12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.
2.
பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
3.
யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் என்று அழைக்கப்பட்டது? இந்த போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?
4.
நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?
5.
ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?
6.
பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.
7.
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல் துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்தியது?
8.
அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?
9.
10.
கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?
11.
லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?
12.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?
13.
தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
14.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
15.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?
16.
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகையின் பெயர்களைக் கூறுக?
17.
1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
18.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
19.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக?
20.
21.
மகாதேவ் கோவிந்த் ரானடே சுதேசிக் கொள்கையினை எவ்வாறு விளக்குகிறார்?
22.
தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.
23.
ஆங்கிலப் பாராளுமன்றத்திற்குச் சென்னைவாசிகள் சங்கத்தினர் அளித்த கோரிக்கைகள் என்ன?
24.
இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.
25.
புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.
1.
1.1777 இல் சரடோகா போர் முனையின் ஆங்கிலேயப் படைத்தளபதி ஜெனரல் புர்கோய்ன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
2.1787ல் யார்க்டவுன் என்ற இடத்தில் இங்கிலாந்து படைகள் அமெரிக்க படைகளிடம் சரணடைந்தன.
3.இவ்வெற்றிகளால் வட பகுதி குடியேற்றங்கள் சுதந்திரம் பெற்றன.
2.
1. பாஸ்டன் படுகொலையை தொடர்ந்து 1773 ல் பூர்வகுடி அமெரிக்கர்களைப் போல வேடமணிந்த 100 கிளர்ச்சியாளர்கள் பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலை கப்பலில் ஏறி 342 பெட்டிகளை கடலில் வீசி எறிந்தனர்.
2. இதுவே பாஸ்டன் தேநீர் விருந்தாகும்.
3.
1.அரச சிம்மாசனத்தை அடைய யார்க் குடும்பம் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பம் என இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
2.இதன் விளைவாக ரோஜாப்பூ போர் நடந்தது.(அவர்கள் முறையே வெள்ளை மற்றும் சிவப்பு ரோஜாக்கள் உடைய அடையாளக்குறிகளை அணிந்தனர், அதனால் இப்பெயர் பெற்றது.) இந்த உள்நாட்டுப்போரில் ஹென்றி டியூடர் வெற்றி வாகை சூடி, இங்கிலாந்தில் புதிய அரசாட்சி அமைய வழிவகுத்தார்.
3.ஏழாம் ஹென்றி என்று பட்டம் சூட்டிக்கொண்ட அவர் யார்க் குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் உடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட்டார், இதனால் இங்கிலாந்து ஒரு தேசிய அரசாக உருவெடுத்தது.
4.
1.இங்கிலாந்தில் பிரபுக்களின் சொத்துக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நட்சத்திர சேம்பர் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏழாம் ஹென்றி உருவாக்கினார்.
2.நீதிமன்ற நடைமுறைகள் நடந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மேல் சுவரில் நட்சத்திரங்கள் ஓவியமாக தீட்டப்பட்டிருந்ததால் இப்பெயர் பெற்றது.
5.
1.1588ல் இரண்டாம் பிலிப் ஸ்பெயின் நாட்டு கப்பற்படையை 130 கப்பல்கள் மற்றும் 31,000 படை வீரர்களோடு இங்கிலாந்து மீது போர் தொடுக்க அனுப்பினார்.
2.ஸ்பானிய கப்பற்படையை ஆங்கிலேய படை முறியடித்தது.
3.நவீன உலகில் ஒரு வலுவான சக்தியாக பிரிட்டிஷார் உருவெடுக்க இது காரணமாக அமைந்தது.
6.
1.பிளாரன்ஸ் நகரில் சக்திவாய்ந்த வர்த்தகக் குடும்பம் மெடிசி குடும்பம்.
2.கோசிமோ டி மெடிசி என்பவர் இத்தாலி முழுவதும் வங்கிக் கிளைகளை நடத்தி வங்கித்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.
3.1434-1464ஆம் ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தை மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
7.
(i) ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
(ii) ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இரசாக்கர்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கானா மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழிநடத்தினர்.
(iii) இதன் காரணமாக ஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டபூர்வமான காரணம் வாய்த்தது எனலாம்.
8.
(i) 1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தன் பணியைத் தொடங்கியது.
(ii) அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(iii) டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அரசியலமைப்பு வரைக்குழுவின் நிரந்தர தலைவராக நியமிக்கப்பட்டார்.
(iv) 1949 நவம்பர் 26 ஆம் நாள் முதல் இந்திய அரசியலமைப்பை இச்சபை ஏற்றுக்கொண்டது.
(v) 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
(vi) அது முதல் ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
9.
10.
(i) டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.
(ii) பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.
(iii) ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு அவ்வாறே நிகழ்ந்தது.
11.
(i) இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும்.
(ii) இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்தது.
(iii) 1940 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கை (பாகிஸ்தான்) ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
12.
1. காந்தி - இர்வின் ஒப்பந்தம் 1931 மார்ச் 5-இல் கையெழுத்தானது.
2. சட்டமறுப்பு இயக்கத்தின் முடிவைக் குறிப்பதாக அது அமைந்தது.
3. 1931 ஜனவரியில் காந்தியடிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
4. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
5. சத்தியாகிரக பிரச்சாரத்தைக் கைவிட காந்தியடிகள் உறுதி ஏற்றார்.
6. இந்த இயக்கத்தின்போது சிறையில் அடைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை விடுதலை செய்ய இர்வின் ஒப்புக்கொண்டார்.
13.
1. மத்திய சட்டப்பேரவையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
2. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க இச்சட்டம் அதிகாரமளிக்காது.
3. 1919 இல் ரௌலட் சட்டத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும், எதிர்க்கவும் செய்தனர்.
14.
1. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்று திரட்டும் பணி காத்திருந்தது துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது.
2. காந்தி இருதரப்பையும் சந்தித்துப் பேசினார்.
3. 35% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தி அறிவுரை வழங்கினார்.
4. தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் காந்தியடிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
15.
(i) ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் முஸ்லிம் லீக் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
(ii) அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர் நீதிமன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரசுப் பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
16.
1. 1914-இல் தி.காமன்வெல்த் என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டார்.
2. 1915 ஜூலை 14-இல் நியூ இந்தியா என்ற தினசரியை அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
3. 1916 இல் தன்னாட்சி இயக்கங்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொடங்கினார்.
17.
1 1903-ல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை (CID) உருவாக்கினார்.
2 1908 வெடிபொருட்கள் சட்டம், 1910 தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஏற்படுத்தினர்.
3 1914-ல் இயற்றப்பட்டது புரட்சிகர இயக்கங்களின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கும் நோக்கில் இவற்றில் பெரும்பான்மையான சட்டம் இயற்றப்பட்டன.
4 இவை தேசிய இயக்கம் வளர்ந்து வருவதை கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
18.
(i) ராஜகுரு, சுகதேவ் ஜதீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
(ii) சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
19.
(i) 1924 ஆம் ஆண்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929 ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன.
(ii) கே. எஃப். நாரிமன், எம்.சி. சுக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர்.
20.
21.
1. சுதேசி என்பதன் பொருள் "ஒருவரது சொந்த நாடு" மற்றும் அன்னியப்பொருள் எதிர்ப்பு என்பதாகும்.
2. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்தபோதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
22.
பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் தொடக்ககால முக்கிய தேசியவாதிகள் ஆவார்கள்.
23.
1. சென்னைவாசிகள் சங்கம் 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண்மை வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டியது
2. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறையை மீட்டெடுக்க வலியுறுத்தியது.
24.
1. ரிப்பன் வைஸ்ராயாக இருந்தபோது இல்பர்ட் மசோதா கொண்டுவரப்பட்டது.
2. இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.
3. இதை ஐரோப்பியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
4. பின்னர் இது திருத்தம் செய்யப்பட்டது.
25.
1. கிழக்கு இந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன.
2. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினார்கள்.
3. ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards