12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
2.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
3.
சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
4.
'உரிமைத்தாகம்' என்னும் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ............................ கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
5.
பண்பின் படிமமாய்ப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
6.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.
7.
பூமணி எப்புதினத்திற்காக 2014இல் சாகித்ய________________________அகாதெமி விருது பெற்றார்?
வெக்கை
கொம்மை
அஞ்ஞாடி
வாய்க்கால்
8.
'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்
என்.சத்தியமூர்த்தி
என்.ஆர்.சத்தியமூர்த்தி
எஸ்.சத்தியமூர்த்தி
எம்.சத்தியமூர்த்தி
9.
கீழ்க்கண்டவற்றுள் நேரிணைச் சொற்கள் எது ?
மேடு பள்ளம்
உற்றார் உறவினர்
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
10.
கம்பரது காலம் ____________.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
11.
வருபவர் எவராயினும் _______________ செலுத்து.
புதுவரவு
விருந்து
நன்றி
விழிப்புணர்வு
12.
ஜலாலுத்தீன் ரூமி ________________ நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தியா
அமெரிக்கா
எகிப்து
ஆப்கானிஸ்தான்
13.
| (அ) | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் | 1 | சேர்ந்தாரைக் கொல்லி |
| (ஆ) | பயன்தூக்கார் செய்த உதவி | 2 | ஞாலத்தின் மாணப் பெரிது |
| (இ) | சினம் | 3 | தெய்வத்துள் வைக்கப்படும் |
| (ஈ) | காலத்தினாற் செய்த நன்றி | 4 | நன்மை கடலிற் பெரிது |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
14.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
| (அ) | பாலை பாடினான் | 1 | தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் |
| (ஆ) | பாலைப் பாடினான் | 2 | தேரினைப் பார்த்தான் |
| (இ) | தேரை பார்த்தான் | 3 | பாலினைப் பாடினான் |
| (ஈ) | தேரைப் பார்த்தான் | 4 | பாலைத்திணை பாடினான் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
15.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
16.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
17.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
18.
மறக்கக்கூடாதது, மறக்கக்கூடியது - எவற்றை ?
19.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'துன்பு' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
20.
'வையத்துள்' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
21.
1.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
2.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
3.
சினத்தை அடக்கி ஆளுதலே வெகுளாமை எனப்படும்.
பிறர் குற்றங்களைக் கண்டால் எழுவது, சினம்.
காக்கில் என், காவாக்கால் என் ?
கோபம் செல்லக்கூடிய இடம், செல்லிடம்; செல்லாத இடம், அல்லிடம் என்கிறார்.
வலியவரிடம் கோபம் கொண்டால் தீமை விளையும்; அடக்கி ஆள்வோம்.
ஆனால், எளியவரிடம் கோபத்தை அடக்குதலே சிறப்பு.
வலியவரிடம் அச்சத்தால் கோபம் கொள்வதில்லை. அதனால், அங்குச் சினத்தைக் காத்தாலும் காக்காவிட்டாலும் ஏதுமில்லை.
ஒருவனுக்கு ஏற்படும் அனைத்துத் தீமைகளுக்கும் கோபமே காரணம்.
ஆதலால், யாரிடத்தும் கோபம் கொள்ளுதலைத் தவிர்த்தல் வேண்டும்.
முகத்தில் தோன்றும் சிரிப்பையும், மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியையும் அழிக்கின்ற கோபமே ஒருவருக்குப் பகையாகும்.
துன்பம் நேராமல் தன்னைக் காத்துக்கொள்ள நினைப்பவன், கோபத்தை அடக்க வேண்டும்.
கோபத்தை அடக்காவிட்டால், அதுவே அவனை அழித்துவிடும்.
கோபமாகிய கொடிய நெருப்பு தன்னை உடையவர்களை அழிக்கும்; உடன், காவலாய் அமைந்த தெப்பத்தையும் அழித்துவிடும்.
4.
பெற்றோர் போல் பேணி வளர்த்தனர் ; முத்தையன் தம்பி, வெள்ளைச்சாமி; அவன் இளமையிலேயே பெற்றோரை இழந்தான். எனினும், முத்தையனும் அவன் மனைவி மூக்கம்மாளும் வெள்ளைச்சாமியை அன்புடன் வளர்த்தனர்.
சொத்துப்பிரிவினை : முத்தையன் தன் தம்பி வெள்ளைச்சாமிக்குத் திருமணம் செய்து வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி தனிக்குடித்தனம் செல்லப் போர்க்கொடி தூக்கினாள். முத்தையன் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி அடுத்துச் சொத்தைப் பிரிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினாள். முத்தையன், தந்தையின் நிலத்தில் பாதியையும், இரண்டு மாடுகளையும் தம்பிக்குக் கொடுத்தான்.
நிலத்தை இழந்தான், தம்பி : ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள், மேலத்தெரு வேலப்பன், முத்தையனைச் சந்தித்தான்; 'உன் தம்பி கந்துவட்டிக் கருப்பசாமிக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த விவரம் உனக்குத் தெரியுமா?” என்று அவன் கேட்டான்.
முத்தையனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. "ஐந்து வருடத்திற்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடன் இப்போது வட்டிக்கு மேல் வட்டியாய்க் குட்டி போட்டுப் பெருந்தொகை ஆனதால், தம்பியால் பணத்தைக் கொடுக்க முடியவில்லையாம். இப்போது நிலத்தைக் கருப்பசாமி எழுதி வாங்கிவிட்டானாம்" என்றான், வேலப்பன்.
செய்தி கேட்ட முத்தையனுக்குத் தலைசுற்றியது.
அண்ணனா கந்துவட்டிக்காரனா ? : முத்தையன் வெள்ளைச்சாமி வீட்டிற்குச் சென்றான். “கந்துவட்டிக்கு நிலத்தை இழந்தது உண்மையா? அன்றே நான் 200 ரூபாய் தருகிறேன் என்றேன். என்னிடம் வாங்கிக்கொள்ளாமல் கந்துவட்டிக்காரனிடம் சென்றாயே!" என்று வருத்தத்துடன் முத்தையன் கேட்டான்.
"நீ கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தால்தானே கொடுப்பேன் என்றாய்" என்று வெள்ளைச்சாமி கேட்டான். “ஆமாம், இன்று கந்துவட்டிக்காரனிடம் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துத்தானே 200 ரூபாய் பெற்றாய்" என்று வெள்ளைச்சாமியிடம் முத்தையன் கேட்டான்.
“நீயும் கந்துவட்டிக்காரனும் ஒன்றா ? என் அண்ணனில்லையா?” என்று கன்னத்தில் அறைவது போலக் கேட்டான், வெள்ளைச்சாமி.
முத்தையனுக்கு அன்று மனைவி சொன்னது, காதில் கோவில்மணி போல் ஒலித்தது. “அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கலாம். அதற்காகக் கூடப்பிறந்தவனிடம் கடன்பத்திரம் எழுதிக் கேட்கலாமா ? இது எனக்குச் சரியாகப் படவில்லை. 200 ரூபாய்தானே ! தம்பி திருப்பிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. செலவோடு செலவாய்ச் சேர்க்க வேண்டியதுதான். தண்ணீர் முட்டித் தண்ணீர் விலகுமா ?"
"மனைவியின் மந்திரச்சொல்லை உதறினோம். தம்பி என்னும் உறவை இழந்தோம். தகப்பன் தந்த சொத்தும் போனது' என்று புலம்பியபடி, தள்ளாடித் தள்ளாடி நடந்தான், முத்தையன்.
5.
முன்னுரை : அனைத்து உயிரினங்களையும் அன்பில் இணைத்திடும் அறமாய் விளங்குபவன், இராமன்; இன்பதுன்பங்களைச் சமநிலையில் கருதுபவன்; மனிதநேயம் மிக்கவன்; பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்டவன். அவன் பிற உயிர்களிடம் கொண்டிருந்த உறவு நிலையைக் காண்போம்.
விதிமுன் செல்லப் பின் சென்றான் : “அரியணை விடுத்து ஆரணியம் சென்று ஏழிரண்டு ஆண்டு கழித்து வா !” என்று சிற்றன்னை கைகேயி சொன்னாள். இராமன், தம்பி இலக்குவனுடனும் மனைவி சீதையுடனும் கானகம் சென்றான். அம்மூவரும் கங்கைக்கரையில் முனிவர்கள் ஆசிரமம் ஒன்றில் தங்கினர் ; இராமனைக் காணக் குகன் வந்தான்.
காணிக்கைப்பொருள்களுடன் காண வந்தான் : குகன், வேடர் குலத் தலைவன். கல்விகேள்விகளில் சிறந்தவன் அல்லன். எளிய குகன், இராமன் சிறப்புகளை அறிந்து, காணிக்கைப் பொருள்களுடன் அவனைக் காண வந்தான்.
அன்பின் வசப்பட்டான் : குகன் காணிக்கையாய் மீனும் தேனும் கொண்டுவந்தான். இராமன் குகனின் அறியாமையைப் புரிந்துகொண்டான்; அன்பையும் அறிந்தான்; 'அன்போடு கொண்டுவரப்பட்டவை நான் உண்டதற்குச் சமம்' என்றான். இராமனைத் துறவுக்கோலத்தில் கண்டதால் மிகவும் வருந்தினான், குகன்.
குகனின் அன்புள்ளத்தைக் கண்ட இராமன், "இதற்கு முன் நாங்கள் நால்வர்; இன்றுமுதல் நாம் உடன் பிறந்தவர் ஐவர் ஆனோம்" என்று கூறினான். நாடாளும் இராமன், நாவாய் ஓட்டும் வேடுவனான குகனைத் தன் தம்பியாய் ஏற்றான்.
இறுதிக்கடன் செய்தான் : தசரதனுக்கு நண்பன் கழுகரசனான சடாயு ஆவான். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனுடன் போரிட்டு இறந்தான், சடாயு. இராமன், சடாயுவைப் பறவைதானே என்று கருதாமல், தன் தந்தையாகவே கருதி, முறைப்படி அவனுக்குரிய ஈமச்சடங்குகளைச் செய்தான்.
பிறப்பு நிலையை ஒழித்த பெருமாட்டி : காட்டில், சுக்கிரீவனைக் காண இராமலக்குவர்கள் சென்றனர். வழியில் மதங்க ஆசிரமத்தைக் கண்டனர்; அங்குச் சவரியைக் கண்டனர். அவள் பல்லாண்டுகளாய் இராமனை நினைத்துத் தவம் செய்து வந்தாள். இராமன் அவளிடம் தாயன்பு செலுத்தினான். இராமனைக் கண்ட சவரி, “உன்னைக் கண்டதால் நிலையற்ற உலகப்பற்று நீங்கியது; பிறப்பு என்னும் தொடர் ஒழிந்தது” என்றாள்.
உயிரிகள் ஒரு நிலையின : தமையனால் தாக்கப்பட்ட வானரனாகிய சுக்கிரீவனை, அனுமன் இராமனிடம் அழைத்து வந்தான். இராமன் அவனை அன்புடன் வரவேற்றான்; 'உன் பகைவர், நண்பர், உறவினர் அனைவரும் எனக்கும் அத்தகையவரே. நீ என் இன்னுயிர்த் துணைவன்” என்றான். வானர குலத்தவனாய் இருந்தாலும் உயிரிகள் அனைத்தும் ஒரு நிலையின எனக் கருதுபவன், இராமன்.
எதிரியல்லன், உடன்பிறந்தான் ! : இராவணனைப் பிரிந்து வந்த வீடணனைப் பகைவனுக்குத் தம்பி என்று கருதாது, சரண் என வந்தவரைத் தாங்கி ஆதரவு அளிப்பதே அறம் என முடிவு செய்தான், இராமன். "முன்பு உடன்பிறந்தோர் நால்வரானோம்; குகனோடு ஐவரானோம்; பின் சுக்கிரீவனோடு சேர்ந்து அறுவரானோம். இப்போது உன்னோடு சேர்ந்து எழுவரானோம்" என்றான், இராமன்.
முடிவுரை : இவ்வாறு காட்டுவேடன், வானர வீரன், பகைவன் தம்பி ஆகியோரை உடன்பிறந்தாராய் ஆக்கி அன்பின் உச்சத்தைத் தொட்டுவிட்டான், இராமன்.
6.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு, சமூகம் என்னும் பரந்த அமைப்பாதல்.
(i) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
(ii) குடும்பம் என்பதில் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்னும் அமைப்புவரை விரிவடைகிறது.
(iii) குடும்பம், மனித சமூகத்தின் அடிப்படை அலகு.
(iv) குடும்பம் அமைய அடிப்படை, திருமணம்.
(v) ‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள், கூடி வாழ்தல். அது ‘அம்’ விகுதி பெற்றுக் ‘குடும்பம்’ என்றானது.
(vi) குடும்பம் பல கட்டங்களைக் கடக்கிறது; பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது.
(vii) குடும்பத்தின் தொடக்கம், திருமணம்; மணமக்கள் வாழும் வீடு, மணந்தகம். ‘திருமணம்’, ‘குடும்பம்’ என்னும் சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை; திருக்குறளில் தான் காணப்படுகின்றன.
(viii) சங்க காலத்தில் தாயே குடும்ப முறைக்குத் தலைமையேற்றாள். அது தாய்வழிக் குடும்பமாய் அமைந்தது.
(ix) பதிற்றுப்பத்தில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை தாய்வழிக் குடும்பத்திற்குச் சான்றாகும்.
(x) சங்க இலக்கியங்களில் ‘இவள் மகன்' என்ற கூற்றே காணப்படுகிறது; 'இவன் மகன்' என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
(xi) சங்க காலத்தில், திருமணமான பெண், தாய்வீட்டிலேயே கணவனுடன் தொடர்ந்து வாழும் நடைமுறை இருந்தது. தாய்வழிச்சொத்து பெண்களையே சேர்ந்தது. சங்க காலத்திலேயே ஆண்வழிச் சமூக முறையும் வேர் ஊன்றிப் பரவியது. திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவன் இல்லத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.
(xii) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்னும் குறுந்தொகைப்பாடல் பெண், தன் கணவனை முழுமையாய்ச் சார்ந்து வாழ்ந்தமையைக் கூறுகிறது.
(xiii) தனிக்குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோர் சேர்ந்து வாழும் நிலை. தனிக்குடும்பத்துடன் கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் நிலையே 'விரிந்த குடும்ப
முறை' எனப்பட்டது. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்கள் மற்றும் சுற்றத்துடன் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன். குடும்பம் என்னும் அலகின் தொடர்ச்சியே இன்றைய சமூக அமைப்பாகும். இதனைக் கூட்டுக் குடும்பமும், தந்தைவழிக் குடும்ப அமைப்பும் கட்டமைக்கின்றன.
7.
(c)
அஞ்ஞாடி
8.
(a)
என்.சத்தியமூர்த்தி
9.
(c)
சீரும் சிறப்பும்
10.
(a)
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
11.
(c)
நன்றி
12.
(d)
ஆப்கானிஸ்தான்
13.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
14.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
15.
(d)
இவை அனைத்தையும்.
16.
(d)
தந்தைவழிச் சமூக முறை
17.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
18.
மறக்கக்கூடாதது : பிறர் நமக்குச் செய்த நன்றியை.
மறக்கக்கூடியது : பிறர் நமக்குச் செய்த தீமையை.
19.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்*
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை*
20.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.*
21.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards