12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Commerce Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
புற வள ஆட்சேர்ப்பின் முக்கியத்துவத்தை விவரியுங்கள்.
2.
மனித வள மேலாண்மையின் மேலாண்மைப் பணிகளை விவரி.
3.
செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)
4.
பங்குச் சந்தை தன்மைகளை விவரி. (ஏதேனும் 5)
5.
6.
நிதிச் சந்தையின் பல்வேறு வகையான புதிய நிறுவனங்களை விளக்குக. (ஏதேனும் 5)
7.
முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குக. (ஏதேனும் 5)
8.
விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன? (ஏதேனும் 5)
9.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
10.
அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?
1.
1. இணையதளம் மூலம் ஆட்சேர்ப்பிற்கான புதிய வழிகளை வடிவமைத்தல்.
2. பணி வாழ்க்கை சமநிலையை ஊக்குவிப்பதில் பங்கேற்றல்.
3. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கான செயல்முறையை உருவாக்குதல்.
4. புதிய வேலைகள் மற்றும் புதிய வேலை வாய்ப்பினை அறிந்து கொள்ளல்.
5. பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டிலும் ஏற்படும் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுத்தல்.
2.
1. மனித சக்தி தேவையான அடையாளம் காணுதல்
ஒரு நிறுவனத்தில் மனித வள தேவைகளைத் தீர்மானிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரே முதலீட்டு முறையாகும்.
2. மாற்றங்களை இணைத்துக் கொள்ளல்.
மாற்றம் என்பது நிலையானது,மாற்றத்தை நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்த மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
3.மனித சக்தியின் சரியான தேவையை உறுதி செய்தல் :
மனித வள மேலாண்மையின் மூலமாக நிறுவனத்தில் திறன்பட அறிமுகப்படுத்தப்பட்ட மனித வள மேலாண்மை ஒரு முகவராக செயல்பட வேண்டும்.
4. சரியான வேலைக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுத்தல் :
(i) சரியான வேலைக்கு சரியான தகுதியுடைய நபர்களை மனித வள மேலாண்மை உறுதிப்படுத்துகிறது.
(ii) இதனால் நிறுவனத்தில் குறை தகுதி அல்லது மிகை தகுதி உடைய பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.
5. திறன் மற்றும் அறிவை மேம்படுத்துதல் :
(i) பணியாளர்கள் திறன் மற்றும் அறிவு மேம்பாடு செயல்பாடுகளை நிர்வகிப்பதில் மனித வள மேலாண்மை முக்கியமாக செயல்படுகிறது.
(ii) பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தொழில் சார்ந்த அறிவை பணியாளர்களுக்கு வழங்குகிறது.
6. பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுதல் :
(i) மனித வள மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களின் செயல்திறன்களை மதிப்பீடு செய்ய முடிகிறது.
(ii) இதனால் பணிபுரிவோரின் திறனை அதிகரிக்கவும், ஊக்கமளிக்கவும், பணியாளர்களின் செயல்திறனை அறியவும் முடிகிறது.
7. போட்டி நன்மைகளை மேம்படுத்துதல் :
நிறுவனங்கள் தகுதி வாய்ந்த மற்றும் போட்டிச் சூழலை எதிர்கொள்ளும் பணியாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே உலகளாவிய போட்டிச் சந்தையின் நன்மையைப் பெற முடியும்.
8. பணியாளர் அர்ப்பணிப்பைத் தீர்மானித்தல் :
(i) மனித வள மேலாண்மை நேர்காணல் அல்லது வினாத் தொகுப்பு வாயிலாக பணியாளர்களுக்கு அவர்களின் பணி அர்ப்பணிப்பு நிலையைத் தீர்மானிக்கிறது.
9. சமூகமயமாக்க வலியுறுத்தல் :
மனிதர்கள் சமூக விலங்குகளாக இருக்கிறார்கள். நிறுவனத்தில் அதிகபட்சமாக பங்களிப்பு செய்வதற்கு ஒத்த வயதுடையோர், துணை நிலையில் உள்ளோர் மற்றும் மேலாளர்களுடன் நல்ல உறவு வைத்திருப்பது உறுதி செய்ய வேண்டும்.
10. சாதகமான பணியாளர் மனப்பான்மையை வளர்ப்பதற்கு:
(i) மேலாண்மையைப் பற்றி பணியாளர்களின் மனப்பான்மை சாதகமாக இருக்கும் வகையில் நிறுவனங்கள் ஒரு நல்ல பணிச் சூழலை உருவாக்க விரும்புகிறது.
(ii) நிறுவனங்களில் ஆலோசனை மையம்,குறை தீர்க்கும் மையம் போன்றவற்றை ஏற்படுத்துவதன் மூலமாக இச்சூழலை அடையலாம்.
3.
(1) பங்குச்சந்தைகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பான அதிகாரங்கள் (Powers Relating to Stock Exchanges & Intermediaries)
பத்திர வணிகத்தை மேற்கொள்ளும் பங்கு பரிமாற்றகங்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் செபி பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(2) நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் (Power to Impose Monetary-Penalties.)
மூலதனச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத்திற்கு தங்கள் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(3) பணியிடங்களில் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது (Power to Initiate Actions in Functions Assigned.)
(அ) செபி ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒரு அதிகாரம் உண்டு.
(ஆ) உதாரணமாக, இது பல்வேறு இடைத்தரகர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம் அல்லது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாம்.
(4) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை, ஒழுங்குப்படுத்துவதற்கான அதிகாரம் (Power to Regulate Insider Trading.)
உள்வழி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அல்லது வணிக வங்கியாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
(5) பத்திரங்கள் ஒப்பந்த சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் (Powers Under Securities Contracts Act.)
(அ) பங்குச்சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரங்களை செபிக்கு 13 செப்டம்பர், 1994 அன்று ஒரு அறிவித்தல் மூலம் வழங்கியுள்ளது.
(ஆ) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
(6) பங்குச்சந்தை வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் (Power to Regulate Business of Stock Exchanges)
பத்திரச் சந்தை மற்றும் பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய இடைநிலையர்கள், மோசடியான மற்றும் முறையற்ற வியாபார செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
4.
பங்குச் சந்தையின் பல்வேறு குணாதிசயங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
(1) பத்திரங்களுக்கான சந்தை (Market for Securities)
பங்கு பரிவர்த்தனை என்பது ஒரு சந்தை, இது பெருநிறுவனங்கள், அரசு மற்றும் அரசுக்கு இணையான நிறுவனங்கள் ஆகியவற்றின் பத்திரங்கள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
(2) மறுவிற்பனை பத்திரங்களுக்கான சந்தை (Deals in Second Hand Securities)
(i) நிறுவனங்களால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பங்குகள், கடனீட்டு பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் விற்பனையில் இது ஈடுபடுகிறது.
(ii) கருத்துக்கூறின் இது ஏற்கனவே வெளியிடப்பட்ட அல்லது மறுவிற்பனை பத்திரங்களைக் கையாளுகிறது.
(3) தனிநபர்களின் அமைப்பு (Association of Persons)
ஒரு பங்கு மாற்றகம் என்பது தனிநபர்களின் அல்லது குழுக்களின் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அமைப்பாக இருக்கலாம்.
(4) மத்திய அரசின் அங்கீகாரம் (Recognition from Central Government)
பங்கு மாற்றகம் என்பது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சந்தையாகும். அரசின் அங்கீகாரம் இதற்கு தேவைப்படுகிறது.
(5) விதிகளின்படி செயல்படுதல் (Working as per Rules)
(i) பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை பங்கு மாற்றகம் மற்றும் SEBI வழிகாட்டுதலின் படி அவை கொண்டுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
(ii) எந்த சூழலிலும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களிலிருந்து எந்தவொரு விலகலும் அனுமதிக்கப்படவில்லை.
(6) பத்திர வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல்: பங்கு மாற்றகம் அதன் சொந்த கணக்கில் எந்தப் பத்திரங்களையும் வாங்குவதோ விற்பதோ இல்லை. பத்திர வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பங்கு மாற்றக உறுப்பினர்கள் மற்றும் தரகர்கள் ஆகியோர் பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அது வழங்குகிறது.
(7) பட்டியலிடப்பட்ட பத்திரங்களில் மட்டும் வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதியளித்தல் : உண்மையில் பங்கு மாற்றகம் அனுமதி பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பத்திரங்களை மட்டுமே வாங்கி விற்க அனுமதிக்கிறது. பங்கு பரிவர்த்தனைகளின் பட்டியலில் காணப்படாத பத்திரங்கள் பட்டியலிடப்படாத பத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
(8) உறுப்பினர்களால் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் (Transactions Effected only through Members) :
பங்கு மாற்றகத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை பத்திர நடவடிக்கைகளும் அதன் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. பங்குச் சந்தையில் வெளிநபர்கள் அல்லது நேரடி முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியில்லை.
5.
6.
தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய நிதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு கடன் அளிக்கப்பட்டது. அந்நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கீழே காணலாம்.
துணிகர நிதி நிறுவனம்:
துணிகர மூலதன நிதி என்பது சாதாரண நிதியில் ஒரு பகுதி ஆகும். இது புதிய திட்டம் மற்றும் கண்டுபிடிப்பிற்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். துணிகர மூலதனம் என்பது தொழில்நுட்ப திட்டங்களை வணிகமயமாக்குவதற்கு தேவையான நிதியினை அளிக்கிறது.
பரஸ்பர நிதி:
சிறு முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பெரிய முதலீடாக மாற்றும் நிதி நிறுவனங்களையே பரஸ்பர நிதி என்கிறோம். நிதி நிறுவனங்களான LIC, UTI மற்றும் வணிக வங்கிகள் SBI மற்றும் கனரா வங்கி போன்றவை பரஸ்பர நிதி வணிகத்தில் ஈடுபடுகின்றன.
இந்திய எதிர் பங்கு மாற்றகம்:
பங்குகளை இந்தியா முழுவதும் மின்னணு மூலம் வியாபாரம் செய்யும் நோக்கத்தோடு முதன்மை நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதே OTCEI என்பதாகும். இதன் மூலம் முதலீட்டாளர் மற்றும் நிறுமத்திற்கு சில பிரச்சனைகள் இருந்த போதும் வெளிப்படைத் தன்மை, விரைவான முடிவு, நெகிழ்வு தன்மை ஆகிய நன்மைகளையும் அளிக்கிறது.
ஏட்டுக்கடன் தரகு முகமை நிறுவனங்கள்:
விற்பனை மூலம் பெற வேண்டிய பெறுதல்களின் அடிப்படையில் நிதி நிறுவனங்கள் செய்யும் நிதி ஏற்பாடே ஏட்டுக்கடன் தரகு முகமை ஆகும். இந்தியாவில் செயல்படும் சில நிறுவனங்களாவன, SBI. மற்றும் வணிக சேவைகள் SBI ன் துணை நிறுவனம் மற்றும் கான்பேங்க் ஃபேக்டரிக் லிமிடெட் கனரா வங்கியின் துணை நிறுவனம் ஆகும்.
இந்திய தேசியப் பங்கு மாற்றகம் லிமிடெட் (NSEI):
பங்குச் சந்தையின் மாதிரியாக NSEI என்பது 1992ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இச்சந்தையின் நோக்கமானது மின்னணு பங்குகளை இந்தியா முழுவதும் அமைத்து கொடுப்பதாகும்.
தேசிய பத்திரங்கள் களஞ்சியம் லிமிடெட்:
காகிதமில்லா மற்றும் காகிதமாற்று பங்குகளை கொண்டுவருவதற்காக 1996ம் ஆண்டு NSDLல் உருவாக்கப்பட்டது. இரண்டாம் சந்தையில், வியாபாரத்திற்கு பின் ஏற்படும் சிக்கல்களை தீர்கவும் NSDL ல் உருவாக்கப்பட்டது.
இந்திய பங்கு வைப்பு கழகம் லிமிடெட்:
SHCIIL -ல் நோக்கமானது பங்குச் சந்தை நடவடிக்கையில் மத்திய பத்திர வைப்பாக செயல்படுவதே ஆகும். இக்கழகம் தேசிய அளவிலான நிர்வாக சீர்திருத்த பணிகளையும் செய்கிறது.
7.
| வ.எண் | ஒப்பீட்டு அடிப்படை (Basis for Comparison) |
புதிய வெளியீடுகள் சந்தை (New Issue Market) |
இரண்டாம் நிலை சந்தை (Secondary Market) |
|---|---|---|---|
| 1 | பொருள் | புதிய பங்குகளுக்கான சந்தை முதல் நிலை சந்தை எனப்படும். | முன்னர் வெளியிட்ட ஈடுகளை வணிகம் செய்யும் இடம் இரண்டாம் நிலை சந்தை எனப்படும். |
| 2 | கொள்முதலின் வகைகள் |
நேரடி | மறைமுகம் |
| 3 | நிதி | புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கி கொண்டு இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வகைபடுத்துதல் போன்றவற்றிற்கு நிதி வழங்குகிறது. | நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில்லை. |
| 4 | ஒரு பத்திரம் எத்தனை முறை விற்க முடியும்? | ஒரே ஒருமுறை | பலமுறை |
| 5 | வாங்குதல் மற்றும் விற்றல் | நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே | முதலீட்டாளர்களுக்கு இடையே |
| 6 | பங்குகளை விற்பதன் மீதான ஆதாயம் பெறும் நபர் | நிறுவனம் | முதலீட்டாளர்கள் |
| 7 | இடைநிலையர் | ஒப்புறுதியாளர்கள் | தரகர்கள் |
8.
விதிவிலக்கு மேலாண்மை பின்வரும் நன்மைகளை வழங்குகிறது.
(i) இது மேலாளர்களின் நேரத்தை சேமிக்கிறது. ஏனெனில் அவர்கள் விதிவிலக்கான செயல்களை மட்டுமே கையாளுவார்கள். வழக்கமான பிரச்சினைகள், கீழ்நிலை ஊழியர்களின் வசம் விடப்படுகின்றன.
(ii) இது முக்கிய பிரச்சினைகளை நிர்வகிப்பதில் கவனங்களைச் செலுத்துகிறது.
(iii) இது அதிகாரப் பகிர்வினை எளிமையாக்குகிறது. மேல் நிர்வாகம் பெருந் திட்ட முடிவுகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் செயல்திறன் முடிவுகள் கீழ்நிலை நிர்வாகத்திற்கு விடப்படுகின்றன.
(iv) இது முக்கியமல்லாத தகவலில் இருந்து முக்கியமான தகவலைப் பிரிக்கும் ஒரு தொழில் நுட்பமாகும்.
(v) முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாய்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க விதிவிலக்கு மேலாண்மை உதவுகிறது.
(vi) விதிவிலக்கு மேலாண்மை முடிவுகளை நிர்ணயிக்கும் சிறந்த அளவுகோலாக விளங்குகிறது. இது குறிக்கோள் செயல்திறன் மதிப்பீட்டில் பயனுள்ளதாக உள்ளது.
9.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
10.
1. அறிவியல், கட்டை விரல் விதி அல்ல:
(i) கட்டை விரல் விதிமுறைக்கு பதிலாக அறிவியல்பூர்வ வேலைப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
(ii) கட்டை விரல் விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும்.
2. இணக்கம், சச்சரவின்மை:
(i) மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டும். ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது பணியாளர்களின் செழிப்பு மூலமே அடைய எய்த முடியும்.
(ii) நிர்வாகம் தனது உபரியான இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3. மனப்புரட்சி:
(i) பரஸ்பர நம்பிக்கை மற்றும் சரியான புரிதலுடன் கூடிய குழுச் செயல்பாடு கொண்டு உழைக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
(ii) இதன் மூலம் மேலாண்மையில் நிர்வாகமும், பணியாளர்களும் ஒருவரோடு ஒருவர் பொருந்தி செயல்படுவதால் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
4. தனி மனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு:
(i) சச்சரவு இன்றி ஒற்றுமை என்ற கோட்பாட்டின் விரிவாக்கம் ஆகும். தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
(ii) ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை மேலாளர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்க வேண்டும்.
5. ஒவ்வொரு நபரும் அவரது மிகச்சிறந்த திறனுடன் மற்றும் செழிப்புடனும் வளர்ச்சியடைதல்:
(i) அறிவியல் பூர்வ முறையில் உரிய பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் உடல் தகுதி, மன மற்றும் அறிவுத்திறன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பணியினை ஒதுக்க வேண்டும்.
(ii) தொழில் நிறுவனம் அதிக இலாபம் ஈட்ட திறமையான தொழிலாளர்கள் திறம்பட உற்பத்திப் பணிகளை மேற்கொள்வார்கள். இது தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் தத்தமது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவி புரிகின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards