12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/09/2019
தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்
பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்
2.
கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று தவறு; காரணம் சரி
3.
கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் _______.
புலின் பிஹாரி தாஸ்
ஹேமச்சந்திர கானுங்கோ
ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்
குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
4.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
| (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 | 1. சுய ஆட்சி |
| (ஆ) விடிவெள்ளிக் கழகம் | 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி |
| (இ) சுயராஜ்யம் | 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது. |
| (ஈ) சுதேசி | 4. கல்விக்கான தேசியக் கழகம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
5.
சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்தோ கோஷ்
தாதாபாய் நெளரோஜி
பெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதிராய்
6.
தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?
7.
8.
பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.
9.
மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Mendicant Policy) என்றால் என்ன?
10.
11.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
12.
பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?
13.
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.
14.
1.
(c)
பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
2.
(a)
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
3.
(c)
ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்
4.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
5.
(d)
லாலா லஜபதிராய்
6.
1. ஆங்கில அரசு அறிவித்த 1908 டிசம்பரின் மிண்டோ-மார்லி நடவடிக்கைகள் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
2. 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்) ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை.
3. வெடிமருந்துச் சட்டம் (1908), இந்திய பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனி அரசு வரிசையாக இயற்றியது.
7.
8.
1. பாலகங்காதர திலகர், பிபின்சந்திரபால், லாலா லஜபதிராய் (Lal-Bal-Pal), அரவிந்த் கோஷ் போன்ற தலைவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் தலைவர்களாக விளங்கினர்.
2. மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்று மாகாணங்களில் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
9.
1. மிதவாதிகளின் கவனமான அணுகுமுறை ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் ஆகும்.
2. மனு சமர்ப்பித்தல் போன்றவை அவர்களின் "இறைஞ்சுதல் கொள்கை" ஆகும். இக்கொள்கையைக் கடுமையாக தீவிரவாத காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
10.
11.
1. புரட்சிகர பயங்கரவாதியாகிய அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர கனுங்கோ பாரிஸ் சென்று இராணுவப் பயிற்சிப் பெற்று நாடு திரும்பி மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில்கூடத்தை நிறுவினார்.
2. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை குண்டு வீசி கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.
3. கொலை செய்யும் பொறுப்பு புரட்சிவாதிகளான குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. 1908 ஏப்ரல் 30 இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
இதனால் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொல்ல, குதிரம் போஸ் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
12.
சிறப்பம்சங்கள் :
1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள், தொண்டர் படைகள் எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
2. விழாக்காலங்களில் சுதேசி செய்தியை பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும், நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல்.
3. உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளை கற்றுக்கொடுத்தல், பஞ்சங்களின் போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல் போன்றப் பணிகளில் சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
13.
1. காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. ஆனால் மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறும் இடத்தை சூரத் நகருக்கு மாற்றினர்.
2. காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளரான ராஷ்பீகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதிராயின் பெயரை முன்மொழிந்தனர்.
3. மேலும் தீவிர தேசியவாதிகள் ராஷ்பீகாரி கோஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர்.
4. இதனால் 1907 இல் சூரத் மாநாடு குழப்பத்தில் முடிந்து மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது.
14.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards