12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
வரலாறு முதல் இடைத்தேர்வு
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு _______.
ஏப்ரல் 6, 1930
மார்ச் 6, 1930
ஏப்ரல் 4, 1930
மார்ச் 4, 1930
2.
3.
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்
பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்
4.
கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
5.
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
A.O. ஹியூம்
W.C. பானர்ஜி
6.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
7.
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
8.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
9.
தேசியம் என்றால் என்ன?
10.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
11.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளைப் பற்றி விவாதிக்கவும்.
12.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
13.
மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.
14.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
15.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?
16.
17.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
1. பம்பாய்
2. கல்கத்தா
3. சென்னை
4. அகமதாபாத்
5. லக்னோ
6. கான்பூர்
7. சூரத்
8. லாகூர்
9. பூனா
10. அலகாபாத்
1.
(a)
ஏப்ரல் 6, 1930
2.
(c)
3.
(c)
பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
4.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
5.
(d)
W.C. பானர்ஜி
6.
1. இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921-இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
2. இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.
3. நாடு முழுவதும் தொழிலாளிகளும் விவசாயிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
7.
1 1903-ல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார்.
2 1908 வெடிபொருட்கள் சட்டம், 1910 தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தினர்.
3 1914-ல் இயற்றப்பட்டது புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டம் இயற்றப்பட்டன.
4 இவை தேசிய இயக்கம் வளர்ந்து வருவதை கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
8.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
9.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
10.
1. நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது.
2. 1919 ஏப்ரல் 13 இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றம் நடத்தப்பட்டது.
3. துப்பாக்கிகளின் குண்டுகள் தீரும் வரை சுட்டுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
4. அரசு தகவல்படி 379 பேர் இறப்பு என்று கூறப்பட்டது.
5. இதற்கு எதிராக தாகூர் தனது "நைட்ஹுட்" பட்டத்தை துறந்தார்.
11.
1. திலகர் தலைமையிலும் மற்றொன்று அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன.
3. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும்,
4. தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகிய அந்த இரண்டு குறிக்கோள்கள் ஆகும்.
12.
1. 1908 இல் கோரல் மில் தொழிற்சாலை ஊழியர்கள் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் கொண்டிருந்தனர்.
2. இது வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
3. இதனால் 1908 இல் மார்ச்சில் கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்
5. தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்தில் தீவிர தேசியவாதிகள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்.
13.
1. T.B. மெக்காலே 1834 - 1838 வரை கவர்னர் ஜெனரலின் குழுவின் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
2. 1823-இல் பொதுக் கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
3. 1835- இல் தனது புகழ்பெற்ற இந்திய கல்வி குறித்த குறிப்புகள் எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
4. இக்குறிப்புகளில் ஆங்கிலக்கல்வி முறையில் மேற்கத்தியக்கல்வி கற்பதற்கு ஆதரவாக வாதிட்டார்.
5. இந்தியாவில் ஆங்கிலம் வளர்வதற்கு முக்கிய காரணமாகியது, மேலும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் இந்தியாவில் தொடங்கியது.
6. 1857 இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
14.
1. 1929 - டிசம்பர் -31 இல் லாகூரின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி -26 ஆம் நாள் விடுதலை நாள் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
2. சட்ட மறுப்பு இயக்கம் காந்தி தலைமையில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
3. லண்டனில் ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டவிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் சுதந்திரம் பெற்றே ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த வட்ட மேசை மாநாட்டை புறக்கணிக்கப் போவதாகக் காங்கிரஸ் அறிவித்தது.
4. காங்கிரஸ் பங்கேற்காவிட்டால் மாநாட்டை அரசு நடத்துவது பயன் இல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
5. காங்கிரஸ் பேச்சுக்கள் தொடங்கின 1931 - மார்ச் - 5 இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
15.
1. நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
2. மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
3. மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4. மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.
5. மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.
6. தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்கக் கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது ஆளுநர் சபைகளின் தடுப்பாணை அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.
7. இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கு இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்க வேண்டும்.ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும்.
16.
17.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards