12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/08/2019
தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
2.
1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது _______.
12 மாகாணங்கள்
7 மாகாணங்கள்
5 மாகாணங்கள்
8 மாகாணங்கள்
3.
4.
லண்டன் பிரிவி கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் _______.
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பத்ருதீன் தயாப்ஜி
5.
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
6.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
7.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
8.
கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?
9.
1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?
10.
வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
11.
12.
இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்தியப் பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?
13.
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
1.
(b)
16 ஆகஸ்ட், 1946
2.
(b)
7 மாகாணங்கள்
3.
(d)
4.
(c)
சையது அமீர் அலி
5.
(a)
உருது
6.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
7.
(i) ஆரிய சமாஜியத்தின் சுத்தி இயக்கம் மூலம் பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்டது.
(ii) மேலும் ஆரிய சமாஜியத்தின் சங்கதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை மேலும் பிளவுப்படுத்தியது.
8.
(i) பஞ்சாப்பை சேர்ந்த பசுப்பாதுகாவலர்கள் மத்திய மாகாணத்தின் "கௌராக்ஷினி" சபா (பசுப்பாதுகாப்பு சங்கங்கள்) செயல்பாட்டாளர்கள் ஆவர்.
(ii) இவர்கள் மிகவும் போர்க்குணம் கொண்டவர்களாக பசுப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
(iii) இவர்கள் தேவநாகிரி மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பரப்புரை செய்தனர்.
(iv) மேலும் பசுக்களின் விற்பனை அல்லது பசுக் கொலையில் இந்த சங்கங்களின் தலையீடுகள் இருந்தன.
(v) ஐக்கிய மாகாணங்கள் பீகார், குஜராத் மற்றும் பம்பாய் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதியில் பரவிய கலவரங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கின.
9.
(i) 1927 மார்ச் 20 இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது.
(ii) மாநாட்டில் நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன அவை,
(iii) பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது.
(iv) பாகிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.
(v) பஞ்சாப்பிலும், வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் மற்றும் மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகும். இதனை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும், எஸ். சீனிவாசனும் காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர்.
10.
(i) பிறமதத்தாரோடு பொருள்சார்ந்த பிரச்சனைகளில் கூட விரோதப்போக்கோடு சண்டையிடும் வகையில் ஒரு மதத்தினரை உருவாக்குவது, வகுப்புவாதம் எனப்படும்.
(ii) வகுப்புவாதம் என்ற கருத்தாக்கம் அல்லது இயக்கத்தை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர்.
(iii) நேருவின் கூற்றுப்படி வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகளின் செயல் ஆகும்.
(iv) வகுப்புவாதம் என்பது ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் செயல் ஆகும்.
11.
12.
(i) M. S கோல்வாகர் மற்றும் V. D. சவார்கர் ஆகியோர் இந்து ராஷ்ட்ரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
(ii) இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினார்.
(iii) இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக, உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் ஏற்று அவர்கள் கூறினர்.
(iv) "இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம்" என V. D. சாவர்கர் உறுதிப்பட கூறினர். இதை காந்தியும் விரும்பினார்.
(v) இந்த சூழலில் 1940 மார்ச் 23 இல் லாகூரில் முஸ்லிம் லீக், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டுமென்று கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
(vi) இது அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அமர்வின் ஒருங்கிணைந்த கருத்துக்கும்.
(vii) பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் நாட்டை இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் என பிரிவினை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் லீக் தீர்மானித்தது.
(viii) இந்திய தேசியக் காங்கிரஸின் தேசியவாதத்தை உருவாக்கப்படுத்திய காந்தி ஆரிய சமாஜம் அலிகார் இயக்கம் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார்.
(ix) பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க விரும்பினார்.
13.
(i) ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என்று நம்பினர்.
(ii) சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல 1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
(iii) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பசுப்பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
(iv) ஆரிய சமாஜம் போன்ற நிறுவனர் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னி பெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் தனது கருத்துக்களை பின்வருமாறு குறிப்பிட்டார்.
(v) "பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே, இந்தியர்களின் முதற்பணி" ஆகும்.
(vi) ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும், தேசப்பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும் நாட்டு புனரமைப்பதற்கான தோற்றமாகவும் உருவாக்கப்பட வேண்டும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards