரசீது
8) தொலைபேசிக் கட்டண ரசீது மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் வழங்கிய புகைப்படம் ஒட்டிய அடையாளச் சான்றிதழ்கள் சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள் போன்றவை அடையாள ஆதாரங்களாகும்.
9) சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை ஆவணங்கள்
13.
பண்டமாற்று பரிமாற்றம் (அ) பரிவர்த்தனை என்பது பண்டங்கள் வர்த்தகம் செய்யப்படும் இடத்தில் பொருட்களை பரிமாற்றம் செய்வதாகும்.
எ.கா: தங்கம், வெள்ளி
14.
குரோதரின் கூற்றுப்படி, "பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பணத்திற்கு நிகரான பல்வேறு ஆவணங்களை கையாளும் மொத்த அமைப்பிற்கான கூட்டுப் பெயராகும்".
15.
(i) சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனங்களையே பரஸ்பர நிதி என்கிறோம்.
(ii) பரஸ்பர நிதி நிறுவனம் பங்குதாரர்களிடமிருந்து பெற்ற நிதியினை முதலீடு செய்வதற்கு அந்த முதலீட்டிலிருந்து பெற்ற பலனை பங்குதாரர்களுக்கு அளிக்கிறது.
16.
17.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
18.
1. இழப்பு, திருட்டு, மோசடி மற்றும் சேதம் போன்ற பங்குச் சான்றிதழ்களைப் பற்றிய அபாயங்களை புறத்தோற்றமற்ற பத்திரங்களினால் முழுமையாக நீக்கப்படுகின்றன.
2. விரைவான பரிவர்த்தனைகள் மற்றும் வர்த்தகத்தில் அதிக செயல்திறன் ஆகியவற்றை வழங்குகிறது.
3. தரகர்களின் வருகை தேவையில்லாமலேயே கணினி மூலம் வர்த்தகம் செய்ய முடியும்.
4. நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்குகள் இணைப்பு மூலம் உருவாக்கப்படும் பங்குகள் புறத்தோற்றமற்ற பத்திரங்களாக முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
5. எல்லா பரிவர்த்தனைகளும் வைப்பக பங்குதாரர்கள் மூலமாக நடக்கும் போது, ஒரு வர்த்தகர் தனித்தனியாக எல்லா நிறுவனத்துடனும் தொடர்பு கொள்ள தேவையில்லை.
6. பத்திரங்களை பரிமாற்றுவதற்காக முத்திரைத்தாள் கட்டண கடமை அவசியமில்லை. இதனால் கணிசமான அளவு பரிவர்த்தனை செலவு குறைகிறது.
7. ஒரு குறிப்பிட்ட கணக்கில் பங்கு மற்றும் கடனீட்டுப் பத்திரங்களை இருவரும் வைத்திருக்க சில வங்கிகள் அனுமதிக்கின்றன.
8. வங்கிகள் அனைத்து நடைமுறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சேவையாளர்களை வைத்துள்ளனர்.
9. புறத்தோற்றமற்ற கணக்கு வைத்திருப்பவர் பங்குகளை எந்த அளவு வாங்கவும், விற்கவும் முடியும்.
10. கடன் வழங்குபவர்களுக்கு ஒரு இணைப்பாக வழங்குவதன் மூலம் புறத்தோற்றமற்ற பத்திரக் கணக்கு வைத்திருப்பவர் நடைபெறும் பத்திரங்களுக்கு எதிரான கடனை வழங்குகின்றனர்.
19.
அரசு பத்திரங்களின் இயல்புகளை விரிவாக பின்வருமாறு பார்க்கலாம்.
1. முகமைகள்: (AGENCIES)
மத்திய அரசு. மாநில அரசுகள், அரசாங்க அமைப்புக்கு இணையான அமைப்புகள் போன்ற அதாவது உள்ளூர் அரசு அமைப்புகள் உதாரணமாக நகராட்சிகள், மாநகராட்சிகள், துறைமுகங்கள் போன்ற தன்னாட்சி அமைப்புகள், மற்றும் பிற அமைப்புகள் போன்ற முகவர்களின் மூலம் அரசு பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
2. இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு பணி: (RBI SPECIAL ROLE)
இந்திய ரிசர்வ் வங்கி அரசு பத்திரங்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக பண மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது.
3. பத்திரங்களின் இயல்பு: (NATURE OF SECURITIES)
அரசு பத்திரங்கள் உத்தரவாதமாக வட்டி வழங்குவதால் அதிக முதலீடு செய்வது பாதுகாப்பானது மேலும் அரசே முதன்மை தொகையை திரும்ப செலுத்துவதால் முற்றிலும் பாதுகாப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.
4. பணப் புழக்க விபரம்: (LIQUIDITY PROFILE)
தங்க முனை பத்திரங்கள் பல வகை நீர்மை தன்மை கொண்டவை. அதன்படி மத்திய அரசால் வழங்கப்பட்ட பத்திரங்கள் அதிக நீர்மை தன்மை கொண்டதால் அதன் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.
5. வரிவிலக்கு (TAX REBATE)
முதலீட்டாளர்களுக்கு பரந்த அளவில் வரிவிலக்கு அளிப்பது இந்த அரசு பத்திரங்களின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. இந்த பத்திரங்கள் இந்த நன்மைக்காகவே மிகவும் பிரபலமானதாக உள்ளது.
(6) சந்தை (MARKET)
அரசு பத்திரங்களில் ஒவ்வொரு விற்பனை மற்றும் கொள்முதலுக்கு தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது, தங்க முனைபத்திரங்கள் ஒரு எதிரெதிர் அல்லது இணையான சந்தையாகும். இந்தியாவில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை ஆகிய இரண்டு சந்தைகளிலும் அரசு பத்திரங்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.
(7) படிவங்கள் (FORMS)
பங்கு சான்றிதழ்கள், உறுதிமொழி சீட்டுகள் மற்றும் கொணர்பவர் பத்திரங்கள் போன்ற வடிவங்களில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பத்திரங்கள் இருக்கும்.
(8) பங்கேற்பாளர்கள் (PARTICIPANTS)
அரசு பத்திர சந்தையில் அரசுத்துறை வைத்துள்ள வளங்களைப் பரிமாற்றம் செய்வதில் ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் உள்ளன.
(9) வர்த்தகம் (TRADING)
அரசாங்க பத்திரங்களுக்கு இரண்டாம் நிலைசந்தை, குறுகிய, சிறிய மற்றும் குறைவான செயல்திறன் கொண்டது என்றாலும் பங்குச்சந்தைகளில் அரசாங்க பத்திரங்களை விற்பனை செய்வதிலும் வாங்குவதிலும் வங்கிகள். மற்றும் பெருநிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
(10) வெளியீட்டு இயந்திரம் (ISSUE MECHANISM)
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழுள்ள பொது கடன் அலுவலகம் (PUBLIC DEBT OFFICE) அரசு பத்திரங்களை வெளியிடுகிறது.
20.
1. அறிவியல், கட்டை விரல் விதி அல்ல:
(i) கட்டை விரல் விதிமுறைக்கு பதிலாக அறிவியல்பூர்வ வேலைப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ii) கட்டை விரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும்.
2. இணக்கம், சச்சரவின்மை:
(i) மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது பணியாளர்களின் செழிப்பு மூலமே அடைய எய்த முடியும்.
(ii) நிர்வாகம் தனது உபரியான இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3. மனப்புரட்சி:
(i) பரஸ்பர நம்பிக்கை மற்றும் சரியான புரிதலுடன் கூடிய குழுச் செயல்பாடு கொண்டு உழைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
(ii) இதன் மூலம் மேலாண்மையில் நிர்வாகமும், பணியாளர்களும் ஒருவரோடு ஒருவர் பொருந்தி செயல்படுவதால் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
4. தனி மனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு:
(i) சச்சரவு இன்றி ஒற்றுமை என்ற கோட்பாட்டின் விரிவாக்கம் ஆகும். தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
(ii) ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை மேலாளர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நபரும் அவரது மிகச்சிறந்த திறனுடன் மற்றும் செழிப்புடனும் வளர்ச்சியடைதல்:
(i) அறிவியல் பூர்வ முறையில் உரிய பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் தகுதி, மன மற்றும் அறிவுத்திறன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பணியினை ஒதுக்க வேண்டும்.
(ii) தொழில் நிறுவனம் அதிக இலாபம் ஈட்ட திறமையான தொழிலாளர்கள் திறம்பட உற்பத்திப் பணிகளை மேற்கொள்வார்கள். இது தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் தத்தமது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவி புரிகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards