12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
2.
வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன ?
3.
மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.
4.
மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.
5.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
6.
பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.
7.
1946 இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?
8.
சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.
9.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப் பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
10.
மாற்றத்தை விரும்புபவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.
11.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
12.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
13.
1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?
14.
15.
16.
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
17.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளைப் பற்றி விவாதிக்கவும்.
18.
டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
19.
வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக.
20.
அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.
21.
பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?
22.
காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.
23.
தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.
24.
பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?
25.
1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?
1.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (avenues) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
2.
1.வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகளில் ஒன்று அடிமைத்தனம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
2.பூர்வீக அமெரிக்கர்களை வேலை வாங்குவது கடினமாக இருந்தால் அவர்களை அடிமைகளாக்கும் முயற்சி தோல்வி கண்டதால் ஆப்பிரிக்கர்களை இறக்குமதி செய்தது.
3.வர்த்தகப் புரட்சி தொழிற்புரட்சிக்கு வழியமைத்தது.
3.
1.ஆங்கில மறுமலர்ச்சியில் முதலாம் எலிசபெத் பல அறிஞர்களை ஆதரித்ததை குறிப்பிடலாம்.
2.வில்லியம் ஷேக்ஸ்பியர், கிறிஸ்டோபர் மார்லோவ், பிரான்சிஸ் பேகன் குறிப்பிடத்தக்கவர்கள்.
3.ஆங்கில இலக்கியத்தின் முடிசூடா மன்னர் வில்லியம் ஷேக்ஸ்பியர் 38 நாடகங்களையும் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.
4.
1.1980ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
5.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் :
1.குத்தகையை முறைப்படுத்துவது.
2.குத்தகைக்காரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
3.நிலவுடைமையார்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.
6.
(i) பிரிவினையைச் சமாளித்தல், பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் கல்விமுறையை சீரமைத்தல் ஆகும்.
(ii) இந்திய விடுதலைப் போராட்டத்தால் கிளர்ந்தெழுந்த உயர்ந்த இலட்சியங்களை எதிரொளிக்கும் அரசமைப்பை உருவாக்குதல்.
(iii) 500 க்கும் அதிகமான எண்ணிக்கையில் வெவ்வேறு பரப்பளவில் இருந்த சுதேச அரசுகளை இந்தியாவோடு ஒருங்கிணைத்தல்.
(iv) மக்களாட்சி, இறையாண்மை, சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளுக்கு இசைவான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வேண்டிய சவாலும் அடங்கும்.
7.
(i) முஸ்லீம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான் முகம்மது இஸ்மாயில் கான், குவாஜா சர் நிஜாமுதீன் மற்றும் அப்துல் ரப் நிஷ்தர் ஆகியோர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவார்.
8.
(i) இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
(ii) இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸையும், A.V. அலெக்ஸாண்டரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அந்த தூதுக்குழு மார்ச் 1946 இல் இந்தியா வந்தடைந்தது. முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
(iii) இத்தூதுக்குழு மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களினும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
9.
1. சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் கையில் எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது பொருளாதார வீழ்ச்சி காரணமாகக் குறிப்பாக விவசாயிகள் உட்பட பொதுவாகவே நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
2. தேசியவாதம் தொடர்பான பிரசுரங்கள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
3. இந்த இயக்கம் பொதுவாக மந்த நிலையை அடைந்து 1933 மே மாதம் அதிகாரப்பூர்வமாக
நிறுத்தப்பட்டது.
4. பின்னர் மே 1934-இல் முற்றிலும் முடிவுக்கு வந்தது.
10.
1. சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
2. சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் (pro - changers) என்று இந்த குழு அழைக்கப்பட்டது.
3. சட்டப்பேரவை நுழைவை உதித்த மற்றொரு குழு காந்தி வழியைப் பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
4. எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணியை மாற்றம் விரும்பாதோர் - No - Changes என்று அழைக்கப்பட்டார்கள்.
11.
1. தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் காந்தி அறிவித்தார்.
2. காந்தியின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது, ஆலோசனை கூட்டம் பிரார்த்தனை நடந்தது.
3. அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் 1932-இல் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
12.
1. நாடு முழுவதும் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது.
2. 1919 ஏப்ரல் 13 இல் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றம் நடத்தப்பட்டது.
3. துப்பாக்கிகளின் குண்டுகள் தீரும் வரை சுட்டுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
4. அரசு தகவல்படி 379 பேர் இறப்பு என்று கூறப்பட்டது.
5. இதற்கு எதிராக தாகூர் தனது "நைட்ஹுட்" பட்டத்தை துறந்தார்.
13.
(i) 1927 மார்ச் 20 இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது.
(ii) மாநாட்டில் நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன அவை,
(iii) பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது.
(iv) பாகிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.
(v) பஞ்சாப்பிலும், வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் மற்றும் மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகும். இதனை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும், எஸ். சீனிவாசனும் காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர்.
14.
15.
16.
1. 1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்
2. அதில் துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும் என்றும்,
3. சுல்தானிடம் புனிதமான பகுதிகள் தரப்பட்டு இஸ்லாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
4. ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தது.
17.
1. திலகர் தலைமையிலும் மற்றொன்று அன்னி பெசன்ட் அம்மையார் தலைமையிலும் தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2. இரு இயக்கங்களின் வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன.
3. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது மற்றும்,
4. தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகிய அந்த இரண்டு குறிக்கோள்கள் ஆகும்.
18.
(i) 1907 இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எ∴கு நிறுவனம் ( TISCO ) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
(ii) ஜே. என். டாடா எனப் பிரபலமாய் அறியப்பட்ட "ஜாம்ஷெட்ஜீ " நுஸர்வஞ்சி டாடா- ( 1839 - 1904 ) பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ஜொராஸ்ட்ரியன் வணிகக் குடும்பத்தில் இருந்து வந்தார்.
(iii) இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் ஆவார்.
(iv) இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(v) 1910 இல் மிகப் பெருமளவில் டாடா நீர்மின் சக்தி நிறுவனம் உதயமானது.
(vi) டாடா இரும்பு மற்றும் எ∴கு உற்பத்தி 1912 - 13- ல் 31, 000 டன்னிலிருந்து 1971 - 78 இல் 1, 81, 000 டன்னாக அதிகரித்துள்ளது.
19.
(i) 1906 இல் வ.உ.சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்திய போது தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம் தேசத்தின் கவனத்தைப் பெற்றது.
(ii) 1906 ல் வ.உ.சி சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி SSNC எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
(iii) வ.உ.சி. S. S. கலியா, S. S. லாவோ எனும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
(iv) சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி பற்றி திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார். அரவிந்தர் கோஷும், வ.உ.சியின் சுதேச முயற்சிகளை பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார்.
20.
1. புரட்சிகர பயங்கரவாதியாகிய அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஹேமச்சந்திர கனுங்கோ பாரிஸ் சென்று இராணுவப் பயிற்சிப் பெற்று நாடு திரும்பி மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழில்கூடத்தை நிறுவினார்.
2. சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை குண்டு வீசி கொல்ல திட்டம் தீட்டப்பட்டது.
3. கொலை செய்யும் பொறுப்பு புரட்சிவாதிகளான குதிரம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
4. 1908 ஏப்ரல் 30 இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கில பெண்கள் அதில் கொல்லப்பட்டனர்.
இதனால் பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொல்ல, குதிரம் போஸ் ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
21.
சிறப்பம்சங்கள் :
1. பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள், தொண்டர் படைகள் எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
2. விழாக்காலங்களில் சுதேசி செய்தியை பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும், நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல்.
3. உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளை கற்றுக்கொடுத்தல், பஞ்சங்களின் போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல் போன்றப் பணிகளில் சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
22.
1. காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. ஆனால் மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறும் இடத்தை சூரத் நகருக்கு மாற்றினர்.
2. காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாதிகளின் வேட்பாளரான ராஷ்பீகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதிராயின் பெயரை முன்மொழிந்தனர்.
3. மேலும் தீவிர தேசியவாதிகள் ராஷ்பீகாரி கோஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர்.
4. இதனால் 1907 இல் சூரத் மாநாடு குழப்பத்தில் முடிந்து மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது.
23.
1. ஆங்கில பேரரசின் காலனி பகுதியான இலங்கையின் ஆளுநர் 1815-இல் சென்னை மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் கட்டாயப்படுத்தின.
3. 1837 இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித்தோட்டங்களில் சுமார் 10,000 தொழிலாளிகள் வேலை செய்தனர்.
24.
1. 1815 - இல் சிலோன் ஆளுநர் சென்னை மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் கூலிகளை அனுப்பிவைக்கக் கேட்டுக்கொண்டார்.
2. 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள், அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம் பெயர்ந்து செல்லக்கட்டாயப்படுத்தின.
3. ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையில் காபி, தேயிலைத் தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலை செய்யச் சென்றார்கள்.
25.
1. சென்னைவாசிகளின் சங்கத்தின் மனு 1853 மார்ச்சில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
2. இந்திய சீர்திருத்த தலைவரான H.D. செய்மோர் 1853 அக்டோபரில் சென்னை வந்தார்.
3. குண்டூர், கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.
4. 1853 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கிழக்கு இந்திய கம்பெனி தொடர அனுமதி வழங்கியது.
5. இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்கு சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கூறியது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards