12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 History subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
2.
ஜெனீவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின் பற்றிய பங்கை ஆராய்க.
3.
இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல் பயணிகளின் சாதனைகள் என்ன?
4.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
5.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?
6.
பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
7.
இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?
8.
எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?
9.
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக
10.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.
11.
பிரதம அமைச்சர் ராம்சே மெக்டொனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
12.
பிராமணரல்லாதார் இயக்கத் தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
13.
மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.
14.
வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
15.
இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுது.
16.
17.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
18.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
19.
20.
பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?
21.
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
22.
சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர் வன்முறைகளுக்கான காரணங்களை எழுதுக.
23.
24.
மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
25.
பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.
1.
1.நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவா பிரேசிலுக்கு தப்பி ஓடினார்.
2.பிரேசில் முன்னேற்றமடைய அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
3.தனது மகன் டாம் பெட்ரோவிடம் பிரேசிலை ஒப்படைத்து விட்டு போர்த்துகல் திரும்ப முடிவு செய்தார்.
4.பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்க அடிமைகளைச் சார்ந்திருந்தனர்.
5.டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.1822 ல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது.
2.
1.பிராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிற்கால தலைவர்களில் ஜான் கால்வின் ஒருவர்.
2.கால்வின் ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர்.
3.குறிப்பிட்ட காலத்துக்கு அவர் ஜெனீவா நகரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
4.கால்வினியம் என்ற சமயப்பிரிவு அவரது வாழ்நாளிலேயே பிரபலம் அடைந்தது.
3.
1.இத்தாலிய கடற்பயணியான ஜான் கேபட் என்பவரை இங்கிலாந்து நியமித்தது.அவர் கனடாவை கண்டறிந்து அதனை ஆங்கிலேயக் காலனியாக மாற்றினார்.
2.இத்தாலியரான மற்றொருவர் ஜியோவானி வெர்ரசானோ பிரான்ஸ் நாட்டுக்காக நிலப்பகுதியை கண்டறிந்தார்.
3.ஹென்றி ஹட்சன் என்ற ஆங்கில கடற்பயணி வட அமெரிக்காவில் இருந்து பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு பாதை காண முயன்றார்.
4.
1.வேளாண்மையின் பின்தங்கிய நிலையை இரு காரணிகளோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
2.ஒன்று நிறுவன அடிப்படையிலானது.
3.நிறுவனம் சார்ந்தது என்பது நிலவுடமை வர்க்கம்,விவசாயத் தொழிலாளர் வர்க்கத்திற்கு இடையே உள்ள சமூக பொருளாதார உறவுகளை குறிப்பது.
4.தொழில்நுட்பம் சார்ந்தது என்பது சிறந்த விதைகள்,டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையது.
5.
விளைவுகள் :
1.உணவு உற்பத்தி பெருகியது.
2.இரசாயன உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை வளர்ச்சி பெற்றது.
3.உபரி உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
4.ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது.
5.இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டால் சூழலியல் பிரச்சனைகள் தோன்றியது.
6.
(i) இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
(ii) இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
(iii) ஒரு நாடு, மற்றொரு நாட்டின் உள்நிகழ்வுகளில் தலையிடாமல் இருக்கும்.
(iv) இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
(v) சமாதான வாழ்வாகும்.
7.
(i) இந்திய அரசமைப்பு உலகிலேயே நீண்ட எழுதப்பட்ட அரசமைப்பு ஆகும்.
(ii) இந்தியா இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்று அரசமைப்பு முகவுரை கூறுகிறது.
(iii) அடிப்படை உரிமைகள், குறிக்கோள், தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவிலிருந்து உருவாக்கப்பட்டன.
(iv) இந்திய அரசமைப்பு இந்திய நாட்டிற்குச் சுதந்திரமான தேர்தல் ஆணையத்தை உருவாக்குகிறது.
(v) வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும் உறுதி செய்தது.
(vi) நீதித்துறையின் சுதந்திரத் தன்மையுடன் உறுதி செய்தது.
8.
(i) துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய இயக்கத்தையும், குறிப்பாக காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.
(ii) இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரசும் நிற்கதியற்ற நிலையில் விடப்பட்டிருந்தது. ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலனிய அரசு இழுக்கடித்தது என்றாலும் மறுபுறம் சுபாஷ் சந்திர போஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார்.
(iii) மேலும் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்ததோடு உணவு தானியங்களுக்குக் கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
(iv) ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942 ல் ஆசாத் ஹிந்து வானொலி மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.
9.
(i) ஆகஸ்ட் கொடை மிகத் தாமதமாக அறிவிக்கப்பட்டதால் அது குறித்து பேச்சுவார்த்தை நடந்துகூட காங்கிரஸ்க்கு நேரமில்லை. இக்காலகட்டத்தில் காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்திருந்தது.
(ii) சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய தேசிய காங்கிரசுக்கு நெருக்கடியை கொடுத்தார்.
(iii) எனவே காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
(iv) போஸ் காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939 இல் அவர் வங்காள காங்கிரசின் கமிட்டித் தலைவர் உட்பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
10.
(i) காந்தியடிகள் மே 1942 வாக்கில் இந்திய தேசிய காங்கிரஸ் அடுத்தகட்ட செயல்பாட்டிற்குத் தயார்படுத்தலானார். இம்முறை, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க காந்தியடிகள் முனைந்த நேரத்தில் இராஜாஜியும் நேருவும் தயக்கம் காட்டினர்.
(ii) காங்கிரஸ் அமைப்பும் பொதுவெளிக்கு வராமல் தங்கள் பணியை செவ்வனே செய்தது.
(iii) இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த ராஜாஜியும், புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
11.
1. இலண்டனில் நடந்த இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தன.
2. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்து குறித்து விவாதம் நடந்தது.
3. பிரிட்டிஷ் "பிரதமர் ராம்சே மேக் டொனால்டு" இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
4. 1932-ல் வகுப்பு வாரித் தொகுதி அறிவிக்கப்பட்டது.
12.
1. பல்வேறு அடுக்குகள் கண்ட இந்திய சமூகமும் அதனுள் இருந்த முரண்பாடுகளும் உயர் வகுப்பு ஆளுமையைக் கேள்வி கேட்டும் சாதி அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் தொடங்கப்பட ஏதுவாக அமைந்தன.
2. பிராமணர் அல்லாத தலைவர்களால் நடத்தப்பட்ட இந்த இயக்கம் பிராமணர்கள் மற்றும் இதர உயர் வகுப்பினரின் மேன்மை குறித்துக் கேள்வி எழுப்பின.
3. காலனி ஆதிக்க நிர்வாகிகள் மற்றும் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள் ஆகியன மறைமுகமாக அவர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தன.
4. காலனி ஆதிக்க காலத்தில் இருந்த உயர் வகுப்பு ஆடவர் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பூர்வீக மக்களுக்குத் திறந்த மனதுடன் நடந்துகொண்டனர்.
13.
1. 1919-ஆம் ஆண்டு சட்டம் இந்திய கவுன்சில்கள் சட்டம் என்று அழைக்கப்பட்டன.
2. மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்வு செய்தவர்கள் உடன் விரிவுபடுத்த இந்தச் சட்டம் வகை செய்தது.
3. இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது.
4. இந்தத் திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய முக்கியமான துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.
14.
(i) பிறமதத்தாரோடு பொருள்சார்ந்த பிரச்சனைகளில் கூட விரோதப்போக்கோடு சண்டையிடும் வகையில் ஒரு மதத்தினரை உருவாக்குவது, வகுப்புவாதம் எனப்படும்.
(ii) வகுப்புவாதம் என்ற கருத்தாக்கம் அல்லது இயக்கத்தை பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக வரையறுத்துள்ளனர்.
(iii) நேருவின் கூற்றுப்படி வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகளின் செயல் ஆகும்.
(iv) வகுப்புவாதம் என்பது ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் செயல் ஆகும்.
15.
(i) முஸ்லிம் லீக்கானது, முடித்தல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமான மையப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக இருந்தது. இதன் நோக்கங்கள் பின்வருமாறு,
(ii) இந்திய முஸ்லிம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை பிரிட்டிசாரிடம் ஏற்படுத்துதல்.
(iii) இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்கு தெரிவித்தல்.
(iv)இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும், முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்.
16.
17.
1. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கதார் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
2. "கோமாகட்டா மாரு" என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பியது
3. இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல பயணிகள் கொல்லப்பட்டனர்
4. இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.
5. 1913 இல் லாலா ஹர்தயாள் கதார் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கினார்.
18.
(i) M. சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 - 11 பிப்ரவரி 1946 ) மதராசில் பிறந்தார்.
(ii) திரு.வி.க. உடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார்.
(iii) 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்.
(iv) 1928 இல் இரயில்வே வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்; இதற்காக தண்டனை பெற்றார்.
19.
20.
(i) திருநெல்வேலியில் தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் சுதேசி தினத்தை கொண்டாட அரசு நிர்வாகம் அனுமதி மறுத்தது.
(ii) இதை மீறி வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12 இல் தேசதுரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
(iii) இதனால் கைதுக்கு எதிராக உள்ளூர் மக்கள், வன்முறை நடவடிக்கைகளிலும், கடையடைப்புகளிலும் ஈடுபட்டனர்
(iv) திருநெல்வேலியில் நகரசபைக் கட்டடமும், காவல் நிலையமும் தீ வைக்கப்பட்டன. நூற்பாலைத் தொழிலாளர்கள் ஆலையைவிட்டு வெளியேறி போராட்டம் நடத்தினார்கள். இதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு நால்வர் பலியானார்கள்.
21.
1. 1908 இல் கோரல் மில் தொழிற்சாலை ஊழியர்கள் படுமோசமான வேலை, வாழ்க்கைச் சூழல்கள் கொண்டிருந்தனர்.
2. இது வ.உ.சி, சிவா ஆகியோரின் கவனத்தைக் கவர்ந்தது. தொடர்ந்து வந்த சில நாட்களில் தலைவர்கள் இருவரும் தொழிலாளர்களிடம் உரையாற்றினார்கள்.
3. இதனால் 1908 இல் மார்ச்சில் கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
4. முடிவில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்
5. தொழிலாளர்களின் வெற்றி வங்காளத்தில் தீவிர தேசியவாதிகள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும்.
22.
1. சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு மூன்று காரணிகள் பங்களிப்பு செய்தன. புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகண்மையை (வீரம்) மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகும்.
2. அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.
3. இளைஞர்களை வழிநடத்துவதில் தீவிரவாத தேசியவாதிகள் தோல்வி அடைந்தார்கள். எனவே தனிநபர் செயல்பாடுகள் வளர்ந்தன.
4. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும், இகழ்வதாயும் புரட்சிவாதிகள் நம்பினர்.
23.
24.
1. ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாக மே 16,1884-இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது.
2. தொடக்கவிழாவில் பங்குபெற்ற முக்கிய தலைவர்கள் ஜி. சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரி, அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியவர்கள் ஆவார்கள்.
25.
1. இந்தியாவில் அச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டமை மிக முக்கிய நிகழ்வாகும்.
2. நவீன சிந்தனைகளைப் பரப்ப மக்களுக்கு பத்திரிக்கைகள் உதவின.
3. பத்திரிகைகள் அரசியலை விமர்சனம் செய்யத் தொடங்கின. நாட்டினைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசின.
4. தன்னாட்சி, மக்களாட்சி, குடிமை உரிமைகள், தொழில்மயமாக்குதல் போன்ற நவீன சிந்தனைகளை மக்களுக்குப் பரப்ப பத்திரிகைகள் உதவின.
5. தி இந்தியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகள் ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards