12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
2.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
3.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
4.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் இக்கவிதையின் அடி,
'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக
5.
‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
குவித்த + உ
குவி + (த்) (ந்) + த் + உ
குவி + த் + த் + உ
குவித்து + உ
6.
i) இராமன் குகனுடன் நட்பு கொள்வது அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவுகிறது
ii) வேடனான குகனை இராமன் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.
(i) தவறு (ii) சரி
(i), (ii) இரண்டும் சரி
(i) சரி (ii) தவறு
(i), (ii) இரண்டும் தவறு
7.
உலக மொழிகள் அனைத்திலும் _____________ மிகுதி என்பர்.
பெயர்ச்சொற்களே
வினைச்சொற்களே
இடைச்சொற்களே
உரிச்சொற்களே
8.
புதுப்பெயர் - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
i, ii சரி
ii, iii சரி
மூன்றும் சரி
i, iii சரி
9.
'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' எனக் கூறும் நூல் _____________.
குறுந்தொகை
நற்றிணை
கலித்தொகை
ஐங்குறுநூறு
10.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
11.
பதிற்றுப்பத்து கூறுவது _________________ நாட்டு மருமக்கள் தாயமுறையையே.
பாண்டிய
சேர
சோழ
கொங்கு
12.
நெடுநல்வாடையை இயற்றியவர் _________.
கபிலர்
பரணர்
ஒளவையார்
நக்கீரர்
13.
தமிழ் தோன்றிய மலை ____________
இமயமலை
பொதிகைமலை
யானைமலை
சுவாமிமலை
14.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் பாடலில் அமைந்துள்ள அணி __________
வேற்றுப்பொருள் வைப்பணி
வேற்றுமையணி
செம்மொழிச் சிலேடையணி
பிரிமொழிச் சிலேடையணி
15.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _________________.
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, அஃறிணை
விரவுத்திணை, அஃறிணை
விரவுத்திணை, உயர்திணை
16.
தமிழில் திணைப்பாகுபாடு ________________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
பொருட்குறிப்பு
சொற்குறிப்பு
தொடர்க்குறிப்பு
எழுத்துக்குறிப்பு
17.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
19.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கலை, களை, கழை
20.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றுள் ஏற்புடைய தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
21.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
22.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
23.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
24.
25.
26.
27.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
28.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
29.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்.
30.
குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞர்களைக் கண்டுபிடி
தாய்மொழி : ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும்.
31.
நிரல்நிறை அணியை விளக்குக.
32.
33.
34.
35.
36.
37.
1.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
2.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
3.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
4.
(i) உழவர்கள், முறையான ஏட்டுக்கல்வி பயிலாதவர்கள்.
(ii) இயற்கையே அவர்களின் பாடப்புத்தகம்; காணும் காட்சியே பாடம்.
(iii) காட்சிவழி கற்கின்ற அனுபவமே அவர்கள் பெறும் அறிவு.
(iv) உழவன் ஒருவன் புலர்காலைப் பொழுதில் நிலம் நோக்கிச் செல்கிறான்.
(v) வழியில் ஒரு மூங்கில் இலைமீது, வெண்ணிறப் பனித்துளி படிந்திருக்கிறது.
(vi) இப்பனித்துளி கதிரவன் தோன்றியதும், சூரியக்கதிர்களால் உறிஞ்சப்பட்டுவிடும் என உழவன் சிந்திக்கிறான்.
(vii) படித்தறியாத உழவன், எதுகை மோனையோடு பாடுகிறான்.
''மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே !
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே !''
(viii) இதன் தொடர்ச்சியாய் அய்யப்பமாதவன் பாடல் அமைந்துள்ளது.
"நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” என்கிறார்.
(ix) கதிரவன், தன் வெண்ணிறக் கதிர்களால், நீர்நிலைகளில் உள்ள நீரை உறிஞ்சி, ஆவியாய் மேலெழும்பச் செய்கிறான், என்கிறார் அய்யப்பமாதவன்.
(x) கவிஞர்களின் கவிவடிவமும் நிகழிடமும் வேறுபட்டாலும் கருத்து ஒருநிலைப்பட்டிருக்கும் கவிநயம் கண்டு மகிழ்வோம்.
5.
(c)
குவி + த் + த் + உ
6.
(b)
(i), (ii) இரண்டும் சரி
7.
(a)
பெயர்ச்சொற்களே
8.
(d)
i, iii சரி
9.
(a)
குறுந்தொகை
10.
(d)
இவை அனைத்தையும்.
11.
(b)
சேர
12.
(d)
நக்கீரர்
13.
(b)
பொதிகைமலை
14.
(b)
வேற்றுமையணி
15.
(b)
உயர்திணை, அஃறிணை
16.
(a)
பொருட்குறிப்பு
17.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
19.
களையான முகமுடைய இளம்பெண், கழைமீது கட்டப்பெற்ற கயிற்றில் ஏறி ஆடிய ஆட்டக்கலையைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
20.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் - இவற்றுள் ஏற்புடைய தொடர் திருவளர்செல்வன் என்பதேயாகும். வினைத்தொகையாய் அமைந்துள்ள இச்சொற்றொடர் திரு வளர்ந்த செல்வன், திரு வளர்கின்ற செல்வன், திரு வளரும் செல்வன் என முக்காலத்திற்கும் செல்வம் கொண்டுள்ளவன் என்னும் சிறப்பான பொருளைத் தருகிறது.
21.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.
22.
பிழையின்றி எழுத :
1. மொழியின் இயல்பை உணர வேண்டும்.
2. இலக்கண விதிகளை அறிய வேண்டும்.
3. தவறின்றி எழுத முயற்சியும் பயிற்சியும் தேவை.
23.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
24.
25.
26.
27.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
28.
மாணவர்கள் பெற்றோர்களைத் தம் நண்பர்களாய்ப் பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தம் இன்பதுன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
29.
புதுமைப்பித்தன்
30.
தமிழ்ஒளி
31.
நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.
(எ.கா.)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.
32.
33.
34.
35.
36.
37.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards