12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/07/2019
இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
ii, i, iii, iv
ii, iii, i, iv
iii, iv, i, ii
iii, iv, ii, i
2.
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843
அடிமைமுறை ஒழிப்பு - 1859
சென்னைவாசிகள் சங்கம் - 1852
இண்டிகோ கலகம் - 1835
3.
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
அரவிந்தோ கோஷ்
4.
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1825
1835
1845
1855
5.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1916
1917
1918
6.
நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.
7.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
8.
அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.
9.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
10.
தேசியம் என்றால் என்ன?
11.
12.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.
13.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
14.
1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?
15.
மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.
16.
இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்களையும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆரம்ப கால தேசியவாதிகள் அளித்த பங்கினையும் விளக்குக.
17.
இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?
18.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
1.
(c)
iii, iv, i, ii
2.
(c)
சென்னைவாசிகள் சங்கம் - 1852
3.
(d)
அரவிந்தோ கோஷ்
4.
(b)
1835
5.
(a)
1915
6.
1. இந்திய மக்களிடையே நவீனக் கல்வியைக் கற்றுக்கொடுக்க மேற்கொள்ளப்பட்ட தொடக்ககால முயற்சிகளிலொன்று கிறித்துவ சமயப்பரப்பு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டதாகும்.
2. மரபு சார்ந்த கல்வி முறையில், கல்வி கற்பதற்கான உரிமைகள் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை சமயப்பரப்புக் குழுக்கள் வழங்கின.
7.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
8.
1. 1859-60 இல் நடைபெற்ற "இண்டிகோ" புரட்சி கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர் வினையாகும்.
2. ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. சாயம் தயாரிக்க இச்செடிகள் அதிகம் தேவைப்பட்டது.
9.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
10.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
11.
12.
1. ஆங்கில பேரரசின் காலனி பகுதியான இலங்கையின் ஆளுநர் 1815-இல் சென்னை மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
3. 1837 இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித்தோட்டங்களில் சுமார் 10,000 தொழிலாளிகள் வேலை செய்தனர்.
13.
1. இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும்.
2. நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு பத்திரிக்கைகள் உதவின.
3. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின.
4. தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை மக்களுக்குப் பரப்ப பத்திரிகைகள் உதவின.
5. தி இந்தியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் ஆகும்.
14.
1. சென்னைவாசிகளின் சங்கத்தின் மனு 1853 மார்ச்சில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
2. இந்திய சீர்திருத்த தலைவரான H.D. செய்மோர் 1853 அக்டோபரில் சென்னை வந்தார்.
3. குண்டூர், கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
4. 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கிழக்கு இந்திய கம்பெனி தொடர அனுமதி வழங்கியது.
5. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்கு சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கூறியது.
15.
1. T.B. மெக்காலே 1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் குழுவின் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
2. 1823-இல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
3. 1835- இல் தனது புகழ்பெற்ற இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
4. இக்குறிப்புகளில் ஆங்கிலக்கல்வி முறையில் மேற்கத்தியக்கல்வி கற்பதற்கு ஆதரவாக வாதிட்டார்.
5. இந்தியாவில் ஆங்கிலம் வளர்வதற்கு முக்கிய காரணமாகியது, மேலும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கியது.
6. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
16.
1. 1875 க்கும் 1885 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
2. 1877 இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
3. இந்திய தேசிய காங்கிரஸ் "இந்தியா ஒரே நாடு" எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது.
4. இந்திய தேசியக் காங்கிரஸ் 1885 டிசம்பர் 28-இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
5. W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
6. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.
7. இந்தியரை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.
8. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நன்குணர்ந்தனர்.
9. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற ஆரம்பகால தேசியவாதிகள் மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக்கொள்வது போன்றவற்றிற்கு மாறாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தனர்.
17.
1. ஆங்கிலேயர்கள் இனப்பாகுபாட்டுக் கொள்கையை பின்பற்றினார்கள்.
2. அரசு உயர் பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
3. இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
4. அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சிகளை மேற்கொள்வோரை தண்டனைக்குள்ளாக்கும் இந்திய தண்டனைச் சட்டம் - 1870 பிரிவு 124A அடக்குமுறைச் சட்டத்தை இயற்றியது.
5. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின.
6. சம்வத் கௌமுகி 1821 பாரசீக மொழியில் எழுதப்பட்டது.
18.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards